< லூக்கா 12 >
1 ௧ அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
୧ଏତ୍କି ବିତ୍ରେ ଅଜାର୍ ଅଜାର୍ ଲକ୍ ଟୁଲ୍ଅଇକରି, ତାକର୍ ତାକର୍ ବିତ୍ରେ ମାଣ୍ଡାଚୁଣ୍ଡା ଅଇଜାଇତେ ରଇଲାଇ, ସେଡ୍କିବେଲେ ଜିସୁ ପର୍ତୁମ୍ ନିଜର୍ ସିସ୍ମନ୍କେ କଇବାର୍ ଦାର୍ଲା, “ପାରୁସିମନର୍ କମିର୍ ପାରା କପଟ୍ ତେଇଅନି ଜାଗ୍ରତ୍ ଅଇରୁଆ ।
2 ௨ வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
୨ଡାବିଅଇରଇବା ସବୁ ବିସଇ ଜାନାପଡ୍ସି, ଆରି ଲୁଚିରଇବା ବିସଇ ସବୁ ଦେକାଅଇସି ।
3 ௩ ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
୩ତେବର୍ପାଇ, ତମେମନ୍ ଜନ୍ ଜନ୍ଟା ଆନ୍ଦାରେ କଇଆଚାସ୍, ସେ ସବୁଜାକ ଉଜ୍ଲେ ସୁନ୍ବାଇ, ଆରି ଜନ୍ ଜନ୍ଟା ବିତର୍ଗରେ, କେ ନ ସୁନ୍ତେ କଇଆଚାସ୍, ସେଟା ଗରର୍ ଚାନିଉପ୍ରେ ଅନି ସୁନାଇଅଇସି ।”
4 ௪ என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.
୪“ମାତର୍ ତମେ ମର୍ ମଇତର୍, ତମ୍କେ ମୁଇ କଇଲିନି, ଜନ୍ ଲକ୍ମନ୍ ଗାଗଡ୍କେ ମରାଇବାଇ, ମାତର୍ ତାର୍ପଚେ ତମର୍ ଆତ୍ମାକେ କାଇଟା କରିନାପାରତ୍, ସେମନ୍କେ ଡରାନାଇ ।
5 ௫ நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
୫ମାତର୍ କାକେ ଡର୍ସା, ସେଟା ମୁଇ ତମ୍କେ ଜାନାଇବି, ମରାଇଲାପଚେ ନର୍କେ ପିଙ୍ଗ୍ବାକେ ଜାର୍ ଅଦିକାର୍ ଆଚେ, ତାକେ ଡରା, ଉଁ ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ପର୍ମେସର୍କେ ଡରା । (Geenna )
6 ௬ இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
୬“ପାଁଚ୍ଟା ଚେଟିଆ ଚଡଇ କାଇ ଅଲପ୍ ଡାବୁକେ ବିକା ନଅଏ କି? ଏଲେ ମିସା ସେମନର୍ ବିତ୍ରେଅନି ଗଟେକ୍କେ ମିସା ପର୍ମେସର୍ ନ ପାସ୍ରେ ।
7 ௭ உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
୭ମାତର୍ ତମର୍ ମୁଣ୍ଡର୍ ସବୁ ଚେଣ୍ଡି ମିସା ଏଜା ଅଇଲାଆଚେ । ଡରାନାଇ, ତମେମନ୍ କେତେକ୍ କେତେକ୍ ଚେଟିଆ ଚଡଇର୍ ଟାନେଅନି ମୁକିଅ ।”
8 ௮ அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார்.
