< லூக்கா 12 >

1 அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
తదానీం లోకాః సహస్రం సహస్రమ్ ఆగత్య సముపస్థితాస్తత ఏకైకో ఽన్యేషాముపరి పతితుమ్ ఉపచక్రమే; తదా యీశుః శిష్యాన్ బభాషే, యూయం ఫిరూశినాం కిణ్వరూపకాపట్యే విశేషేణ సావధానాస్తిష్ఠత|
2 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
యతో యన్న ప్రకాశయిష్యతే తదాచ్ఛన్నం వస్తు కిమపి నాస్తి; తథా యన్న జ్ఞాస్యతే తద్ గుప్తం వస్తు కిమపి నాస్తి|
3 ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
అన్ధకారే తిష్ఠనతో యాః కథా అకథయత తాః సర్వ్వాః కథా దీప్తౌ శ్రోష్యన్తే నిర్జనే కర్ణే చ యదకథయత గృహపృష్ఠాత్ తత్ ప్రచారయిష్యతే|
4 என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.
హే బన్ధవో యుష్మానహం వదామి, యే శరీరస్య నాశం వినా కిమప్యపరం కర్త్తుం న శక్రువన్తి తేభ్యో మా భైష్ట|
5 நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
తర్హి కస్మాద్ భేతవ్యమ్ ఇత్యహం వదామి, యః శరీరం నాశయిత్వా నరకం నిక్షేప్తుం శక్నోతి తస్మాదేవ భయం కురుత, పునరపి వదామి తస్మాదేవ భయం కురుత| (Geenna g1067)
6 இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
పఞ్చ చటకపక్షిణః కిం ద్వాభ్యాం తామ్రఖణ్డాభ్యాం న విక్రీయన్తే? తథాపీశ్వరస్తేషామ్ ఏకమపి న విస్మరతి|
7 உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
యుష్మాకం శిరఃకేశా అపి గణితాః సన్తి తస్మాత్ మా విభీత బహుచటకపక్షిభ్యోపి యూయం బహుమూల్యాః|
8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார்.
అపరం యుష్మభ్యం కథయామి యః కశ్చిన్ మానుషాణాం సాక్షాన్ మాం స్వీకరోతి మనుష్యపుత్ర ఈశ్వరదూతానాం సాక్షాత్ తం స్వీకరిష్యతి|
9 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
కిన్తు యః కశ్చిన్మానుషాణాం సాక్షాన్మామ్ అస్వీకరోతి తమ్ ఈశ్వరస్య దూతానాం సాక్షాద్ అహమ్ అస్వీకరిష్యామి|
10 ௧0 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
అన్యచ్చ యః కశ్చిన్ మనుజసుతస్య నిన్దాభావేన కాఞ్చిత్ కథాం కథయతి తస్య తత్పాపస్య మోచనం భవిష్యతి కిన్తు యది కశ్చిత్ పవిత్రమ్ ఆత్మానం నిన్దతి తర్హి తస్య తత్పాపస్య మోచనం న భవిష్యతి|
11 ௧௧ அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
యదా లోకా యుష్మాన్ భజనగేహం విచారకర్తృరాజ్యకర్తృణాం సమ్ముఖఞ్చ నేష్యన్తి తదా కేన ప్రకారేణ కిముత్తరం వదిష్యథ కిం కథయిష్యథ చేత్యత్ర మా చిన్తయత;
12 ௧௨ நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
యతో యుష్మాభిర్యద్ యద్ వక్తవ్యం తత్ తస్మిన్ సమయఏవ పవిత్ర ఆత్మా యుష్మాన్ శిక్షయిష్యతి|
13 ௧௩ அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
తతః పరం జనతామధ్యస్థః కశ్చిజ్జనస్తం జగాద హే గురో మయా సహ పైతృకం ధనం విభక్తుం మమ భ్రాతరమాజ్ఞాపయతు భవాన్|
14 ௧௪ அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
కిన్తు స తమవదత్ హే మనుష్య యువయో ర్విచారం విభాగఞ్చ కర్త్తుం మాం కో నియుక్తవాన్?
