< லூக்கா 19 >
1 ௧ இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
୧ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ଜିରିଅ ବାଟେ ଜାଇତେ ରଇଲାଇ ।
2 ௨ வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
୨ତେଇ ଜକିୟ ନାଉଁର୍ ଗଟେକ୍ ମୁକିଅ ସିସ୍ତୁମାଙ୍ଗୁ ରଇଲା । ସେ ବେସି ସାଉକାର୍ ରଇଲା ।
3 ௩ இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
୩ଜିସୁ କେନ୍ତାର୍ ଲକ୍ ବଲି ଦେକ୍ବାକେ ଜକିୟ ମନ୍ କର୍ତେ ରଇଲା । ମାତର୍ ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ ବେସି ଲକ୍ମନ୍ ଜାଇତେ ରଇଲାଇକେ ତାକେ ଦେକିନାପାର୍ତେ ରଇଲା । କାଇକେବଇଲେ ସେ ବୁଟି ରଇଲା ।
4 ௪ அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
୪ସେଟାର୍ ପାଇ ସେ, ଲକ୍ମନର୍ ଆଗ୍ତୁ ପାଲାଇ ଜାଇ ଜିସୁକେ ଦେକ୍ବାକେ ଗଟେକ୍ ଡୁମ୍ରି ଗଚେ ଚଗ୍ଲା । କାଇକେ ବଇଲେ ଜିସୁ ସେ ବାଟ୍ଦେଇ ଜିବାର୍ ରଇଲା ।
5 ௫ இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
୫ଜିସୁ ସେ ଜାଗାଇ କେଟି ଉପ୍ରେ ଦେକିକରି ଜକିୟକେ କଇଲା, “ଜକିୟ ବିଗି ଉତ୍ରି ଆଉ, ଆଜି ମୁଇ ତମର୍ ଗରେ ରଇବି ।”
6 ௬ அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
୬ତାର୍ ପଚେ ଜକିୟ ଦାପ୍ରେ ଉତ୍ରି ଆସି ବେସି ସାର୍ଦାଅଇ ଜିସୁକେ ତାର୍ ଗରେ ଡାକିନେଲା ।
7 ௭ அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
୭ସେଟା ଦେକି ତେଇ ରଇଲା ଲକ୍ମନ୍ ଜିସୁ ଗଟେକ୍ ପାପି ଲକର୍ ଗରେ କାଇବାକେ ଗାଲାନି ବଲି ଗୁର୍ମୁରି ଜାଇତେରଇଲାଇ ।
8 ௮ சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.
୮ଜକିୟ ଟିଆଅଇ ଜିସୁକେ କଇଲା, “ଏ ମାପ୍ରୁ, ସୁନା! ମର୍ ସଁପତିଅନି ଅଦାବାଗ୍ ଗରିବ୍ ଲକ୍ମନ୍କେ ଦାନ୍ କରିଦେବି । ଆରି ସିସ୍ତୁ ମାଙ୍ଗ୍ବା ବେଲାଇ କାର୍ଟା ଅନିଆଇକରି ଆନି ରଇଲାଟା ମୁଇ ଚାର୍ଗୁନ୍ ଅଦିକ୍ ବାଉଡାଇ ଦେବି ।”
9 ௯ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே.
