< லூக்கா 24 >
1 ௧ வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
୧ଆଟର୍ ପର୍ତୁମ୍ ଦିନର୍ ସାକାଲେ, ମାଇଜିମନ୍ ସେମନ୍ ତିଆର୍ କରିରଇବା ବାସ୍ନା ଦିନ୍ସୁ ଆରି ବାସ୍ନା ଚିକନ୍ ଦାରି ଜିସୁର୍ ମଡ୍ ରଇଲା ପାଆରେ ଗାଲାଇ ।
2 ௨ கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து,
୨ଆରି ପାଆରର୍ ମୁଆଟେ ରଇଲା ପାକ୍ନା ଗୁଣ୍ଡ୍ଲିରଇଲାଟା ଦେକ୍ଲାଇ ।
3 ௩ உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
୩ସେଟା ଦେକି ପାଆର୍ ବିତ୍ରେ ଜାଇ ଦେକ୍ଲାଇ, ତେଇ ଜିସୁର୍ ଗାଗଡ୍ ନ ରଇଲା ।
4 ௪ அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
୪କାଇଟା ଅଇଲାବେ, ବଲି, ବାବିକରି ରଇଲାବେଲେ, ଏଦେ ଦେକା! ବିଜ୍ଲି ପାରା ଜଗ୍ଜଗି ଜାଇତେରଇବା ଲୁଗା ପିନ୍ଦି ଦୁଇ ଲକ୍ ସେମନର୍ ମୁଆଟେ ଟିଆ ଅଇଲାଇ ।
5 ௫ அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
୫ମାଇଜିମନ୍ ସେ ଦୁଇ ଲକ୍କେ ଦେକି ଡରିକରି ଉଁତାଡିଅଇ ଡୁଲିଦେଲାଇ । ସେ ଦୁଇଲକ୍ ସେମନ୍କେ କଇଲାଇ, “ଜିବନ୍ ରଇଲା ଲକ୍କେ କାଇକେ ମଲା ଲକ୍କେ ସଙ୍ଗଇଲାଟାନେ କଜ୍ଲାସ୍ନି?
6 ௬ அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
୬ଜିସୁ ଇତି ନାଇ, ପର୍ମେସର୍ ତାକେ ଉଟାଇଲାଆଚେ । ସେ ତମର୍ ସଙ୍ଗ୍ ଗାଲିଲିତେଇ ମିସ୍ତେ ରଇଲା ବେଲେ ତମ୍କେ କାଇବଲି କଇରଇଲା, ସେଟା ତମର୍ ମନେ ନାଇ କି?
7 ௭ மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
୭ନର୍ପିଲା ପାପି ଲକ୍ମନର୍ ଆତେ ସର୍ପାଇ ଅଇସି ଆରି ସେମନ୍ ତାକେ କୁର୍ସେ କୁଟିମାରି ମରାଇ ଦେବାଇ । ମାତର୍ ତିନ୍ଦିନ୍ ଗାଲାପଚେ ସେ ଆରି ତରେକ୍ ଜିବନ୍ ଅଇ ଉଟ୍ସି ।”
8 ௮ அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
୮ସେଡ୍କି ବେଲେ ମାଇଜିମନ୍ ଜିସୁ ଏନ୍ତି କାତା କଇରଇଲା ବଲି ଏତାଇଲାଇ ।
9 ௯ கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.
୯ସେଟାର୍ ପାଇ ସେମନ୍ ତେଇଅନି ଦାପ୍ରେ ବାଉଡି ଆସିକରି ଏଗାର୍ଟା ସିସ୍ମନ୍କେ ଆରି ତେଇ ରଇଲା ଲକ୍ମନ୍କେ ସେ ଜାଗାଇ ଅଇଲା ଗଟ୍ନା ସବୁ କଇଲାଇ ।
10 ௧0 இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.