15 ௧௫ பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
అనన్తరం స లోకానవదత్ లోభే సావధానాః సతర్కాశ్చ తిష్ఠత, యతో బహుసమ్పత్తిప్రాప్త్యా మనుష్యస్యాయు ర్న భవతి|
16 ௧௬ அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
పశ్చాద్ దృష్టాన్తకథాముత్థాప్య కథయామాస, ఏకస్య ధనినో భూమౌ బహూని శస్యాని జాతాని|
17 ௧௭ அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
తతః స మనసా చిన్తయిత్వా కథయామ్బభూవ మమైతాని సముత్పన్నాని ద్రవ్యాణి స్థాపయితుం స్థానం నాస్తి కిం కరిష్యామి?
18 ௧௮ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
తతోవదద్ ఇత్థం కరిష్యామి, మమ సర్వ్వభాణ్డాగారాణి భఙ్క్త్వా బృహద్భాణ్డాగారాణి నిర్మ్మాయ తన్మధ్యే సర్వ్వఫలాని ద్రవ్యాణి చ స్థాపయిష్యామి|
19 ௧௯ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
అపరం నిజమనో వదిష్యామి, హే మనో బహువత్సరార్థం నానాద్రవ్యాణి సఞ్చితాని సన్తి విశ్రామం కురు భుక్త్వా పీత్వా కౌతుకఞ్చ కురు| కిన్త్వీశ్వరస్తమ్ అవదత్,
20 ௨0 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.
రే నిర్బోధ అద్య రాత్రౌ తవ ప్రాణాస్త్వత్తో నేష్యన్తే తత ఏతాని యాని ద్రవ్యాణి త్వయాసాదితాని తాని కస్య భవిష్యన్తి?
21 ௨௧ தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
అతఏవ యః కశ్చిద్ ఈశ్వరస్య సమీపే ధనసఞ్చయమకృత్వా కేవలం స్వనికటే సఞ్చయం కరోతి సోపి తాదృశః|
22 ௨௨ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
అథ స శిష్యేభ్యః కథయామాస, యుష్మానహం వదామి, కిం ఖాదిష్యామః? కిం పరిధాస్యామః? ఇత్యుక్త్వా జీవనస్య శరీరస్య చార్థం చిన్తాం మా కార్ష్ట|
23 ௨௩ உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
భక్ష్యాజ్జీవనం భూషణాచ్ఛరీరఞ్చ శ్రేష్ఠం భవతి|
24 ௨௪ காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
కాకపక్షిణాం కార్య్యం విచారయత, తే న వపన్తి శస్యాని చ న ఛిన్దన్తి, తేషాం భాణ్డాగారాణి న సన్తి కోషాశ్చ న సన్తి, తథాపీశ్వరస్తేభ్యో భక్ష్యాణి దదాతి, యూయం పక్షిభ్యః శ్రేష్ఠతరా న కిం?
25 ௨௫ கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
అపరఞ్చ భావయిత్వా నిజాయుషః క్షణమాత్రం వర్ద్ధయితుం శక్నోతి, ఏతాదృశో లాకో యుష్మాకం మధ్యే కోస్తి?
26 ௨௬ மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
అతఏవ క్షుద్రం కార్య్యం సాధయితుమ్ అసమర్థా యూయమ్ అన్యస్మిన్ కార్య్యే కుతో భావయథ?
27 ௨௭ காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
అన్యచ్చ కామ్పిలపుష్పం కథం వర్ద్ధతే తదాపి విచారయత, తత్ కఞ్చన శ్రమం న కరోతి తన్తూంశ్చ న జనయతి కిన్తు యుష్మభ్యం యథార్థం కథయామి సులేమాన్ బహ్వైశ్వర్య్యాన్వితోపి పుష్పస్యాస్య సదృశో విభూషితో నాసీత్|
28 ௨௮ இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
అద్య క్షేత్రే వర్త్తమానం శ్వశ్చూల్ల్యాం క్షేప్స్యమానం యత్ తృణం, తస్మై యదీశ్వర ఇత్థం భూషయతి తర్హి హే అల్పప్రత్యయినో యుష్మాన కిం న పరిధాపయిష్యతి?