୮“ଆରି ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଜେ ଜଦି ମକେ ଲକ୍ମନର୍ ମୁଆଟେ ନାମ୍ସି ଆରି ବିସ୍ବାସ୍ କର୍ସି, ପର୍ମେସର୍ ପାଟାଇରଇବା ନର୍ପିଲା ମୁଇ ମିସା ପର୍ମେସରର୍ ଦୁତ୍ମନର୍ ମୁଆଟେ ତାକେ ନାମ୍ବି ।
9 ௯ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
୯ମାତର୍ ଜେ ଲକ୍ମନର୍ ମୁଆଟେ ମକେ ନ ନାମି, ବିସ୍ବାସ୍ ନ କରେ, ତାକେ ପର୍ମେସରର୍ ଦୁତ୍ମନର୍ ମୁଆଟେ ମୁଇ ଇନ୍ କର୍ବି ।”
10 ௧0 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
୧୦“ଆରି ଜେ ପର୍ମେସର୍ ପାଟାଇରଇବା ନର୍ପିଲାର୍ ବିରୁଦେ କଇଲେ, ତାକେ କେମା ଦିଆଅଇସି, ମାତର୍ ଜେ ସୁକଲ୍ ଆତ୍ମାର୍ ବିରୁଦେ କଇସି, ତାକେ କେମା ନ ଦିଆଅଏ ।
11 ௧௧ அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
୧୧“ଆରି ଜେଡେବେଲେ ସେମନ୍ ତମ୍କେ ଜିଉଦି ଲକ୍ମନର୍ ପାର୍ତନା ଗରେ, ସାସନ୍ କର୍ବା ଲକ୍ମନର୍ଟାନେ କି ବିନ୍ ବିନ୍ ଅଦିକାରି ମନର୍ଟାନେ ବାନ୍ଦିନେଲେ, ସେଡ୍କିବେଲେ କାଇଟାବଲି କଇସା, ସେ ବିସଇ ନେଇକରି ଚିନ୍ତା କରାନାଇ ।
12 ௧௨ நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
୧୨କାଇକେବଇଲେ କାଇଟା କଇବାକେ ଅଇସି, ସେବେଲାଇ ସୁକଲ୍ଆତ୍ମା ତମ୍କେ ସିକାଇସି ।”
13 ௧௩ அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
୧୩ଲକ୍ମନର୍ ଗଅଲି ବିତ୍ରେଅନି ଗଟେକ୍ ଲକ୍ ଜିସୁକେ କଇଲା, “ଏ ଗୁରୁ, ମର୍ ବାବାର୍ ସଁପତି ବାଗ୍ବାଟା କର୍ବାକେ ମର୍ ବାଇକେ କୁଆ ।”
14 ௧௪ அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
୧୪ଏଟା ସୁନି ଜିସୁ ତାକେ କଇଲା, “ଏ ମଇତର୍, ତମର୍ ବିତ୍ରେ ନିଆଇ କର୍ବାକେ ଆରି ଦନ୍ସଁପତି ବାଗ୍ବାଟା କରିଦେବାକେ ମକେ କେ ଅଦିକାର୍ ଦେଲାଆଚେ?”
15 ௧௫ பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
୧୫ଆରି ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଜାଗର୍ତା, ସବୁରକାମର୍ ଲବ୍ କର୍ବାଟାନେଅନି ନିଜେ ନିଜେ ଦୁରେ ରୁଆ । କାଇକେବଇଲେ ଗଟେକ୍ ଲକର୍ ଜିବନ୍ଟାନେଅନି ଦନ୍ସଁପତି ବଡ୍ ବିସଇ ନଏ ।”
16 ௧௬ அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
୧୬ଆରି ସେ ଲକ୍ମନ୍କେ ଗଟେକ୍ ଉଦାଅରନ୍ ଦେଇ କଇଲା, ଗଟେକ୍ ସାଉକାର୍କେ ତାର୍ ଜମିଟାନେଅନି ବେସି ତାସ୍ ପାଚ୍ଲା ।
17 ௧௭ அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
୧୭ସେ ଲକ୍ ମନେ ମନେ ବାବ୍ନାକରି କଇଲା, “କାଇଟା କର୍ବି? ମର୍ କାଦି ଆନି ସଙ୍ଗଇବାକେ ଜାଗାନାଇ ।”
18 ௧௮ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
୧୮ଆରି ସେ କଇଲା, “ଏନ୍ତାରି କର୍ବି, ମର୍ କାଦି ସଙ୍ଗଇବା ଗରର୍ କତି ବାଙ୍ଗାଇକରି ବଡ୍ ବଡ୍ କରି ତିଆର୍କର୍ବି ଆରି ତେଇ ମର୍ ସବୁ କାଦିକଣ୍ଡା ଜାଗ୍ରତ୍ କରି ସଙ୍ଗଇବି ।
19 ௧௯ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
୧୯ଆରି ମର୍ ଜିବନ୍କେ କଇବି, ର ଜିବନ୍, ତର୍ପାଇବଲି ବେସି ବରସର୍ କାଦିକଣ୍ଡା ସଙ୍ଗଇ ଅଇଲାଆଚେ, ପୁଣ୍ଡ୍, କାଆ ଆରି ଆରାମ୍ସଙ୍ଗ୍ ର ।”
20 ௨0 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.
