< லூக்கா 7 >

1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
ততঃ পরং স লোকানাং কর্ণগোচরে তান্ সর্ৱ্ৱান্ উপদেশান্ সমাপ্য যদা কফর্নাহূম্পুরং প্রৱিশতি
2 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
তদা শতসেনাপতেঃ প্রিযদাস একো মৃতকল্পঃ পীডিত আসীৎ|
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
অতঃ সেনাপতি র্যীশো র্ৱার্ত্তাং নিশম্য দাসস্যারোগ্যকরণায তস্যাগমনার্থং ৱিনযকরণায যিহূদীযান্ কিযতঃ প্রাচঃ প্রেষযামাস|
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
তে যীশোরন্তিকং গৎৱা ৱিনযাতিশযং ৱক্তুমারেভিরে, স সেনাপতি র্ভৱতোনুগ্রহং প্রাপ্তুম্ অর্হতি|
5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
যতঃ সোস্মজ্জাতীযেষু লোকেষু প্রীযতে তথাস্মৎকৃতে ভজনগেহং নির্ম্মিতৱান্|
6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
তস্মাদ্ যীশুস্তৈঃ সহ গৎৱা নিৱেশনস্য সমীপং প্রাপ, তদা স শতসেনাপতি র্ৱক্ষ্যমাণৱাক্যং তং ৱক্তুং বন্ধূন্ প্রাহিণোৎ| হে প্রভো স্ৱযং শ্রমো ন কর্ত্তৱ্যো যদ্ ভৱতা মদ্গেহমধ্যে পাদার্পণং ক্রিযেত তদপ্যহং নার্হামি,
7 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
কিঞ্চাহং ভৱৎসমীপং যাতুমপি নাত্মানং যোগ্যং বুদ্ধৱান্, ততো ভৱান্ ৱাক্যমাত্রং ৱদতু তেনৈৱ মম দাসঃ স্ৱস্থো ভৱিষ্যতি|
8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
যস্মাদ্ অহং পরাধীনোপি মমাধীনা যাঃ সেনাঃ সন্তি তাসাম্ একজনং প্রতি যাহীতি মযা প্রোক্তে স যাতি; তদন্যং প্রতি আযাহীতি প্রোক্তে স আযাতি; তথা নিজদাসং প্রতি এতৎ কুর্ৱ্ৱিতি প্রোক্তে স তদেৱ করোতি|
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
যীশুরিদং ৱাক্যং শ্রুৎৱা ৱিস্মযং যযৌ, মুখং পরাৱর্ত্য পশ্চাদ্ৱর্ত্তিনো লোকান্ বভাষে চ, যুষ্মানহং ৱদামি ইস্রাযেলো ৱংশমধ্যেপি ৱিশ্ৱাসমীদৃশং ন প্রাপ্নৱং|
10 ௧0 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
১০ততস্তে প্রেষিতা গৃহং গৎৱা তং পীডিতং দাসং স্ৱস্থং দদৃশুঃ|
11 ௧௧ மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
১১পরেঽহনি স নাযীনাখ্যং নগরং জগাম তস্যানেকে শিষ্যা অন্যে চ লোকাস্তেন সার্দ্ধং যযুঃ|
12 ௧௨ அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
১২তেষু তন্নগরস্য দ্ৱারসন্নিধিং প্রাপ্তেষু কিযন্তো লোকা একং মৃতমনুজং ৱহন্তো নগরস্য বহির্যান্তি, স তন্মাতুরেকপুত্রস্তন্মাতা চ ৱিধৱা; তযা সার্দ্ধং তন্নগরীযা বহৱো লোকা আসন্|