29 ௨௯ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
అతఏవ కిం ఖాదిష్యామః? కిం పరిధాస్యామః? ఏతదర్థం మా చేష్టధ్వం మా సందిగ్ధ్వఞ్చ|
30 ௩0 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
జగతో దేవార్చ్చకా ఏతాని సర్వ్వాణి చేష్టనతే; ఏషు వస్తుషు యుష్మాకం ప్రయోజనమాస్తే ఇతి యుష్మాకం పితా జానాతి|
31 ௩௧ தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
అతఏవేశ్వరస్య రాజ్యార్థం సచేష్టా భవత తథా కృతే సర్వ్వాణ్యేతాని ద్రవ్యాణి యుష్మభ్యం ప్రదాయిష్యన్తే|
32 ௩௨ பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
హే క్షుద్రమేషవ్రజ యూయం మా భైష్ట యుష్మభ్యం రాజ్యం దాతుం యుష్మాకం పితుః సమ్మతిరస్తి|
33 ௩௩ உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
అతఏవ యుష్మాకం యా యా సమ్పత్తిరస్తి తాం తాం విక్రీయ వితరత, యత్ స్థానం చౌరా నాగచ్ఛన్తి, కీటాశ్చ న క్షాయయన్తి తాదృశే స్వర్గే నిజార్థమ్ అజరే సమ్పుటకే ఽక్షయం ధనం సఞ్చినుత చ;
34 ௩௪ உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
యతో యత్ర యుష్మాకం ధనం వర్త్తతే తత్రేవ యుష్మాకం మనః|
35 ௩௫ உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
అపరఞ్చ యూయం ప్రదీపం జ్వాలయిత్వా బద్ధకటయస్తిష్ఠత;
36 ௩௬ தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.
ప్రభు ర్వివాహాదాగత్య యదైవ ద్వారమాహన్తి తదైవ ద్వారం మోచయితుం యథా భృత్యా అపేక్ష్య తిష్ఠన్తి తథా యూయమపి తిష్ఠత|
37 ௩௭ எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
యతః ప్రభురాగత్య యాన్ దాసాన్ సచేతనాన్ తిష్ఠతో ద్రక్ష్యతి తఏవ ధన్యాః; అహం యుష్మాన్ యథార్థం వదామి ప్రభుస్తాన్ భోజనార్థమ్ ఉపవేశ్య స్వయం బద్ధకటిః సమీపమేత్య పరివేషయిష్యతి|
38 ௩௮ அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
యది ద్వితీయే తృతీయే వా ప్రహరే సమాగత్య తథైవ పశ్యతి, తర్హి తఏవ దాసా ధన్యాః|
39 ௩௯ திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
అపరఞ్చ కస్మిన్ క్షణే చౌరా ఆగమిష్యన్తి ఇతి యది గృహపతి ర్జ్ఞాతుం శక్నోతి తదావశ్యం జాగ్రన్ నిజగృహే సన్ధిం కర్త్తయితుం వారయతి యూయమేతద్ విత్త|
40 ௪0 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார்.
అతఏవ యూయమపి సజ్జమానాస్తిష్ఠత యతో యస్మిన్ క్షణే తం నాప్రేక్షధ్వే తస్మిన్నేవ క్షణే మనుష్యపుత్ర ఆగమిష్యతి|
41 ௪௧ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
తదా పితరః పప్రచ్ఛ, హే ప్రభో భవాన్ కిమస్మాన్ ఉద్దిశ్య కిం సర్వ్వాన్ ఉద్దిశ్య దృష్టాన్తకథామిమాం వదతి?
42 ௪௨ அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?
తతః ప్రభుః ప్రోవాచ, ప్రభుః సముచితకాలే నిజపరివారార్థం భోజ్యపరివేషణాయ యం తత్పదే నియోక్ష్యతి తాదృశో విశ్వాస్యో బోద్ధా కర్మ్మాధీశః కోస్తి?
