< லூக்கா 12 >

1 அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ⲁ̅ϩⲙⲡⲧⲣⲉⲛⲉⲧⲃⲁ ⲇⲉ ⲙ̅ⲙⲏⲏϣⲉ ⲥⲱⲟⲩϩ ⲉϩⲟⲩⲛ ϩⲱⲥⲧⲉ ⲉⲧⲣⲉⲩϩⲱⲙ ⲛ̅ⲛⲉⲩⲉⲣⲏⲟⲩ ⲁϥⲁⲣⲭⲓ ⲛ̅ϣⲁϫⲉ ⲛⲙ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛ̅ϣⲟⲣⲡ̅ ϫⲉ ϩⲁⲣⲉϩ ⲉⲣⲱⲧⲛ̅ ⲉⲧⲃⲉⲡⲉⲑⲁⲃ ⲉⲧⲉⲧⲁⲓ̈ ⲧⲉ ⲑⲩⲡⲟⲕⲣⲓⲥⲓⲥ ⲛⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ.
2 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
ⲃ̅ⲙ̅ⲙⲛⲗⲁⲁⲩ ⲇⲉ ⲉϥϩⲟⲃⲥ̅ ⲉⲛϥ̅ⲛⲁϭⲱⲗⲡ̅ ⲉⲃⲟⲗ ⲁⲛ ⲁⲩⲱ ⲉϥϩⲏⲡ ⲉⲛⲥⲉⲛⲁⲓ̈ⲙⲉ ⲉⲣⲟϥ ⲁⲛ.
3 ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
ⲅ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲛⲉⲛⲧⲁⲧⲉⲧⲛ̅ϫⲟⲟⲩ ϩⲙ̅ⲡⲕⲁⲕⲉ ⲥⲉⲛⲁⲥⲟⲧⲙⲟⲩ ϩⲙ̅ⲡⲟⲩⲟⲓ̈ⲛ. ⲁⲩⲱ ⲡⲉⲛⲧⲁⲧⲉⲧⲛ̅ϫⲟⲟⲥ ⲉⲡⲉⲩⲙⲁⲁϫⲉ ϩⲛ̅ⲛ̅ⲧⲁⲙⲓⲟⲛ. ⲥⲉⲛⲁⲧⲁϣⲉⲟⲓ̈ϣ ⲙ̅ⲙⲟϥ ϩⲓϫⲛ̅ⲛ̅ϫⲉⲛⲉⲡⲱⲣ.
4 என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.
ⲇ̅ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ⲛⲁϣⲃⲉⲉⲣ ϫⲉ ⲙ̅ⲡⲣ̅ⲣ̅ϩⲟⲧⲉ ϩⲏⲧⲟⲩ ⲛ̅ⲛⲉⲧⲛⲁⲙⲟⲩⲟⲩⲧʾ ⲙ̅ⲡⲉⲧⲛⲥⲱⲙⲁ. ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲛⲁⲓ̈ ⲉⲙⲙⲛ̅ⲧⲟⲩϩⲟⲩⲉⲡⲁⲓ̈ ⲉⲁⲁϥ ⲛⲏⲧⲛ̅.
5 நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
ⲉ̅ϯⲛⲁⲧⲁⲙⲉⲧⲏⲟⲩⲧⲛ ⲇⲉ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲣ̅ϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅. ⲁⲣⲓϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲧⲉⲟⲩⲛⲧϥ̅ⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲙ̅ⲙⲁⲩ ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲙⲟⲩⲟⲩⲧʾⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲛⲉϫⲧⲏⲟⲩⲧⲛ̅ ⲉⲧⲅⲉϩⲉⲛⲛⲁ. ϩⲁⲓ̈ⲟ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲁⲣⲓϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲁⲓ̈. (Geenna g1067)
6 இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
ⲋ̅ⲙⲏ ⲛ̅ⲥⲉϯ ⲉⲃⲟⲗ ⲁⲛ ⲛ̅ϯⲟⲩ ⲛ̅ϫⲁϫ ϩⲁϩⲟⲃⲟⲗⲟⲥ ⲥⲛⲁⲩ ⲁⲩⲱ ⲛ̅ⲥⲉⲟⲃϣ̅ ⲁⲛ ⲉⲩⲁ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ
7 உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ⲍ̅ⲁⲗⲗⲁ ⲛ̅ⲕⲉϥⲱ ⲧⲏⲣⲟⲩ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲁⲡⲉ ⲏⲡ. ⲙ̅ⲡⲣ̅ⲣ̅ϩⲟⲧⲉ ⲧⲉⲧⲛ̅ϣⲟⲃⲉ ⲉϩⲁϩ ⲛ̅ϫⲁϫ
8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார்.