୨୦ମାତର୍ ପର୍ମେସର୍ ତାକେ କଇଲା, “ଏରେ ବକୁଆ ଜଦି ଆଜି ରାତି ପର୍ମେସର୍ ତର୍ ଜିବନ୍ ମାଙ୍ଗ୍ସି ବଇଲେ, ତୁଇ ତର୍ପାଇ ଜେତ୍କି ସଙ୍ଗଇଆଚୁସ୍, ସେ ସବୁ କାର୍ଟା ଅଇସି?
21 ௨௧ தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
୨୧ଜେ ନିଜର୍ପାଇ ଦନ୍ ଜତନ୍ କରି ସଙ୍ଗଇସି, ସେ ପର୍ମେସରର୍ ମୁଆଟେ ସାଉକାର୍ ନଏଁ, ତାର୍ପାଇ ଏନ୍ତାରି ଗଟ୍ସି ।”
22 ௨௨ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୨ଜିସୁ ନିଜର୍ ସିସ୍ମନ୍କେ କଇଲା, “ଏଟାର୍ପାଇ ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, କାଇଟା କାଇକରି ଜିବନ୍ ବଁଚାଉ ଆରି ଗାଗଡର୍ପାଇ କାଇଟା ପିନ୍ଦ୍ବୁ ବଲି ଚିନ୍ତା କରାନାଇ ।
23 ௨௩ உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
୨୩କାଇକେବଇଲେ କାଦିଟାନେଅନି ଜିବନ୍ ଆରି ବସ୍ତର୍ଟାନେଅନି ଗାଗଡ୍ ଆକା ମୁକିଅ ।
24 ௨௪ காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
୨୪ଚଡଇମନର୍ ବିସଇନେଇକରି ବାବିଦେକା, ସେମନ୍ ନ ବୁନତ୍ କି ନ କାଟତ୍, ଆରି ସେମନର୍ ବାଣ୍ଡାର୍ଗର୍ କି କାଦି ସଙ୍ଗଇବା ଆମାର୍ ଗର୍ ନାଇ । ଅଇଲେ ମିସା ମାପ୍ରୁ ସେମନ୍କେ କାଦି ଜାଗାଇଦେଇସି । ତମେ ଚଡଇମନର୍ ଟାନେଅନି କେତେକ୍ ଅଦିକାରର୍ ଲକ୍ ।
25 ௨௫ கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
୨୫ତମର୍ ବିତ୍ରେ ଏନ୍ତାରିଲକ୍ ନ ରଅତ୍, ଜେ କି ଚିନ୍ତାକରି ତାର୍ କଣ୍ଡେକ୍ ମିସା ଆଇସ୍ ବଡାଇ ପାର୍ସି ।
26 ௨௬ மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
୨୬ତେବର୍ପାଇ ତମେମନ୍ ଗଟେକ୍ ସାନ୍ ବିସଇ ମିସା କରିନାପାର୍ଲାସ୍ନି ବଇଲେ ବଡ୍ ବଡ୍ ବିସଇ କାଇକେ ଚିନ୍ତା କଲାସ୍ନି?