13 ௧௩ இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
১৩প্রভুস্তাং ৱিলোক্য সানুকম্পঃ কথযামাস, মা রোদীঃ| স সমীপমিৎৱা খট্ৱাং পস্পর্শ তস্মাদ্ ৱাহকাঃ স্থগিতাস্তম্যুঃ;
14 ௧௪ அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
১৪তদা স উৱাচ হে যুৱমনুষ্য ৎৱমুত্তিষ্ঠ, ৎৱামহম্ আজ্ঞাপযামি|
15 ௧௫ மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
১৫তস্মাৎ স মৃতো জনস্তৎক্ষণমুত্থায কথাং প্রকথিতঃ; ততো যীশুস্তস্য মাতরি তং সমর্পযামাস|
16 ௧௬ எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
১৬তস্মাৎ সর্ৱ্ৱে লোকাঃ শশঙ্কিরে; একো মহাভৱিষ্যদ্ৱাদী মধ্যেঽস্মাকম্ সমুদৈৎ, ঈশ্ৱরশ্চ স্ৱলোকানন্ৱগৃহ্লাৎ কথামিমাং কথযিৎৱা ঈশ্ৱরং ধন্যং জগদুঃ|
17 ௧௭ இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
১৭ততঃ পরং সমস্তং যিহূদাদেশং তস্য চতুর্দিক্স্থদেশঞ্চ তস্যৈতৎকীর্ত্তি র্ৱ্যানশে|
18 ௧௮ இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
১৮ততঃ পরং যোহনঃ শিষ্যেষু তং তদ্ৱৃত্তান্তং জ্ঞাপিতৱৎসু
19 ௧௯ நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
১৯স স্ৱশিষ্যাণাং দ্ৱৌ জনাৱাহূয যীশুং প্রতি ৱক্ষ্যমাণং ৱাক্যং ৱক্তুং প্রেষযামাস, যস্যাগমনম্ অপেক্ষ্য তিষ্ঠামো ৱযং কিং স এৱ জনস্ত্ৱং? কিং ৱযমন্যমপেক্ষ্য স্থাস্যামঃ?
20 ௨0 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
২০পশ্চাত্তৌ মানৱৌ গৎৱা কথযামাসতুঃ, যস্যাগমনম্ অপেক্ষ্য তিষ্ঠামো ৱযং, কিং সএৱ জনস্ত্ৱং? কিং ৱযমন্যমপেক্ষ্য স্থাস্যামঃ? কথামিমাং তুভ্যং কথযিতুং যোহন্ মজ্জক আৱাং প্রেষিতৱান্|
21 ௨௧ அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
২১তস্মিন্ দণ্ডে যীশূরোগিণো মহাৱ্যাধিমতো দুষ্টভূতগ্রস্তাংশ্চ বহূন্ স্ৱস্থান্ কৃৎৱা, অনেকান্ধেভ্যশ্চক্ষুংষি দত্ত্ৱা প্রত্যুৱাচ,
22 ௨௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
২২যুৱাং ৱ্রজতম্ অন্ধা নেত্রাণি খঞ্জাশ্চরণানি চ প্রাপ্নুৱন্তি, কুষ্ঠিনঃ পরিষ্ক্রিযন্তে, বধিরাঃ শ্রৱণানি মৃতাশ্চ জীৱনানি প্রাপ্নুৱন্তি, দরিদ্রাণাং সমীপেষু সুসংৱাদঃ প্রচার্য্যতে, যং প্রতি ৱিঘ্নস্ৱরূপোহং ন ভৱামি স ধন্যঃ,
23 ௨௩ என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
২৩এতানি যানি পশ্যথঃ শৃণুথশ্চ তানি যোহনং জ্ঞাপযতম্|
24 ௨௪ யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
২৪তযো র্দূতযো র্গতযোঃ সতো র্যোহনি স লোকান্ ৱক্তুমুপচক্রমে, যূযং মধ্যেপ্রান্তরং কিং দ্রষ্টুং নিরগমত? কিং ৱাযুনা কম্পিতং নডং?
