< லூக்கா 24 >
1 ௧ வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
Sibꞌalaj aqꞌabꞌ xebꞌe ri ixoqibꞌ pa ri nabꞌe qꞌij rech ri wuq qꞌij, xoꞌpan kꞌu chuchiꞌ ri muqbꞌal. Xkikꞌam bꞌik ri kꞌokꞌalaj taq kunabꞌal ri kiyakom kanoq.
2 ௨ கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து,
Kꞌa te xkilo esatal kan ri abꞌaj chuchiꞌ ri muqbꞌal.
3 ௩ உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
Are kꞌu xoꞌk bꞌik, man xkiriq ta ri ubꞌaqil ri Ajawxel Jesús.
4 ௪ அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
Are kꞌu tajin kakitzijoj rij ri xkꞌulmatajik, xaq kꞌa teꞌ xetakꞌatobꞌ e kebꞌ achyabꞌ kachuplin ri katzꞌyaq.
5 ௫ அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
Xkixiꞌj kꞌu kibꞌ ri ixoqibꞌ, xexukiꞌk xkiya ri kipalaj pa ri ulew, ri achyabꞌ kꞌut xkibꞌij chike: ¿Jas che kitzukuj ri Kꞌaslik chikixoꞌl ri kaminaqibꞌ?
6 ௬ அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Man kꞌo ta waral, xkꞌastaj uwach, naꞌtaj chiꞌwe ri xubꞌij chiꞌwe are kꞌo na iwukꞌ je laꞌ pa Galilea:
7 ௭ மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
“Ri uKꞌojol ri Achi kajach na pa kiqꞌabꞌ ri achyabꞌ aꞌjmakibꞌ, karip xuqujeꞌ na, churox qꞌij kꞌut kakꞌastaj na uwach.”
8 ௮ அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
Are jewaꞌ xkito, xnaꞌtaj kꞌu chike ri utzij ri Jesús.
9 ௯ கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.
Are xetzalij loq, xiltaj kan ri muqbꞌal kumal, xkitzijoj ronojel ri xkilo, chike ri e lajuj, xuqujeꞌ chike konojel ri e kꞌo chilaꞌ.
10 ௧0 இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.
Are waꞌ ri ixoqibꞌ ri xeꞌkisolij ri muqbꞌal: ri María Magdalena, ri Juana, ri María unan ri Jacobo, xuqujeꞌ nikꞌaj ixoqibꞌ chik.
11 ௧௧ இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
Are kꞌu ri tijoxelabꞌ man xkikoj taj ri xbꞌix chike, pa kikꞌuꞌx chi xaq kikonal ri ixoqibꞌ.
12 ௧௨ பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
Ri Pedro kaxikꞌanik, xeꞌek pa ri muqbꞌal, xqet chuxukut. Are xkꞌayik, xwiꞌ kꞌo kan ri atzꞌyaq rech lino, ri xbꞌalqꞌotix wi ri Jesús. Kamayijan kꞌut, xtzalij cho rachoch rumal ri xkꞌulmatajik.
13 ௧௩ அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
Pa we qꞌij riꞌ e bꞌenaq pa ri bꞌe kebꞌ chike ri tijoxelabꞌ. Bꞌenam ke pa jun alaj tinimit ubꞌiꞌ Emaús, julajuj kilómetros uxoꞌl rukꞌ ri tinimit Jerusalén.
14 ௧௪ போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
Are kakitzijoj rij ri xkꞌulmataj pa ri tinimit Jerusalén.
15 ௧௫ இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
Tajin kꞌu kakitzijoj rij are xqet ri Jesús, xuchapleꞌj bꞌinem kukꞌ.
16 ௧௬ ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
Man xkichꞌobꞌ ta kꞌu uwach rumal cher tzꞌapital ri kibꞌoqꞌoch.
17 ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
Xukꞌot kꞌu kichiꞌ, xubꞌij: ¿Jas ri tajin kitzijoj la rij? Ri e tijoxelabꞌ xetakꞌiꞌ, xkichiqibꞌa ri kipalaj pa ri ulew.
18 ௧௮ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
Jun chike ri tijoxelabꞌ ubꞌiꞌnam Cleofas xubꞌij che: ¿La xaq xwi ri at, ri at solinel pa ri tinimit Jerusalén, ri man xawetaꞌmaj ta ri xkꞌulmatajik?
19 ௧௯ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார்.
