< லூக்கா 16 >
1 ௧ பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
১অপরঞ্চ যীশুঃ শিষ্যেভ্যোন্যামেকাং কথাং কথযামাস কস্যচিদ্ ধনৱতো মনুষ্যস্য গৃহকার্য্যাধীশে সম্পত্তেরপৱ্যযেঽপৱাদিতে সতি
2 ௨ அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான்.
২তস্য প্রভুস্তম্ আহূয জগাদ, ৎৱযি যামিমাং কথাং শৃণোমি সা কীদৃশী? ৎৱং গৃহকার্য্যাধীশকর্ম্মণো গণনাং দর্শয গৃহকার্য্যাধীশপদে ৎৱং ন স্থাস্যসি|
3 ௩ அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.
৩তদা স গৃহকার্য্যাধীশো মনসা চিন্তযামাস, প্রভু র্যদি মাং গৃহকার্য্যাধীশপদাদ্ ভ্রংশযতি তর্হি কিং করিষ্যেঽহং? মৃদং খনিতুং মম শক্তি র্নাস্তি ভিক্ষিতুঞ্চ লজ্জিষ্যেঽহং|
4 ௪ நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
৪অতএৱ মযি গৃহকার্য্যাধীশপদাৎ চ্যুতে সতি যথা লোকা মহ্যম্ আশ্রযং দাস্যন্তি তদর্থং যৎকর্ম্ম মযা করণীযং তন্ নির্ণীযতে|
5 ௫ தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
৫পশ্চাৎ স স্ৱপ্রভোরেকৈকম্ অধমর্ণম্ আহূয প্রথমং পপ্রচ্ছ, ৎৱত্তো মে প্রভুণা কতি প্রাপ্যম্?
6 ௬ அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான்.
৬ততঃ স উৱাচ, একশতাঢকতৈলানি; তদা গৃহকার্য্যাধীশঃ প্রোৱাচ, তৱ পত্রমানীয শীঘ্রমুপৱিশ্য তত্র পঞ্চাশতং লিখ|
7 ௭ பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
৭পশ্চাদন্যমেকং পপ্রচ্ছ, ৎৱত্তো মে প্রভুণা কতি প্রাপ্যম্? ততঃ সোৱাদীদ্ একশতাঢকগোধূমাঃ; তদা স কথযামাস, তৱ পত্রমানীয অশীতিং লিখ|
8 ௮ அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
৮তেনৈৱ প্রভুস্তমযথার্থকৃতম্ অধীশং তদ্বুদ্ধিনৈপুণ্যাৎ প্রশশংস; ইত্থং দীপ্তিরূপসন্তানেভ্য এতৎসংসারস্য সন্তানা ৱর্ত্তমানকালেঽধিকবুদ্ধিমন্তো ভৱন্তি| (aiōn )
9 ௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
৯অতো ৱদামি যূযমপ্যযথার্থেন ধনেন মিত্রাণি লভধ্ৱং ততো যুষ্মাসু পদভ্রষ্টেষ্ৱপি তানি চিরকালম্ আশ্রযং দাস্যন্তি| (aiōnios )
10 ௧0 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.
১০যঃ কশ্চিৎ ক্ষুদ্রে কার্য্যে ৱিশ্ৱাস্যো ভৱতি স মহতি কার্য্যেপি ৱিশ্ৱাস্যো ভৱতি, কিন্তু যঃ কশ্চিৎ ক্ষুদ্রে কার্য্যেঽৱিশ্ৱাস্যো ভৱতি স মহতি কার্য্যেপ্যৱিশ্ৱাস্যো ভৱতি|
11 ௧௧ அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்?
১১অতএৱ অযথার্থেন ধনেন যদি যূযমৱিশ্ৱাস্যা জাতাস্তর্হি সত্যং ধনং যুষ্মাকং করেষু কঃ সমর্পযিষ্যতি?
12 ௧௨ வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
১২যদি চ পরধনেন যূযম্ অৱিশ্ৱাস্যা ভৱথ তর্হি যুষ্মাকং স্ৱকীযধনং যুষ্মভ্যং কো দাস্যতি?
13 ௧௩ எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.
১৩কোপি দাস উভৌ প্রভূ সেৱিতুং ন শক্নোতি, যত একস্মিন্ প্রীযমাণোঽন্যস্মিন্নপ্রীযতে যদ্ৱা একং জনং সমাদৃত্য তদন্যং তুচ্ছীকরোতি তদ্ৱদ্ যূযমপি ধনেশ্ৱরৌ সেৱিতুং ন শক্নুথ|
14 ௧௪ இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
১৪তদৈতাঃ সর্ৱ্ৱাঃ কথাঃ শ্রুৎৱা লোভিফিরূশিনস্তমুপজহসুঃ|
15 ௧௫ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.
১৫ততঃ স উৱাচ, যূযং মনুষ্যাণাং নিকটে স্ৱান্ নির্দোষান্ দর্শযথ কিন্তু যুষ্মাকম্ অন্তঃকরণানীশ্ৱরো জানাতি, যৎ মনুষ্যাণাম্ অতি প্রশংস্যং তদ্ ঈশ্ৱরস্য ঘৃণ্যং|
16 ௧௬ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள்.