ⲏ̅ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲛⲁϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲣ̅ⲣⲱⲙⲉ. ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ ⲛⲁϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛ̅ⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ.
9 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
ⲑ̅ⲡⲉⲧⲛⲁⲁⲣⲛⲁ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲣ̅ⲣⲱⲙⲉ ⲥⲉⲛⲁⲁⲣⲛⲁ ⲙ̅ⲙⲟϥ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲛⲛ̅ⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ.
10 ௧0 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
ⲓ̅ⲁⲩⲱ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲛⲁϫⲱ ⲛ̅ⲟⲩϣⲁϫⲉ ⲉⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ. ⲥⲉⲛⲁⲕⲁⲁϥ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ. ⲡⲉⲧⲛⲁϫⲓⲟⲩⲁ ⲇⲉ ⲉⲡⲉⲡⲛ̅ⲁ ⲉⲧⲟⲩⲁⲁⲃʾ. ⲛ̅ⲥⲉⲛⲁⲕⲱ ⲁⲛ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ.
11 ௧௧ அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
ⲓ̅ⲁ̅ϩⲟⲧⲁⲛ ⲇⲉ ⲉⲩϣⲁⲛϫⲓⲧⲏⲟⲩⲧⲛ̅ ⲉϩⲟⲩⲛ ⲛ̅ⲛⲁϩⲣⲛ̅ⲛ̅ⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛⲙ̅ⲛ̅ⲛⲁⲣⲭⲏ ⲛⲙ̅ⲛ̅ⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ. ⲙ̅ⲡⲣ̅ϥⲓⲣⲟⲟⲩϣ ϫⲉ ⲉⲧⲉⲧⲛⲁϫⲟⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲏ ⲉⲧⲉⲧⲛⲁⲣ̅ⲁϣ ⲛ̅ϩⲉ. ⲏ ϫⲉ ⲉⲧⲉⲧⲛⲁⲟⲩⲟϣⲃⲟⲩ ⲛ̅ⲁϣ ⲛ̅ϩⲉ.
12 ௧௨ நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
ⲓ̅ⲃ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ⲅⲁⲣ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲛⲁⲧⲥⲁⲃⲉⲧⲏⲩⲧⲛ̅ ϩⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲉⲛⲉⲧⲉⲧⲛⲁϫⲟⲟⲩ·
13 ௧௩ அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ⲓ̅ⲅ̅ⲡⲉϫⲉⲟⲩⲁ ⲇⲉ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲙⲡʾⲙⲏⲏϣⲉ ϫⲉ. ⲡⲥⲁϩ. ⲁϫⲓⲥ ⲙ̅ⲡⲁⲥⲟⲛ ⲛϥ̅ⲡⲉϣⲧⲉⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⲉϫⲱⲛ.
14 ௧௪ அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
ⲓ̅ⲇ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ. ⲡⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲛ̅ⲕⲣⲓⲧⲏⲥ ⲁⲩⲱ ⲣ̅ⲣⲉϥⲡⲱϣ ⲉϫⲱⲧⲛ̅.
15 ௧௫ பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
ⲓ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ. ϯϩⲧⲏⲧⲛ̅ ⲁⲩⲱ ϩⲁⲣⲉϩ ⲉⲣⲱⲧⲛ̅ ⲉϥⲱϭⲉ ⲛⲓⲙ ϫⲉ ⲉⲣϣⲁⲛⲛⲉⲛⲕⲁʾ ⲁϣⲁⲓ̈ ⲛ̅ⲟⲩⲁ ⲉϥⲛⲁϩⲉ ⲉⲡⲉϥⲱⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ϩⲏⲧⲟⲩ·
16 ௧௬ அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
ⲓ̅ⲋ̅ⲁϥϫⲱ ⲇⲉ ⲛⲁⲩ ⲛ̅ⲟⲩⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲟⲩⲣⲱⲙⲉ ⲣ̅ⲣⲙ̅ⲙⲁⲟ̅ ⲡⲉ ⲛ̅ⲧⲁⲧⲉϥⲭⲱⲣⲁ ⲟⲩⲱⲱⲗⲉ
17 ௧௭ அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
ⲓ̅ⲍ̅ⲉⲁϥⲙⲉⲕⲙⲟⲩⲕϥ̅ ⲇⲉ ϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲉⲓ̈ⲛⲁⲣⲟⲩ ϫⲉ ⲙⲛ̅ϯⲙⲁ ⲛ̅ⲥⲉⲩϩ ⲛⲁⲕⲁⲣⲡⲟⲥ ⲉⲣⲟϥ.
