< லூக்கா 7 >

1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
තතඃ පරං ස ලෝකානාං කර්ණගෝචරේ තාන් සර්ව්වාන් උපදේශාන් සමාප්‍ය යදා කඵර්නාහූම්පුරං ප්‍රවිශති
2 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
තදා ශතසේනාපතේඃ ප්‍රියදාස ඒකෝ මෘතකල්පඃ පීඩිත ආසීත්|
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
අතඃ සේනාපති ර‍්‍යීශෝ ර්වාර්ත්තාං නිශම්‍ය දාසස්‍යාරෝග්‍යකරණාය තස්‍යාගමනාර්ථං විනයකරණාය යිහූදීයාන් කියතඃ ප්‍රාචඃ ප්‍රේෂයාමාස|
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
තේ යීශෝරන්තිකං ගත්වා විනයාතිශයං වක්තුමාරේභිරේ, ස සේනාපති ර්භවතෝනුග්‍රහං ප්‍රාප්තුම් අර්හති|
5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
යතඃ සෝස්මජ්ජාතීයේෂු ලෝකේෂු ප්‍රීයතේ තථාස්මත්කෘතේ භජනගේහං නිර්ම්මිතවාන්|
6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
තස්මාද් යීශුස්තෛඃ සහ ගත්වා නිවේශනස්‍ය සමීපං ප්‍රාප, තදා ස ශතසේනාපති ර්වක්‍ෂ්‍යමාණවාක්‍යං තං වක්තුං බන්ධූන් ප්‍රාහිණෝත්| හේ ප්‍රභෝ ස්වයං ශ්‍රමෝ න කර්ත්තව්‍යෝ යද් භවතා මද්ගේහමධ්‍යේ පාදාර්පණං ක්‍රියේත තදප්‍යහං නාර්හාමි,
7 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
කිඤ්චාහං භවත්සමීපං යාතුමපි නාත්මානං යෝග්‍යං බුද්ධවාන්, තතෝ භවාන් වාක්‍යමාත්‍රං වදතු තේනෛව මම දාසඃ ස්වස්ථෝ භවිෂ්‍යති|
8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
යස්මාද් අහං පරාධීනෝපි මමාධීනා යාඃ සේනාඃ සන්ති තාසාම් ඒකජනං ප්‍රති යාහීති මයා ප්‍රෝක්තේ ස යාති; තදන්‍යං ප්‍රති ආයාහීති ප්‍රෝක්තේ ස ආයාති; තථා නිජදාසං ප්‍රති ඒතත් කුර්ව්විති ප්‍රෝක්තේ ස තදේව කරෝති|
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
යීශුරිදං වාක්‍යං ශ්‍රුත්වා විස්මයං යයෞ, මුඛං පරාවර්ත්‍ය පශ්චාද්වර්ත්තිනෝ ලෝකාන් බභාෂේ ච, යුෂ්මානහං වදාමි ඉස්‍රායේලෝ වංශමධ්‍යේපි විශ්වාසමීදෘශං න ප්‍රාප්නවං|
10 ௧0 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
තතස්තේ ප්‍රේෂිතා ගෘහං ගත්වා තං පීඩිතං දාසං ස්වස්ථං දදෘශුඃ|
11 ௧௧ மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
පරේ(අ)හනි ස නායීනාඛ්‍යං නගරං ජගාම තස්‍යානේකේ ශිෂ්‍යා අන්‍යේ ච ලෝකාස්තේන සාර්ද්ධං යයුඃ|
12 ௧௨ அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
තේෂු තන්නගරස්‍ය ද්වාරසන්නිධිං ප්‍රාප්තේෂු කියන්තෝ ලෝකා ඒකං මෘතමනුජං වහන්තෝ නගරස්‍ය බහිර‍්‍යාන්ති, ස තන්මාතුරේකපුත්‍රස්තන්මාතා ච විධවා; තයා සාර්ද්ධං තන්නගරීයා බහවෝ ලෝකා ආසන්|
