< லூக்கா 19 >

1 இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
ਯਦਾ ਯੀਸ਼ੁ ਰ੍ਯਿਰੀਹੋਪੁਰੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਤਨ੍ਮਧ੍ਯੇਨ ਗੱਛੰਸ੍ਤਦਾ
2 வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
ਸੱਕੇਯਨਾਮਾ ਕਰਸਞ੍ਚਾਯਿਨਾਂ ਪ੍ਰਧਾਨੋ ਧਨਵਾਨੇਕੋ
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
ਯੀਸ਼ੁਃ ਕੀਦ੍ਰੁʼਗਿਤਿ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਚੇਸ਼਼੍ਟਿਤਵਾਨ੍ ਕਿਨ੍ਤੁ ਖਰ੍ੱਵਤ੍ਵਾੱਲੋਕਸੰਘਮਧ੍ਯੇ ਤੱਦਰ੍ਸ਼ਨਮਪ੍ਰਾਪ੍ਯ
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
ਯੇਨ ਪਥਾ ਸ ਯਾਸ੍ਯਤਿ ਤਤ੍ਪਥੇ(ਅ)ਗ੍ਰੇ ਧਾਵਿਤ੍ਵਾ ਤੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁਮ੍ ਉਡੁਮ੍ਬਰਤਰੁਮਾਰੁਰੋਹ|
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
ਪਸ਼੍ਚਾਦ੍ ਯੀਸ਼ੁਸ੍ਤਤ੍ਸ੍ਥਾਨਮ੍ ਇਤ੍ਵਾ ਊਰ੍ੱਧ੍ਵੰ ਵਿਲੋਕ੍ਯ ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾਵਾਦੀਤ੍, ਹੇ ਸੱਕੇਯ ਤ੍ਵੰ ਸ਼ੀਘ੍ਰਮਵਰੋਹ ਮਯਾਦ੍ਯ ਤ੍ਵਦ੍ਗੇਹੇ ਵਸ੍ਤਵ੍ਯੰ|
6 அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
ਤਤਃ ਸ ਸ਼ੀਘ੍ਰਮਵਰੁਹ੍ਯ ਸਾਹ੍ਲਾਦੰ ਤੰ ਜਗ੍ਰਾਹ|
7 அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
ਤਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਸਰ੍ੱਵੇ ਵਿਵਦਮਾਨਾ ਵਕ੍ਤੁਮਾਰੇਭਿਰੇ, ਸੋਤਿਥਿਤ੍ਵੇਨ ਦੁਸ਼਼੍ਟਲੋਕਗ੍ਰੁʼਹੰ ਗੱਛਤਿ|
8 சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਸੱਕੇਯੋ ਦਣ੍ਡਾਯਮਾਨੋ ਵਕ੍ਤੁਮਾਰੇਭੇ, ਹੇ ਪ੍ਰਭੋ ਪਸ਼੍ਯ ਮਮ ਯਾ ਸਮ੍ਪੱਤਿਰਸ੍ਤਿ ਤਦਰ੍ੱਧੰ ਦਰਿਦ੍ਰੇਭ੍ਯੋ ਦਦੇ, ਅਪਰਮ੍ ਅਨ੍ਯਾਯੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਸ੍ਮਾਦਪਿ ਯਦਿ ਕਦਾਪਿ ਕਿਞ੍ਚਿਤ੍ ਮਯਾ ਗ੍ਰੁʼਹੀਤੰ ਤਰ੍ਹਿ ਤੱਚਤੁਰ੍ਗੁਣੰ ਦਦਾਮਿ|
9 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே.
ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਮੁਕ੍ਤਵਾਨ੍ ਅਯਮਪਿ ਇਬ੍ਰਾਹੀਮਃ ਸਨ੍ਤਾਨੋ(ਅ)ਤਃ ਕਾਰਣਾਦ੍ ਅਦ੍ਯਾਸ੍ਯ ਗ੍ਰੁʼਹੇ ਤ੍ਰਾਣਮੁਪਸ੍ਥਿਤੰ|
10 ௧0 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
ਯਦ੍ ਹਾਰਿਤੰ ਤਤ੍ ਮ੍ਰੁʼਗਯਿਤੁੰ ਰਕ੍ਸ਼਼ਿਤੁਞ੍ਚ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰ ਆਗਤਵਾਨ੍|
11 ௧௧ அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
ਅਥ ਸ ਯਿਰੂਸ਼ਾਲਮਃ ਸਮੀਪ ਉਪਾਤਿਸ਼਼੍ਠਦ੍ ਈਸ਼੍ਵਰਰਾਜਤ੍ਵਸ੍ਯਾਨੁਸ਼਼੍ਠਾਨੰ ਤਦੈਵ ਭਵਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਲੋਕੈਰਨ੍ਵਭੂਯਤ, ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਸ਼੍ਰੋਤ੍ਰੁʼਭ੍ਯਃ ਪੁਨਰ੍ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਕਥਾਮ੍ ਉੱਥਾਪ੍ਯ ਕਥਯਾਮਾਸ|
12 ௧௨ பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
ਕੋਪਿ ਮਹਾੱਲੋਕੋ ਨਿਜਾਰ੍ਥੰ ਰਾਜਤ੍ਵਪਦੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਪੁਨਰਾਗਨ੍ਤੁੰ ਦੂਰਦੇਸ਼ੰ ਜਗਾਮ|
13 ௧௩ புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
ਯਾਤ੍ਰਾਕਾਲੇ ਨਿਜਾਨ੍ ਦਸ਼ਦਾਸਾਨ੍ ਆਹੂਯ ਦਸ਼ਸ੍ਵਰ੍ਣਮੁਦ੍ਰਾ ਦੱਤ੍ਵਾ ਮਮਾਗਮਨਪਰ੍ੱਯਨ੍ਤੰ ਵਾਣਿਜ੍ਯੰ ਕੁਰੁਤੇਤ੍ਯਾਦਿਦੇਸ਼|
14 ௧௪ அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਪ੍ਰਜਾਸ੍ਤਮਵਜ੍ਞਾਯ ਮਨੁਸ਼਼੍ਯਮੇਨਮ੍ ਅਸ੍ਮਾਕਮੁਪਰਿ ਰਾਜਤ੍ਵੰ ਨ ਕਾਰਯਿਵ੍ਯਾਮ ਇਮਾਂ ਵਾਰ੍ੱਤਾਂ ਤੰਨਿਕਟੇ ਪ੍ਰੇਰਯਾਮਾਸੁਃ|
15 ௧௫ அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
ਅਥ ਸ ਰਾਜਤ੍ਵਪਦੰ ਪ੍ਰਾਪ੍ਯਾਗਤਵਾਨ੍ ਏਕੈਕੋ ਜਨੋ ਬਾਣਿਜ੍ਯੇਨ ਕਿੰ ਲਬ੍ਧਵਾਨ੍ ਇਤਿ ਜ੍ਞਾਤੁੰ ਯੇਸ਼਼ੁ ਦਾਸੇਸ਼਼ੁ ਮੁਦ੍ਰਾ ਅਰ੍ਪਯਤ੍ ਤਾਨ੍ ਆਹੂਯਾਨੇਤੁਮ੍ ਆਦਿਦੇਸ਼|
16 ௧௬ அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
ਤਦਾ ਪ੍ਰਥਮ ਆਗਤ੍ਯ ਕਥਿਤਵਾਨ੍, ਹੇ ਪ੍ਰਭੋ ਤਵ ਤਯੈਕਯਾ ਮੁਦ੍ਰਯਾ ਦਸ਼ਮੁਦ੍ਰਾ ਲਬ੍ਧਾਃ|
17 ௧௭ எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
ਤਤਃ ਸ ਉਵਾਚ ਤ੍ਵਮੁੱਤਮੋ ਦਾਸਃ ਸ੍ਵਲ੍ਪੇਨ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯੋ ਜਾਤ ਇਤਃ ਕਾਰਣਾਤ੍ ਤ੍ਵੰ ਦਸ਼ਨਗਰਾਣਾਮ੍ ਅਧਿਪੋ ਭਵ|
18 ௧௮ அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
ਦ੍ਵਿਤੀਯ ਆਗਤ੍ਯ ਕਥਿਤਵਾਨ੍, ਹੇ ਪ੍ਰਭੋ ਤਵੈਕਯਾ ਮੁਦ੍ਰਯਾ ਪਞ੍ਚਮੁਦ੍ਰਾ ਲਬ੍ਧਾਃ|
19 ௧௯ அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
ਤਤਃ ਸ ਉਵਾਚ, ਤ੍ਵੰ ਪਞ੍ਚਾਨਾਂ ਨਗਰਾਣਾਮਧਿਪਤਿ ਰ੍ਭਵ|
20 ௨0 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