18 ௧௮ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
ⲓ̅ⲏ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ϫⲉ ϯⲛⲁⲣ̅ⲡⲁⲓ̈. ϯⲛⲁϣⲟⲣϣⲣ̅ⲛⲁⲁⲡⲟⲑⲏⲕⲏ ⲛⲧⲁⲕⲟⲧⲟⲩ ⲛ̅ϩⲉⲛⲛⲟϭ ⲧⲁⲥⲱⲟⲩϩ ⲉⲣⲟⲟⲩ ⲙ̅ⲡⲥⲟⲩⲟ ⲧⲏⲣϥ̅ ⲛⲙ̅ⲛⲁⲁⲅⲁⲑⲟⲛ
19 ௧௯ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
ⲓ̅ⲑ̅ⲧⲁϫⲟⲟⲥ ⲛ̅ⲧⲁⲯⲩⲭⲏ ϫⲉ. ⲧⲁⲯⲩⲭⲏ ⲟⲩⲛ̅ⲧⲉϩⲁϩ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲁⲅⲁⲑⲟⲛ ⲉⲩⲕⲏ ⲛⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲁϩ ⲣ̅ⲣⲟⲙⲡⲉ. ⲙ̅ⲧⲟⲛ ⲙ̅ⲙⲟ. ⲟⲩⲱⲙ. ⲥⲱ. ⲉⲩⲫⲣⲁⲛⲉ.
20 ௨0 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.
ⲕ̅ⲡⲉϫⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ. ⲡⲁⲑⲏⲧʾ. ⲥⲉⲛⲁϥⲓ ⲛ̅ⲧⲉⲕⲯⲩⲭⲏ ⲛ̅ⲧⲉⲓ̈ⲟⲩϣⲏ ⲛ̅ⲧⲟⲟⲧⲕ̅. ⲛⲉⲛⲧⲁⲕⲥⲃ̅ⲧⲱⲧⲟⲩ ⲇⲉ ⲉⲩⲛⲁϣⲱⲡⲉ ⲛⲛⲓⲙ.
21 ௨௧ தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
ⲕ̅ⲁ̅ⲧⲁⲓ ⲧⲉ ⲑⲉ ⲙ̅ⲡⲉⲧʾⲥⲱⲟⲩϩ ⲛⲁϥ ⲉϩⲟⲩⲛ ⲉⲛϥⲟ ⲁⲛ ⲣ̅ⲣⲙ̅ⲙⲁⲟ̅ ϩⲙⲡⲛⲟⲩⲧⲉ·
22 ௨௨ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲃ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲙ̅ⲡⲣ̅ϥⲓⲣⲟⲟⲩϣ ⲉⲧⲉⲧⲛ̅ⲯⲩⲭⲏ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲟⲩⲟⲙϥ̅. ⲟⲩⲇⲉ ⲡⲉⲧⲛ̅ⲥⲱⲙⲁ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲧⲁⲁϥ ϩⲓⲱⲧʾⲧⲏⲩⲧⲛ̅.
23 ௨௩ உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
ⲕ̅ⲅ̅ϫⲉ ⲧⲉⲧⲛ̅ⲯⲩⲭⲏ ⲟⲩⲟⲟⲧʾ ⲉⲧⲉϩⲣⲉ ⲁⲩⲱ ⲡⲥⲱⲙⲁ ⲉⲧϩⲃ̅ⲥⲱ.
24 ௨௪ காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ⲕ̅ⲇ̅ϭⲱϣⲧ̅ ⲉⲛⲁⲃⲟⲕⲉ ϫⲉ ⲛⲥⲉϫⲟ ⲁⲛ ⲛ̅ⲥⲉⲱϩⲥ̅ ⲁⲛ ⲉⲙⲙⲛ̅ⲧⲟⲩⲧⲁⲙⲓⲟⲛ ⲙ̅ⲙⲁⲩ ⲟⲩⲇⲉ ⲁⲡⲟⲑⲏⲕⲏ ⲁⲩⲱ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲁⲁⲛϣ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ϭⲉ ⲧⲉⲧⲛϣⲟⲃⲉ ⲉⲛϩⲁⲗⲁⲧⲉ ⲉⲙⲁⲧⲉ.
