< லூக்கா 15 >

1 எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
ਤਦਾ ਕਰਸਞ੍ਚਾਯਿਨਃ ਪਾਪਿਨਸ਼੍ਚ ਲੋਕਾ ਉਪਦੇਸ਼੍ਕਥਾਂ ਸ਼੍ਰੋਤੁੰ ਯੀਸ਼ੋਃ ਸਮੀਪਮ੍ ਆਗੱਛਨ੍|
2 அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
ਤਤਃ ਫਿਰੂਸ਼ਿਨ ਉਪਾਧ੍ਯਾਯਾਸ਼੍ਚ ਵਿਵਦਮਾਨਾਃ ਕਥਯਾਮਾਸੁਃ ਏਸ਼਼ ਮਾਨੁਸ਼਼ਃ ਪਾਪਿਭਿਃ ਸਹ ਪ੍ਰਣਯੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤੈਃ ਸਾਰ੍ੱਧੰ ਭੁੰਕ੍ਤੇ|
3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
ਤਦਾ ਸ ਤੇਭ੍ਯ ਇਮਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਕਥਾਂ ਕਥਿਤਵਾਨ੍,
4 உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
ਕਸ੍ਯਚਿਤ੍ ਸ਼ਤਮੇਸ਼਼ੇਸ਼਼ੁ ਤਿਸ਼਼੍ਠਤ੍ਮੁ ਤੇਸ਼਼ਾਮੇਕੰ ਸ ਯਦਿ ਹਾਰਯਤਿ ਤਰ੍ਹਿ ਮਧ੍ਯੇਪ੍ਰਾਨ੍ਤਰਮ੍ ਏਕੋਨਸ਼ਤਮੇਸ਼਼ਾਨ੍ ਵਿਹਾਯ ਹਾਰਿਤਮੇਸ਼਼ਸ੍ਯ ਉੱਦੇਸ਼ਪ੍ਰਾਪ੍ਤਿਪਰ੍ੱਯਨਤੰ ਨ ਗਵੇਸ਼਼ਯਤਿ, ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਲੋਕੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਕ ਆਸ੍ਤੇ?
5 கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
ਤਸ੍ਯੋੱਦੇਸ਼ੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਹ੍ਰੁʼਸ਼਼੍ਟਮਨਾਸ੍ਤੰ ਸ੍ਕਨ੍ਧੇ ਨਿਧਾਯ ਸ੍ਵਸ੍ਥਾਨਮ੍ ਆਨੀਯ ਬਨ੍ਧੁਬਾਨ੍ਧਵਸਮੀਪਵਾਸਿਨ ਆਹੂਯ ਵਕ੍ਤਿ,
6 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
ਹਾਰਿਤੰ ਮੇਸ਼਼ੰ ਪ੍ਰਾਪ੍ਤੋਹਮ੍ ਅਤੋ ਹੇਤੋ ਰ੍ਮਯਾ ਸਾਰ੍ੱਧਮ੍ ਆਨਨ੍ਦਤ|
7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਤਦ੍ਵਦਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਦਾਮਿ, ਯੇਸ਼਼ਾਂ ਮਨਃਪਰਾਵਰ੍ੱਤਨਸ੍ਯ ਪ੍ਰਯੋਜਨੰ ਨਾਸ੍ਤਿ, ਤਾਦ੍ਰੁʼਸ਼ੈਕੋਨਸ਼ਤਧਾਰ੍ੰਮਿਕਕਾਰਣਾਦ੍ ਯ ਆਨਨ੍ਦਸ੍ਤਸ੍ਮਾਦ੍ ਏਕਸ੍ਯ ਮਨਃਪਰਿਵਰ੍ੱਤਿਨਃ ਪਾਪਿਨਃ ਕਾਰਣਾਤ੍ ਸ੍ਵਰ੍ਗੇ (ਅ)ਧਿਕਾਨਨ੍ਦੋ ਜਾਯਤੇ|
8 அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
ਅਪਰਞ੍ਚ ਦਸ਼ਾਨਾਂ ਰੂਪ੍ਯਖਣ੍ਡਾਨਾਮ੍ ਏਕਖਣ੍ਡੇ ਹਾਰਿਤੇ ਪ੍ਰਦੀਪੰ ਪ੍ਰਜ੍ਵਾਲ੍ਯ ਗ੍ਰੁʼਹੰ ਸੰਮਾਰ੍ਜ੍ਯ ਤਸ੍ਯ ਪ੍ਰਾਪ੍ਤਿੰ ਯਾਵਦ੍ ਯਤ੍ਨੇਨ ਨ ਗਵੇਸ਼਼ਯਤਿ, ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਯੋਸ਼਼ਿਤ੍ ਕਾਸ੍ਤੇ?