ਤਤੋਨ੍ਯ ਆਗਤ੍ਯ ਕਥਯਾਮਾਸ, ਹੇ ਪ੍ਰਭੋ ਪਸ਼੍ਯ ਤਵ ਯਾ ਮੁਦ੍ਰਾ ਅਹੰ ਵਸ੍ਤ੍ਰੇ ਬੱਧ੍ਵਾਸ੍ਥਾਪਯੰ ਸੇਯੰ|
21 ௨௧ நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
ਤ੍ਵੰ ਕ੍ਰੁʼਪਣੋ ਯੰਨਾਸ੍ਥਾਪਯਸ੍ਤਦਪਿ ਗ੍ਰੁʼਹ੍ਲਾਸਿ, ਯੰਨਾਵਪਸ੍ਤਦੇਵ ਚ ਛਿਨਤ੍ਸਿ ਤਤੋਹੰ ਤ੍ਵੱਤੋ ਭੀਤਃ|
22 ௨௨ அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
ਤਦਾ ਸ ਜਗਾਦ, ਰੇ ਦੁਸ਼਼੍ਟਦਾਸ ਤਵ ਵਾਕ੍ਯੇਨ ਤ੍ਵਾਂ ਦੋਸ਼਼ਿਣੰ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ, ਯਦਹੰ ਨਾਸ੍ਥਾਪਯੰ ਤਦੇਵ ਗ੍ਰੁʼਹ੍ਲਾਮਿ, ਯਦਹੰ ਨਾਵਪਞ੍ਚ ਤਦੇਵ ਛਿਨਦ੍ਮਿ, ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਃ ਕ੍ਰੁʼਪਣੋਹਮਿਤਿ ਯਦਿ ਤ੍ਵੰ ਜਾਨਾਸਿ,
23 ௨௩ பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
ਤਰ੍ਹਿ ਮਮ ਮੁਦ੍ਰਾ ਬਣਿਜਾਂ ਨਿਕਟੇ ਕੁਤੋ ਨਾਸ੍ਥਾਪਯਃ? ਤਯਾ ਕ੍ਰੁʼਤੇ(ਅ)ਹਮ੍ ਆਗਤ੍ਯ ਕੁਸੀਦੇਨ ਸਾਰ੍ੱਧੰ ਨਿਜਮੁਦ੍ਰਾ ਅਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਮ੍|
24 ௨௪ அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਸਮੀਪਸ੍ਥਾਨ੍ ਜਨਾਨ੍ ਆਜ੍ਞਾਪਯਤ੍ ਅਸ੍ਮਾਤ੍ ਮੁਦ੍ਰਾ ਆਨੀਯ ਯਸ੍ਯ ਦਸ਼ਮੁਦ੍ਰਾਃ ਸਨ੍ਤਿ ਤਸ੍ਮੈ ਦੱਤ|
25 ௨௫ அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
ਤੇ ਪ੍ਰੋਚੁਃ ਪ੍ਰਭੋ(ਅ)ਸ੍ਯ ਦਸ਼ਮੁਦ੍ਰਾਃ ਸਨ੍ਤਿ|
26 ௨௬ அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ ਯਸ੍ਯਾਸ਼੍ਰਯੇ ਵੱਧਤੇ (ਅ)ਧਿਕੰ ਤਸ੍ਮੈ ਦਾਯਿਸ਼਼੍ਯਤੇ, ਕਿਨ੍ਤੁ ਯਸ੍ਯਾਸ਼੍ਰਯੇ ਨ ਵਰ੍ੱਧਤੇ ਤਸ੍ਯ ਯਦ੍ਯਦਸ੍ਤਿ ਤਦਪਿ ਤਸ੍ਮਾਨ੍ ਨਾਯਿਸ਼਼੍ਯਤੇ|
27 ௨௭ அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਮਮਾਧਿਪਤਿਤ੍ਵਸ੍ਯ ਵਸ਼ਤ੍ਵੇ ਸ੍ਥਾਤੁਮ੍ ਅਸੰਮਨ੍ਯਮਾਨਾ ਯੇ ਮਮ ਰਿਪਵਸ੍ਤਾਨਾਨੀਯ ਮਮ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਸੰਹਰਤ|
28 ௨௮ இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
ਇਤ੍ਯੁਪਦੇਸ਼ਕਥਾਂ ਕਥਯਿਤ੍ਵਾ ਸੋਗ੍ਰਗਃ ਸਨ੍ ਯਿਰੂਸ਼ਾਲਮਪੁਰੰ ਯਯੌ|
29 ௨௯ அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
ਤਤੋ ਬੈਤ੍ਫਗੀਬੈਥਨੀਯਾਗ੍ਰਾਮਯੋਃ ਸਮੀਪੇ ਜੈਤੁਨਾਦ੍ਰੇਰਨ੍ਤਿਕਮ੍ ਇਤ੍ਵਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਦ੍ਵਯਮ੍ ਇਤ੍ਯੁਕ੍ਤ੍ਵਾ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਮਾਸ,
30 ௩0 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
ਯੁਵਾਮਮੁੰ ਸੰਮੁਖਸ੍ਥਗ੍ਰਾਮੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯੈਵ ਯੰ ਕੋਪਿ ਮਾਨੁਸ਼਼ਃ ਕਦਾਪਿ ਨਾਰੋਹਤ੍ ਤੰ ਗਰ੍ੱਦਭਸ਼ਾਵਕੰ ਬੱਧੰ ਦ੍ਰਕ੍ਸ਼਼੍ਯਥਸ੍ਤੰ ਮੋਚਯਿਤ੍ਵਾਨਯਤੰ|