Ri Jesús xuta chike: ¿Jas kꞌu riꞌ ri xkꞌulmatajik? Are ri Jesús aj Nazaret, jun qꞌalajisal utzij ri Dios, sibꞌalaj kwinel che nimaq taq chak, xuqujeꞌ sibꞌalaj utz ri katzijon cho ri Dios xuqujeꞌ chkiwach ri winaq.
20 ௨0 நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
Are kꞌu ri e qꞌatal taq qatzij, xuqujeꞌ ri e kꞌamal taq kibꞌe ri e chꞌawenelabꞌ cho ri Dios pa kiwiꞌ ri winaq xkijacho rech kaqꞌat tzij puꞌwiꞌ, rech kakamisaxik xuqujeꞌ rech karipik.
21 ௨௧ அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
Kuꞌl kꞌu qakꞌuꞌx uj chi areꞌ kakolow ri qatinimit Israel, xeꞌ kꞌu oxibꞌ qꞌij ri xbꞌantaj we kꞌulmatajem riꞌ.
22 ௨௨ ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
E kꞌo xuqujeꞌ e nikꞌaj e qachiꞌl ixoqibꞌ ri xebꞌe pa ri muqbꞌal che we aqꞌabꞌil riꞌ, xilkitzijoj kꞌu ri mayijabꞌal jastaq chaqe.
23 ௨௩ அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
Man xkiriq ta ri ubꞌaqil ri Jesús, xaq xwi xkitzijoj chaqe chi xkikꞌut kibꞌ jujun angelibꞌ chkiwach, xkibꞌij chike chi ri Jesús kꞌaslik.
24 ௨௪ அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
E kꞌo chi kꞌu nikꞌaj e qachiꞌl ri xebꞌe pa ri muqbꞌal, xeꞌkiriqaꞌ jetaq ri xulkibꞌij ri qachiꞌl ixoqibꞌ chaqe, xa kꞌu man xkil ta uwach ri Jesús.
25 ௨௫ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
Ri Jesús xubꞌij chike: Sibꞌalaj maj iwetaꞌmabꞌal, xuqujeꞌ sibꞌalaj kakabꞌalaj ikꞌuꞌx, chukojik ronojel ri xkibꞌij kan ri e qꞌalajisal taq utzij ri Dios.
26 ௨௬ கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
¿La man kꞌu choqꞌaqꞌ na kuriq taq waꞌ we kꞌax riꞌ, ri Cristo are majaꞌ kok pa ri rajawarem?
27 ௨௭ மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
Xuchapleꞌj kꞌu utzijoxik rij ri bꞌiꞌtal loq chirij kumal ri e qꞌalajisal taq rech ri utzij ri Dios, xuchapleꞌj la rukꞌ ri Moisés xuqujeꞌ konojel ri e qꞌalajisal taq rech ri utzij ri Dios, ri kitzꞌibꞌam loq pa ri uchoch wuj.
28 ௨௮ அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார்.
Are xenaqajin che ri leꞌaj ri kekanaj wi kan ri tijoxelabꞌ, ri Jesús xujaluj chi naj ri keꞌ wi na.
29 ௨௯ அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
Ri tijoxelabꞌ kꞌut xkibꞌij che: Xeꞌ le qꞌij, chatkanaj kan qukꞌ, kok aqꞌabꞌ chawe. Xaq jeriꞌ xkanaj kan kukꞌ.
30 ௩0 அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
Are e kꞌo puꞌwiꞌ ri mexa, xukꞌam ri kaxlan wa, xutewechiꞌj, xupirij, kꞌa te riꞌ xujach chike.
31 ௩௧ அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
Xjaqataj kꞌu ri kibꞌoqꞌoch, xkichomaj kꞌu uwach, xaq kꞌu kꞌa teꞌ xsachik.
32 ௩௨ அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
Kakibꞌij kꞌu chibꞌil taq kibꞌ: ¿La chi man kaqꞌaqꞌan ri qanimaꞌ are tajin katzijon la qukꞌ pa ri bꞌe chirij ri uchoch wuj?
33 ௩௩ அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
Aninaq xewaꞌjilik, xetzalij loq pa Jerusalén, chilaꞌ xuleꞌkiriqa wi ri e julajuj tijoxelabꞌ, kimulim kibꞌ, xuqujeꞌ ri e winaq ri e kꞌo kukꞌ.
34 ௩௪ கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
Ri e julajuj xkibꞌij che: Qas xkꞌastaj wi ri Ajawxel, xukꞌut ribꞌ cho ri Simón.
