< லூக்கா 18 >

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
అపరఞ్చ లోకైరక్లాన్తై ర్నిరన్తరం ప్రార్థయితవ్యమ్ ఇత్యాశయేన యీశునా దృష్టాన్త ఏకః కథితః|
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
కుత్రచిన్నగరే కశ్చిత్ ప్రాడ్వివాక ఆసీత్ స ఈశ్వరాన్నాబిభేత్ మానుషాంశ్చ నామన్యత|
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
అథ తత్పురవాసినీ కాచిద్విధవా తత్సమీపమేత్య వివాదినా సహ మమ వివాదం పరిష్కుర్వ్వితి నివేదయామాస|
4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
తతః స ప్రాడ్వివాకః కియద్దినాని న తదఙ్గీకృతవాన్ పశ్చాచ్చిత్తే చిన్తయామాస, యద్యపీశ్వరాన్న బిభేమి మనుష్యానపి న మన్యే
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
తథాప్యేషా విధవా మాం క్లిశ్నాతి తస్మాదస్యా వివాదం పరిష్కరిష్యామి నోచేత్ సా సదాగత్య మాం వ్యగ్రం కరిష్యతి|
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
పశ్చాత్ ప్రభురవదద్ అసావన్యాయప్రాడ్వివాకో యదాహ తత్ర మనో నిధధ్వం|
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
ఈశ్వరస్య యే ఽభిరుచితలోకా దివానిశం ప్రార్థయన్తే స బహుదినాని విలమ్బ్యాపి తేషాం వివాదాన్ కిం న పరిష్కరిష్యతి?
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
యుష్మానహం వదామి త్వరయా పరిష్కరిష్యతి, కిన్తు యదా మనుష్యపుత్ర ఆగమిష్యతి తదా పృథివ్యాం కిమీదృశం విశ్వాసం ప్రాప్స్యతి?
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
యే స్వాన్ ధార్మ్మికాన్ జ్ఞాత్వా పరాన్ తుచ్ఛీకుర్వ్వన్తి ఏతాదృగ్భ్యః, కియద్భ్య ఇమం దృష్టాన్తం కథయామాస|
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
ఏకః ఫిరూశ్యపరః కరసఞ్చాయీ ద్వావిమౌ ప్రార్థయితుం మన్దిరం గతౌ|
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
తతోఽసౌ ఫిరూశ్యేకపార్శ్వే తిష్ఠన్ హే ఈశ్వర అహమన్యలోకవత్ లోఠయితాన్యాయీ పారదారికశ్చ న భవామి అస్య కరసఞ్చాయినస్తుల్యశ్చ న, తస్మాత్త్వాం ధన్యం వదామి|
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
సప్తసు దినేషు దినద్వయముపవసామి సర్వ్వసమ్పత్తే ర్దశమాంశం దదామి చ, ఏతత్కథాం కథయన్ ప్రార్థయామాస|
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
కిన్తు స కరసఞ్చాయి దూరే తిష్ఠన్ స్వర్గం ద్రష్టుం నేచ్ఛన్ వక్షసి కరాఘాతం కుర్వ్వన్ హే ఈశ్వర పాపిష్ఠం మాం దయస్వ, ఇత్థం ప్రార్థయామాస|
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
యుష్మానహం వదామి, తయోర్ద్వయో ర్మధ్యే కేవలః కరసఞ్చాయీ పుణ్యవత్త్వేన గణితో నిజగృహం జగామ, యతో యః కశ్చిత్ స్వమున్నమయతి స నామయిష్యతే కిన్తు యః కశ్చిత్ స్వం నమయతి స ఉన్నమయిష్యతే|
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
అథ శిశూనాం గాత్రస్పర్శార్థం లోకాస్తాన్ తస్య సమీపమానిన్యుః శిష్యాస్తద్ దృష్ట్వానేతృన్ తర్జయామాసుః,
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
కిన్తు యీశుస్తానాహూయ జగాద, మన్నికటమ్ ఆగన్తుం శిశూన్ అనుజానీధ్వం తాంశ్చ మా వారయత; యత ఈశ్వరరాజ్యాధికారిణ ఏషాం సదృశాః|
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
అహం యుష్మాన్ యథార్థం వదామి, యో జనః శిశోః సదృశో భూత్వా ఈశ్వరరాజ్యం న గృహ్లాతి స కేనాపి ప్రకారేణ తత్ ప్రవేష్టుం న శక్నోతి|
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
అపరమ్ ఏకోధిపతిస్తం పప్రచ్ఛ, హే పరమగురో, అనన్తాయుషః ప్రాప్తయే మయా కిం కర్త్తవ్యం? (aiōnios g166)
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
యీశురువాచ, మాం కుతః పరమం వదసి? ఈశ్వరం వినా కోపి పరమో న భవతి|
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
పరదారాన్ మా గచ్ఛ, నరం మా జహి, మా చోరయ, మిథ్యాసాక్ష్యం మా దేహి, మాతరం పితరఞ్చ సంమన్యస్వ, ఏతా యా ఆజ్ఞాః సన్తి తాస్త్వం జానాసి|
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
తదా స ఉవాచ, బాల్యకాలాత్ సర్వ్వా ఏతా ఆచరామి|
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ఇతి కథాం శ్రుత్వా యీశుస్తమవదత్, తథాపి తవైకం కర్మ్మ న్యూనమాస్తే, నిజం సర్వ్వస్వం విక్రీయ దరిద్రేభ్యో వితర, తస్మాత్ స్వర్గే ధనం ప్రాప్స్యసి; తత ఆగత్య మమానుగామీ భవ|
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
కిన్త్వేతాం కథాం శ్రుత్వా సోధిపతిః శుశోచ, యతస్తస్య బహుధనమాసీత్|
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
తదా యీశుస్తమతిశోకాన్వితం దృష్ట్వా జగాద, ధనవతామ్ ఈశ్వరరాజ్యప్రవేశః కీదృగ్ దుష్కరః|
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ఈశ్వరరాజ్యే ధనినః ప్రవేశాత్ సూచేశ్ఛిద్రేణ మహాఙ్గస్య గమనాగమనే సుకరే|
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
శ్రోతారః పప్రచ్ఛుస్తర్హి కేన పరిత్రాణం ప్రాప్స్యతే?
