< லூக்கா 13 >
1 ௧ அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
୧ଏଚିବେ଼ଲାତା ଏଚେକା ଲ଼କୁ ୱା଼ହାନା, ପିଲାତ ଏମିନି ଗାଲିଲି ଲ଼କୁତି ନେତେରି ଏ଼ୱାରି ପୂଜା ତଲେ ଆଟ୍ହାମାଚେସି, ଏ଼ କାତା ଜୀସୁଇଁ ୱେସ୍ତେରି ।
2 ௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
୨ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ ଗାଲିଲିତାରି ଡଣ୍ତ ବେଟାଆ଼ହାଲିଏ ଏ଼ୱାରି ଅ଼ର ଗାଲିଲିତାରି କିହାଁ ହା଼ରେକା ପା଼ପୁ ଗାଟାରି ଇଞ୍ଜିଁ ମୀରୁ ଅଣ୍ପିମାଞ୍ଜେରି?
3 ௩ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
୩ନା଼ନୁ ମିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଏଲେକିଁ ଆ଼ଏ, ସାମା ମୀରୁ ମ଼ନ ୱେଟ୍ଆତିହିଁ ବାରେଜା଼ଣା ତେରି ଏ଼ୱାରିଲେହେଁ ହା଼ଦେରି ।
4 ௪ சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
୪ସିଲହତା ଆମିନି ଅଟର ଜା଼ଣାତି ଲାକ ପାଡାଆ଼ତି କ଼ଟା ଇଲୁ ରିହାନା ହା଼ତେରି, ଏ଼ୱାରି ବାରେଜା଼ଣା ଜିରୁସାଲମତି ଲ଼କୁ କିହାଁ ହା଼ରେକା ପା଼ପୁ ଗାଟାରି ଇଞ୍ଜିଁ ମୀରୁ ଅଣ୍ପିମାଞ୍ଜେରି?
5 ௫ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
୫ନା଼ନୁ ମିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଏଲେକିଁ ଆ଼ଏ, ମୀରୁ ମ଼ନ ୱେଟ୍ଆତିହିଁ ବାରେଜା଼ଣା ତେରି ଏଲେକିହିଁଏ ନା଼ସା ଆ଼ଦେରି ।”
6 ௬ அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
୬ଜୀସୁ ଈ ପୁଣ୍ମ୍ବିକିନି କାତା ୱେସ୍ତେସି, ରଅଣି ଅଙ୍ଗୁରି ବା଼ଡ଼ାତା ର଼ ତ଼ୟା ମା଼ର୍ନୁ ଉହି ଆ଼ହାମାଚେ । ଏ଼ୱାସି ୱା଼ହାନା ପା଼ଡ଼େୟି ପାରୀତେସି ସାମା ମେଡ଼ାଆ଼ଆତେସି ।
7 ௭ அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
୭ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି କାମା କିନାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ମେହ୍ମୁ ନା଼ନୁ ତୀନି ବାର୍ସା ଆ଼ତେୟିଏ ଈ ତ଼ୟା ମା଼ର୍ନୁତା ୱା଼ହାନା ପା଼ଡ଼େୟି ପାରିମାଇଁ, ସାମା ମେ଼ଡ଼ା ଆ଼ହି ହିଲଅଁ; ଏ଼ଦାଣି ଟୂଣ୍ହା ତୁହ୍ମୁ, ଈଦି ଏ଼ନାଆଁତାକି ବୂମିତି ପା଼ଡ଼ିୟା କିନେ?”
