< லூக்கா 13 >
1 ௧ அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
ಅಪರಞ್ಚ ಪೀಲಾತೋ ಯೇಷಾಂ ಗಾಲೀಲೀಯಾನಾಂ ರಕ್ತಾನಿ ಬಲೀನಾಂ ರಕ್ತೈಃ ಸಹಾಮಿಶ್ರಯತ್ ತೇಷಾಂ ಗಾಲೀಲೀಯಾನಾಂ ವೃತ್ತಾನ್ತಂ ಕತಿಪಯಜನಾ ಉಪಸ್ಥಾಪ್ಯ ಯೀಶವೇ ಕಥಯಾಮಾಸುಃ|
2 ௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
ತತಃ ಸ ಪ್ರತ್ಯುವಾಚ ತೇಷಾಂ ಲೋಕಾನಾಮ್ ಏತಾದೃಶೀ ದುರ್ಗತಿ ರ್ಘಟಿತಾ ತತ್ಕಾರಣಾದ್ ಯೂಯಂ ಕಿಮನ್ಯೇಭ್ಯೋ ಗಾಲೀಲೀಯೇಭ್ಯೋಪ್ಯಧಿಕಪಾಪಿನಸ್ತಾನ್ ಬೋಧಧ್ವೇ?
3 ௩ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ ತಥಾ ನ ಕಿನ್ತು ಮನಃಸು ನ ಪರಾವರ್ತ್ತಿತೇಷು ಯೂಯಮಪಿ ತಥಾ ನಂಕ್ಷ್ಯಥ|
4 ௪ சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
ಅಪರಞ್ಚ ಶೀಲೋಹನಾಮ್ನ ಉಚ್ಚಗೃಹಸ್ಯ ಪತನಾದ್ ಯೇಽಷ್ಟಾದಶಜನಾ ಮೃತಾಸ್ತೇ ಯಿರೂಶಾಲಮಿ ನಿವಾಸಿಸರ್ವ್ವಲೋಕೇಭ್ಯೋಽಧಿಕಾಪರಾಧಿನಃ ಕಿಂ ಯೂಯಮಿತ್ಯಂ ಬೋಧಧ್ವೇ?
5 ௫ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ ತಥಾ ನ ಕಿನ್ತು ಮನಃಸು ನ ಪರಿವರ್ತ್ತಿತೇಷು ಯೂಯಮಪಿ ತಥಾ ನಂಕ್ಷ್ಯಥ|
6 ௬ அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
ಅನನ್ತರಂ ಸ ಇಮಾಂ ದೃಷ್ಟಾನ್ತಕಥಾಮಕಥಯದ್ ಏಕೋ ಜನೋ ದ್ರಾಕ್ಷಾಕ್ಷೇತ್ರಮಧ್ಯ ಏಕಮುಡುಮ್ಬರವೃಕ್ಷಂ ರೋಪಿತವಾನ್| ಪಶ್ಚಾತ್ ಸ ಆಗತ್ಯ ತಸ್ಮಿನ್ ಫಲಾನಿ ಗವೇಷಯಾಮಾಸ,
7 ௭ அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
ಕಿನ್ತು ಫಲಾಪ್ರಾಪ್ತೇಃ ಕಾರಣಾದ್ ಉದ್ಯಾನಕಾರಂ ಭೃತ್ಯಂ ಜಗಾದ, ಪಶ್ಯ ವತ್ಸರತ್ರಯಂ ಯಾವದಾಗತ್ಯ ಏತಸ್ಮಿನ್ನುಡುಮ್ಬರತರೌ ಕ್ಷಲಾನ್ಯನ್ವಿಚ್ಛಾಮಿ, ಕಿನ್ತು ನೈಕಮಪಿ ಪ್ರಪ್ನೋಮಿ ತರುರಯಂ ಕುತೋ ವೃಥಾ ಸ್ಥಾನಂ ವ್ಯಾಪ್ಯ ತಿಷ್ಠತಿ? ಏನಂ ಛಿನ್ಧಿ|
8 ௮ அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