27 ௨௭ காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୭ପୁଲ୍ମନର୍ ବିସଇ ବାବିଦେକା, ସେମନ୍ କେନ୍ତି ପୁଟ୍ଲାଇନି, ସୁତା ନ କାଟତ୍ କି ଲୁଗା ନ ବୁନତ୍ । ଏଲେମିସା ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ସବୁର୍ଟାନେଅନି ମଆନ୍ ଆରି ଦନି ରାଜା ସଲ୍ମନ୍ ମିସା ସେ ପୁଲ୍ମନର୍ ବିତ୍ରେଅନି ଗଟେକ୍ ପୁଲର୍ ଏତ୍କି ସଜାଇ ନ ଅଇରଇଲା ।
28 ௨௮ இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
୨୮ଆଜି ଜନ୍ ଗାଁସ୍ ପଦାଇ ଆଚେ, କାଲିକେ ସେଟା ରୁଣ୍ଡାଇ ଜଇ ଲାଗାଇବାଇ । ସେଟାକେ ପର୍ମେସର୍ ଏନ୍ତାରି ବେସ୍ ଦେଲାନି ବଇଲେ, ଏ ଅଲପ୍ ବିସ୍ବାସ୍ କର୍ବା ଲକ୍ମନ୍, ସେ ତମ୍କେ ପିନ୍ଦ୍ବାକେ କେତେକ୍ ଅଦିକ୍ ଦେଇସି!”
29 ௨௯ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
୨୯“ଆରି କାଇଟା କାଇବୁ? ବଲି ଚିନ୍ତାକରି ଲାଗିରୁଆନାଇ,
30 ௩0 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
୩୦କାଇକେବଇଲେ ପର୍ମେସର୍କେ ନାଜାନ୍ଲା ଲକ୍ମନ୍ ଏ ସବୁ ବିସଇ କଜିବୁଲ୍ବାଇ । ମାତର୍ ଏ ସବୁ ବିସଇ ତମ୍କେ ଦର୍କାର୍, ସେଟା ତମର୍ ବାବା ଜାନିରଇସି ।
31 ௩௧ தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
୩୧ମୁଇ କଇଲିନି ତମେ ପର୍ମେସରର୍ ସରଗ୍ ରାଇଜ୍ କଜା, ଆରି ଏ ସବୁ ବିସଇ ସେ ତମ୍କେ ଦେଇସି ।”
32 ௩௨ பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
୩୨ଏ ଉନା ମେଣ୍ଡାରାସି, ଡରାନାଇ, କାଇକେବଇଲେ ତମର୍ ବାବା ତମ୍କେ ତାର୍ ରାଇଜ୍ ଦେବାକେ ମନ୍କଲାଆଚେ ।
33 ௩௩ உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
୩୩ତମ୍କେ ଜନ୍ ଜନ୍ଟା ଆଚେ, ସେଟା ବିକିଦେଇ ଗରିବ୍ମନ୍କେ ଦାନ୍ କରା । ଜନ୍ଟା କି କେବେ ନ ସାରେ, ନିଜର୍ ନିଜର୍ପାଇ ଏନ୍ତାରି କାଣା ନ ଅଇବା ବେସ୍ନି ତିଆର୍କରା । ଜନ୍ଟାନେ ଚର୍ ନ ଆସେ କି କିଡାମନ୍ ମିସା ନ ନସାଅତ୍ । ସର୍ଗେ ଏନ୍ତାରି ନ ସାର୍ବା ଦନ୍ ସଙ୍ଗଇରୁଆ ।
34 ௩௪ உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
୩୪କାଇକେବଇଲେ ଜନ୍ଟାନେ ତମର୍ ଦନ୍, ତେଇସେ ତମର୍ ମନ୍ ।
35 ௩௫ உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
୩୫“ତମର୍ ଆଟର୍ ତୁଆଲ୍ ବାନ୍ଦିଅଇ ସେବା କର୍ବାକେ ଜାଗିରୁଆ, ଆରି ବତି ଲାଗ୍ତେରଅ ।
36 ௩௬ தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.