25 ௨௫ கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
ⲕ̅ⲉ̅ⲛⲓⲙ ⲇⲉ ⲛϩⲏⲧʾⲧⲏⲩⲧⲛ̅ ⲉϥϥⲓⲣⲟⲟⲩϣ ⲡⲉⲧⲉⲟⲩⲛϭⲟⲙ ⲙ̅ⲙⲟϥ ⲉⲩⲉϩⲟⲩⲙⲁϩⲉ ⲉⲧⲉϥϣⲓⲏ.
26 ௨௬ மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
ⲕ̅ⲋ̅ⲉϣϫⲉⲙ̅ⲙⲛ̅ϭⲟⲙ ϭⲉ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲉⲩⲕⲟⲩⲉⲓ. ⲉⲧⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲛϥⲓⲣⲟⲟⲩϣ ⲉⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ.
27 ௨௭ காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲍ̅ϯϩⲧⲏⲧⲛ̅ ⲉⲛⲉⲕⲣⲓⲛⲟⲛ ⲛ̅ⲑⲉ ⲉⲧⲟⲩⲁⲓ̈ⲁⲉⲓ ⲙ̅ⲙⲟⲥ ⲉⲛⲥⲉϩⲓⲥⲉ ⲁⲛ ⲉⲛⲥⲉⲱ̑ⲧϩ̅ ⲁⲛ. ϯϫⲱ ⲇⲉ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲙ̅ⲡⲉⲥⲟⲗⲟⲙⲱⲛ ϩⲙ̅ⲡⲉϥⲉⲟⲟⲩ ⲧⲏⲣϥ̅ ϯ ϩⲓⲱⲱϥ ⲛ̅ⲑⲉ ⲛ̅ⲟⲩⲁ ⲛ̅ⲛⲁⲓ̈.
28 ௨௮ இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
ⲕ̅ⲏ̅ⲉϣϫⲉⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ ⲉⲧϩⲛⲧⲥⲱϣⲉ ⲙ̅ⲡⲟⲟⲩ ⲣⲁⲥⲧⲉ ⲉⲩⲛⲁⲛⲟϫϥ̅ ⲉⲧⲉⲧⲣⲓⲣ ⲡⲛⲟⲩⲧⲉ ϯ ϩⲓⲱⲱϥ ⲛ̅ⲧⲉⲓ̈ϩⲉ. ⲡⲟⲥⲱ ⲙⲁⲗⲗⲟⲛ ϩⲓⲱⲧʾⲧⲏⲩⲧⲛ̅ ⲛⲁⲧⲕⲟⲩⲓ̈ ⲙⲡⲓⲥⲧⲓⲥ
29 ௨௯ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
ⲕ̅ⲑ̅ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ϩⲱⲧʾⲧⲏⲩⲧⲛ̅ ⲙ̅ⲡⲣ̅ϣⲓⲛⲉ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲟⲩⲟⲙϥ̅. ⲏ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲥⲟⲟϥ. ⲙ̅ⲡⲣ̅ϥⲓⲣⲟⲟⲩϣ
30 ௩0 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
ⲗ̅ϫⲉ ⲛⲁⲓ̈ ⲅⲁⲣ ⲧⲏⲣⲟⲩ ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉⲧϣⲓⲛⲉ ⲛ̅ⲥⲱⲟⲩ. ⲡⲉⲧⲛ̅ⲓ̈ⲱⲧʾ ⲇⲉ ⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲧⲉⲧⲛ̅ⲣ̅ⲭⲣⲓⲁ ⲛ̅ⲛⲁⲓ̈
31 ௩௧ தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ⲗ̅ⲁ̅ⲡⲗⲏⲛ ϣⲓⲛⲉ ⲛⲧⲟϥ ⲛ̅ⲥⲁⲧⲉϥⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲁⲩⲱ ⲛⲁⲓ̈ ⲥⲉⲛⲁⲟⲩⲁϩⲟⲩ ⲉⲣⲱⲧⲛ̅.
32 ௩௨ பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
ⲗ̅ⲃ̅ⲙ̅ⲡⲣ̅ⲣ̅ϩⲟⲧⲉ ⲡⲕⲟⲩⲓ̈ ⲛ̅ⲟϩⲉ ϫⲉ ⲡⲉⲧⲛ̅ⲓ̈ⲱⲧʾ ⲟⲩⲉϣϯ ⲛⲏⲧⲛ̅ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ.
