< லூக்கா 7 >

1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
जालू सै लोकां जो अपणिया सारियां गल्लां सुणाई बैठा, तां कफरनहूम शेहर च आया।
2 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
कने ओथु कुसकी सूबेदारे दा इक सेवक जड़ा उदा बड़ा खास सेवक था, सै बमारिया ने मरणे बाला था।
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
उनी यीशु मसीह दे बारे च सुणया कने सुणिकरी केई बड्डे यहूदी अगुवां जो उसला ऐ बिनती करणे तांई उदे बाल भेजया, की आई करी मेरे दासे जो ठीक करी दे।
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
सै यीशु बाल आये कने उसला बड़ी बिनती करी के बोलणा लग्गे, “ऐ सेनापति इस काबील है की, तू उस तांई ऐ कम्म करे,
5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
क्योंकि सै साड़िया जातियां ने प्यार रखदा है, कने उनी ही साड़े यहूदी जंज घर जो बणाया है।”
6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
यीशु उना सोगी-सोगी चलया, पर जालू सै घरे ला थोड़ी दूर था, तां सुबेदारे उसयो अपणे केई साथियां बाल बोली भेजया, प्रभु जी, इतणा कष्ट मत कर, क्योंकि मैं इस लायक नी है की, तू मेरे घर आये।
7 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
इसा बजा ला मैं अपणे आपे जो इसी लायक नी समझया की, तेरे बाल ओऐ, पर तू बचन ही बोली दे तां ही मेरा सेवके ठीक होई जांणा।
8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
मैं भी अधिकारियां दे थल्ले कम्म करणे बाला माणु है, कने मेरे अधीन सपाई कम्म करदे न, कने जालू इकी सपाईऐ जो बोलदा है कि, तू जा, तां सै चली जांदा है; कने दुऐ जो बोलदा है कि, तू ऐथू आ, तां सै आई जांदा है; कने जालू मैं अपणे नोकरे जो बोलदा, कि ऐ कर, तां सै करी दिन्दा है।
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ऐ सुणिकरी यीशु हेरान होया, कने उनी मु फेरिकरी उसा भिड़ा ने जड़ी उदे पिच्छे ओआ दी थी बोलया, “मैं तुहांजो ने बोलदा है, कि मैं इस्राएल च भी ऐदिया भरोसा नी दिखया।”
10 ௧0 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
कने जड़े साथी भेजयो थे सै घरे बापस आये, कने उस सेवके जो दिखया तालू सै ठीक होई गिया था।
11 ௧௧ மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
थोड़े रोजां बाद सै नाईन नाऐ दे इक शेहरे जो गिया, कने उदे चेले कने बड़ी भरी भीड़ उदे सोगी चलियो थी।
12 ௧௨ அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
जालू सै शेहरे दे फाटके बखे पुज्जा, तां ओथु लोक इकी मुर्दे जो बाहर लेई चलयो थे कने सै अपणिया माऊ दा इकलोता पुत्र था, कने सै बिधवा थी, कने शेहरे दे मते लोक उसा सोगी थे।
13 ௧௩ இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
उसा जो दिखीकरी प्रभु जो उसा पर बड़ा तरस आया, कने यीशुऐ उसा जो बोलया की, “रो मत।”
14 ௧௪ அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
तालू यीशुऐ जाई करी अर्थिया जो छुता; कने जड़े अर्थिया लेईकरी चलयो थे सै रुकी गे, तालू यीशुऐ बोलया, “हे जवान, मैं तिजो बोलदा है, की उठ जा!”
15 ௧௫ மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
तालू सै मुर्दा जिंदा होई गिया, कने बोलणा लगी पिया: कने उनी उसयो उदिया माऊ जो देई दिता।
16 ௧௬ எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ऐ सब कुछ दिखीकरी सै सारे डरी गे; कने सै परमेश्वरे दी बड़ाई करी के बोलणा लग्गे, “साड़े बिच इक परमेश्वरे दा संदेश देणेबाला बड़ा महान माणु आया है, कने परमेश्वर अपणे लोकां दी मदद करणे तांई आया है।”
17 ௧௭ இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
कने उदे बारे च ऐ गल्ल सारे यहूदिया प्रदेशे दे इलाके कने अखे-बखे दे देशे च फेली गेई।
18 ௧௮ இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
कने यूहन्ना जो उदे चेलयां इना सारियां गल्लां दी खबर दिती।
19 ௧௯ நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
तालू यूहन्ने अपणे चेलयां चे दो चेलयां जो सदीकरी प्रभु बाल ऐ पुछणे तांई भेजया, “की क्या तू ही मसीह है, जिसयो भेजणे दा बायदा परमेश्वरे कितया था या असां कुसी दुजे दी नियाल रखन?”