9 கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
ਪ੍ਰਾਪ੍ਤੇ ਸਤਿ ਬਨ੍ਧੁਬਾਨ੍ਧਵਸਮੀਪਵਾਸਿਨੀਰਾਹੂਯ ਕਥਯਤਿ, ਹਾਰਿਤੰ ਰੂਪ੍ਯਖਣ੍ਡੰ ਪ੍ਰਾਪ੍ਤਾਹੰ ਤਸ੍ਮਾਦੇਵ ਮਯਾ ਸਾਰ੍ੱਧਮ੍ ਆਨਨ੍ਦਤ|
10 ௧0 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਤਦ੍ਵਦਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵ੍ਯਾਹਰਾਮਿ, ਏਕੇਨ ਪਾਪਿਨਾ ਮਨਸਿ ਪਰਿਵਰ੍ੱਤਿਤੇ, ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਦੂਤਾਨਾਂ ਮਧ੍ਯੇਪ੍ਯਾਨਨ੍ਦੋ ਜਾਯਤੇ|
11 ௧௧ பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
ਅਪਰਞ੍ਚ ਸ ਕਥਯਾਮਾਸ, ਕਸ੍ਯਚਿਦ੍ ਦ੍ਵੌ ਪੁਤ੍ਰਾਵਾਸ੍ਤਾਂ,
12 ௧௨ அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
ਤਯੋਃ ਕਨਿਸ਼਼੍ਠਃ ਪੁਤ੍ਰਃ ਪਿਤ੍ਰੇ ਕਥਯਾਮਾਸ, ਹੇ ਪਿਤਸ੍ਤਵ ਸਮ੍ਪੱਤ੍ਯਾ ਯਮੰਸ਼ੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਾਮ੍ਯਹੰ ਵਿਭਜ੍ਯ ਤੰ ਦੇਹਿ, ਤਤਃ ਪਿਤਾ ਨਿਜਾਂ ਸਮ੍ਪੱਤਿੰ ਵਿਭਜ੍ਯ ਤਾਭ੍ਯਾਂ ਦਦੌ|
13 ௧௩ சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
ਕਤਿਪਯਾਤ੍ ਕਾਲਾਤ੍ ਪਰੰ ਸ ਕਨਿਸ਼਼੍ਠਪੁਤ੍ਰਃ ਸਮਸ੍ਤੰ ਧਨੰ ਸੰਗ੍ਰੁʼਹ੍ਯ ਦੂਰਦੇਸ਼ੰ ਗਤ੍ਵਾ ਦੁਸ਼਼੍ਟਾਚਰਣੇਨ ਸਰ੍ੱਵਾਂ ਸਮ੍ਪੱਤਿੰ ਨਾਸ਼ਯਾਮਾਸ|
14 ௧௪ எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
ਤਸ੍ਯ ਸਰ੍ੱਵਧਨੇ ਵ੍ਯਯੰ ਗਤੇ ਤੱਦੇਸ਼ੇ ਮਹਾਦੁਰ੍ਭਿਕ੍ਸ਼਼ੰ ਬਭੂਵ, ਤਤਸ੍ਤਸ੍ਯ ਦੈਨ੍ਯਦਸ਼ਾ ਭਵਿਤੁਮ੍ ਆਰੇਭੇ|
15 ௧௫ அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
ਤਤਃ ਪਰੰ ਸ ਗਤ੍ਵਾ ਤੱਦੇਸ਼ੀਯੰ ਗ੍ਰੁʼਹਸ੍ਥਮੇਕਮ੍ ਆਸ਼੍ਰਯਤ; ਤਤਃ ਸਤੰ ਸ਼ੂਕਰਵ੍ਰਜੰ ਚਾਰਯਿਤੁੰ ਪ੍ਰਾਨ੍ਤਰੰ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਮਾਸ|
16 ௧௬ அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
ਕੇਨਾਪਿ ਤਸ੍ਮੈ ਭਕ੍ਸ਼਼੍ਯਾਦਾਨਾਤ੍ ਸ ਸ਼ੂਕਰਫਲਵਲ੍ਕਲੇਨ ਪਿਚਿਣ੍ਡਪੂਰਣਾਂ ਵਵਾਞ੍ਛ|
17 ௧௭ அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
ਸ਼ੇਸ਼਼ੇ ਸ ਮਨਸਿ ਚੇਤਨਾਂ ਪ੍ਰਾਪ੍ਯ ਕਥਯਾਮਾਸ, ਹਾ ਮਮ ਪਿਤੁਃ ਸਮੀਪੇ ਕਤਿ ਕਤਿ ਵੇਤਨਭੁਜੋ ਦਾਸਾ ਯਥੇਸ਼਼੍ਟੰ ਤਤੋਧਿਕਞ੍ਚ ਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਪ੍ਰਾਪ੍ਨੁਵਨ੍ਤਿ ਕਿਨ੍ਤ੍ਵਹੰ ਕ੍ਸ਼਼ੁਧਾ ਮੁਮੂਰ੍ਸ਼਼ੁਃ|