33 ௩௩ உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
ⲗ̅ⲅ̅ϯⲛⲉⲧⲛ̅ⲛ̅ⲕⲁ ⲉⲃⲟⲗ ⲧⲁⲁⲩ ⲙ̅ⲙⲛ̅ⲧⲛ͡ⲁ. ⲙⲁⲧⲁⲙⲓⲟ̅ ⲛⲏⲧⲛ ⲛϩⲉⲛⲧⲱⲱⲙⲉ ⲉⲛⲥⲉⲛⲁⲣⲁⲥ ⲁⲛ ⲛⲙ̅ⲟⲩⲁϩⲟ ⲛ̅ⲁⲧⲱϫⲛ̅ ϩⲛ̅ⲙⲡⲏⲩⲉ. ⲡⲙⲁ ⲉⲧⲉⲙⲉⲣⲉⲡⲉϥϫⲓⲟⲩⲉ ϩⲱⲛ ⲉⲣⲟϥ. ⲁⲩⲱ ⲙⲉⲣⲉϫⲟⲟⲗⲉⲥ ⲧⲁⲕⲟϥ.
34 ௩௪ உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
ⲗ̅ⲇ̅ⲡⲙⲁ ⲅⲁⲣ ⲉⲧⲉⲣⲉⲡⲉⲧⲛⲁϩⲟ ⲛⲁϣⲱⲡⲉ ⲙⲙⲟϥ ⲉⲣⲉⲡⲉⲧⲛ̅ϩⲏⲧʾ ⲛⲁϣⲱⲡⲉ ϩⲓⲱⲱϥ.
35 ௩௫ உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
ⲗ̅ⲉ̅ⲙⲁⲣⲉⲛⲉⲧⲛϯⲡⲉ ϣⲱⲡⲉ ⲉⲩⲙⲏⲣ ⲉⲣⲉⲛⲉⲧⲛ̅ϩⲏⲃⲥ̅ ⲙⲟⲩϩ.
36 ௩௬ தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.
ⲗ̅ⲋ̅ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲣ̅ⲑⲉ ⲛ̅ⲛⲓⲣⲱⲙⲉ ⲉⲧϭⲱϣⲧ̅ʾ ⲉⲃⲟⲗ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲩϫⲟⲓ̈ⲥ ϫⲉ ⲉϥⲛⲁϭⲱⲗⲡ̅ ⲧⲛⲁⲩ ϩⲙ̅ⲡⲙⲁ ⲛ̅ϣⲉⲗⲉⲉⲧʾ. ϫⲉⲕⲁⲥ ⲉϥϣⲁⲛⲉ͡ⲓ ⲛϥ̅ⲧⲱϩⲙ̅ ⲉⲩⲉⲟⲩⲱⲛ ⲛⲁϥ ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ.
37 ௩௭ எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲗ̅ⲍ̅ⲛⲁⲓ̈ⲁⲧⲟⲩ ⲛⲛ̅ϩⲙϩⲁⲗ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲛⲁⲓ̈ ⲉⲧⲉⲣⲉⲡⲉⲩϫⲟⲉⲓⲥ ⲛⲏⲟⲩ ⲛϥ̅ϩⲉ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲣⲟⲓ̈ⲥ. ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ϥⲛⲁⲙⲟⲣϥ̅ ⲛϥ̅ⲧⲣⲉⲩⲛⲟϫⲟⲩ ⲛϥ̅ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲓⲱⲟⲩ ⲉϥⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁⲩ
38 ௩௮ அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
ⲗ̅ⲏ̅ⲕⲁⲛ ⲉϥϣⲁⲛⲉ͡ⲓ ϩⲛ̅ⲧⲙⲉϩⲥⲛ̅ⲧⲉ ⲛ̅ⲟⲩⲣ̅ϣⲉ ⲏ ⲧⲙⲉϩϣⲟⲙⲧⲉ ⲛϥ̅ϩⲉ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲓ̈ⲣⲉ ϩⲓⲛⲁⲓ̈ ⲛⲁⲓ̈ⲁⲧⲟⲩ ⲛⲛ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ.