୧୦ମଗ୍ଦଲିନି ମରିୟମ୍, ଜଆନା, ଜାକୁବର୍ ମାଆ ମରିୟମ୍ ଆରି ତାକର୍ସଙ୍ଗ୍ ରଇଲା ବିନ୍ ମାଇଜିମନ୍ ମିସା କାଇ କାଇଟା ଗଟ୍ଲା, ସେ ସବୁ ବିସଇ ପେରିତ୍ମନ୍କେ କଇଲାଇ ।
11 ௧௧ இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
୧୧ମାତର୍ ପେରିତ୍ମନ୍ ମାଇଜିମନର୍ କାତା ଟଣ୍ଡେ ପାନ୍ଦି କଇଲାଇନି ବଲି ବିସ୍ବାସ୍ କରତ୍ ନାଇ ।
12 ௧௨ பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
୧୨ମାତର୍ ପିତର୍ ଅଦର୍ପଡ୍ ଅଇ ପାଲାଇ ପାଆରେ ଜାଇ ଏରି ଦେକ୍ଲା । ପାଆର୍ ବିତ୍ରେ ଏରି ଦେକ୍ଲାକେ ତେଇ ଜିସୁକେ ଗୁଡିଆଇଲା ଉଲ୍ଉଲା ପଚିଆ ଚାଡି ଆରି କାଇଟା ନ ରଇଲା । ପିତର୍ ସେ ଗଟ୍ନା ଦେକି କାବାଅଇ ଜାଇକରି, ଗରେ ବାଉଡି ଆଇଲା ।
13 ௧௩ அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
୧୩ସେ ଦିନେସେ ଜିସୁର୍ ଦୁଇଟା ସିସ୍ମନ୍ ଜିରୁସାଲମେଅନି ଏଗାର କିଲମିଟର୍ ଦୁର୍କେ ରଇଲା ଇମାୟୁ ନାଉଁର୍ ଗାଏଁ ଇଣ୍ଡିକରି ଜାଇତେ ରଇଲାଇ ।
14 ௧௪ போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
୧୪ଜିସୁକେ କାଇକାଇଟା ଅଇରଇଲା ଆରି ସେ ସବୁ ବିସଇନେଇ ସେମନ୍ କାତାଅଇ କାତାଅଇ ଇଣ୍ଡ୍ତେ ରଇଲାଇ ।
15 ௧௫ இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
୧୫ସେମନ୍ ଏନ୍ତି କାତାବାର୍ତା ଅଇ ଆଇବାବେଲେ ଏଦେ ଦେକା! ଜିସୁ ନିଜେ ଆସି ସେମନର୍ ସଙ୍ଗ୍ ଇଣ୍ଡ୍ବାର୍ ଦାର୍ଲା ।
16 ௧௬ ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
୧୬ସେମନ୍ ତାକେ ଦେକ୍ଲାଇ, ମାତର୍ ଚିନି ନାପାର୍ଲାଇ ।
17 ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
୧୭ସେଡିକିବେଲେ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ତମେ ଇଣ୍ଡି ଇଣ୍ଡି କାର୍ ବିସଇନେଇକରି ଏତେକ୍ କାତା ଅଇଲାସ୍ନି?” ସେବେଲାଇ ସେମନ୍ ମନ୍ଦୁକ୍କରି ମୁଁ ସୁକାଇ ଟିଆଅଇଲାଇ ।
18 ௧௮ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
୧୮“ଗାଲା କେତେଦିନ୍ ବିତ୍ରେ ଜିରୁସାଲାମ୍ ଜନ୍ ଗଟ୍ନା ଗଟିଗାଲା ଆଚେ? ସେଟା ନାଜାନ୍ଲାଟା ତୁଇ ଗଟେକ୍ ଲକ୍ସେ କି?”
19 ௧௯ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார்.
୧୯ଜିସୁ ସେମନ୍କେ ପାଚାର୍ଲା, “କାଇଟା ଅଇରଇବା ବିସଇ ତମେ କଇଲାସ୍ନି?” ସେମନ୍, “ନାଜରିତର୍ ଜିସୁକେ ଜାଇଟା ସବୁ ଗଟ୍ଲା । ସେ ଗଟେକ୍ ବବିସତ୍ବକ୍ତା ରଇଲା । ପର୍ମେସରର୍ ମୁଆଟେ ଆରି ଲକ୍ମନର୍ଟାନେ ଗଟେକ୍ ବପୁସଙ୍ଗର୍ ଲକ୍ ରଇଲା । ତାର୍ ସବୁକାମ୍ ଆରି କାତାଇଅନି ଏ ସବୁ ଜାନାପଡ୍ତେ ରଇଲା ।
20 ௨0 நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
୨୦ଆମର୍ ମୁକିଅ ପୁଜାରିମନ୍ ଆରି ସାସନ୍ କାରିଆମନ୍ ତାକେ ମରନ୍ ଡଣ୍ଡ୍ ପାଇବାକେ ସତ୍ରୁମନ୍କେ ସର୍ପିଦେଲାଇ ଆରି ତାକେ କୁର୍ସେ ଚଗାଇ ମରାଇଲାଇ ।
21 ௨௧ அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
୨୧ସେ ଆକା ଇସ୍ରାଏଲର୍ ଲକ୍ମନ୍କେ ରକିଆ କର୍ସି ବଲି ଆସା କରି ରଇଲୁ । ମାତର୍ ତାକେ ମରାଇ ତିନ୍ଦିନ୍ ଅଇଲାନି ।