13 ௧௩ இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
ප්‍රභුස්තාං විලෝක්‍ය සානුකම්පඃ කථයාමාස, මා රෝදීඃ| ස සමීපමිත්වා ඛට්වාං පස්පර්ශ තස්මාද් වාහකාඃ ස්ථගිතාස්තම්‍යුඃ;
14 ௧௪ அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
තදා ස උවාච හේ යුවමනුෂ්‍ය ත්වමුත්තිෂ්ඨ, ත්වාමහම් ආඥාපයාමි|
15 ௧௫ மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
තස්මාත් ස මෘතෝ ජනස්තත්ක්‍ෂණමුත්ථාය කථාං ප්‍රකථිතඃ; තතෝ යීශුස්තස්‍ය මාතරි තං සමර්පයාමාස|
16 ௧௬ எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
තස්මාත් සර්ව්වේ ලෝකාඃ ශශඞ්කිරේ; ඒකෝ මහාභවිෂ්‍යද්වාදී මධ්‍යේ(අ)ස්මාකම් සමුදෛත්, ඊශ්වරශ්ච ස්වලෝකානන්වගෘහ්ලාත් කථාමිමාං කථයිත්වා ඊශ්වරං ධන්‍යං ජගදුඃ|
17 ௧௭ இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
තතඃ පරං සමස්තං යිහූදාදේශං තස්‍ය චතුර්දික්ස්ථදේශඤ්ච තස්‍යෛතත්කීර්ත්ති ර්ව්‍යානශේ|
18 ௧௮ இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
තතඃ පරං යෝහනඃ ශිෂ්‍යේෂු තං තද්වෘත්තාන්තං ඥාපිතවත්සු
19 ௧௯ நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
ස ස්වශිෂ්‍යාණාං ද්වෞ ජනාවාහූය යීශුං ප්‍රති වක්‍ෂ්‍යමාණං වාක්‍යං වක්තුං ප්‍රේෂයාමාස, යස්‍යාගමනම් අපේක්‍ෂ්‍ය තිෂ්ඨාමෝ වයං කිං ස ඒව ජනස්ත්වං? කිං වයමන්‍යමපේක්‍ෂ්‍ය ස්ථාස්‍යාමඃ?
20 ௨0 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
පශ්චාත්තෞ මානවෞ ගත්වා කථයාමාසතුඃ, යස්‍යාගමනම් අපේක්‍ෂ්‍ය තිෂ්ඨාමෝ වයං, කිං සඒව ජනස්ත්වං? කිං වයමන්‍යමපේක්‍ෂ්‍ය ස්ථාස්‍යාමඃ? කථාමිමාං තුභ්‍යං කථයිතුං යෝහන් මජ්ජක ආවාං ප්‍රේෂිතවාන්|
21 ௨௧ அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
තස්මින් දණ්ඩේ යීශූරෝගිණෝ මහාව්‍යාධිමතෝ දුෂ්ටභූතග්‍රස්තාංශ්ච බහූන් ස්වස්ථාන් කෘත්වා, අනේකාන්ධේභ්‍යශ්චක්‍ෂුංෂි දත්ත්වා ප්‍රත්‍යුවාච,
22 ௨௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
යුවාං ව්‍රජතම් අන්ධා නේත්‍රාණි ඛඤ්ජාශ්චරණානි ච ප්‍රාප්නුවන්ති, කුෂ්ඨිනඃ පරිෂ්ක්‍රියන්තේ, බධිරාඃ ශ්‍රවණානි මෘතාශ්ච ජීවනානි ප්‍රාප්නුවන්ති, දරිද්‍රාණාං සමීපේෂු සුසංවාදඃ ප්‍රචාර‍්‍ය්‍යතේ, යං ප්‍රති විඝ්නස්වරූපෝහං න භවාමි ස ධන්‍යඃ,
23 ௨௩ என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ඒතානි යානි පශ්‍යථඃ ශෘණුථශ්ච තානි යෝහනං ඥාපයතම්|
24 ௨௪ யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
තයෝ ර්දූතයෝ ර්ගතයෝඃ සතෝ ර‍්‍යෝහනි ස ලෝකාන් වක්තුමුපචක්‍රමේ, යූයං මධ්‍යේප්‍රාන්තරං කිං ද්‍රෂ්ටුං නිරගමත? කිං වායුනා කම්පිතං නඩං?