ತತೋ ಭೃತ್ಯಃ ಪ್ರತ್ಯುವಾಚ, ಹೇ ಪ್ರಭೋ ಪುನರ್ವರ್ಷಮೇಕಂ ಸ್ಥಾತುಮ್ ಆದಿಶ; ಏತಸ್ಯ ಮೂಲಸ್ಯ ಚತುರ್ದಿಕ್ಷು ಖನಿತ್ವಾಹಮ್ ಆಲವಾಲಂ ಸ್ಥಾಪಯಾಮಿ|
9 ௯ கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
ತತಃ ಫಲಿತುಂ ಶಕ್ನೋತಿ ಯದಿ ನ ಫಲತಿ ತರ್ಹಿ ಪಶ್ಚಾತ್ ಛೇತ್ಸ್ಯಸಿ|
10 ௧0 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
ಅಥ ವಿಶ್ರಾಮವಾರೇ ಭಜನಗೇಹೇ ಯೀಶುರುಪದಿಶತಿ
11 ௧௧ அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
ತಸ್ಮಿತ್ ಸಮಯೇ ಭೂತಗ್ರಸ್ತತ್ವಾತ್ ಕುಬ್ಜೀಭೂಯಾಷ್ಟಾದಶವರ್ಷಾಣಿ ಯಾವತ್ ಕೇನಾಪ್ಯುಪಾಯೇನ ಋಜು ರ್ಭವಿತುಂ ನ ಶಕ್ನೋತಿ ಯಾ ದುರ್ಬ್ಬಲಾ ಸ್ತ್ರೀ,
12 ௧௨ இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
ತಾಂ ತತ್ರೋಪಸ್ಥಿತಾಂ ವಿಲೋಕ್ಯ ಯೀಶುಸ್ತಾಮಾಹೂಯ ಕಥಿತವಾನ್ ಹೇ ನಾರಿ ತವ ದೌರ್ಬ್ಬಲ್ಯಾತ್ ತ್ವಂ ಮುಕ್ತಾ ಭವ|
13 ௧௩ அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
ತತಃ ಪರಂ ತಸ್ಯಾ ಗಾತ್ರೇ ಹಸ್ತಾರ್ಪಣಮಾತ್ರಾತ್ ಸಾ ಋಜುರ್ಭೂತ್ವೇಶ್ವರಸ್ಯ ಧನ್ಯವಾದಂ ಕರ್ತ್ತುಮಾರೇಭೇ|
14 ௧௪ இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
ಕಿನ್ತು ವಿಶ್ರಾಮವಾರೇ ಯೀಶುನಾ ತಸ್ಯಾಃ ಸ್ವಾಸ್ಥ್ಯಕರಣಾದ್ ಭಜನಗೇಹಸ್ಯಾಧಿಪತಿಃ ಪ್ರಕುಪ್ಯ ಲೋಕಾನ್ ಉವಾಚ, ಷಟ್ಸು ದಿನೇಷು ಲೋಕೈಃ ಕರ್ಮ್ಮ ಕರ್ತ್ತವ್ಯಂ ತಸ್ಮಾದ್ಧೇತೋಃ ಸ್ವಾಸ್ಥ್ಯಾರ್ಥಂ ತೇಷು ದಿನೇಷು ಆಗಚ್ಛತ, ವಿಶ್ರಾಮವಾರೇ ಮಾಗಚ್ಛತ|
15 ௧௫ கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
ತದಾ ಪಭುಃ ಪ್ರತ್ಯುವಾಚ ರೇ ಕಪಟಿನೋ ಯುಷ್ಮಾಕಮ್ ಏಕೈಕೋ ಜನೋ ವಿಶ್ರಾಮವಾರೇ ಸ್ವೀಯಂ ಸ್ವೀಯಂ ವೃಷಭಂ ಗರ್ದಭಂ ವಾ ಬನ್ಧನಾನ್ಮೋಚಯಿತ್ವಾ ಜಲಂ ಪಾಯಯಿತುಂ ಕಿಂ ನ ನಯತಿ?