22 ௨௨ ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
୨୨ଆମର୍ ଦଲର୍ କେତେଟା ମାଇଜିମନ୍ ଆମ୍କେ କାବାଅଇଜିବା କାତା କଇଲାଇ । ସେମନ୍ ଆଜି ସାକାଲ୍ ସାକାଲ୍ ତାର୍ ମଡ୍ ରଇବା ପାଆରେ ଗାଲାଇ ।
23 ௨௩ அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
୨୩ମାତର୍ ତେଇ ତାର୍ ଗାଗଡ୍ ନ ରଇଲା । ସେମନ୍ କଇଲାଇ, ପାଆରେଅନି ବାଉଡ୍ଲାବେଲେ ସରଗର୍ ଦୁତ୍ମନର୍ ଦର୍ସନ୍ ପାଇରଇଲା ଆରି ସେ ଦୁତ୍ମନ୍ ଜାନାଇଲାଇଜେ, ସେ ଏବେ ଜିବନ୍ ଅଇଆଚେ ।
24 ௨௪ அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
୨୪ଆମର୍ ସଙ୍ଗାରିମନର୍ ବିତ୍ରେଅନି ଜେ ଜେ ସେ ପାଆରେ ଜାଇ ଦେକ୍ଲାଇ ମିସା ମାଇଜିମନ୍ ଜେନ୍ତି କଇରଇଲାଇ, ସେ ସମାନ୍ ଇସାବେ ଦେକ୍ଲାଇ । ମାତର୍ ସେମନ୍ ଜିସୁକେ ଦେକତ୍ ନାଇ ।”
25 ௨௫ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
୨୫ସେବେଲେ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ତମେ କେତେକ୍ ବକୁଆ ଲକ୍ମନ୍, ବବିସତ୍ବକ୍ତାମନ୍ କଇଲା କାତା ବିସ୍ବାସ୍ କର୍ବାକେ କାଇକେ ଜାଗ୍ରତ୍ ଉଆସ୍ ନାଇ?
26 ௨௬ கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
୨୬ଏ ସବୁ ଦୁକ୍କସ୍ଟ ପାଇଲା ପଚେସେ ପର୍ମେସର୍ ବାଚିପାଟାଇଲା କିରିସ୍ଟକେ ମଇମା ପାଇବାକେ ଅଇସି ।
27 ௨௭ மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
୨୭ଜିସୁ ମସାର୍ ବଇତେଇଅନି ଆରି ବିନ୍ ବିନ୍ ବବିସତ୍ବକ୍ତାମନ୍ ଲେକିରଇଲା କାତାଇ ଅନି ଆରାମ୍ କରି ସବୁ ଦରମ୍ ସାସ୍ତରେ ତାର୍ ଜେତ୍କି ବିସଇ ଲେକା ଅଇରଇଲା, ସେ ସବୁ ସେମନ୍କେ ବୁଜାଇଦେଲା ।”
28 ௨௮ அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார்.
୨୮ଆରି ସେମନ୍ ଜନ୍ ଗାଉଁ ଜିବାର୍ ରଇଲା, ସେ ଗାଉଁ ଲଗାଲଗି ଅଇବାକେ ଜିସୁ ଆଗ୍ତୁ ଗାଲାପାରା ଅଇ ଇଣ୍ଡ୍ବାର୍ ଦାର୍ଲା ।
29 ௨௯ அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
୨୯ମାତର୍ ସେ ଲକ୍ମନ୍ ଜିସୁକେ ସୁତ୍ରାଇ କରି କଇଲାଇ, “ଆମର୍ ସଙ୍ଗ୍ ର, କାଇକେ ବଇଲେ ବେଲ୍ ବସିଗାଲା ଆରି ରାତି ଅଇଗାଲାନି ।” ସେଟାର୍ ପାଇ ଜିସୁ ସେମନର୍ ସଙ୍ଗ୍ ରଇବାକେ ଗର୍ବିତ୍ରେ ଗାଲା ।
30 ௩0 அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
୩୦ଆରି ସେମନର୍ ସଙ୍ଗ୍ କାଇବାକେ ବସ୍ଲା । ରୁଟି ଦାରି ପର୍ମେସର୍କେ ଦନିଅବାଦ୍ ଦେଇକରି ସେଟା ବାଙ୍ଗାଇକରି ସେମନ୍କେ ଦେଲା ।
31 ௩௧ அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
୩୧ସେ ବେଲାଇ ସେମନର୍ ଡାବିଅଇ ଜାଇରଇଲା ଆଁକି ପିଟିଗାଲାଜେ ତାକେ ଚିନି ପାର୍ଲାଇ । ମାତର୍ ସେ ଦାପ୍ରେ ଜିସୁ ସେମନର୍ତେଇଅନି ମାୟା ଅଇଗାଲା ।
32 ௩௨ அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
୩୨ସେବେଲାଇ ସେମନ୍ ସେମନର୍ ବିତ୍ରେ କାତା ଅଇଲାଇ, “ଜେଡେବଲ୍ ସେ ଆମର୍ ସଙ୍ଗ୍ ବାଟେ କାତା ଅଇତେ ରଇଲା, ଆରି ପର୍ମେସରର୍ ସାସ୍ତରର୍ କାତା ବୁଜାଇ ଦେଇତେ ରଇଲା, ଆମର୍ ମନ୍ ବିତ୍ରେ ଉଡୁକ୍ ଦୁଡୁକ୍ ନ ଅଇତେ ରଇଲା କି?”