25 ௨௫ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
২৫যূযং কিং দ্রষ্টুং নিরগমত? কিং সূক্ষ্মৱস্ত্রপরিধাযিনং কমপি নরং? কিন্তু যে সূক্ষ্মমৃদুৱস্ত্রাণি পরিদধতি সূত্তমানি দ্রৱ্যাণি ভুঞ্জতে চ তে রাজধানীষু তিষ্ঠন্তি|
26 ௨௬ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
২৬তর্হি যূযং কিং দ্রষ্টুং নিরগমত? কিমেকং ভৱিষ্যদ্ৱাদিনং? তদেৱ সত্যং কিন্তু স পুমান্ ভৱিষ্যদ্ৱাদিনোপি শ্রেষ্ঠ ইত্যহং যুষ্মান্ ৱদামি;
27 ௨௭ இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
২৭পশ্য স্ৱকীযদূতন্তু তৱাগ্র প্রেষযাম্যহং| গৎৱা ৎৱদীযমার্গন্তু স হি পরিষ্করিষ্যতি| যদর্থে লিপিরিযম্ আস্তে স এৱ যোহন্|
28 ௨௮ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
২৮অতো যুষ্মানহং ৱদামি স্ত্রিযা গর্ব্ভজাতানাং ভৱিষ্যদ্ৱাদিনাং মধ্যে যোহনো মজ্জকাৎ শ্রেষ্ঠঃ কোপি নাস্তি, তত্রাপি ঈশ্ৱরস্য রাজ্যে যঃ সর্ৱ্ৱস্মাৎ ক্ষুদ্রঃ স যোহনোপি শ্রেষ্ঠঃ|
29 ௨௯ யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
২৯অপরঞ্চ সর্ৱ্ৱে লোকাঃ করমঞ্চাযিনশ্চ তস্য ৱাক্যানি শ্রুৎৱা যোহনা মজ্জনেন মজ্জিতাঃ পরমেশ্ৱরং নির্দোষং মেনিরে|
30 ௩0 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
৩০কিন্তু ফিরূশিনো ৱ্যৱস্থাপকাশ্চ তেন ন মজ্জিতাঃ স্ৱান্ প্রতীশ্ৱরস্যোপদেশং নিষ্ফলম্ অকুর্ৱ্ৱন্|
31 ௩௧ மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
৩১অথ প্রভুঃ কথযামাস, ইদানীন্তনজনান্ কেনোপমামি? তে কস্য সদৃশাঃ?
32 ௩௨ சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
৩২যে বালকা ৱিপণ্যাম্ উপৱিশ্য পরস্পরম্ আহূয ৱাক্যমিদং ৱদন্তি, ৱযং যুষ্মাকং নিকটে ৱংশীরৱাদিষ্ম, কিন্তু যূযং নানর্ত্তিষ্ট, ৱযং যুষ্মাকং নিকট অরোদিষ্ম, কিন্তু যুযং ন ৱ্যলপিষ্ট, বালকৈরেতাদৃশৈস্তেষাম্ উপমা ভৱতি|
33 ௩௩ யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
৩৩যতো যোহন্ মজ্জক আগত্য পূপং নাখাদৎ দ্রাক্ষারসঞ্চ নাপিৱৎ তস্মাদ্ যূযং ৱদথ, ভূতগ্রস্তোযম্|
34 ௩௪ மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
৩৪ততঃ পরং মানৱসুত আগত্যাখাদদপিৱঞ্চ তস্মাদ্ যূযং ৱদথ, খাদকঃ সুরাপশ্চাণ্ডালপাপিনাং বন্ধুরেকো জনো দৃশ্যতাম্|
35 ௩௫ ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
৩৫কিন্তু জ্ঞানিনো জ্ঞানং নির্দোষং ৱিদুঃ|
36 ௩௬ பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
৩৬পশ্চাদেকঃ ফিরূশী যীশুং ভোজনায ন্যমন্ত্রযৎ ততঃ স তস্য গৃহং গৎৱা ভোক্তুমুপৱিষ্টঃ|
37 ௩௭ அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
৩৭এতর্হি তৎফিরূশিনো গৃহে যীশু র্ভেক্তুম্ উপাৱেক্ষীৎ তচ্ছ্রুৎৱা তন্নগরৱাসিনী কাপি দুষ্টা নারী পাণ্ডরপ্রস্তরস্য সম্পুটকে সুগন্ধিতৈলম্ আনীয