39 ௩௯ திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
ⲗ̅ⲑ̅ⲧⲉⲧⲛ̅ⲓ̈ⲙⲉ ⲇⲉ ⲉⲡⲁⲓ̈ ϫⲉ ⲉⲛⲉϥⲥⲟⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲡϫⲟⲉⲓⲥ ⲙ̅ⲡⲏⲓ̈ ϫⲉ ⲉⲣⲉⲡⲣⲉϥϫⲓⲟⲩⲉ ⲛⲏⲟⲩ ⲛ̅ⲁϣ ⲛ̅ⲟⲩⲛⲟⲩ ⲛⲉϥⲛⲁⲕⲁⲁⲩ ⲁⲛ ⲉϭⲱⲧϩ̅ ⲉⲡⲉϥⲏⲓ̈.
40 ௪0 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார்.
ⲙ̅ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ϩⲱⲧʾⲧⲏⲩⲧⲛ̅ ϣⲱⲡⲉ ⲉⲧⲉⲧⲛ̅ⲥⲃ̅ⲧⲱⲧ ϫⲉ ⲉⲣⲉⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ ⲛⲏⲟⲩ ϩⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲉⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ⲙ̅ⲙⲟⲥ ⲁⲛ.
41 ௪௧ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
ⲙ̅ⲁ̅ⲡⲉϫⲉⲡⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ. ⲡϫⲟⲉⲓⲥ. ⲉⲕϫⲱ ⲛⲁⲛ ⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ. ϫⲉⲛⲉⲕϫⲱ ⲙⲙⲟⲥ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ.
42 ௪௨ அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?
ⲙ̅ⲃ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡϫⲟⲉⲓⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲁⲣⲁ ⲡⲉ ⲡ̅ⲡⲓⲥⲧⲟⲥ ⲛ̅ⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲥⲁⲃⲉ ⲉⲧⲉⲣⲉⲡⲉϥϫⲟⲓ̈ⲥ ⲛⲁⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙ̅ⲙⲟϥ ⲉϫⲛ̅ⲛⲉϥϩⲙ̅ϩⲁⲗ ⲉϯ ⲛⲁⲩ ⲛ̅ⲧⲉϩⲣⲉ ⲙ̅ⲡⲉⲥⲟⲩⲟⲓ̈ϣ
43 ௪௩ எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
ⲙ̅ⲅ̅ⲛⲁⲓ̈ⲁⲧϥ̅ ⲙ̅ⲡϩⲙ̅ϩⲁⲗ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲡⲉⲧⲉⲣⲉⲡⲉϥϫⲟⲉⲓⲥ ⲛⲏⲟⲩ ⲛϥ̅ϩⲉ ⲉⲣⲟϥ ⲉϥⲓ̈ⲣⲉ ϩⲓⲛⲁⲓ̈.
44 ௪௪ தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲙ̅ⲇ̅ⲛⲁⲙⲉ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ϥⲛⲁⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙⲙⲟϥ ⲉϫⲛⲛⲉϥϩⲩⲡⲁⲣⲭⲟⲛⲧⲁ ⲧⲏⲣⲟⲩ.
45 ௪௫ அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,
ⲙ̅ⲉ̅ⲉϥϣⲁⲛϫⲟⲟⲥ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡϩⲙϩⲁⲗ ⲉⲧⲙⲙⲁⲩ ϩⲙⲡⲉϥϩⲏⲧʾ ϫⲉ ⲡⲁϫⲟⲉⲓⲥ ⲛⲁⲱⲥⲕ̅ ⲉⲉ͡ⲓ. ⲛϥ̅ⲁⲣⲭⲓ ⲛ̅ϩⲓⲟⲩⲉ ⲉⲛϩⲙ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲛⲙⲛ̅ϩⲙϩⲁⲗ ⲛ̅ⲥϩⲓⲙⲉ. ⲛϥ̅ⲟⲩⲱⲙ. ⲛϥ̅ⲥⲱ. ⲛϥ̅ϯϩⲉ.
46 ௪௬ அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
ⲙ̅ⲋ̅ϥⲛⲏⲟⲩ ⲛϭⲓⲡϫⲟⲉⲓⲥ ⲙⲡϩ̅ⲙϩⲁⲗ ⲉⲧⲙⲙⲁⲩ ϩⲛⲟⲩϩⲟⲟⲩ ⲉⲛϥ̅ⲥⲟⲟⲩⲛ̅ ⲙⲙⲟϥ ⲁⲛ ⲁⲩⲱ ϩⲛ̅ⲟⲩⲟⲩⲛⲟⲩ ⲉⲛϥ̅ⲓ̈ⲙⲉ ⲉⲣⲟⲥ ⲁⲛ ⲛϥ̅ⲡⲟϣϥ ⲛϥ̅ⲕⲁⲧⲉϥⲧⲟ ⲛⲙⲛⲛⲁⲡⲓⲥⲧⲟⲥ.