33 ௩௩ அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
୩୩ସେଦାପ୍ରେ ସେମନ୍ ଦୁଇଲକ୍ ଉଟିକରି ଜିରୁସାଲାମେ ବାଉଡି ଉଟିଗାଲାଇ । ତେଇ ଜିସୁର୍ ଏଗାର୍ଟା ସିସ୍ମନ୍ ଆରି ବିନ୍ଲକ୍ମନ୍ କାତାବାର୍ତା ଅଇତେରଇଲାଟା ଦେକ୍ଲାଇ ।
34 ௩௪ கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
୩୪ସେ ଲକ୍ମନର୍ତେଇଅନି ସେମନ୍ ଜିସୁମାପ୍ରୁ ଆରି ତରେକ୍ ଜିବନ୍ଅଇ ଉଟ୍ଲା ଆଚେ ଆରି ସିମନ୍କେ ଦେକାଇଅଇଲା ଆଚେ ବଲି ଜାନ୍ଲାଇ ।
35 ௩௫ வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
୩୫ତାର୍ ପଚେ ଦୁଇଲକ୍ ଇମାୟୁ ଗାଉଁ ଆଇବା ବାଟେ କାଇକାଇଟା ଅଇରଇଲା ସେଟା ସବୁ କଇଲାଇ । ଆରି ସେମନ୍ ଜିସୁ ରୁଟି ବାଙ୍ଗାଇ କରି ଦେଲାବେଲେ କେନ୍ତି ତାକେ ଚିନି ଦେଇରଇଲାଇ ସେଟା ମିସା ସେମନ୍କେ କଇଲାଇ ।
36 ௩௬ இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
୩୬ସେ ଦୁଇଲକ୍ ଏନ୍ତି କଇବା ବେଲେ ଏଦେ ଦେକା! ମାପ୍ରୁ ନିଜେ ସେମନର୍ ମଜାଇ ଟିଆଅଇଦେଲା । ଆରି ସେମନ୍କେ କଇଲା, “ତମ୍କେ ସାନ୍ତି ଅ ।”
37 ௩௭ அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
୩୭ମାତର୍ ସେମନ୍ ସବୁ ଲକ୍ ଏଟା ଗଟେକ୍ ବୁତ୍ ଦେକ୍ଲୁନି ବଲି ଡରିଗାଲାଇ ।
38 ௩௮ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
୩୮ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ତମେ କାଇକେ ଡର୍ଲାସ୍ନି? ଆରି ଦେକି କରି ମିସା କାଇକେ ବିସ୍ବାସ୍ କରାସ୍ ନାଇ?
39 ௩௯ நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
୩୯ମର୍ ଆତେ ଆରି ଗଡେ ଦେକା, ଏଟା ମୁଇ ନିଜେ । ମକେ ଚିଇକରି ଦେକା । ଏଟା ମକେ ଜେନ୍ତାରି ଆଡ୍ ଆରି ମାଉଁସ୍ ଆଚେ ସେନ୍ତି ବୁତ୍କେ ନ ରଏ ।”
40 ௪0 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
୪୦ଜିସୁ ଏଟା କଇକରି, ତାର୍ ଆତ୍ ଆରି ଗଡ୍ ସେମନ୍କେ ଦେକାଇଲା ।
41 ௪௧ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
୪୧ସେଟା ଦେକି ସେମନ୍ ସାର୍ଦା ଅଇକରି କାବାଅଇ ଗାଲାଇ ମିସା ତାକେ ବିସ୍ବାସ୍ କରତ୍ ନାଇ । ସେଟାର୍ ପାଇ ଜିସୁ ସେମନ୍କେ ପାଚାର୍ଲା, “ତମର୍ ଲଗେ କାଇଟା କାଇବାଟା ଆଚେ କି?”