18 ௧௮ நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
ਅਹਮੁੱਥਾਯ ਪਿਤੁਃ ਸਮੀਪੰ ਗਤ੍ਵਾ ਕਥਾਮੇਤਾਂ ਵਦਿਸ਼਼੍ਯਾਮਿ, ਹੇ ਪਿਤਰ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਤਵ ਚ ਵਿਰੁੱਧੰ ਪਾਪਮਕਰਵਮ੍
19 ௧௯ இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
ਤਵ ਪੁਤ੍ਰਇਤਿ ਵਿਖ੍ਯਾਤੋ ਭਵਿਤੁੰ ਨ ਯੋਗ੍ਯੋਸ੍ਮਿ ਚ, ਮਾਂ ਤਵ ਵੈਤਨਿਕੰ ਦਾਸੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਸ੍ਥਾਪਯ|
20 ௨0 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਉੱਥਾਯ ਪਿਤੁਃ ਸਮੀਪੰ ਜਗਾਮ; ਤਤਸ੍ਤਸ੍ਯ ਪਿਤਾਤਿਦੂਰੇ ਤੰ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਦਯਾਞ੍ਚਕ੍ਰੇ, ਧਾਵਿਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਕਣ੍ਠੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਤੰ ਚੁਚੁਮ੍ਬ ਚ|
21 ௨௧ குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
ਤਦਾ ਪੁਤ੍ਰ ਉਵਾਚ, ਹੇ ਪਿਤਰ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਤਵ ਚ ਵਿਰੁੱਧੰ ਪਾਪਮਕਰਵੰ, ਤਵ ਪੁਤ੍ਰਇਤਿ ਵਿਖ੍ਯਾਤੋ ਭਵਿਤੁੰ ਨ ਯੋਗ੍ਯੋਸ੍ਮਿ ਚ|
22 ௨௨ அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਪਿਤਾ ਨਿਜਦਾਸਾਨ੍ ਆਦਿਦੇਸ਼, ਸਰ੍ੱਵੋੱਤਮਵਸ੍ਤ੍ਰਾਣ੍ਯਾਨੀਯ ਪਰਿਧਾਪਯਤੈਨੰ ਹਸ੍ਤੇ ਚਾਙ੍ਗੁਰੀਯਕਮ੍ ਅਰ੍ਪਯਤ ਪਾਦਯੋਸ਼੍ਚੋਪਾਨਹੌ ਸਮਰ੍ਪਯਤ;
23 ௨௩ கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
ਪੁਸ਼਼੍ਟੰ ਗੋਵਤ੍ਸਮ੍ ਆਨੀਯ ਮਾਰਯਤ ਚ ਤੰ ਭੁਕ੍ਤ੍ਵਾ ਵਯਮ੍ ਆਨਨ੍ਦਾਮ|
24 ௨௪ என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
ਯਤੋ ਮਮ ਪੁਤ੍ਰੋਯਮ੍ ਅਮ੍ਰਿਯਤ ਪੁਨਰਜੀਵੀਦ੍ ਹਾਰਿਤਸ਼੍ਚ ਲਬ੍ਧੋਭੂਤ੍ ਤਤਸ੍ਤ ਆਨਨ੍ਦਿਤੁਮ੍ ਆਰੇਭਿਰੇ|
25 ௨௫ அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
ਤਤ੍ਕਾਲੇ ਤਸ੍ਯ ਜ੍ਯੇਸ਼਼੍ਠਃ ਪੁਤ੍ਰਃ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰ ਆਸੀਤ੍| ਅਥ ਸ ਨਿਵੇਸ਼ਨਸ੍ਯ ਨਿਕਟੰ ਆਗੱਛਨ੍ ਨ੍ਰੁʼਤ੍ਯਾਨਾਂ ਵਾਦ੍ਯਾਨਾਞ੍ਚ ਸ਼ਬ੍ਦੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ
26 ௨௬ வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
ਦਾਸਾਨਾਮ੍ ਏਕਮ੍ ਆਹੂਯ ਪਪ੍ਰੱਛ, ਕਿੰ ਕਾਰਣਮਸ੍ਯ?