୯ଜିସୁ ଜକିୟକେ କଇଲା, “ଆଜି ଏ ଗରେ ମୁକ୍ତି ମିଲ୍ଲା । କାଇକେବଇଲେ ଏ ମିସା ଗଟେକ୍ ଅବ୍ରାଆମର୍ ନାତିତିତି ।
10 ௧0 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
୧୦ପର୍ମେସର୍ ଟାନେଅନି ଆସିରଇବା ନର୍ପିଲା ମୁଇ ପାପେ ରଇଲା ଲକ୍ମନ୍କେ ସେମନର୍ ପାପେଅନି ରକିଆ କର୍ବାକେ ଆସିଆଚି ।”
11 ௧௧ அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
୧୧ସେମନ୍ ଜିରୁସାଲାମ୍ ଲଗେ ଆଇଲା ବେଲାଇ ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ ଜିବା ଲକ୍ମନ୍ ତାର୍ କଇବା ସବୁ କାତା ସୁନ୍ତେ ରଇଲାଇ । କାଇକେବଇଲେ ତାର୍ କାତା ସୁନ୍ଲା ଲକ୍ମନ୍ ପର୍ମେସରର୍ ରାଇଜର୍ ସାସନ୍ ଦାପ୍ରେ ଅଇସି ବଲି ବାବ୍ତେ ରଇଲାଇ ।
12 ௧௨ பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
୧୨ସେଟାର୍ପାଇ ସେ ଏ କାତାନି କଇଲା, ଗଟେକ୍ ବଡ୍ ଗରେ ଜନମ୍ ଅଇଲା ଲକ୍ ଦୁର୍ ଦେସେ ଜିବାକେ ତିଆର୍ ଅଇଲା । କାଇକେ ବଇଲେ ତେଇ ତାକେ ରାଜା କରାଇବାଇ । ସମାନ୍ ବେଲାଇ ତାର୍ ଦେସେ ସେ ବାଉଡି ଆଇସି ।
13 ௧௩ புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
୧୩ତାର୍ ଆଗ୍ତୁ ସେ ତାର୍ ଦସ୍ଟା ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଡାକି, ଗଟେକ୍ ଗଟେକ୍ ଲକ୍କେ ଗଟେକ୍ ଗଟେକ୍ ସୁନାର୍ ଡାବୁ ଦେଇ କରି କଇଲା, “ମୁଇ ବାଉଡି ଆଇବାଜାକ ଏ ଡାବୁ ବେବାର୍ କରି ବୁତେକ୍ କରି ରୁଆ ।”
14 ௧௪ அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
୧୪ମାତର୍ ତାର୍ ଦେସର୍ ଲକ୍ମନ୍ ତାକେ ଇନ୍ କର୍ତେରଇଲାଇ । ଆରି ସାସନ୍ କର୍ବା ଲକ୍ମନର୍ ଲଗେ କବର୍ କଇ ପାଟାଇଲାଇ, “ଏ ଲକ୍ ଆମ୍କେ ସାସନ୍ କର ବଲି ଆମେ ମନ୍ କରୁନାଇ ।”
15 ௧௫ அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
୧୫ଏନ୍ତି ବଲି କଇଲେ ମିସା, ସେ ରାଜାଅଇ ଗରେ ବାଉଡି ଆଇଲା । ଆରି ସେ କାକେ କାକେ ସୁନାର୍ ଡାବୁ ଦେଇ ରଇଲା, ସେମନ୍ କେତେକ୍ ଲାକା ଲାବ୍ କଲାଇ ଆଚତ୍ ବଲି ଜାନ୍ବାକେ ଡାକାଇ ପାଟାଇଲା ।
16 ௧௬ அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
୧୬ତେଇ ପର୍ତୁମର୍ ଲକ୍ ଆସି କଇଲା, “ଏ ଆଗିଆଁ, ତମେ ଦେଲା ଗଟେକ୍ ସୁନାର୍ ଡାବୁ ନେଇ ଆରି ଦସ୍ଟା କଲିଆଚି ।”
17 ௧௭ எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
୧୭ସେ ରାଜା ସାର୍ଦା ଅଇ ତାକେ କଇଲା “ତୁଇ ନିକ ଦାଙ୍ଗ୍ଡା, ଅଲପ୍ ବିସଇ ଦାଇତ୍ ନେଇ କାମ୍ କଲୁସ୍ । ସେଟାର୍ପାଇ ମୁଇ ତକେ ଦସ୍ଟା ଗଡ୍ ଉପ୍ରେ ସାସନ୍ କର୍ବାକେ ସର୍ପି ଦେଲିନି ।”
18 ௧௮ அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
୧୮ଆରି ଗଟେକ୍ ଲକ୍ ଆସି କଇଲା, “ଆଗିଆଁ, ତୁଇ ଦେଇରଇଲା ସୁନାର୍ ଡାବୁ ନେଇ ଆରି ପାଁଚ୍ଟା ଲାବ୍ କଲିଆଚି ।”
19 ௧௯ அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