8 ௮ அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
୮ସାମା କାମାକିନାସି ଏଲେଇଚେସି, “ପ୍ରବୁ ଈଦି ଇୟନା ତାକି ମାଣ୍ମ୍ବେ, ନା଼ନୁ ଈଦାଣି ସା଼ରିସୁଟୁ କା଼ର୍ହାନା ଗାତା ହୀଇଁ,
9 ௯ கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
୯ଅ଼ଡ଼େ ଡା଼ୟୁ ପା଼ଡ଼େୟି ଆ଼ୟିତିହିଁ ନେହେଁ ଆ଼ୟାଆତିହିଁ ଏ଼ଦାଣି ଟୂଣ୍ହା ତୁହ୍ମୁ ।”
10 ௧0 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
୧୦ର଼ ଦିନା ଜୀସୁ ଜ଼ମିନି ଦିନା ର଼ ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁତା ଜା଼ପ୍ହି ମାଚେସି ।
11 ௧௧ அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
୧୧ଏମ୍ବାଆଁ ର଼ ଇୟା ମାଚେ, ଏ଼ଦି ଅଟର ବାର୍ସା ପାତେକା ପ଼ଲ୍ଆ ବୂତୁ ତଲେ କସ୍ତ ଆ଼ହିମାଚେ, ଏ଼ଦି ଟୁଡୁୱା ଆ଼ହାନା ସଲ୍କେ ଆ଼ହିଁ ତା଼କାଲି ଆ଼ଡିହିଲାଆତେ ।
12 ௧௨ இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
୧୨ଜୀସୁ ଏ଼ଦାନି ମେସାନା ଡାଗେ ହା଼ଟାନା ଏଲେଇଚେସି, “ଏ଼ ଇୟା ନୀନୁ ନୀ ଆ଼ଡାଆ କସ୍ତଟି ନେହିଁ ଆ଼ତି ।”
13 ௧௩ அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
୧୩ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଏ଼ଦାନିଲେକ କେୟୁ ଇଟିତେସି, ଏମ୍ବାଟିଏ ଏ଼ଦି ଏ଼ ଦେବୁଣିଏ ସଲ୍କେ ଆ଼ହାନା ମାହାପୂରୁତି ଜହରା କିତେ ।
14 ௧௪ இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
୧୪ସାମା ଜୀସୁ ଜ଼ମିନି ଦିନାତା ନେହିଁ କିହିମାଚାକି ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁତି କାଜାସି କାର୍ବି ଆ଼ହାନା ଲ଼କୁଣି ଏଲେଇଚେସି, “କାମା କିହାଲି ସ଼ ଦିନା ମିଙ୍ଗେ ମାନେ; ଏ଼ଦାଣିତାକି ସ଼ ଦିନା ନେହିଁ ଆ଼ହାଲି ୱା଼ଦୁ, ଜ଼ମିନି ଦିନାତା ୱା଼ଆଦୁ ।”
15 ௧௫ கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
୧୫ସାମା ପ୍ରବୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଆଡ଼େ କୁଟୁ ଗାଟାତେରି, ମୀରୁ ବାରେଜା଼ଣା ତେରି ଜ଼ମିନି ଦିନାତା ମୀ କ଼ଡି କି ଗା଼ଡ଼୍ଦେତି ହାଃଅଲାଟି ଅ଼ହାନା ଏ଼ୟୁ ଊଟ୍ହି ହିଲଅତେରି କି?
16 ௧௬ இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
୧୬ଅଟର ବାର୍ସା ପାତେକା ସୟତାନ ତା଼ଣାଟି ଦସ୍ପି ଆ଼ହାମାନି ଅବ୍ରାହାମ କୂଡ଼ାତି ଈ ଇୟାନି ଜ଼ମିନି ଦିନାତା ନେହିଁକିନାୟି ହିଲାଆତେ କି?”
17 ௧௭ அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
୧୭ଏ଼ୱାସି ଈ ବାରେ କାତା ୱେସାଲିଏ, ତାନି ସାତ୍ରୁୟାଁ ବାରେ ଲାଜା ବେଟାଆ଼ତେରି, ସାମା ଜୀସୁ କିହାମାନି କାମା ମେସାନା ଲ଼କୁ ରା଼ହାଁ ଆ଼ତେରି ।
18 ௧௮ அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
୧୮ଜୀସୁ ଏଲେଇଚେସି, “ମାହାପୂରୁ ରା଼ଜି ଏ଼ନିଲେହେଁତାୟି? ଆମ୍ବାରିତଲେ ଏ଼ଦାନି ତୂକ୍ଇଁ?
19 ௧௯ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
୧୯ଏ଼ଦି ଇଲେତି ର଼ ହାର୍ସୁ ପା଼ଡ଼େୟି ଲେହେଁ, ଏ଼ଦାଆଁ ଅ଼ହାନା ରଅସି ତାନି ବା଼ଡ଼ାତା ମାଟିତେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ଦି ପାଡାଆ଼ହାନା ର଼ ମା଼ର୍ନୁ ଆ଼ତେ, ଅ଼ଡ଼େ ହା଼ଗୁ ଲାକ ଊମ୍ବିନି ପଟାୟାଁ ୱା଼ହାନା ଏ଼ କମାତା ବାସା କିତୁ ।”
20 ௨0 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
୨୦ଜୀସୁ ଅ଼ଡ଼େ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଆମ୍ବାରିତଲେ ମାହାପୂରୁତି ରା଼ଜି ତୂକ୍ଇଁ?