16 ௧௬ இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
ತರ್ಹ್ಯಾಷ್ಟಾದಶವತ್ಸರಾನ್ ಯಾವತ್ ಶೈತಾನಾ ಬದ್ಧಾ ಇಬ್ರಾಹೀಮಃ ಸನ್ತತಿರಿಯಂ ನಾರೀ ಕಿಂ ವಿಶ್ರಾಮವಾರೇ ನ ಮೋಚಯಿತವ್ಯಾ?
17 ௧௭ அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
ಏಷು ವಾಕ್ಯೇಷು ಕಥಿತೇಷು ತಸ್ಯ ವಿಪಕ್ಷಾಃ ಸಲಜ್ಜಾ ಜಾತಾಃ ಕಿನ್ತು ತೇನ ಕೃತಸರ್ವ್ವಮಹಾಕರ್ಮ್ಮಕಾರಣಾತ್ ಲೋಕನಿವಹಃ ಸಾನನ್ದೋಽಭವತ್|
18 ௧௮ அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
ಅನನ್ತರಂ ಸೋವದದ್ ಈಶ್ವರಸ್ಯ ರಾಜ್ಯಂ ಕಸ್ಯ ಸದೃಶಂ? ಕೇನ ತದುಪಮಾಸ್ಯಾಮಿ?
19 ௧௯ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
ಯತ್ ಸರ್ಷಪಬೀಜಂ ಗೃಹೀತ್ವಾ ಕಶ್ಚಿಜ್ಜನ ಉದ್ಯಾನ ಉಪ್ತವಾನ್ ತದ್ ಬೀಜಮಙ್ಕುರಿತಂ ಸತ್ ಮಹಾವೃಕ್ಷೋಽಜಾಯತ, ತತಸ್ತಸ್ಯ ಶಾಖಾಸು ವಿಹಾಯಸೀಯವಿಹಗಾ ಆಗತ್ಯ ನ್ಯೂಷುಃ, ತದ್ರಾಜ್ಯಂ ತಾದೃಶೇನ ಸರ್ಷಪಬೀಜೇನ ತುಲ್ಯಂ|
20 ௨0 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
ಪುನಃ ಕಥಯಾಮಾಸ, ಈಶ್ವರಸ್ಯ ರಾಜ್ಯಂ ಕಸ್ಯ ಸದೃಶಂ ವದಿಷ್ಯಾಮಿ? ಯತ್ ಕಿಣ್ವಂ ಕಾಚಿತ್ ಸ್ತ್ರೀ ಗೃಹೀತ್ವಾ ದ್ರೋಣತ್ರಯಪರಿಮಿತಗೋಧೂಮಚೂರ್ಣೇಷು ಸ್ಥಾಪಯಾಮಾಸ,
21 ௨௧ அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
ತತಃ ಕ್ರಮೇಣ ತತ್ ಸರ್ವ್ವಗೋಧೂಮಚೂರ್ಣಂ ವ್ಯಾಪ್ನೋತಿ, ತಸ್ಯ ಕಿಣ್ವಸ್ಯ ತುಲ್ಯಮ್ ಈಶ್ವರಸ್ಯ ರಾಜ್ಯಂ|
22 ௨௨ அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
ತತಃ ಸ ಯಿರೂಶಾಲಮ್ನಗರಂ ಪ್ರತಿ ಯಾತ್ರಾಂ ಕೃತ್ವಾ ನಗರೇ ನಗರೇ ಗ್ರಾಮೇ ಗ್ರಾಮೇ ಸಮುಪದಿಶನ್ ಜಗಾಮ|
23 ௨௩ அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
ತದಾ ಕಶ್ಚಿಜ್ಜನಸ್ತಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಪ್ರಭೋ ಕಿಂ ಕೇವಲಮ್ ಅಲ್ಪೇ ಲೋಕಾಃ ಪರಿತ್ರಾಸ್ಯನ್ತೇ?