38 ௩௮ அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
৩৮তস্য পশ্চাৎ পাদযোঃ সন্নিধৌ তস্যৌ রুদতী চ নেত্রাম্বুভিস্তস্য চরণৌ প্রক্ষাল্য নিজকচৈরমার্ক্ষীৎ, ততস্তস্য চরণৌ চুম্বিৎৱা তেন সুগন্ধিতৈলেন মমর্দ|
39 ௩௯ அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
৩৯তস্মাৎ স নিমন্ত্রযিতা ফিরূশী মনসা চিন্তযামাস, যদ্যযং ভৱিষ্যদ্ৱাদী ভৱেৎ তর্হি এনং স্পৃশতি যা স্ত্রী সা কা কীদৃশী চেতি জ্ঞাতুং শক্নুযাৎ যতঃ সা দুষ্টা|
40 ௪0 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
৪০তদা যাশুস্তং জগাদ, হে শিমোন্ ৎৱাং প্রতি মম কিঞ্চিদ্ ৱক্তৱ্যমস্তি; তস্মাৎ স বভাষে, হে গুরো তদ্ ৱদতু|
41 ௪௧ அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
৪১একোত্তমর্ণস্য দ্ৱাৱধমর্ণাৱাস্তাং, তযোরেকঃ পঞ্চশতানি মুদ্রাপাদান্ অপরশ্চ পঞ্চাশৎ মুদ্রাপাদান্ ধারযামাস|
42 ௪௨ வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
৪২তদনন্তরং তযোঃ শোধ্যাভাৱাৎ স উত্তমর্ণস্তযো রৃণে চক্ষমে; তস্মাৎ তযোর্দ্ৱযোঃ কস্তস্মিন্ প্রেষ্যতে বহু? তদ্ ব্রূহি|
43 ௪௩ சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
৪৩শিমোন্ প্রত্যুৱাচ, মযা বুধ্যতে যস্যাধিকম্ ঋণং চক্ষমে স ইতি; ততো যীশুস্তং ৱ্যাজহার, ৎৱং যথার্থং ৱ্যচারযঃ|
44 ௪௪ பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
৪৪অথ তাং নারীং প্রতি ৱ্যাঘুঠ্য শিমোনমৱোচৎ, স্ত্রীমিমাং পশ্যসি? তৱ গৃহে ময্যাগতে ৎৱং পাদপ্রক্ষালনার্থং জলং নাদাঃ কিন্তু যোষিদেষা নযনজলৈ র্মম পাদৌ প্রক্ষাল্য কেশৈরমার্ক্ষীৎ|
45 ௪௫ நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
৪৫ৎৱং মাং নাচুম্বীঃ কিন্তু যোষিদেষা স্ৱীযাগমনাদারভ্য মদীযপাদৌ চুম্বিতুং ন ৱ্যরংস্ত|
46 ௪௬ நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
৪৬ৎৱঞ্চ মদীযোত্তমাঙ্গে কিঞ্চিদপি তৈলং নামর্দীঃ কিন্তু যোষিদেষা মম চরণৌ সুগন্ধিতৈলেনামর্দ্দীৎ|
47 ௪௭ ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
৪৭অতস্ত্ৱাং ৱ্যাহরামি, এতস্যা বহু পাপমক্ষম্যত ততো বহু প্রীযতে কিন্তু যস্যাল্পপাপং ক্ষম্যতে সোল্পং প্রীযতে|
48 ௪௮ அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
৪৮ততঃ পরং স তাং বভাষে, ৎৱদীযং পাপমক্ষম্যত|
49 ௪௯ அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
৪৯তদা তেন সার্দ্ধং যে ভোক্তুম্ উপৱিৱিশুস্তে পরস্পরং ৱক্তুমারেভিরে, অযং পাপং ক্ষমতে ক এষঃ?
50 ௫0 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
৫০কিন্তু স তাং নারীং জগাদ, তৱ ৱিশ্ৱাসস্ত্ৱাং পর্য্যত্রাস্ত ৎৱং ক্ষেমেণ ৱ্রজ|

< லூக்கா 7 >