21 ௨௧ அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
୨୧ଏ଼ଦି ପୁଲା ଏ଼ୟୁଲେହେଁତାୟି, ର଼ ଇୟା ତୀନିମା଼ଣା ଗୁଣ୍ତାତା କାଲ୍ହା ଇଟିତେ, ଡା଼ୟୁ ବାରେ ଗୁଣ୍ତା ପୁଲା ଆ଼ତେ ।”
22 ௨௨ அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
୨୨ଡା଼ୟୁ ଜୀସୁ ଗା଼ଡ଼ାତାକି ଗା଼ଡ଼ା ନା଼ୟୁଁ ତାକି ନା଼ୟୁଁ ରେ଼ଜିହିଁ ଜା଼ପ୍ହିହିଁ ଜିରୁସାଲମ ୱାକି ହାଜିମାଚେସି ।
23 ௨௩ அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
୨୩ରଅସି ଏ଼ୱାଣାଇଁ ୱେଚେସି, “ପ୍ରବୁ ଗେଲ୍ପି ଆ଼ନାରି ୱାର୍ଇ ଇଚରା ଜା଼ଣାକି?” ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି,
24 ௨௪ இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୪“ଜୀୱୁ ତୂସାନା ଜାକ୍ଣି ଦୁୱେରିଟି ହାଜୁ; ଇଚିହିଁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ହା଼ରେକା ହ଼ଡାଲି ଅଣ୍ପିନେରି, ସାମା ହ଼ଡାଲି ଆ଼ଡଅରି ।
25 ௨௫ வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
୨୫ଇଲୁଗାଟାସି ନିଙ୍ଗାନା ଦା଼ରା ସୁଣ୍ତିତି ଡା଼ୟୁ ଏଚେ଼ତା ମୀରୁ ପାଙ୍ଗାତା ନିଚାନା ଦା଼ରା ଡୀ ଡୀ ୱେଚିହିଁ ‘ଏ଼ ପ୍ରବୁ ମାଙ୍ଗେତାକି ଦା଼ରା ଦେତାମୁ’ ଇଞ୍ଜିଁ ହା଼ଟିଦେରି, ଏଚେ଼ତା ଏ଼ୱାସି ମିଙ୍ଗେ ଏଲେଇଞ୍ଜାନେସି, ‘ମୀରୁ ଏମ୍ବିତାତେରି ନା଼ନୁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜଅଁ ।’
26 ௨௬ அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
୨୬ଏଚିବେ଼ଲା ମୀରୁ ଏଲେଇଞ୍ଜେରି, ‘ଏ଼ ପ୍ରବୁ ମା଼ମ୍ବୁ ନୀ ତଲେ ତିଚା ଉଟାତମି, ଅ଼ଡ଼େ ନୀନୁ ମା଼ ଆଂଗେଣିକାଣା ଜା଼ପ୍ହିମାଞ୍ଜାତି ।’
27 ௨௭ ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୭ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ମିଙ୍ଗେ ଏଲେଇଞ୍ଜାନେସି, ‘ମୀରୁ ଆମିନି ଟା଼ୟୁତି ଲ଼କୁତେରି ନା଼ନୁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜଅଁ; ଏ଼ ଲାଗେଏ ପ଼ଲେଏ ତାତେରି ନା଼ ତା଼ଣାଟି ହେକ ଆ଼ଦୁ ।’
28 ௨௮ நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
୨୮ଏଚିବେ଼ଲା ମୀରୁ ଅବ୍ରାହାମ, ଇସାହାକ, ଜାକୁବ ଇଞ୍ଜାଁ ବାରେ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାରାଇଁ ମାହାପୂରୁ ରା଼ଜିତା ମାନାଣି ଅ଼ଡ଼େ ମିଙ୍ଗେ ପାଙ୍ଗାତା କୁତା ମାଞ୍ଜାନାଣି ଅଣ୍ପାନା ପାଲ୍କା ଟୀଟି କିହିଁ ଡ଼ୀଦେରି ।
29 ௨௯ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