24 ௨௪ இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ತತಃ ಸ ಲೋಕಾನ್ ಉವಾಚ, ಸಂಕೀರ್ಣದ್ವಾರೇಣ ಪ್ರವೇಷ್ಟುಂ ಯತಘ್ವಂ, ಯತೋಹಂ ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ, ಬಹವಃ ಪ್ರವೇಷ್ಟುಂ ಚೇಷ್ಟಿಷ್ಯನ್ತೇ ಕಿನ್ತು ನ ಶಕ್ಷ್ಯನ್ತಿ|
25 ௨௫ வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
ಗೃಹಪತಿನೋತ್ಥಾಯ ದ್ವಾರೇ ರುದ್ಧೇ ಸತಿ ಯದಿ ಯೂಯಂ ಬಹಿಃ ಸ್ಥಿತ್ವಾ ದ್ವಾರಮಾಹತ್ಯ ವದಥ, ಹೇ ಪ್ರಭೋ ಹೇ ಪ್ರಭೋ ಅಸ್ಮತ್ಕಾರಣಾದ್ ದ್ವಾರಂ ಮೋಚಯತು, ತತಃ ಸ ಇತಿ ಪ್ರತಿವಕ್ಷ್ಯತಿ, ಯೂಯಂ ಕುತ್ರತ್ಯಾ ಲೋಕಾ ಇತ್ಯಹಂ ನ ಜಾನಾಮಿ|
26 ௨௬ அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
ತದಾ ಯೂಯಂ ವದಿಷ್ಯಥ, ತವ ಸಾಕ್ಷಾದ್ ವಯಂ ಭೇಜನಂ ಪಾನಞ್ಚ ಕೃತವನ್ತಃ, ತ್ವಞ್ಚಾಸ್ಮಾಕಂ ನಗರಸ್ಯ ಪಥಿ ಸಮುಪದಿಷ್ಟವಾನ್|
27 ௨௭ ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ಕಿನ್ತು ಸ ವಕ್ಷ್ಯತಿ, ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ, ಯೂಯಂ ಕುತ್ರತ್ಯಾ ಲೋಕಾ ಇತ್ಯಹಂ ನ ಜಾನಾಮಿ; ಹೇ ದುರಾಚಾರಿಣೋ ಯೂಯಂ ಮತ್ತೋ ದೂರೀಭವತ|
28 ௨௮ நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
ತದಾ ಇಬ್ರಾಹೀಮಂ ಇಸ್ಹಾಕಂ ಯಾಕೂಬಞ್ಚ ಸರ್ವ್ವಭವಿಷ್ಯದ್ವಾದಿನಶ್ಚ ಈಶ್ವರಸ್ಯ ರಾಜ್ಯಂ ಪ್ರಾಪ್ತಾನ್ ಸ್ವಾಂಶ್ಚ ಬಹಿಷ್ಕೃತಾನ್ ದೃಷ್ಟ್ವಾ ಯೂಯಂ ರೋದನಂ ದನ್ತೈರ್ದನ್ತಘರ್ಷಣಞ್ಚ ಕರಿಷ್ಯಥ|
29 ௨௯ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
ಅಪರಞ್ಚ ಪೂರ್ವ್ವಪಶ್ಚಿಮದಕ್ಷಿಣೋತ್ತರದಿಗ್ಭ್ಯೋ ಲೋಕಾ ಆಗತ್ಯ ಈಶ್ವರಸ್ಯ ರಾಜ್ಯೇ ನಿವತ್ಸ್ಯನ್ತಿ|
30 ௩0 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