27 ௨௭ அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
ਤਤਃ ਸੋਵਾਦੀਤ੍, ਤਵ ਭ੍ਰਾਤਾਗਮਤ੍, ਤਵ ਤਾਤਸ਼੍ਚ ਤੰ ਸੁਸ਼ਰੀਰੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਪੁਸ਼਼੍ਟੰ ਗੋਵਤ੍ਸੰ ਮਾਰਿਤਵਾਨ੍|
28 ௨௮ அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
ਤਤਃ ਸ ਪ੍ਰਕੁਪ੍ਯ ਨਿਵੇਸ਼ਨਾਨ੍ਤਃ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਨ ਸੰਮੇਨੇ; ਤਤਸ੍ਤਸ੍ਯ ਪਿਤਾ ਬਹਿਰਾਗਤ੍ਯ ਤੰ ਸਾਧਯਾਮਾਸ|
29 ௨௯ அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
ਤਤਃ ਸ ਪਿਤਰੰ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ, ਪਸ਼੍ਯ ਤਵ ਕਾਞ੍ਚਿਦਪ੍ਯਾਜ੍ਞਾਂ ਨ ਵਿਲੰਘ੍ਯ ਬਹੂਨ੍ ਵਤ੍ਸਰਾਨ੍ ਅਹੰ ਤ੍ਵਾਂ ਸੇਵੇ ਤਥਾਪਿ ਮਿਤ੍ਰੈਃ ਸਾਰ੍ੱਧਮ੍ ਉਤ੍ਸਵੰ ਕਰ੍ੱਤੁੰ ਕਦਾਪਿ ਛਾਗਮੇਕਮਪਿ ਮਹ੍ਯੰ ਨਾਦਦਾਃ;
30 ௩0 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਤਵ ਯਃ ਪੁਤ੍ਰੋ ਵੇਸ਼੍ਯਾਗਮਨਾਦਿਭਿਸ੍ਤਵ ਸਮ੍ਪੱਤਿਮ੍ ਅਪਵ੍ਯਯਿਤਵਾਨ੍ ਤਸ੍ਮਿੰਨਾਗਤਮਾਤ੍ਰੇ ਤਸ੍ਯੈਵ ਨਿਮਿੱਤੰ ਪੁਸ਼਼੍ਟੰ ਗੋਵਤ੍ਸੰ ਮਾਰਿਤਵਾਨ੍|
31 ௩௧ அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
ਤਦਾ ਤਸ੍ਯ ਪਿਤਾਵੋਚਤ੍, ਹੇ ਪੁਤ੍ਰ ਤ੍ਵੰ ਸਰ੍ੱਵਦਾ ਮਯਾ ਸਹਾਸਿ ਤਸ੍ਮਾਨ੍ ਮਮ ਯਦ੍ਯਦਾਸ੍ਤੇ ਤਤ੍ਸਰ੍ੱਵੰ ਤਵ|
32 ௩௨ உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਤਵਾਯੰ ਭ੍ਰਾਤਾ ਮ੍ਰੁʼਤਃ ਪੁਨਰਜੀਵੀਦ੍ ਹਾਰਿਤਸ਼੍ਚ ਭੂਤ੍ਵਾ ਪ੍ਰਾਪ੍ਤੋਭੂਤ੍, ਏਤਸ੍ਮਾਤ੍ ਕਾਰਣਾਦ੍ ਉਤ੍ਸਵਾਨਨ੍ਦੌ ਕਰ੍ੱਤੁਮ੍ ਉਚਿਤਮਸ੍ਮਾਕਮ੍|

< லூக்கா 15 >