< லூக்கா 13 >

1 அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
तेस बखते कुछ लोक आए और यीशुए खे बोलेया कि पिलातुसे गलील प्रदेशो रे कुछ लोका री अत्या करी ती, जेबे सेयो मन्दरो रे बलिदान करने चढ़ाणे लगी रे थे।
2 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
ये सुणी की यीशुए तिना खे जवाब दित्तेया, “क्या तुसे समजोए कि यो गलीली लोक ओर सबी गलीलिया ते जादा पापी थे कि तिना पाँदे एड़ी बिपदा पड़ी?
3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
आऊँ तुसा खे बोलूँआ कि ना; पर जे तुसे मन नि फेरोगे तुसे बी सब ईंयां ई नाश ऊणे।
4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
या तुसे समजोए कि सेयो ठारा जणे जिना पाँदे शीलोहो रा गुम्मट पड़ेया था और सेयो दबी की मरी गे थे, क्या यरूशलेम और सबी रणे वाल़ेया ते जादा पापी थे?
5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
आऊँ तुसा खे बोलूँआ कि ना, पर जे तुसे मन नि फेरोगे, तो तुसे बी ईंयां ई नाश ऊणे।”
6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
तेबे यीशुए ये उदारण सुणाया, “केसी रे अँगूरा रे बगीचे रे दाऊगल़े रा एक डाल़ लगी रा था, से तिदे फल़ टोल़ने आया, पर मिलेया नि।
7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
तेबे तिने बगीचे रे रखवाल़े खे बोलेया, ‘देख आऊँ तीन साला ते इदे फल टोल़ने आऊँआ, पर मिलदा नि, एसखे बाडी दे, ताकि ये खरी जमीना खे पनि रोको।’
8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
तिने तेसखे बोलेया कि ओ स्वामी! एसखे एस सालो रे ओर रणी दे कि आऊँ एतेरे चऊँ कनारे खणी की खाद सेटुँ।
9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
तो जे आगो खे फल लगेया तो ठीक, नई तो बाडी देयो।”
10 ௧0 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
आरामो रे दिने यीशु प्रार्थना रे कअरो रे उपदेश देणे लगी रे थे।
11 ௧௧ அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
तेबे एक जवाणस आयी, जेसा रे ठारा साला ते, कमजोर करने वाल़ी दुष्टात्मा थी और से कुबड़ी ऊईगी थी और किंयाँ बी सीदी नि ऊई सको थी।
12 ௧௨ இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
यीशुए से देखी की बुलाई और तेसा खे बोलेया, “ओ जवाणसे! तूँ आपणी कमजोरिया ते छूटी गी।”
13 ௧௩ அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
तेबे तिने तेसा पाँदे आथ राखे और से फटाफट सीदी ऊईगी और परमेशरो री तारीफ करने लगी।
14 ௧௪ இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
कऊँकि यीशुए से आरामो रे दिने ठीक कित्ती थी, प्रार्थना रे कअरो रा सरदार जल़ी की लोका खे बोलणे लगेया, “अफ़्ते रे छे दिन ए जिदे काम करना चाईयो, तो तिना दिना रे आयी की ठीक ओ, आरामो रे दिने नि।”
15 ௧௫ கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
ये सुणी की यीशुए जवाब दित्तेया, “ओ कपटियो! क्या आरामो रे दिने तुसा बीचा ते हर एक आपणे बल़दा और गह्देया खे गवाईणी ते खोली की पाणी पल़याणे नि लयी जांदा?
16 ௧௬ இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
तो क्या ठीक नि था कि ये जवाणस जो अब्राहमो रे वंशो ते ए जो शैताने ठारा साला ते बानी राखी थी, आरामो रे दिने एसा खे बन्दनो ते छुड़ाया जाओ।”
17 ௧௭ அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
जेबे यीशुए यो गल्ला बोलिया, तेबे तिना रे सब बिरोदी शर्मिंदा ऊईगे और सारी पीड़ तिना हैरान करने वाल़ेया रे कामा ते, जो सेयो करो थे, खुश ऊई।
18 ௧௮ அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
तेबे यीशुए बोलेया, “परमेशरो रा राज्य केस जेड़ा ए? और आऊँ तिजी री तुलना किजी साथे करुँ?
19 ௧௯ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
से अऊरिया रे एक दाणे जेड़ा ए, जो किने मांणूए लयी की आपणे डोरूआ रे बाया और से बड़ा ऊई की डाल़ बणीगा और सर्गो रे पंछिया तेते पाँदे आपणा बसेरा कित्तेया।”
20 ௨0 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
तिने फेर बोलेया, “आऊँ परमेशरो रे राज्य री उपमा किजी साथे करुँ?