43 ௪௩ எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
ప్రభురాగత్య యమ్ ఏతాదృశే కర్మ్మణి ప్రవృత్తం ద్రక్ష్యతి సఏవ దాసో ధన్యః|
44 ௪௪ தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
అహం యుష్మాన్ యథార్థం వదామి స తం నిజసర్వ్వస్వస్యాధిపతిం కరిష్యతి|
45 ௪௫ அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,
కిన్తు ప్రభుర్విలమ్బేనాగమిష్యతి, ఇతి విచిన్త్య స దాసో యది తదన్యదాసీదాసాన్ ప్రహర్త్తుమ్ భోక్తుం పాతుం మదితుఞ్చ ప్రారభతే,
46 ௪௬ அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
తర్హి యదా ప్రభుం నాపేక్షిష్యతే యస్మిన్ క్షణే సోఽచేతనశ్చ స్థాస్యతి తస్మిన్నేవ క్షణే తస్య ప్రభురాగత్య తం పదభ్రష్టం కృత్వా విశ్వాసహీనైః సహ తస్య అంశం నిరూపయిష్యతి|
47 ௪௭ தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
యో దాసః ప్రభేరాజ్ఞాం జ్ఞాత్వాపి సజ్జితో న తిష్ఠతి తదాజ్ఞానుసారేణ చ కార్య్యం న కరోతి సోనేకాన్ ప్రహారాన్ ప్రాప్స్యతి;
48 ௪௮ அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
కిన్తు యో జనోఽజ్ఞాత్వా ప్రహారార్హం కర్మ్మ కరోతి సోల్పప్రహారాన్ ప్రాప్స్యతి| యతో యస్మై బాహుల్యేన దత్తం తస్మాదేవ బాహుల్యేన గ్రహీష్యతే, మానుషా యస్య నికటే బహు సమర్పయన్తి తస్మాద్ బహు యాచన్తే|
49 ௪௯ பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
అహం పృథివ్యామ్ అనైక్యరూపం వహ్ని నిక్షేప్తుమ్ ఆగతోస్మి, స చేద్ ఇదానీమేవ ప్రజ్వలతి తత్ర మమ కా చిన్తా?
50 ௫0 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
కిన్తు యేన మజ్జనేనాహం మగ్నో భవిష్యామి యావత్కాలం తస్య సిద్ధి ర్న భవిష్యతి తావదహం కతికష్టం ప్రాప్స్యామి|
51 ௫௧ நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
మేలనం కర్త్తుం జగద్ ఆగతోస్మి యూయం కిమిత్థం బోధధ్వే? యుష్మాన్ వదామి న తథా, కిన్త్వహం మేలనాభావం కర్త్తుంమ్ ఆగతోస్మి|
52 ௫௨ எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
యస్మాదేతత్కాలమారభ్య ఏకత్రస్థపరిజనానాం మధ్యే పఞ్చజనాః పృథగ్ భూత్వా త్రయో జనా ద్వయోర్జనయోః ప్రతికూలా ద్వౌ జనౌ చ త్రయాణాం జనానాం ప్రతికూలౌ భవిష్యన్తి|
53 ௫௩ தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
పితా పుత్రస్య విపక్షః పుత్రశ్చ పితు ర్విపక్షో భవిష్యతి మాతా కన్యాయా విపక్షా కన్యా చ మాతు ర్విపక్షా భవిష్యతి, తథా శ్వశ్రూర్బధ్వా విపక్షా బధూశ్చ శ్వశ్ర్వా విపక్షా భవిష్యతి|
54 ௫௪ பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும்.
స లోకేభ్యోపరమపి కథయామాస, పశ్చిమదిశి మేఘోద్గమం దృష్ట్వా యూయం హఠాద్ వదథ వృష్టి ర్భవిష్యతి తతస్తథైవ జాయతే|
55 ௫௫ தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
అపరం దక్షిణతో వాయౌ వాతి సతి వదథ నిదాఘో భవిష్యతి తతః సోపి జాయతే|
56 ௫௬ மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?
రే రే కపటిన ఆకాశస్య భూమ్యాశ్చ లక్షణం బోద్ధుం శక్నుథ,
57 ௫௭ நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
కిన్తు కాలస్యాస్య లక్షణం కుతో బోద్ధుం న శక్నుథ? యూయఞ్చ స్వయం కుతో న న్యాష్యం విచారయథ?
58 ௫௮ உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
అపరఞ్చ వివాదినా సార్ద్ధం విచారయితుః సమీపం గచ్ఛన్ పథి తస్మాదుద్ధారం ప్రాప్తుం యతస్వ నోచేత్ స త్వాం ధృత్వా విచారయితుః సమీపం నయతి| విచారయితా యది త్వాం ప్రహర్త్తుః సమీపం సమర్పయతి ప్రహర్త్తా త్వాం కారాయాం బధ్నాతి
59 ௫௯ நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
తర్హి త్వామహం వదామి త్వయా నిఃశేషం కపర్దకేషు న పరిశోధితేషు త్వం తతో ముక్తిం ప్రాప్తుం న శక్ష్యసి|

< லூக்கா 12 >