ಪಶ್ಯತೇತ್ಥಂ ಶೇಷೀಯಾ ಲೋಕಾ ಅಗ್ರಾ ಭವಿಷ್ಯನ್ತಿ, ಅಗ್ರೀಯಾ ಲೋಕಾಶ್ಚ ಶೇಷಾ ಭವಿಷ್ಯನ್ತಿ|
31 ௩௧ அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
ಅಪರಞ್ಚ ತಸ್ಮಿನ್ ದಿನೇ ಕಿಯನ್ತಃ ಫಿರೂಶಿನ ಆಗತ್ಯ ಯೀಶುಂ ಪ್ರೋಚುಃ, ಬಹಿರ್ಗಚ್ಛ, ಸ್ಥಾನಾದಸ್ಮಾತ್ ಪ್ರಸ್ಥಾನಂ ಕುರು, ಹೇರೋದ್ ತ್ವಾಂ ಜಿಘಾಂಸತಿ|
32 ௩௨ அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
ತತಃ ಸ ಪ್ರತ್ಯವೋಚತ್ ಪಶ್ಯತಾದ್ಯ ಶ್ವಶ್ಚ ಭೂತಾನ್ ವಿಹಾಪ್ಯ ರೋಗಿಣೋಽರೋಗಿಣಃ ಕೃತ್ವಾ ತೃತೀಯೇಹ್ನಿ ಸೇತ್ಸ್ಯಾಮಿ, ಕಥಾಮೇತಾಂ ಯೂಯಮಿತ್ವಾ ತಂ ಭೂರಿಮಾಯಂ ವದತ|
33 ௩௩ இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
ತತ್ರಾಪ್ಯದ್ಯ ಶ್ವಃ ಪರಶ್ವಶ್ಚ ಮಯಾ ಗಮನಾಗಮನೇ ಕರ್ತ್ತವ್ಯೇ, ಯತೋ ಹೇತೋ ರ್ಯಿರೂಶಾಲಮೋ ಬಹಿಃ ಕುತ್ರಾಪಿ ಕೋಪಿ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ ನ ಘಾನಿಷ್ಯತೇ|
34 ௩௪ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
ಹೇ ಯಿರೂಶಾಲಮ್ ಹೇ ಯಿರೂಶಾಲಮ್ ತ್ವಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನೋ ಹಂಸಿ ತವಾನ್ತಿಕೇ ಪ್ರೇರಿತಾನ್ ಪ್ರಸ್ತರೈರ್ಮಾರಯಸಿ ಚ, ಯಥಾ ಕುಕ್ಕುಟೀ ನಿಜಪಕ್ಷಾಧಃ ಸ್ವಶಾವಕಾನ್ ಸಂಗೃಹ್ಲಾತಿ, ತಥಾಹಮಪಿ ತವ ಶಿಶೂನ್ ಸಂಗ್ರಹೀತುಂ ಕತಿವಾರಾನ್ ಐಚ್ಛಂ ಕಿನ್ತು ತ್ವಂ ನೈಚ್ಛಃ|
35 ௩௫ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ಪಶ್ಯತ ಯುಷ್ಮಾಕಂ ವಾಸಸ್ಥಾನಾನಿ ಪ್ರೋಚ್ಛಿದ್ಯಮಾನಾನಿ ಪರಿತ್ಯಕ್ತಾನಿ ಚ ಭವಿಷ್ಯನ್ತಿ; ಯುಷ್ಮಾನಹಂ ಯಥಾರ್ಥಂ ವದಾಮಿ, ಯಃ ಪ್ರಭೋ ರ್ನಾಮ್ನಾಗಚ್ಛತಿ ಸ ಧನ್ಯ ಇತಿ ವಾಚಂ ಯಾವತ್ಕಾಲಂ ನ ವದಿಷ್ಯಥ, ತಾವತ್ಕಾಲಂ ಯೂಯಂ ಮಾಂ ನ ದ್ರಕ್ಷ್ಯಥ|