୧୯ସେ ରାଜା ତାକେ ମିସା କଇଲା “ତକେ ସାସନ୍ କର୍ବାକେ ପାଁଚ୍ଟା ଗଡ୍ ସର୍ପିଦେଲିନି ।”
20 ௨0 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
୨୦ମାତର୍ ଆରି ଗଟେକ୍ ଦାଙ୍ଗ୍ଡା ରାଜାର୍ ଲଗେ ଆସି କଇଲା, “ଏ ଆଗିଆଁ, ତମେ ଦେଇରଇଲା ସୁନାର୍ ଡାବୁ ଏଦେ ଦେକା, ଗଟେକ୍ ଗର୍ଣ୍ଡାଇ ଗୁଡିଆ ବାନ୍ଦି ସଙ୍ଗଇ ଦେଇରଇଲି ।
21 ௨௧ நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
୨୧ତୁଇ ସାସନ୍ କର୍ବା ଲକ୍ ବଲି ଡରିକରି ମୁଇ ସେଟା ନେଇ ବେବାର୍ କରିନାଇ । କାଇକେବଇଲେ ଜାକେ ଦେଇ ନ ରଉସ୍ ତାର୍ତେଇଅନି ମାଙ୍ଗିନେଇସୁ । ଆରି ଜନ୍ତି ବୁନି ନ ରଉସ୍ ତେଇଅନି କାଟି ନେଇସୁ ।”
22 ௨௨ அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
୨୨ସେ ରାଜା ରିସାଅଇ କଇଲା, “ଅଇରେ ଦାଙ୍ଗ୍ଡା, ତର୍ କାତା ଇସାବେ ଆକା ତକେ ବିଚାର୍ କର୍ବି । ମୁଇ ଲକ୍ମନ୍ ଜନ୍ଟା ଦେଇ ନ ରଇ ସେଟା ମାଗିନେବି, ଆରି ଜନ୍ତେଇ ବୁନି ନ ରଇ ତେଇଅନି କାଟ୍ବି, ସେଟା ଜାନିରଇଲୁସ୍ ।
23 ௨௩ பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
୨୩ସେନ୍ତାର୍ଆଲେ ମର୍ ସୁନାର୍ ଡାବୁ କାଇକେ ବେଁକେ ସଙ୍ଗଉସ୍ ନାଇ? ସଙ୍ଗଇ ରଇଲେ ତେଇଅନି ମକେ କଲନ୍ତର୍ ମିଲ୍ତା ।”
24 ௨௪ அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
୨୪ଆରି ସେ ଲଗେ ଟିଆଅଇଲା ଲକ୍ମନ୍କେ ରାଜା କଇଲା, “ତାର୍ ତେଇଅନି ଏ ଅଦ୍ଲି ମାଗିନେଇ ଜେ ଦସ୍ଟା ଅଦ୍ଲି ଲାବ୍କଲା ଆଚେ, ତାକେ ଦିଆସ୍ ।”
25 ௨௫ அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
୨୫ମାତର୍ ସେ ଲକ୍ମନ୍ ରାଜାକେ ପାଚାର୍ଲାଇ, “ଏ ଆଗିଆଁ ତାର୍ଟାନେ ଦସ୍ଟା ଆଚେ ଆରି ତାକେ କାଇକେ ଦେଉଁ?”
26 ௨௬ அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୬ସେ କଇଲା, “ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଜାକେ ଆଚେ ତାକେ ଅଦିକ୍ ଦିଆଅଇସି, ମାତର୍ ଜାର୍ ନାଇ, ତାର୍ତେଇ ରଇଲା ଅଲପ୍ ମିସା ଚାଡାଇ ନିଆଅଇସି ।
27 ௨௭ அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
୨୭ମାତର୍ ଜେମନ୍ ମୁଇ ତାକର୍ ରାଜା ଅଇବାକେ ମନ୍ ନ କର୍ତେ ରଇଲାଇ, ସେମନ୍କେ ଡାକି ଆନି ମର୍ ମୁଆଟେ ମରାଇଦିଆସ୍ ।”
28 ௨௮ இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
୨୮ଜିସୁ ଏ ସବୁ କାତା କଇସାରାଇ ସିସ୍ମନର୍ ଆଗ୍ତୁ ଆଗ୍ତୁ ଜିରୁସାଲାମ୍ ବାଟେ ଗାଲା ।
29 ௨௯ அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
୨୯ଜେଡେବଲ୍ ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ଜିତ୍ଗଚ୍ମନ୍ ରଇଲା ଡଙ୍ଗର୍ ପାଲି ଆରି ବେତ୍ପାଗି ଆରି ବେତ୍ନିଆ ଗଡେ କେଟ୍ଲାଇ, ସେ ସିସ୍ମନର୍ ବିତ୍ରେ ଅନି ଦୁଇ ଲକ୍କେ, ସେମନ୍ ଜିବା ଆଗ୍ତୁ ଏନ୍ତାରି କଇପାଟାଇଲା ।