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
స ఉక్తవాన్, యన్ మానుషేణాశక్యం తద్ ఈశ్వరేణ శక్యం|
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
తదా పితర ఉవాచ, పశ్య వయం సర్వ్వస్వం పరిత్యజ్య తవ పశ్చాద్గామినోఽభవామ|
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
తతః స ఉవాచ, యుష్మానహం యథార్థం వదామి, ఈశ్వరరాజ్యార్థం గృహం పితరౌ భ్రాతృగణం జాయాం సన్తానాంశ్చ త్యక్తవా
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ఇహ కాలే తతోఽధికం పరకాలే ఽనన్తాయుశ్చ న ప్రాప్స్యతి లోక ఈదృశః కోపి నాస్తి| (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
అనన్తరం స ద్వాదశశిష్యానాహూయ బభాషే, పశ్యత వయం యిరూశాలమ్నగరం యామః, తస్మాత్ మనుష్యపుత్రే భవిష్యద్వాదిభిరుక్తం యదస్తి తదనురూపం తం ప్రతి ఘటిష్యతే;
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
వస్తుతస్తు సోఽన్యదేశీయానాం హస్తేషు సమర్పయిష్యతే, తే తముపహసిష్యన్తి, అన్యాయమాచరిష్యన్తి తద్వపుషి నిష్ఠీవం నిక్షేప్స్యన్తి, కశాభిః ప్రహృత్య తం హనిష్యన్తి చ,
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
కిన్తు తృతీయదినే స శ్మశానాద్ ఉత్థాస్యతి|
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
ఏతస్యాః కథాయా అభిప్రాయం కిఞ్చిదపి తే బోద్ధుం న శేకుః తేషాం నికటేఽస్పష్టతవాత్ తస్యైతాసాం కథానామ్ ఆశయం తే జ్ఞాతుం న శేకుశ్చ|
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
అథ తస్మిన్ యిరీహోః పురస్యాన్తికం ప్రాప్తే కశ్చిదన్ధః పథః పార్శ్వ ఉపవిశ్య భిక్షామ్ అకరోత్
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
స లోకసమూహస్య గమనశబ్దం శ్రుత్వా తత్కారణం పృష్టవాన్|
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
నాసరతీయయీశుర్యాతీతి లోకైరుక్తే స ఉచ్చైర్వక్తుమారేభే,
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
హే దాయూదః సన్తాన యీశో మాం దయస్వ|
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
తతోగ్రగామినస్తం మౌనీ తిష్ఠేతి తర్జయామాసుః కిన్తు స పునారువన్ ఉవాచ, హే దాయూదః సన్తాన మాం దయస్వ|
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
తదా యీశుః స్థగితో భూత్వా స్వాన్తికే తమానేతుమ్ ఆదిదేశ|
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
తతః స తస్యాన్తికమ్ ఆగమత్, తదా స తం పప్రచ్ఛ, త్వం కిమిచ్ఛసి? త్వదర్థమహం కిం కరిష్యామి? స ఉక్తవాన్, హే ప్రభోఽహం ద్రష్టుం లభై|
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
తదా యీశురువాచ, దృష్టిశక్తిం గృహాణ తవ ప్రత్యయస్త్వాం స్వస్థం కృతవాన్|
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
తతస్తత్క్షణాత్ తస్య చక్షుషీ ప్రసన్నే; తస్మాత్ స ఈశ్వరం ధన్యం వదన్ తత్పశ్చాద్ యయౌ, తదాలోక్య సర్వ్వే లోకా ఈశ్వరం ప్రశంసితుమ్ ఆరేభిరే|

< லூக்கா 18 >