31 ௩௧ அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
ਤਤ੍ਰ ਕੁਤੋ ਮੋਚਯਥਃ? ਇਤਿ ਚੇਤ੍ ਕੋਪਿ ਵਕ੍ਸ਼਼੍ਯਤਿ ਤਰ੍ਹਿ ਵਕ੍ਸ਼਼੍ਯਥਃ ਪ੍ਰਭੇਰਤ੍ਰ ਪ੍ਰਯੋਜਨਮ੍ ਆਸ੍ਤੇ|
32 ௩௨ அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
ਤਦਾ ਤੌ ਪ੍ਰਰਿਤੌ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਕਥਾਨੁਸਾਰੇਣ ਸਰ੍ੱਵੰ ਪ੍ਰਾਪ੍ਤੌ|
33 ௩௩ கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
ਗਰ੍ਦਭਸ਼ਾਵਕਮੋਚਨਕਾਲੇ ਤਤ੍ਵਾਮਿਨ ਊਚੁਃ, ਗਰ੍ਦਭਸ਼ਾਵਕੰ ਕੁਤੋ ਮੋਚਯਥਃ?
34 ௩௪ அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
ਤਾਵੂਚਤੁਃ ਪ੍ਰਭੋਰਤ੍ਰ ਪ੍ਰਯੋਜਨਮ੍ ਆਸ੍ਤੇ|
35 ௩௫ அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਤੌ ਤੰ ਗਰ੍ਦਭਸ਼ਾਵਕੰ ਯੀਸ਼ੋਰਨ੍ਤਿਕਮਾਨੀਯ ਤਤ੍ਪ੍ਰੁʼਸ਼਼੍ਠੇ ਨਿਜਵਸਨਾਨਿ ਪਾਤਯਿਤ੍ਵਾ ਤਦੁਪਰਿ ਯੀਸ਼ੁਮਾਰੋਹਯਾਮਾਸਤੁਃ|
36 ௩௬ அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
ਅਥ ਯਾਤ੍ਰਾਕਾਲੇ ਲੋਕਾਃ ਪਥਿ ਸ੍ਵਵਸ੍ਤ੍ਰਾਣਿ ਪਾਤਯਿਤੁਮ੍ ਆਰੇਭਿਰੇ|
37 ௩௭ அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
ਅਪਰੰ ਜੈਤੁਨਾਦ੍ਰੇਰੁਪਤ੍ਯਕਾਮ੍ ਇਤ੍ਵਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਸੰਘਃ ਪੂਰ੍ੱਵਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨਿ ਮਹਾਕਰ੍ੰਮਾਣਿ ਸ੍ਮ੍ਰੁʼਤ੍ਵਾ,
38 ௩௮ கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
ਯੋ ਰਾਜਾ ਪ੍ਰਭੋ ਰ੍ਨਾਮ੍ਨਾਯਾਤਿ ਸ ਧਨ੍ਯਃ ਸ੍ਵਰ੍ਗੇ ਕੁਸ਼ਲੰ ਸਰ੍ੱਵੋੱਚੇ ਜਯਧ੍ਵਨਿ ਰ੍ਭਵਤੁ, ਕਥਾਮੇਤਾਂ ਕਥਯਿਤ੍ਵਾ ਸਾਨਨ੍ਦਮ੍ ਉਚੈਰੀਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਕ੍ਤੁਮਾਰੇਭੇ|
39 ௩௯ அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
ਤਦਾ ਲੋਕਾਰਣ੍ਯਮਧ੍ਯਸ੍ਥਾਃ ਕਿਯਨ੍ਤਃ ਫਿਰੂਸ਼ਿਨਸ੍ਤਤ੍ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਯੀਸ਼ੁੰ ਪ੍ਰੋਚੁਃ, ਹੇ ਉਪਦੇਸ਼ਕ ਸ੍ਵਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਤਰ੍ਜਯ|
40 ௪0 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
ਸ ਉਵਾਚ, ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ ਯਦ੍ਯਮੀ ਨੀਰਵਾਸ੍ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ ਤਰ੍ਹਿ ਪਾਸ਼਼ਾਣਾ ਉਚੈਃ ਕਥਾਃ ਕਥਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
41 ௪௧ அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,
ਪਸ਼੍ਚਾਤ੍ ਤਤ੍ਪੁਰਾਨ੍ਤਿਕਮੇਤ੍ਯ ਤਦਵਲੋਕ੍ਯ ਸਾਸ਼੍ਰੁਪਾਤੰ ਜਗਾਦ,
42 ௪௨ “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.