47 ௪௭ தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
ⲙ̅ⲍ̅ⲡϩⲙ̅ϩⲁⲗ ⲇⲉ ⲉⲛ̅ⲧⲁϥⲓ̈ⲙⲉ ⲉⲡⲟⲩⲱϣ ⲙ̅ⲡⲉϥϫⲟⲉⲓⲥ ⲉⲙⲡϥ̅ⲥⲟⲃⲧⲉ ⲏ ⲉⲙⲡϥ̅ⲓ̈ⲣⲉ ⲕⲁⲧⲁⲡⲉϥⲟⲩⲱϣ ϥⲛⲁϫⲓ ⲛ̅ϩⲉⲛⲛⲟϭ ⲛ̅ⲥⲏϣⲉ.
48 ௪௮ அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
ⲙ̅ⲏ̅ⲡⲉⲧⲉⲙ̅ⲡϥ̅ⲓ̈ⲙⲉ ⲇⲉ ⲉⲁϥⲣ̅ⲡⲉⲙⲡϣⲁ ⲛ̅ϩⲉⲛⲥⲏϣⲉ ⲉⲩⲛⲁϫⲛⲁϥ ϩⲉⲛⲕⲟⲩⲓ̈. ⲟⲩⲟⲛ ⲇⲉ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁⲩϯ ⲛⲁϥ ⲛϩⲟⲩⲟ ⲥⲉⲛⲁϣⲓⲛⲉ ⲛⲥⲁϩⲟⲩⲟ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ̅. ⲁⲩⲱ ⲡⲉⲛⲧⲁⲩϭⲁⲗⲉϩⲁϩ ⲉⲣⲟϥ ⲥⲉⲛⲁϣⲁⲧϥ̅ ⲛϩⲁϩ.
49 ௪௯ பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
ⲙ̅ⲑ̅ⲛ̅ⲧⲁⲓ̈ⲉ͡ⲓ ⲉⲛⲟⲩϫⲉ ⲛ̅ⲟⲩⲕⲱϩⲧ̅ʾ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲕⲁϩ ⲁⲩⲱ ⲟⲩ ⲡⲉϯⲟⲩⲁϣϥ̅ ⲉⲧⲣⲉϥϫⲉⲣⲟ ⲡⲉ.
50 ௫0 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
ⲛ̅ⲟⲩⲛⲧⲁⲓ̈ⲟⲩⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲙⲙⲁⲩ ⲉⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲙ̅ⲙⲟϥ ϯϭⲏⲡ ϣⲁⲛⲧϥ̅ϫⲱⲕ ⲉⲃⲟⲗ
51 ௫௧ நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲛ̅ⲁ̅ⲉⲧⲉⲧⲛⲙⲉⲩⲉ ϫⲉ ⲛⲧⲁⲓ̈ⲉ͡ⲓ ⲉϯ ⲛⲟⲩⲓ̈ⲣⲏⲛⲏ ⲙ̅ⲡⲕⲁϩ. ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲙ̅ⲙⲟⲛ. ⲁⲗⲗⲁ ⲟⲩⲡⲱⲣϫ ⲡⲉ
52 ௫௨ எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
ⲛ̅ⲃ̅ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ ⲅⲁⲣ ⲟⲩⲛϯⲟⲩ ⲛⲁϣⲱⲡⲉ ϩⲛⲟⲩⲏⲓ̈ ⲛⲟⲩⲱⲧ ⲉⲩⲡⲏϣ ϣⲟⲙⲛⲧ ⲉϫⲛ̅ⲥⲛⲁⲩ ⲥⲛⲁⲩ ⲉϫⲛ̅ϣⲟⲙⲛ̅ⲧ
53 ௫௩ தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
ⲛ̅ⲅ̅ⲟⲩⲛⲟⲩⲓ̈ⲱⲧ ⲛⲁⲡⲱϣ ⲛⲙ̅ⲡⲉϥϣⲏⲣⲉ ⲁⲩⲱ ⲟⲩϣⲏⲣⲉ ⲛⲙⲡⲉϥⲓ̈ⲱⲧʾ. ⲟⲩⲙⲁⲁⲩ ⲙⲙ̅ⲧⲉⲥϣⲉⲉⲣⲉ. ⲟⲩϣⲉⲉⲣⲉ ⲛⲙⲧⲉⲥⲙⲁⲁⲩ. ⲟⲩϣⲱⲙⲉ ⲛⲙ̅ⲧⲉⲥϣⲉⲗⲉⲉⲧʾ. ⲟⲩϣⲉⲗⲉⲉⲧʾ ⲛⲙ̅ⲧⲉⲥϣⲱⲙⲉ·
54 ௫௪ பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும்.