১৬যোহন আগমনপর্য্যনতং যুষ্মাকং সমীপে ৱ্যৱস্থাভৱিষ্যদ্ৱাদিনাং লেখনানি চাসন্ ততঃ প্রভৃতি ঈশ্ৱররাজ্যস্য সুসংৱাদঃ প্রচরতি, একৈকো লোকস্তন্মধ্যং যত্নেন প্রৱিশতি চ|
17 ௧௭ வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
১৭ৱরং নভসঃ পৃথিৱ্যাশ্চ লোপো ভৱিষ্যতি তথাপি ৱ্যৱস্থাযা একবিন্দোরপি লোপো ন ভৱিষ্যতি|
18 ௧௮ தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.
১৮যঃ কশ্চিৎ স্ৱীযাং ভার্য্যাং ৱিহায স্ত্রিযমন্যাং ৱিৱহতি স পরদারান্ গচ্ছতি, যশ্চ তা ত্যক্তাং নারীং ৱিৱহতি সোপি পরদারান গচ্ছতি|
19 ௧௯ செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.
১৯একো ধনী মনুষ্যঃ শুক্লানি সূক্ষ্মাণি ৱস্ত্রাণি পর্য্যদধাৎ প্রতিদিনং পরিতোষরূপেণাভুংক্তাপিৱচ্চ|
20 ௨0 லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி,
২০সর্ৱ্ৱাঙ্গে ক্ষতযুক্ত ইলিযাসরনামা কশ্চিদ্ দরিদ্রস্তস্য ধনৱতো ভোজনপাত্রাৎ পতিতম্ উচ্ছিষ্টং ভোক্তুং ৱাঞ্ছন্ তস্য দ্ৱারে পতিৎৱাতিষ্ঠৎ;
21 ௨௧ அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
২১অথ শ্ৱান আগত্য তস্য ক্ষতান্যলিহন্|
22 ௨௨ பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
২২কিযৎকালাৎপরং স দরিদ্রঃ প্রাণান্ জহৌ; ততঃ স্ৱর্গীযদূতাস্তং নীৎৱা ইব্রাহীমঃ ক্রোড উপৱেশযামাসুঃ|
23 ௨௩ பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
২৩পশ্চাৎ স ধনৱানপি মমার, তং শ্মশানে স্থাপযামাসুশ্চ; কিন্তু পরলোকে স ৱেদনাকুলঃ সন্ ঊর্দ্ধ্ৱাং নিরীক্ষ্য বহুদূরাদ্ ইব্রাহীমং তৎক্রোড ইলিযাসরঞ্চ ৱিলোক্য রুৱন্নুৱাচ; (Hadēs )
24 ௨௪ அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
২৪হে পিতর্ ইব্রাহীম্ অনুগৃহ্য অঙ্গুল্যগ্রভাগং জলে মজ্জযিৎৱা মম জিহ্ৱাং শীতলাং কর্ত্তুম্ ইলিযাসরং প্রেরয, যতো ৱহ্নিশিখাতোহং ৱ্যথিতোস্মি|
25 ௨௫ அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
২৫তদা ইব্রাহীম্ বভাষে, হে পুত্র ৎৱং জীৱন্ সম্পদং প্রাপ্তৱান্ ইলিযাসরস্তু ৱিপদং প্রাপ্তৱান্ এতৎ স্মর, কিন্তু সম্প্রতি তস্য সুখং তৱ চ দুঃখং ভৱতি|
26 ௨௬ அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
২৬অপরমপি যুষ্মাকম্ অস্মাকঞ্চ স্থানযো র্মধ্যে মহদ্ৱিচ্ছেদোঽস্তি তত এতৎস্থানস্য লোকাস্তৎ স্থানং যাতুং যদ্ৱা তৎস্থানস্য লোকা এতৎ স্থানমাযাতুং ন শক্নুৱন্তি|
27 ௨௭ அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
২৭তদা স উক্তৱান্, হে পিতস্তর্হি ৎৱাং নিৱেদযামি মম পিতু র্গেহে যে মম পঞ্চ ভ্রাতরঃ সন্তি
28 ௨௮ நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
২৮তে যথৈতদ্ যাতনাস্থানং নাযাস্যন্তি তথা মন্ত্রণাং দাতুং তেষাং সমীপম্ ইলিযাসরং প্রেরয|
29 ௨௯ ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
২৯তত ইব্রাহীম্ উৱাচ, মূসাভৱিষ্যদ্ৱাদিনাঞ্চ পুস্তকানি তেষাং নিকটে সন্তি তে তদ্ৱচনানি মন্যন্তাং|
30 ௩0 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
৩০তদা স নিৱেদযামাস, হে পিতর্ ইব্রাহীম্ ন তথা, কিন্তু যদি মৃতলোকানাং কশ্চিৎ তেষাং সমীপং যাতি তর্হি তে মনাংসি ৱ্যাঘোটযিষ্যন্তি|
31 ௩௧ அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
৩১তত ইব্রাহীম্ জগাদ, তে যদি মূসাভৱিষ্যদ্ৱাদিনাঞ্চ ৱচনানি ন মন্যন্তে তর্হি মৃতলোকানাং কস্মিংশ্চিদ্ উত্থিতেপি তে তস্য মন্ত্রণাং ন মংস্যন্তে|