30 ௩0 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
୩୦ତମର୍ ମୁଆଟେ ରଇବା ଗାଏଁ ଜାଆ । ସେ ଗାଏଁ ଗାଲେ, କେ କେବେ ମିସା ଚଗିନରଇବା ଗଦପିଲା ବାନ୍ଦିଅଇରଇଲାଟା ଦେକ୍ସା । ତାକେ ମେଲି ଦାରିଆସା ।
31 ௩௧ அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
୩୧ଜେ ଜଦି ତମ୍କେ “କାଇକେ ମେଲି ନେଲାସ୍ନି?” ବଲି କଇଲେ “ଏଟା ଗୁରୁକେ ଦର୍କାର୍ ଆଚେ ବଲି କୁଆ ।”
32 ௩௨ அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
୩୨ପଚେ ସିସ୍ମନ୍ ସେ ଗାଏଁ ଜାଇ, ଜିସୁ ଜେନ୍ତି କଇରଇଲା ସେନ୍ତି ଦେକ୍ଲାଇ ।
33 ௩௩ கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
୩୩ଆରି ସେମନ୍ ସେ ଗଦପିଲାକେ ମେଲ୍ବାବେଲେ ଗଦ ପିଲାର୍ ସାଉକାର୍ ସେମନ୍କେ ପାଚାର୍ଲା, “କାଇକେ ଗଦପିଲାକେ ମେଲ୍ଲାସ୍ନି?”
34 ௩௪ அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
୩୪ସିସ୍ମନ୍ କଇଲାଇ, “ଏ ଗଦପିଲା ଗୁରୁକେ ଦର୍କାର୍ ଆଚେ ।”
35 ௩௫ அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
୩୫ସିସ୍ମନ୍ ଗଦ ପିଲାକେ ଜିସୁର୍ ଲଗେ ଆନି ନିଜର୍ ନିଜର୍ ଲୁଗା ଗଦର୍ ଉପ୍ରେ ଡାବି ଜିସୁକେ ତାର୍ ଉପ୍ରେ ବସାଇଲାଇ ।
36 ௩௬ அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
୩୬ଆରି ଜିସୁ ଗାଲା ବାଟେ ଲକ୍ମନ୍ ନିଜର୍ ନିଜର୍ ପଚିଆମନ୍ ଅଚାଇ ଦେଲାଇ ।
37 ௩௭ அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
୩୭ଜିସୁ ଜେଡେବଲ୍ ଜିତ୍ଗଚ୍ମନ୍ ରଇଲା ଗଡ୍ଗଡା ଜାଗା ଲଗେ କେଟ୍ଲା, ସେବେଲା ତେଇ ରଇଲା ତାର୍ ଜେତ୍କି ସିସ୍ ମାନ୍ଦା ସେ କରିରଇଲା କାବାଅଇଜିବା କାମ୍ ଏତାଇ, ସାର୍ଦାଅଇ ଆଉଲିଅଇକରି ପର୍ମେସର୍କେ ଜୁଆର୍ କରି କଇଲାଇ,
38 ௩௮ கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
୩୮“ପର୍ମେସରର୍ ନାଉଁ ନେଇକରି ଜନ୍ ରାଜା ଆଇଲାନି ତାକେ ସେ ଆସିର୍ବାଦ୍ କର । ସର୍ଗେ ସାନ୍ତି ଅ, ଆରି ସବୁର୍ଟାନେ ଅନି ବଡ୍ ପର୍ମେସରର୍ ମଇମା ଅ ।”
39 ௩௯ அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
୩୯ସେ ସିସ୍ ମାନ୍ଦାର୍ ବିତ୍ରେ କେତେଟା ପାରୁସିମନ୍ ଜିସୁକେ କଇଲାଇ, “ଏ ଗୁରୁ ତର୍ସଙ୍ଗ୍ ଆଇବା ସିସ୍ମନ୍କେ ଚିମ୍ରାଅଇ ରଇବାକେ କଅ ।”
40 ௪0 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
୪୦ମାତର୍ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଏ ଲକ୍ମନ୍ ଚିମ୍ରାଅଇ ରଇଲେ ପାକ୍ନାମନ୍ ତାକର୍ ନିଜେ ନିଜେ ଆଉଲି ଅଇବାଇ ।”
41 ௪௧ அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,
୪୧ଜିସୁ ଜିରୁସାଲାମ୍ ଲଗେ କେଟ୍ଲା ବେଲେ ସେ ଗଡ୍ ଦେକି କାନ୍ଦିକରି କଇଲା,
42 ௪௨ “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.