ⲛ̅ⲇ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲙ̅ⲙⲏⲏϣⲉ ϫⲉ ⲉⲧⲉⲧⲛ̅ϣⲁⲛⲛⲁⲩ ⲉⲩⲕⲗⲟⲟⲗⲉ ⲁⲥⲉ͡ⲓ ⲉϩⲣⲁⲓ̈ ϩⲓⲡⲉⲙⲛ̅ⲧ. ϣⲁⲧⲉⲧⲛ̅ϫⲟⲟⲥ ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ϫⲉ ⲡϩⲱⲟⲩ ⲛⲁϣⲱⲡⲉ ⲁⲩⲱ ϣⲁⲥϣⲱⲡⲉ ϩⲓⲛⲁⲓ̈.
55 ௫௫ தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
ⲛ̅ⲉ̅ⲁⲩⲱ ⲉⲣϣⲁⲛⲡⲧⲟⲩⲣⲏⲥ ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲟⲩⲛⲟⲩⲕⲁⲩⲥⲱⲛ ⲛⲁϣⲱⲡⲉ. ⲁⲩⲱ ϣⲁϥϣⲱⲡⲉ.
56 ௫௬ மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?
ⲛ̅ⲋ̅ⲛ̅ϩⲩⲡⲟⲕⲣⲓⲧⲏⲥ. ⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ⲛ̅ⲇⲟϭⲓⲙⲁⲍⲉ ⲙ̅ⲡϩⲟ ⲛ̅ⲧⲡⲉ ⲛⲙ̅ⲡⲕⲁϩ. ⲉⲧⲃⲉⲟⲩ ⲇⲉ ⲛ̅ⲧⲟϥ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲛ̅ⲇⲟϭⲓⲙⲁⲍⲉ ⲙ̅ⲡⲉⲓ̈ⲟⲩⲟⲓ̈ϣ.
57 ௫௭ நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
ⲛ̅ⲍ̅ⲁϩⲣⲱⲧⲛ̅ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲕⲣⲓⲛⲉ ⲁⲛ ⲙ̅ⲡⲉⲧⲉϣϣⲉ ⲙ̅ⲙⲓⲛ ⲙ̅ⲙⲱⲧⲛ̅.
58 ௫௮ உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
ⲛ̅ⲏ̅ⲛ̅ⲑⲉ ⲅⲁⲣ ⲉⲕⲙⲟⲟϣⲉ ⲛⲙ̅ⲡⲉⲧϫⲓϩⲁⲡ ⲟⲩⲃⲏⲕ ⲉϥϩⲓⲧⲉϩⲓⲏ ⲙⲁⲧϥ̅ⲑⲉ ⲙ̅ⲡⲱⲗϭ̅ ⲛⲙ̅ⲙⲁⲕ ⲙⲏⲡⲱⲥ ⲛϥ̅ⲥⲱⲕ ⲙ̅ⲙⲟⲕ ⲉⲩⲣⲉϥϯϩⲁⲡ ⲛ̅ⲧⲉⲡⲣⲉϥϯϩⲁⲡ ⲧⲁⲁⲕ ⲉⲧⲟⲟⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲡⲣⲁⲕⲧⲱⲣ ⲛ̅ⲧⲉⲡⲉⲡⲣⲁⲕⲧⲱⲣ ⲛⲟϫⲕ̅ ⲉⲡⲉϣⲧⲉⲕⲟ.
59 ௫௯ நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲛ̅ⲑ̅ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⲛⲛⲉⲕⲓ̈ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲙⲁⲩ ⲉⲙⲡⲕϯ ⲙ̅ⲡⲉⲕϩⲁⲉ ⲗ̅ⲗⲉⲡⲧⲟⲛ.

< லூக்கா 12 >