35 ௩௫ வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
Ri e kebꞌ tijoxelabꞌ kꞌut xkitzijoj jas ri xkꞌulmataj kukꞌ pa ri bꞌe, xuqujeꞌ xkitzijoj chi kꞌa te xkichꞌobꞌ uwach ri Jesús are xujach ri kaxlan wa.
36 ௩௬ இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
Kꞌa tajin na kakitzijoj rij ri xkꞌulmatajik, are xtakꞌatobꞌ ri Jesús chikixoꞌl. “Jaꞌmaril chiꞌwe,” xcha chike.
37 ௩௭ அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
Sibꞌalaj xkixiꞌj kibꞌ pa kikꞌuꞌx chi jun subꞌunel xkilo.
38 ௩௮ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
Ri Jesús kꞌut xuta chike: ¿Jas che sibꞌalaj kixiꞌj iwibꞌ? ¿Jas che sibꞌalaj kakabꞌalaj ikꞌuꞌx?
39 ௩௯ நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
Chiwila le waqan xuqujeꞌ le nuqꞌabꞌ. Qas in wi, chinichapaꞌ rech qas kiwilo. Jun uxlabꞌal maj bꞌaq che xuqujeꞌ maj utyoꞌjal, ri in kꞌut utz kinichapo.
40 ௪0 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Are xbꞌiꞌtaj we riꞌ, xukꞌut ri uqꞌabꞌ xuqujeꞌ ri raqan chkiwach.
41 ௪௧ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
Kꞌamajaꞌ kꞌu kakikojo chi qas areꞌ, rumal ri kiꞌkotemal xuqujeꞌ rumal kemayijanik, ri Jesús kꞌut xuta chike: ¿La kꞌo jastaq tijowik rij iwukꞌ?
42 ௪௨ அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
Xkiya kꞌu chꞌaqaꞌp bꞌolom kar che.
43 ௪௩ அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
Xukꞌam kꞌut, kꞌa te riꞌ chkiwach xutijo, kꞌa te riꞌ xubꞌij chike:
44 ௪௪ அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
Are xinkꞌojiꞌ iwukꞌ, xinbꞌij chiꞌwe chi kakꞌulmataj ronojel ri tzꞌibꞌatal loq chwij, pa ri taqanik rech ri Moisés, xuqujeꞌ pa ri kiwuj ri e qꞌalajisal taq rech ri utzij ri Dios, xuqujeꞌ pa ri wuj rech Salmos.
45 ௪௫ அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:
Xujaq kꞌu ri kichomabꞌal rech kakichꞌobꞌ ri tzꞌibꞌatal kan pa ri uchoch wuj.
46 ௪௬ எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
Xubꞌij kꞌu chike: Are waꞌ ri tzꞌibꞌatalik: “Ri Cristo kuriq na kꞌax, xuqujeꞌ kakꞌastaj na churox qꞌij.
47 ௪௭ அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
Xuqujeꞌ pa ri ubꞌiꞌ katzijox na ri kꞌexoj kꞌuꞌx xuqujeꞌ ri kuybꞌal mak pa ronojel ri tinimit, kachapleꞌtaj bꞌik pa Jerusalén.”
48 ௪௮ நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
Ri ix ix qꞌalajisal taq rech waꞌ we jastaq riꞌ.
49 ௪௯ என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
Kintaq kꞌu na loq, ri utzujum kan ri nuTat chiꞌwe, xaq jeriꞌ chixkanaj na kanoq pa we tinimit riꞌ, kꞌa kayaꞌtaj na ri chuqꞌabꞌ rech chikajil chiꞌwe.
50 ௫0 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
Te kꞌu riꞌ xuꞌkꞌam bꞌik ri utijoxelabꞌ, chuxukut ri tinimit Betania, xuyak kꞌu ri uqꞌabꞌ xuꞌtewechiꞌj.
51 ௫௧ அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
Tajin kꞌu kuꞌtewechiꞌj na are xnajtin chike, rumal xkꞌam bꞌik chikaj.
52 ௫௨ அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
Ri utijoxelabꞌ kꞌut xkiqꞌijilaꞌj, kꞌa te riꞌ sibꞌalaj xekiꞌkotik xetzalij pa ri tinimit Jerusalén.
53 ௫௩ நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
Amaqꞌel kꞌut xekꞌojiꞌ pa ri Templo xkiqꞌijilaꞌj ri Dios.