25 ௨௫ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
යූයං කිං ද්‍රෂ්ටුං නිරගමත? කිං සූක්‍ෂ්මවස්ත්‍රපරිධායිනං කමපි නරං? කින්තු යේ සූක්‍ෂ්මමෘදුවස්ත්‍රාණි පරිදධති සූත්තමානි ද්‍රව්‍යාණි භුඤ්ජතේ ච තේ රාජධානීෂු තිෂ්ඨන්ති|
26 ௨௬ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
තර්හි යූයං කිං ද්‍රෂ්ටුං නිරගමත? කිමේකං භවිෂ්‍යද්වාදිනං? තදේව සත්‍යං කින්තු ස පුමාන් භවිෂ්‍යද්වාදිනෝපි ශ්‍රේෂ්ඨ ඉත්‍යහං යුෂ්මාන් වදාමි;
27 ௨௭ இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
පශ්‍ය ස්වකීයදූතන්තු තවාග්‍ර ප්‍රේෂයාම්‍යහං| ගත්වා ත්වදීයමාර්ගන්තු ස හි පරිෂ්කරිෂ්‍යති| යදර්ථේ ලිපිරියම් ආස්තේ ස ඒව යෝහන්|
28 ௨௮ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
අතෝ යුෂ්මානහං වදාමි ස්ත්‍රියා ගර්බ්භජාතානාං භවිෂ්‍යද්වාදිනාං මධ්‍යේ යෝහනෝ මජ්ජකාත් ශ්‍රේෂ්ඨඃ කෝපි නාස්ති, තත්‍රාපි ඊශ්වරස්‍ය රාජ්‍යේ යඃ සර්ව්වස්මාත් ක්‍ෂුද්‍රඃ ස යෝහනෝපි ශ්‍රේෂ්ඨඃ|
29 ௨௯ யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
අපරඤ්ච සර්ව්වේ ලෝකාඃ කරමඤ්චායිනශ්ච තස්‍ය වාක්‍යානි ශ්‍රුත්වා යෝහනා මජ්ජනේන මජ්ජිතාඃ පරමේශ්වරං නිර්දෝෂං මේනිරේ|
30 ௩0 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
කින්තු ඵිරූශිනෝ ව්‍යවස්ථාපකාශ්ච තේන න මජ්ජිතාඃ ස්වාන් ප්‍රතීශ්වරස්‍යෝපදේශං නිෂ්ඵලම් අකුර්ව්වන්|
31 ௩௧ மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
අථ ප්‍රභුඃ කථයාමාස, ඉදානීන්තනජනාන් කේනෝපමාමි? තේ කස්‍ය සදෘශාඃ?
32 ௩௨ சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
යේ බාලකා විපණ්‍යාම් උපවිශ්‍ය පරස්පරම් ආහූය වාක්‍යමිදං වදන්ති, වයං යුෂ්මාකං නිකටේ වංශීරවාදිෂ්ම, කින්තු යූයං නානර්ත්තිෂ්ට, වයං යුෂ්මාකං නිකට අරෝදිෂ්ම, කින්තු යුයං න ව්‍යලපිෂ්ට, බාලකෛරේතාදෘශෛස්තේෂාම් උපමා භවති|
33 ௩௩ யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
යතෝ යෝහන් මජ්ජක ආගත්‍ය පූපං නාඛාදත් ද්‍රාක්‍ෂාරසඤ්ච නාපිවත් තස්මාද් යූයං වදථ, භූතග්‍රස්තෝයම්|
34 ௩௪ மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
තතඃ පරං මානවසුත ආගත්‍යාඛාදදපිවඤ්ච තස්මාද් යූයං වදථ, ඛාදකඃ සුරාපශ්චාණ්ඩාලපාපිනාං බන්ධුරේකෝ ජනෝ දෘශ්‍යතාම්|
35 ௩௫ ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
කින්තු ඥානිනෝ ඥානං නිර්දෝෂං විදුඃ|
36 ௩௬ பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
පශ්චාදේකඃ ඵිරූශී යීශුං භෝජනාය න්‍යමන්ත්‍රයත් තතඃ ස තස්‍ය ගෘහං ගත්වා භෝක්තුමුපවිෂ්ටඃ|
37 ௩௭ அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
ඒතර්හි තත්ඵිරූශිනෝ ගෘහේ යීශු ර්භේක්තුම් උපාවේක්‍ෂීත් තච්ඡ්‍රුත්වා තන්නගරවාසිනී කාපි දුෂ්ටා නාරී පාණ්ඩරප්‍රස්තරස්‍ය සම්පුටකේ සුගන්ධිතෛලම් ආනීය