୩୬ମାପ୍ରୁ ବିବା ବଜିଟାନେଅନି ବାଉଡିଆସି କାପାଟେ ବାଜାଉ ବାଜାଉ ଜନ୍ଲକ୍ମନ୍ ଦାପ୍ରେ କାପାଟ୍ ଉଗାଡ୍ବାକେ ଜାଗିରଇବାଇ, ତମେ ସେମନର୍ପାରା ଅଇରୁଆ ।
37 ௩௭ எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୩୭ମାପ୍ରୁ ଆସି ଜନ୍ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଜାଗ୍ରତ୍ ରଇବାଟା ଦେକ୍ସି, ସେମନ୍ କେଡେ ନିକ କରମର୍ ଲକ୍ । ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ସେ ନିଜର୍ ଆଁଟାଇ ତୁଆଲ୍ ବାନ୍ଦିକରି, ସେମନ୍କେ କାଇବାକେ ବସାଇ, ତାକର୍ଲଗେ ଜାଇ ସେବାକର୍ସି ।
38 ௩௮ அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
୩୮ଆରି ସେ ଜଦି ମଜାରାତି କି କୁକ୍ଡାଡାକେ ମିସା ଆସି ସେମନ୍କେ, ସେନ୍ତାରି ରଇବାଟା ଦେକ୍ସି, ସେନ୍ତାର୍ଆଲେ ସେ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍ କେଡେ ନିକ କରମର୍ ଲକ୍ ।
39 ௩௯ திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
୩୯ମାତର୍ ଏଟା ଜାନିରୁଆ, କେଡେବେଲେ ଚର୍ ଆଇସି, ଏଟା ଗରର୍ ସାଉକାର୍ ଜେବେ ଜାନ୍ସି, ସେନ୍ତାର୍ଆଲେ ସେ ନିଜର୍ ଗରର୍ ପେଡି ବାଙ୍ଗାଇବାକେ ନ ଦେଏ ।
40 ௪0 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார்.
୪୦ତମେ ମିସା ଜାଗ୍ରତ୍ଅଇ ରୁଆ, କାଇକେବଇଲେ, କେବେ ତମେ ବାବି ନ ରୁଆସ୍, ସେ ବେଲେ ପର୍ମେସର୍ ପାଟାଇରଇବା ନର୍ପିଲା ମୁଇ ଆଇବି ।”
41 ௪௧ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
୪୧ସେଟାସୁନି ପିତର୍ କଇଲା, “ଏ ମାପ୍ରୁ ତମେ ଆମ୍କେସେ କି ସବୁଲକ୍କେ ଏନ୍ତାରି କାତା ଦେକାଇ କଇଲାସ୍ନି?”
42 ௪௨ அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?