21 ௨௧ அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
से सजेड़े जेड़ा ए, जो एकी जवाणसे लया और बीई किलो ते जादा आटे रे गूँदी ता और ऊँदे-ऊँदे सारा आटा सजेड़ा ऊईगा।”
22 ௨௨ அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
यीशु नगर-नगर और गांव-गांव रे आपणे चेलेया साथे उपदेश देंदे ऊए यरूशलेमो खे जाणे लगी रे थे।
23 ௨௩ அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
तेबे किने तिना ते पूछेया, “ओ प्रभु, क्या उद्धार पाणे वाल़े थोड़े ईए?” यीशुए तिना खे बोलेया,
24 ௨௪ இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“स्वर्गो रे परमेशरो तक पऊँछणे री बाट बऊत कठण ए। पर एते बाटा रिये तुसा चलणा ईए, कऊँकि आऊँ तुसा खे बोलूँआ कि बऊत जणेया चाणा कि पीतरे जाईए, पर जाई नि सकणे।
25 ௨௫ வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
जेबे परमेशर, कअरो रा मालक उठी की द्वार बंद करी चुकेया ओगा और तुसे बारे खड़ी की द्वार खटखटाई की बोलणे लगो, ‘ओ प्रभु! आसा खे खोली देओ,’ और से जवाब देओ, ‘आऊँ तुसा खे नि जाणदा, तुसे केथो रे ए?’
26 ௨௬ அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
तेबे तुसा बोलणे लगणा कि आसे तां सामणे खाया-पिया और तैं आसा रे बजारो रे उपदेश कित्तेया।
27 ௨௭ ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
पर तेस बोलणा, आऊँ तुसा खे बोलूँआ, ‘आऊँ नि जाणदा कि तुसे केथो रे ए? ओ कुकर्म करने वाल़ेयो, तुसे सब मांते दूर रओ।’
28 ௨௮ நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
तेती रोणा और दाँदा रा किरड़ना ई ऊणा; जेबे तुसा अब्राहम, इसहाक, याकूब और सब भविष्यबक्ता परमेशरो रे राज्य रे बैठे रे देखणे और आपणे आपू खे बारे निकयाल़े रा देखणा।
29 ௨௯ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
पूर्व और पच्छम, उतर और दक्खणो रे लोका आयी की परमेशरो रे राज्य रे, साथे रोटी खाणी
30 ௩0 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
पर एबे बऊत सारे लोक जो आपणे आपू खे एते दुनिया रे बड़े समजोए, सेयो परमेशरो री नजरा रे छोटे ऊई जाणे, और जिना खे संसार एबु छोटा समजोआ, सेयो परमेशरो री नजरा रे बड़े समजे जाणे।”
31 ௩௧ அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
तेसी कअड़िया रे बऊत फरीसिये तिना खे आयी की बोलेया, “एथा ते निकल़ी जा, कऊँकि हेरोदेस तुसा खे काणा चाओआ।”
32 ௩௨ அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
यीशुए तिना खे बोलेया, “जाई की तेसा लोमड़िया खे बोली देओ कि देख, माखे आज और काल दुष्टात्मा खे निकयाल़ने और बमारा खे ठीक करदे ऊए तीन दिन लगी जाणे।
33 ௩௩ இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
तेबे बी मेरा आज, काल और परसु चलणा जरूरी ए, कऊँकि एड़ा ऊई नि सकदा कि कोई भविष्यबक्ता यरूशलेमो ते बारे मारेया जाओ।
34 ௩௪ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
“ओ यरूशलेमो रे लोको, ओ यरूशलेमो रे लोको! तूँ जो भविष्यबक्तेया खे काओआ और जो तांगे पेजी राखे, तिना खे पात्थर बाएआ, कितणी बार मैं चाया कि जिंयाँ मुर्गी आपणे बच्चेया खे आपणे पंखो निठे कट्ठा करी की समाल़ोई, तिंयाँ ई आऊँ बी चाऊँआ कि तेरे बाल़का खे कट्ठा करी की समाल़ुँ। पर तुसे नि चाया।
35 ௩௫ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
देखो, तुसा रा कअर तुसा खे उजाड़ी की छाडीता। कऊँकि आऊँ तुसा खे बोलूँआ कि एबुए ते जदुओ तक तुसे नि बोलोगे, ‘धन्य ए सेयो, जो प्रभुए रे नाओं ते आओए’ तदुओ तक तुसा आऊँ फेर कदी नि देखणा।”

< லூக்கா 13 >