38 ௩௮ அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
තස්‍ය පශ්චාත් පාදයෝඃ සන්නිධෞ තස්‍යෞ රුදතී ච නේත්‍රාම්බුභිස්තස්‍ය චරණෞ ප්‍රක්‍ෂාල්‍ය නිජකචෛරමාර්ක්‍ෂීත්, තතස්තස්‍ය චරණෞ චුම්බිත්වා තේන සුගන්ධිතෛලේන මමර්ද|
39 ௩௯ அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
තස්මාත් ස නිමන්ත්‍රයිතා ඵිරූශී මනසා චින්තයාමාස, යද්‍යයං භවිෂ්‍යද්වාදී භවේත් තර්හි ඒනං ස්පෘශති යා ස්ත්‍රී සා කා කීදෘශී චේති ඥාතුං ශක්නුයාත් යතඃ සා දුෂ්ටා|
40 ௪0 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
තදා යාශුස්තං ජගාද, හේ ශිමෝන් ත්වාං ප්‍රති මම කිඤ්චිද් වක්තව්‍යමස්ති; තස්මාත් ස බභාෂේ, හේ ගුරෝ තද් වදතු|
41 ௪௧ அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
ඒකෝත්තමර්ණස්‍ය ද්වාවධමර්ණාවාස්තාං, තයෝරේකඃ පඤ්චශතානි මුද්‍රාපාදාන් අපරශ්ච පඤ්චාශත් මුද්‍රාපාදාන් ධාරයාමාස|
42 ௪௨ வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
තදනන්තරං තයෝඃ ශෝධ්‍යාභාවාත් ස උත්තමර්ණස්තයෝ රෘණේ චක්‍ෂමේ; තස්මාත් තයෝර්ද්වයෝඃ කස්තස්මින් ප්‍රේෂ්‍යතේ බහු? තද් බ්‍රූහි|
43 ௪௩ சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
ශිමෝන් ප්‍රත්‍යුවාච, මයා බුධ්‍යතේ යස්‍යාධිකම් ඍණං චක්‍ෂමේ ස ඉති; තතෝ යීශුස්තං ව්‍යාජහාර, ත්වං යථාර්ථං ව්‍යචාරයඃ|
44 ௪௪ பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
අථ තාං නාරීං ප්‍රති ව්‍යාඝුඨ්‍ය ශිමෝනමවෝචත්, ස්ත්‍රීමිමාං පශ්‍යසි? තව ගෘහේ මය්‍යාගතේ ත්වං පාදප්‍රක්‍ෂාලනාර්ථං ජලං නාදාඃ කින්තු යෝෂිදේෂා නයනජලෛ ර්මම පාදෞ ප්‍රක්‍ෂාල්‍ය කේශෛරමාර්ක්‍ෂීත්|
45 ௪௫ நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
ත්වං මාං නාචුම්බීඃ කින්තු යෝෂිදේෂා ස්වීයාගමනාදාරභ්‍ය මදීයපාදෞ චුම්බිතුං න ව්‍යරංස්ත|
46 ௪௬ நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
ත්වඤ්ච මදීයෝත්තමාඞ්ගේ කිඤ්චිදපි තෛලං නාමර්දීඃ කින්තු යෝෂිදේෂා මම චරණෞ සුගන්ධිතෛලේනාමර්ද්දීත්|
47 ௪௭ ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
අතස්ත්වාං ව්‍යාහරාමි, ඒතස්‍යා බහු පාපමක්‍ෂම්‍යත තතෝ බහු ප්‍රීයතේ කින්තු යස්‍යාල්පපාපං ක්‍ෂම්‍යතේ සෝල්පං ප්‍රීයතේ|
48 ௪௮ அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
තතඃ පරං ස තාං බභාෂේ, ත්වදීයං පාපමක්‍ෂම්‍යත|
49 ௪௯ அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
තදා තේන සාර්ද්ධං යේ භෝක්තුම් උපවිවිශුස්තේ පරස්පරං වක්තුමාරේභිරේ, අයං පාපං ක්‍ෂමතේ ක ඒෂඃ?
50 ௫0 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
කින්තු ස තාං නාරීං ජගාද, තව විශ්වාසස්ත්වාං පර‍්‍ය්‍යත්‍රාස්ත ත්වං ක්‍ෂේමේණ ව්‍රජ|

< லூக்கா 7 >