20 ௨0 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
उना यीशुऐ बाल जाई करी बोलया की, “यूहन्ना बपतिस्मा देणेबाले सांझो तेरे बाल ऐ पूछणे तांई भेजया है, की क्या तू ही मसीह है, जिसयो भेजणे दा बायदा परमेश्वर ने कितया था या असां कुसी दुजे दी नियाल रखन?”
21 ௨௧ அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
उसी बेले यीशुऐ मतयां जो बिमारियाँ कने पीड़ा, कने बुरियां आत्मा ला छुड़ाया; कने मते अन्नयां जो हखी दितियां।
22 ௨௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
कने यीशुऐ उना ने बोलया, जड़ा कुछ तुसां दिखया कने सुणाया है, जाई करी यूहन्ना जो बोली दिया, “की जड़े अन्ने थे उना जो मिलणा लग्गी पिया, कने जड़े लंगड़े थे सै चलदे फिरदे न, कने कोढ़ियां दा कोढ़ ठीक होइ गिया है, कने जड़े टोंणे थे सै सुणना लगी पे, कने मुर्दे जिन्दे होई जांदे न, कने कंगालां जो शुभसमाचार सुणाया जांदा है।
23 ௨௩ என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
धन्य न सै, जड़े मिंजो पर शक नी करदे न।”
24 ௨௪ யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
जालू यूहन्ना दे भेजयो संदेश देणेबाले दूत चली गे, तां यीशु यूहन्ना दे बारे च लोकां ने बोलणा लग्गा, की तुसां सुनसान जगा च क्या दिखणा गियो थे? क्या होआ ने हिलदे होऐ सरकंडे जो?
25 ௨௫ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
तां फिरी तुसां क्या दिखणा गियो थे? क्या नरम कपड़े लायो माणु जो? जड़ा मेंगे कपड़े पांदा है, कने ठाठ-बाठ ने मेहलां च रेंदा है।
26 ௨௬ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
तां फिरी क्या दिखणा गियो थे? क्या कुसी परमेश्वरे दा संदेश देणेबाले जो? हां, मैं तुहांजो ने बोलदा है, की तुसां परमेश्वरे दे संदेश देणेबाले ला भी बड्डे जो दिखया है।
27 ௨௭ இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
ऐ सै ही है, जिसदे बारे च पबित्र शास्त्रां च लिखया है: “दिख, मैं अपणे संदेश देणेबाले दूते जो तेरे अग्गे-अग्गे भेजदा है, जिनी तेरा अग्गे दा रसता तैयार करणा है।”
28 ௨௮ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
“मैं तुहांजो ने बोलदा है, जड़े जनानिया ला जमयो न, उना च यूहन्ना ला बडा कोई नी: पर जड़ा परमेश्वरे दे राज्य च छोटे ला छोटा है, सै उसला भी बडा है।”
29 ௨௯ யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
जालू उना यीशुऐ दियां बोलियां गल्लां जो सुणया, तां सारयां लोकां ऐथू दीकर की कर लेणेबालयां भी यूहन्ना ला बपतिस्मा लेईकरी परमेश्वरे जो सच्चा मनी लिया है।
30 ௩0 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
पर फरीसियां कने व्यवस्था जो सिखाणे बालयां उसला बपतिस्मा लेणे ला मना करी दिता कने परमेश्वरे दिया मर्जिया जो जड़ी उना तांई थी उसा जो अपनाणे ला मना करी दिता।
31 ௩௧ மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
मैं इस युगे दे लोकां दी तुलना कुसने दें कि सै कुदे सांई न।
32 ௩௨ சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
सै उना जागतां सांई न, जड़े बजारां च बेईकरी इकी दुजे जो पुकारी करी बोलदे न। की असां तुहाड़े तांई खुशिया दे गाणे गाऐ, कने तुसां नचे नी; असां रोए, कने तुसां छाती नी पिटी।
33 ௩௩ யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
क्योंकि यूहन्ना बार-बार बरत रखदा कने ना शराब पिन्दा था, कने सै बोलदे न कि उदे च बुरी आत्मा है।
34 ௩௪ மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
मैं माणुऐ दा पुत्र खांदा पिंदा है; कने तुसां बोलदे न, दिखा, पेटू कने शराबी माणु, कने कर लेणेबालयां दा कने पापियां दा साथी है।