42 ௪௨ அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
୪୨ସେବେଲାଇ ସେମନ୍ ତାକେ କଣ୍ଡେକ୍ ବାଜ୍ଲା ମାଚ୍ ଦେଲାଇ ।
43 ௪௩ அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
୪୩ସେଟା ଜିସୁ ଦାରିକରି ସେମନର୍ ମୁଆଟେ କାଇଲା ।
44 ௪௪ அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
୪୪ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ମସାର୍ ନିୟମ୍ ଆରି ବବିସତ୍ବକ୍ତାମନ୍ କଇଲା କାତା ଆରି ଗିତ୍ସଙ୍ଗିତା ବଇଟାନେ କାଇକାଇଟା ଲେକା ଅଇଲାଆଚେ ସେ ସବୁ, ସତ୍ ଅଇବାର୍ ରଇଲା । ମୁଇ ତମର୍ ସଙ୍ଗ୍ ରଇଲାବେଲେ ଏ ସବୁ କାତା ତମ୍କେ କଇରଇଲି ।”
45 ௪௫ அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:
୪୫ତାର୍ପଚେ ଦରମ୍ ସାସ୍ତରର୍ ଅରତ୍ ବୁଜ୍ବାକେ ଜିସୁ ସେମନର୍ ବୁଜ୍ବା ବପୁ ଉଗାଡି ଦେଲା ।
46 ௪௬ எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
୪୬ଆରି ସେମନ୍କେ କଇଲା, “ପର୍ମେସର୍ ବାଚି ପାଟାଇଲା କିରିସ୍ଟ ରାଜା ମୁଇ, ଏନ୍ତି ଦୁକ୍ କସ୍ଟ ପାଇକରି ମର୍ବି । ପଚେ ତିନ୍ଦିନ୍ ଗାଲେ ଆରି ତରେକ୍ ଉଟ୍ବି ବଲି ଲେକା ଅଇଲା ଆଚେ ।
47 ௪௭ அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
୪୭ଆରି ଜିରୁସାଲମେଅନି ଆରାମ୍ କରି ସବୁ ଦେସର୍, ସବୁ ଜାତିର୍ ଲକ୍ମନ୍କେ ମର୍ ନାଉଁଦାରି ପାପ୍ କେମା କରାଇ, ମନ୍ ବଦ୍ଲାଇବାକେ କଇବାର୍ ଆଚେ ।
48 ௪௮ நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
୪୮ତମେ ଏ ସବୁ ବିସଇର୍ ସାକି ଆଚାସ୍ ।
49 ௪௯ என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
୪୯ଆରି ମର୍ ବାବା ଜନ୍ ଜିଦ୍ କରିରଇଲା, ମୁଇ ନିଜେ ସେଟା ପାଟାଇବି । ମାତର୍ ତମେ ପର୍ମେସରର୍ ଟାନେଅନି ବପୁ ନ ମିଲ୍ବା ଜାକ, ଏ ଜିରୁସାଲମେସେ ରୁଆ ।”
50 ௫0 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
୫୦ତାର୍ପଚେ ଜିସୁ ସେମନ୍କେ ବେତ୍ନିଆ ନାଉଁର୍ ଜାଗାଇ ଜିବା ବାଟ୍ଜାକ ଡାକିନେଲା । ଆରି ସେମନ୍କେ ଆତ୍ ଟେକି ଆସିର୍ବାଦ୍ କଲା ।
51 ௫௧ அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
୫୧ସେ ଏନ୍ତି ସେମନ୍କେ ଆସିର୍ବାଦ୍ କର୍ବାବେଲେ ପର୍ମେସର୍ ତାକେ ସରଗ୍ପୁରେ ଦାରିଗାଲା ।
52 ௫௨ அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
୫୨ସେମନ୍ ତାକେ ଜୁଆର୍ କଲାଇ ଆରି ସାର୍ଦାଅଇ ଜିରୁସାଲମେ ବାଉଡି ଆଇଲାଇ ।
53 ௫௩ நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
୫୩ସବୁବେଲା ମନ୍ଦିରେ ରଇକରି ପର୍ମେସରର୍ ଡାକ୍ପୁଟା କର୍ବାର୍ ଦାର୍ଲାଇ ।