୨୯ଅ଼ଡ଼େ ହା଼ରେକା ଲ଼କୁ ୱେ଼ଡ଼ା ହ଼ପୁ ୱାକିଟି ଅ଼ଡ଼େ ୱେ଼ଡ଼ା କୂଡ଼୍ନି ୱାକିଟି, ଟିଃନି ୱାକିଟି ଟେ଼ବ୍ରି ୱାକିଟି ୱା଼ହାନା ମାହାପୂରୁତି ରା଼ଜିତି ବ଼ଜିତା କୁଗିନେରି ।
30 ௩0 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
୩୦ଅ଼ଡ଼େ ମେହ୍ଦୁ ଡା଼ୟୁତା ମାନି କଚେକା ନ଼କିତା ଆ଼ନେରି ଅ଼ଡ଼େ ନ଼କିତା ମାନି କଚେକା ଡା଼ୟୁତା ଆ଼ନେରି ।”
31 ௩௧ அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
୩୧ଏଚିବେ଼ଲାତେଏ ଏଚରଜା଼ଣା ପାରୁସିୟାଁ ୱା଼ହାନା ଜୀସୁଇଁ ୱେସ୍ତେରି, “ନୀନୁ ଈ ଟା଼ୟୁ ପିସାନା ହାଜାତୁହ୍ମୁ ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ହେରଦ ନିଙ୍ଗେ ପା଼ୟାଲି ଅଣ୍ପିମାନେସି ।”
32 ௩௨ அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
୩୨ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ମୀରୁ ହାଜାନା ଏ଼ ନାକାଇଁ ୱେହ୍ଦୁ, ‘ମେହ୍ମୁ ନା଼ନୁ ନୀଞ୍ଜୁ ଅ଼ଡ଼େ ୱିଏ ବୂତୁୟାଁ ପିସ୍ପି କିହିମାଇଁ ଅ଼ଡ଼େ ନେହିଁ କିହିମାଇଁ ଇଞ୍ଜାଁ ତୀନି ଦିନାଟିଏ ନା଼ କାମା ରା଼ପ୍ଇଁ ।’
33 ௩௩ இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
୩୩ଏ଼ନିଜିକେଏ ନୀଞ୍ଜୁ ୱିଏ ଅ଼ଡ଼େ ମାଏଁ ନାଙ୍ଗେ ତା଼କିହିଁ ହାଜାଲି ଆ଼ନେ, ଇଚିହିଁ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାସି ଜିରୁସାଲମ ପିସ୍ପେ ପାଙ୍ଗାତା ହାନାୟି ନେହେଁ ଆ଼ଏ ।”
34 ௩௪ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
୩୪“ଏ଼ ଜିରୁସାଲମ, ଏ଼ ଜିରୁସାଲମ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାରାଇଁ ପା଼ୟିନାତି ଅ଼ଡ଼େ ନୀ ତା଼ଣା ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରାଇଁ ୱାଲ୍କାତଲେ ୱେନାତି, ତାଲି କୟୁ ଏ଼ନିକିଁ ତାନି ହୀପାୟାଁଣି ତାନି ମା଼ରାୟାଁ ଡ଼଼ଇ ଜ଼ଙ୍ଗିନେ, ଏଲେକିଁ ଏଚର ଦେବା ନୀ ପ଼ଦି ପ଼ଦାତି ପ୍ଡିକ୍ହାନା ଇଟିଇଁ ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିମାଚେଏଁ ସାମା ମୀରୁ ଏଲେକିହାଲି ହିୟାଆତେରି ।
35 ௩௫ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୩୫ମେହ୍ଦୁ ମୀ ଇଲୁ ମୀ କେୟୁତା ହୀପ୍କି ଆ଼ହିମାଞ୍ଜାନେ; ଅ଼ଡ଼େ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ଏଲେଇଞ୍ଜିମାଞ୍ଜାଇଁ ମାହାପୂରୁ ଦ଼ରୁଟି ଆମ୍ବାଆସି ୱା଼ହିମାନେସି ଏ଼ୱାସି ନେହାଁସି ଇଞ୍ଜିଁ ଏମିନି ନେ଼ଚୁ ଈ କାତା ଏଲେଇଞ୍ଜେରି ଏ଼ ଦିନା ୱା଼ଆ ପାତେକା ମୀରୁ ଅ଼ଡ଼େ ନାଙ୍ଗେ ମେସ୍ତଅତେରି ।”