35 ௩௫ ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
“पर ज्ञान दी सच्चाई उदियां सारियां ओलादी दे सामणे आई है।”
36 ௩௬ பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
फिरी कुनकी फरीसीऐ उसला बिनती किती, की मरे सोगी खाणां खा; कने यीशु उस फरीसिऐ दे घरे जाई करी रोटी खाणां बैठा।
37 ௩௭ அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
कने दिखा, उस शेहरे दी इक पापी जनानिया जो जालू ऐ पता लग्गा की फरीसी दे घरे यीशु रोटी खाणां आया है, तां सै संगमरमर दे भांडे च बड़ा मेंगा इत्र लेई आई।
38 ௩௮ அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
कने उदे पैरां बखे बेईकरी रोई-रोई करी, पैरां जो आंसुआं ने सेड़णा लग्गी कने अपणे बाला ने पुंजया कने उदे पैरां जो बार-बार चुमणा लग्गी कने इत्र यीशुऐ दे पैरां च मलया।
39 ௩௯ அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
ऐ दिखीकरी, सै फरीसी जिनी यीशुऐ जो सदया था, अपणे मने च सोचणा लग्गा, “अगर ऐ परमेश्वरे दा संदेश देणेबाला होंदा तां इसयो पता लगी जांदा, की ऐ जड़ी उसयो छुआ दी है, सै कुण है कने कदेई जनानी है? क्योंकि सै तां पापी जनानी है।”
40 ௪0 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
यीशुऐ उदे बिचारां जो जाणी करी उना जो जबाब च बोलया, हे शमौन, मिंजो तिजो ने कुछ बोलणा है। उनी बोलया, “गुरू जी, बोला।”
41 ௪௧ அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
तालू यीशुऐ इक कहाणी सुणाई, “कुसकी महाजने दे दो देंणदार थे, इक पंजसो दिना दी मजदुरिया दा कने दुआ पंजा दिना दी दियाड़ी दा देंणदार था।”
42 ௪௨ வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
पर जालू उना बाल बापस करणे जो कुछ नी रिया, तां उनी महाजने दोनो जणयां दा कर्ज माफ करी दिता। उना दोनों चे कुनी उस महाजने ने जादा प्यार रखणा।
43 ௪௩ சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
शमौने जबाब दिता, “मेरिया समझा च तां सै माणु जिदा जादा कर्ज माफ करी दिता।” यीशुऐ उसला बोलया, तू ठीक जबाब दिता है।
44 ௪௪ பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
कने उसा जनानिया पासे फिरी करी उनी शमौने ने बोलया, “क्या तू इसा जनानिया जो दिखया इना क्या किता? मैं तेरे घरे जो आया पर तू मिंजो पैरां धोंणे तांई पाणी नी दिता, पर इना मेरे पैर आंसुआं ने धोते, कने अपणे बाला ने पूंजे।”
45 ௪௫ நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
तू गले लाईकरी मेरा स्वागत नी किता, पर जालू ला मैं आया है तालू ला इना मेरी इज्जत करणा नी छडी है।
46 ௪௬ நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
तू मेरे सरे च तेल नी मलया; पर इना मेरे पैरां च इतणा मेहंगा इत्र मली करी मेरा इज्जत मान किता है।
47 ௪௭ ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
“तांई ता मैं तिजो ने बोलदा है; की मते सारे पाप जड़े इना कितयो न, सारे माफ होऐ, क्योंकि इना जादा प्यार किता है; पर जिदा थोड़ा माफ होया है, सै घट प्यार करदा है।”
48 ௪௮ அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
कने उनी जनानिया ने बोलया, “तेरे पाप माफ होऐ।”
49 ௪௯ அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
तालू जड़े लोक ओथु रोटी खाणां बैठयो थे, सै अपणे-अपणे मने च सोचणा लग्गे, “ऐ कुण ऐ जड़ा पापां जो भी माफ करदा है क्योंकि परमेश्वर ही ऐ करी सकदा है।”
50 ௫0 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
पर उनी जनानिये ने बोलया, “परमेश्वरे तिजो बचाई लिया है क्योंकि तू मिंजो पर भरोसा किता है, कने शांतिया ला चली जा।”

< லூக்கா 7 >