ਹਾ ਹਾ ਚੇਤ੍ ਤ੍ਵਮਗ੍ਰੇ(ਅ)ਜ੍ਞਾਸ੍ਯਥਾਃ, ਤਵਾਸ੍ਮਿੰਨੇਵ ਦਿਨੇ ਵਾ ਯਦਿ ਸ੍ਵਮਙ੍ਗਲਮ੍ ਉਪਾਲਪ੍ਸ੍ਯਥਾਃ, ਤਰ੍ਹ੍ਯੁੱਤਮਮ੍ ਅਭਵਿਸ਼਼੍ਯਤ੍, ਕਿਨ੍ਤੁ ਕ੍ਸ਼਼ਣੇਸ੍ਮਿਨ੍ ਤੱਤਵ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟੇਰਗੋਚਰਮ੍ ਭਵਤਿ|
43 ௪௩ உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,
ਤ੍ਵੰ ਸ੍ਵਤ੍ਰਾਣਕਾਲੇ ਨ ਮਨੋ ਨ੍ਯਧੱਥਾ ਇਤਿ ਹੇਤੋ ਰ੍ਯਤ੍ਕਾਲੇ ਤਵ ਰਿਪਵਸ੍ਤ੍ਵਾਂ ਚਤੁਰ੍ਦਿਕ੍ਸ਼਼ੁ ਪ੍ਰਾਚੀਰੇਣ ਵੇਸ਼਼੍ਟਯਿਤ੍ਵਾ ਰੋਤ੍ਸ੍ਯਨ੍ਤਿ
44 ௪௪ உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.
ਬਾਲਕੈਃ ਸਾਰ੍ੱਧੰ ਭੂਮਿਸਾਤ੍ ਕਰਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਚ ਤ੍ਵਨ੍ਮਧ੍ਯੇ ਪਾਸ਼਼ਾਣੈਕੋਪਿ ਪਾਸ਼਼ਾਣੋਪਰਿ ਨ ਸ੍ਥਾਸ੍ਯਤਿ ਚ, ਕਾਲ ਈਦ੍ਰੁʼਸ਼ ਉਪਸ੍ਥਾਸ੍ਯਤਿ|
45 ௪௫ பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
ਅਥ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਤਤ੍ਰਤ੍ਯਾਨ੍ ਕ੍ਰਯਿਵਿਕ੍ਰਯਿਣੋ ਬਹਿਸ਼਼੍ਕੁਰ੍ੱਵਨ੍
46 ௪௬ “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
ਅਵਦਤ੍ ਮਦ੍ਗ੍ਰੁʼਹੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਗ੍ਰੁʼਹਮਿਤਿ ਲਿਪਿਰਾਸ੍ਤੇ ਕਿਨ੍ਤੁ ਯੂਯੰ ਤਦੇਵ ਚੈਰਾਣਾਂ ਗਹ੍ਵਰੰ ਕੁਰੁਥ|
47 ௪௭ அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਪ੍ਰਤ੍ਯਹੰ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰਮ੍ ਉਪਦਿਦੇਸ਼; ਤਤਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾ ਅਧ੍ਯਾਪਕਾਃ ਪ੍ਰਾਚੀਨਾਸ਼੍ਚ ਤੰ ਨਾਸ਼ਯਿਤੁੰ ਚਿਚੇਸ਼਼੍ਟਿਰੇ;
48 ௪௮ மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਤਦੁਪਦੇਸ਼ੇ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾ ਨਿਵਿਸ਼਼੍ਟਚਿੱਤਾਃ ਸ੍ਥਿਤਾਸ੍ਤਸ੍ਮਾਤ੍ ਤੇ ਤਤ੍ਕਰ੍ੱਤੁੰ ਨਾਵਕਾਸ਼ੰ ਪ੍ਰਾਪੁਃ|

< லூக்கா 19 >