୪୨ଜିସୁ କଇଲା, “ବିସ୍ବାସେ ରଇବା ଲକ୍ ଆରି ବୁଦିମାନ୍ ଲକ୍ କେ ଆଚତ୍? ତାକେ ସେ ସାଉକାର୍ ଗର୍ ଚାଲାଇବା ଦାଇତ୍ ଦେଇସି । ସେ ସମାନ୍ ବେଲାଇ ବିନ୍ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ କାଦି ଜାଗାଇ ଦେଇସି ।
43 ௪௩ எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
୪୩ସାଉକାର୍ ଆସି, ତାର୍ ନିଜର୍ ଦାଙ୍ଗ୍ଡା ଏନ୍ତାର୍ କର୍ବାଟା ଦେକ୍ସି ବଇଲେ ସେ କେଡେ ନିକ କରମର୍ ଲକ୍ ।
44 ௪௪ தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୪୪ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ସେ ତାକେ ନିଜର୍ ସବୁର୍ ଉପ୍ରେ ଅଦିକାର୍ ଦେଇସି ।
45 ௪௫ அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,
୪୫ଜଦି ସେ ଦାଙ୍ଗ୍ଡା, ମର୍ ସାଉକାର୍ ଆଇବାଟା ଅଲ୍ସମ୍ ଅଇସି ବଲି ମନେକରି, ମାତୁଆଲ୍ ଅଇ ବିନ୍ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଲାଗ୍ମାର୍ କର୍ବାର୍ ଆରାମ୍ କର୍ସି,
46 ௪௬ அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
୪୬ସେନ୍ତାର୍ଆଲେ ଜନ୍ ଦିନେ ସେ ଜାଗି ନ ରଏ, ଆରି ସେ କେଡେବେଲେ ଆଇବାଟା ଜାନି ନ ରଏ, ସେ ସାଉକାର୍ ଆସି ତାକେ ବେସି ବଡ୍ ଡଣ୍ଡ୍ ଦେଇସି । ଆରି ବିସ୍ବାସ୍ ନ କର୍ବା ଲକର୍ ସଙ୍ଗ୍ ମିସାଇ ଦେଇସି ।”
47 ௪௭ தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
୪୭“ଆରି ଜନ୍ ଦାଙ୍ଗ୍ଡା ନିଜର୍ ସାଉକାରର୍ ମନ୍ ଜାନିକରି ଜାଗରତ୍ ନ ଅଇରଏ, କି ସାଉକାରର୍ ମନ୍କଲା ଇସାବେ ପାଇଟି ନ କରେ, ତାକେ କର୍ଡା ସଙ୍ଗ୍ ଅପର୍ବଲ୍ ମାଡ୍ ଅଇସି ।
48 ௪௮ அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
୪୮ମାତର୍ ଜେ ତାର୍ ମନ୍କଲାଟା ନାଜାନିକରି, ଡଣ୍ଡ୍ମିଲ୍ବା କାମ୍ କର୍ବାର୍ ଦାର୍ସି, ତାକେ ଅଲପ୍ ମାଡ୍ ଅଇସି । ଜନ୍ ଲକ୍କେ ଅଦିକ୍ ଦିଆଅଇରଇସି, ତାକେ ଅଦିକ୍ ଦାବି କରାଅଇସି । ଆରି ଲକ୍ମନ୍ ତାକେ ଜାର୍ଲଗେ ଅଦିକ୍ ସର୍ପି ଦେଲାଇଆଚତ୍, ଅଦିକ୍ ଅଦିକ୍ ଦାବି କର୍ବାଇ ।”
49 ௪௯ பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
୪୯ଜିସୁ କଇଲା, “ମୁଇ ଏ ଦୁନିଆଇ ଜଇ ଲାଗାଇବାର୍ ଆଇଲିଆଚି । ସେଟା ଜଦି ଲାଗ୍ବାକେ ଆରାମ୍ ଅଇଲାନି, ସେନ୍ତାର୍ଆଲେ ମୁଇ ମନ୍କଲାଟା ପୁରାପୁରୁନ୍ ଅଇଗାଲାବେ ।
50 ௫0 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