୪୨“ସାନ୍ତି ପାଇବାକେ କାଇଟା ଦର୍କାର୍, ସେଟା ଜଦି ତମେ ଆଜି ଜାନିରଇତାସ୍ ଆଲେ, କେତେ ନିକ ଅଇତା! ମାତର୍ ସେସବୁ ଏବେ ତମେ ଦେକି ନାପାର୍ଲାସ୍ନି ।
43 ௪௩ உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,
୪୩ସେଟାର୍ପାଇ ବଲି ଏନ୍ତି ବେସି ବାଦା ଅଇଜିବା ଦିନ୍ ଆଇସି । ତମର୍ ସତ୍ରୁମନ୍ ତମର୍ ଚାରିବେଟ୍ତି ପାଚୁରି ବାନ୍ଦି ଅଟ୍କାଇବାଇ ଆରି ଚାରିବେଡ୍ତି ଅନି ତମର୍ ଉପ୍ରେ ମାଣ୍ଡି ଆଇବାଇ ।
44 ௪௪ உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.
୪୪ସେମନ୍ ତମ୍କେ ଆରି ତମର୍ ପାଚୁରି ତେଇ ରଇବା ଲକ୍ମନ୍କେ ପୁରାପୁରୁନ୍ ନସାଇ କୁଟ୍କୁଟା କରିଦେବାଇ । ଗଟେକ୍ ପାକ୍ନା ମିସା ନିଜର୍ ଜାଗାଇ ନ ଚାଡତ୍ । କାଇକେବଇଲେ ପର୍ମେସର୍ ତମ୍କେ ରକିଆ କର୍ବାକେ ଆସିରଇଲା, ସେବେଲା ତମେ ଜାନି ନାପାର୍ଲାସ୍ ।”
45 ௪௫ பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
୪୫ଆରି ଜିସୁ ଜିରୁସାଲାମ୍ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ପୁରିକରି ତେଇ ଗେନାବିକା କର୍ବା ଲକ୍ମନ୍କେ ବାର୍କରାଇଦେବାର୍ ଦାର୍ଲା ।
46 ௪௬ “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
୪୬ସେମନ୍କେ କଇଲା, “ଦରମ୍ ସାସ୍ତରେ ଏନ୍ତାରି ଲେକାଅଇଲା ଆଚେ, ମର୍ ଗର୍ ପାର୍ତନା ଗର୍ ଅଇସି । ମାତର୍ ତମେ ସେଟା ଚର୍ମନର୍ ଲୁଚ୍ବା ଜାଗା କରିଆଚାସ୍ ।”
47 ௪௭ அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
୪୭ତାର୍ ପଚେ ଜିସୁ ସବୁଦିନେ ଜିରୁସାଲାମ୍ ମନ୍ଦିରେ ସିକିଆ ଦେଇତେ ରଇଲା । ମାତର୍ ମୁକିଅ ପୁଜାରିମନ୍, ସାସ୍ତର୍ ସିକାଉମନ୍ ଆରି ନେତାମନ୍ ମିସି ଜିସୁକେ ମରାଇବାକେ ଚେସ୍ଟା କର୍ତେ ରଇଲାଇ ।
48 ௪௮ மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.
୪୮କାଇକେ ବଇଲେ ଗୁଲାଇ ଲକ୍, ଜିସୁ ସିକାଇଦେବା କାତା ଆରି ସେ କଇତେରଇବା ପଦ୍ମନ୍ ମନ୍ଦିଆନ୍ ଦେଇ ସୁନ୍ତେ ରଇଲାଇ । ତେବର୍ ପାଇ ସେମନ୍ କେନ୍ତାର୍ କର୍ବାର୍ ବଲି ବାଟ୍ ମିଲାଇ ନାପାର୍ତେ ରଇଲାଇ ।