< லூக்கா 23 >
1 ௧ அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
I ustade sva ona svjetina. Odvedoše ga Pilatu
2 ௨ இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
i stadoše ga optuživati: “Ovoga nađosmo kako zavodi naš narod i brani davati caru porez te za sebe tvrdi da je Krist, kralj.”
3 ௩ பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
Pilat ga upita: “Ti li si kralj židovski?” On mu odgovori: “Ti kažeš!”
4 ௪ அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
Tada Pilat reče glavarima svećeničkim i svjetini: “Nikakve krivnje ne nalazim na ovom čovjeku!”
5 ௫ அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
No oni navaljivahu: “Buni narod naučavajući po svoj Judeji, počevši od Galileje pa dovde!”
6 ௬ கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
Čuvši to, Pilat propita da li je taj čovjek Galilejac.
7 ௭ அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
Saznavši da je iz oblasti Herodove, posla ga Herodu, koji i sam bijaše onih dana u Jeruzalemu.
8 ௮ ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
A kad Herod ugleda Isusa, veoma se obradova jer ga je već odavna želo vidjeti zbog onoga što je o njemu slušao te se nadao od njega vidjeti koje čudo.
9 ௯ அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
Postavljao mu je mnoga pitanja, ali mu Isus uopće nije odgovarao.
10 ௧0 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
A stajahu ondje i glavari svećenički i pismoznanci optužujući ga žestoko.
11 ௧௧ அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
Herod ga zajedno sa svojom vojskom prezre i ismija: obuče ga u bijelu haljinu i posla natrag Pilatu.
12 ௧௨ முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
Onoga se dana Herod i Pilat sprijateljiše, jer prije bijahu neprijatelji.
13 ௧௩ பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
A Pilat dade sazvati glavare svećeničke, vijećnike i narod
14 ௧௪ அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
te im reče: “Doveli ste mi ovoga čovjeka kao da buni narod. Ja ga evo ispitah pred vama pa ne nađoh na njemu ni jedne krivice za koju ga optužujete.
15 ௧௫ உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
A ni Herod jer ga posla natrag nama. Evo, on nije počinio ništa čime bi zaslužio smrt.
16 ௧௬ எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
Kaznit ću ga dakle i pustiti.”
17 ௧௭ பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18 ௧௮ மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
I povikaše svi uglas: “Smakni ovoga, a pusti nam Barabu!”
19 ௧௯ அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
A taj bijaše bačen u tamnicu zbog neke pobune u gradu i ubojstva.
20 ௨0 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
Pilat im stoga ponovno progovori hoteći osloboditi Isusa.
21 ௨௧ அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
Ali oni vikahu: “Raspni, raspni ga!”
22 ௨௨ அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
On im treći put reče: “Ta što je on zla učinio? Ne nađoh na njemu smrtne krivice. Kaznit ću ga dakle i pustiti.”
23 ௨௩ அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
Ali oni navaljivahu iza glasa ištući da se razapne. I vika im bivala sve jača.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
Pilat presudi da im bude što ištu.
25 ௨௫ கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
Pusti onoga koji zbog pobune i ubojstva bijaše bačen u tamnicu, koga su iskali, a Isusa preda njima na volju.
26 ௨௬ அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
Kad ga odvedoše, uhvatiše nekog Šimuna Cirenca koji je dolazio s polja i stave na nj križ da ga nosi za Isusom.
27 ௨௭ திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
Za njim je išlo silno mnoštvo svijeta, napose žena, koje su plakale i naricale za njim.
28 ௨௮ இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
Isus se okrenu prema njima pa im reče: “Kćeri Jeruzalemske, ne plačite nada mnom, nego plačite nad sobom i nad djecom svojom.
29 ௨௯ இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
Jer evo idu dani kad će se govoriti: 'Blago nerotkinjama, utrobama koje ne rodiše i sisama koje ne dojiše.'
30 ௩0 அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
Tad će početi govoriti gorama: 'Padnite na nas!' i bregovima: 'Pokrijte nas!'
31 ௩௧ பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
Jer ako se tako postupa sa zelenim stablom, što li će biti sa suhim?”
32 ௩௨ குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
A vodili su i drugu dvojicu, zločince, da ih s njime pogube.
33 ௩௩ கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
I kada dođoše na mjesto zvano Lubanja, ondje razapeše njega i te zločince, jednoga zdesna, drugoga slijeva.
34 ௩௪ அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
A Isus je govorio: “Oče, oprosti im, ne znaju što čine!” I razdijeliše među se haljine njegove bacivši kocke.
35 ௩௫ மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
Stajao je ondje narod i promatrao. A podrugivali se i glavari govoreći: “Druge je spasio, neka spasi sam sebe ako je on Krist Božji, Izabranik!”
36 ௩௬ போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
Izrugivali ga i vojnici, prilazili mu i nudili ga octom
37 ௩௭ நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
govoreći: “Ako si ti kralj židovski, spasi sam sebe!”
38 ௩௮ இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
A bijaše i natpis ponad njega: “Ovo je kralj židovski.”
39 ௩௯ அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
Jedan ga je od obješenih zločinaca pogrđivao: “Nisi li ti Krist? Spasi sebe i nas!”
40 ௪0 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
A drugi ovoga prekoravaše: “Zar se ne bojiš Boga ni ti, koji si pod istom osudom?
41 ௪௧ நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Ali mi po pravdi jer primamo što smo djelima zaslužili, a on - on ništa opako ne učini.”
42 ௪௨ இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
Onda reče: “Isuse, sjeti me se kada dođeš u kraljevstvo svoje.”
43 ௪௩ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
A on će mu: “Zaista ti kažem: danas ćeš biti sa mnom u raju!”
44 ௪௪ அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
Bijaše već oko šeste ure kad nasta tama po svoj zemlji - sve do ure devete,
45 ௪௫ சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
jer sunce pomrča, a hramska se zavjesa razdrije po sredini.
46 ௪௬ இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
I povika Isus iza glasa: “Oče, u ruke tvoje predajem duh svoj!” To rekavši, izdahnu.
47 ௪௭ நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
Kad satnik vidje što se zbiva, stane slaviti Boga: “Zbilja, čovjek ovaj bijaše pravednik!”
48 ௪௮ இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
I kad je sav svijet koji se zgrnuo na taj prizor vidio što se zbiva, vraćao se bijući se u prsa.
49 ௪௯ அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Stajahu podalje i gledahu to svi znanci njegovi i žene koje su za njim išle iz Galileje.
50 ௫0 யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
I dođe čovjek imenom Josip, vijećnik, čovjek čestit i pravedan;
51 ௫௧ அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
on ne privoli njihovoj odluci i postupku. Bijaše iz Arimateje, grada judejskoga i iščekivaše kraljevstvo Božje.
52 ௫௨ அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
Taj dakle pristupi Pilatu i zaiska tijelo Isusovo.
53 ௫௩ அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
Zatim ga skinu, povi u platno i položi u grob isklesan u koji još ne bijaše nitko položen.
54 ௫௪ அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
Bijaše dan Priprave; subota je svitala.
55 ௫௫ கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
A pratile to žene koje su s Isusom došle iz Galileje: motrile grob i kako je položeno tijelo njegovo.
56 ௫௬ திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Zatim se vrate i priprave miomirise i pomasti. U subotu mirovahu po propisu.