୫୦ମାତର୍ ମକେ ଆରି ଗଟେକ୍ ଡୁବନେ ଡୁବନ୍ ନେବାକେ ପଡ୍ସି, ଆରି ସେଟା ନ ସାର୍ବାଜାକ, ମର୍ ମନ୍ବିତ୍ରେ କେନ୍ତି କସ୍ଟ ଲାଗ୍ଲାନି ।
51 ௫௧ நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୫୧ଜଗତେ ସାନ୍ତି ଦେବାକେ ଆସିଆଚେ ବଲି ତମେ କାଇ ମକେ ବାବ୍ଲାସ୍ନି କି? ନାଇ ମୁଇ ସାନ୍ତି ଆନ୍ବାକେ ନାଇ, ମାତର୍ ବିଚାର୍ନା କର୍ବାକେ ଆସିଆଚି ।
52 ௫௨ எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
୫୨ଏବେଅନି ଗଟେକ୍ ଗରେ ପାଁଚ୍ ଲକ୍ ରଇଲେ, ଦୁଇଲକର୍ ବିରୁଦେ ତିନ୍ଲକ୍ ଆରି ତିନ୍ଲକର୍ ବିତ୍ରେ ଦୁଇ ଲକ୍ ବାଗ୍ ଅଇବାଇ ।
53 ௫௩ தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
୫୩ପଅର୍ ବିରୁଦେ ବାବା, ବାବାର୍ ବିରୁଦେ ପଅ, ଜିଇର୍ ବିରୁଦେ ମା, ମାଆର୍ ବିରୁଦେ ଜିଇ, ବୁଆରିର୍ ବିରୁଦେ ସାତ୍ରି, ସାତ୍ରିର୍ ବିରୁଦେ ବୁଆରି ବିନେ ଅଇବାଇ ।”
54 ௫௪ பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும்.
୫୪ଆରି ଜିସୁ ଲକ୍ମନ୍କେ କଇଲା, “ବୁଡ୍ତି ଦିଗେ ବାଦଲ୍ ଚଗ୍ବାଟା ଦେକ୍ଲେ, ପାନି ଆଇସିବେ ବଲି କଇସା । ଆରି ସେନ୍ତାରି ସେ ଅଇସି ।
55 ௫௫ தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
୫୫ଆରି ଦକିଣ୍ଦିଗ୍ ବାଟେଅନି ପବନ୍ ମାର୍ବାଟା ଜାନ୍ଲେ କାରା ଅଇସି ବଲି କଇସା । ଆରି ସେଟା ସେନ୍ତାରି ଅଇସି ।
56 ௫௬ மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?
୫୬ଏ କୁଟିଆଲ୍ମନ୍, ତମେ ଜଗତର୍ ଆରି ସରଗର୍ କାତା ଜାନି ପାଗ୍ କେନ୍ତି ଅଇସି ବଲି ଆଗ୍ତୁ କଇଲାସ୍ନି, ମାତର୍ ଏବେ କାଇଟା ଗଟ୍ସି, ସେଟା କାଇକେ ନାଜାନ୍ଲାସ୍ନି?”
57 ௫௭ நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
୫୭“ଆରି ନିଜେ ନିଜେ କାଇକେ ଟିକ୍ ବିଚାର୍ କରାସ୍ ନାଇ?
58 ௫௮ உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
୫୮ଜଦି ତମର୍ ବିରଦିସଙ୍ଗ୍ ବିଚାର୍କାରିଆର୍ଲଗେ ଗାଲାସ୍ନି, ମଜାବାଟେ ତାର୍ସଙ୍ଗ୍ ବୁଜାମାନା ଅଇବାକେ ଚେସ୍ଟା କରା । ନଇଲେ କେଡେବେଲେ ସେ ତମ୍କେ ବିଚାର୍କାରିଆର୍ ଟାନେ ଜିକିନେଇସି, ବିଚାର୍କାରିଆ ସନିଅମନର୍ ଆତେ ସର୍ପିଦେଇସି, ସନିଅମନ୍ ତମ୍କେ ବନ୍ଦି ଗରେ ନେଇ ପୁରାଇଦେବାଇ ।”
59 ௫௯ நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୫୯ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, “କେନ୍ତିକଲେ ମିସା ସବୁ ଡାବୁ ନ ସୁଜ୍ବାଜାକ ସେ ଜାଗାଇଅନି ବାରଇ ଆସିନାପାରାସ୍ ।”