< லூக்கா 11 >

1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
ରଗ ହେୱାନ୍‌ ଇମ୍‌ଣି ର ବାହାତ ପାର୍ତାନା କିଜ଼ି ମାଚାନ୍‌; ହେୱାନ୍‌ ପାର୍ତାନା ୱିସ୍ତିଲେ, ତା ଚେଲାହିର୍‌ ବିତ୍ରେ ରୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଏ ମାପ୍ରୁ, ବାପ୍ତିସିମ୍‌ହିନି ଜହନ୍‌ ଇନେସ୍‌ ଜାର୍‌ ଚେଲାରିଂ ପାର୍ତାନା କିଦେଙ୍ଗ୍‌ ହିକାଇକିତାନ୍‌, ଏନ୍‌ ପା ହେ ଲାକେ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାର୍ତାନା କିଦେଙ୍ଗ୍‌ ହିକାଇକିଦା ।”
2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
ଇବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଏଚେକାଡ଼୍‌ଦ ଏପେଙ୍ଗ୍‌ ପାର୍ତାନା କିନାଦେର୍‌, ହେୱାଡ଼ାଂ ଇନାଟ୍‌, ଆବା, ନି ତର୍‌ ପୁଇପୁୟା ଇଞ୍ଜି ମାନି ଆୟେତ୍‌ । ନି ରାଜି ୱାୟେତ୍‌ ।
3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;
ନିତ୍ରେଦିନା ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଲଡ଼ାନି କାଦି ହିଦା ।
4 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.
ମା ପାପ୍‌ ୱିଜ଼ୁ କେମା କିଦା, ଇନାକିଦେଂକି ଆପେଂ ପା ଜାର୍‌ ଜାର୍‌ତି ବେରୁତାଂ ପାପ୍‌ କେମା କିନାପ୍‌ ।” “ପରିକ୍ୟାତ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ତାହି ୱାଦ୍‌ମା ।”
5 பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே,
ଆରେ, ଜିସୁ ତା ଚେଲାରିଂ ଇଚାନ୍‌, “ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନେରିଂ ଏଲେଙ୍ଗ୍‌ ବାର୍ତିନି ସାଙ୍ଗ ମାନାନ୍‌ କି, ଇନେର୍‌ ଲାଗେ ମାଦିମାଦାନାଣା ହେୱାନ୍‌ ହାଲ୍‍ଜି ଇନାନ୍‌, ଏ ହାଇ, ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ତିନିଗଟା ରୁଟିଂ ଉଦାର୍‌ ହିଦା,
6 என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ଇନାକିଦେଂକି ନା ରୱାନ୍‌ ସାଙ୍ଗ ନା ତାକେ ୱାତାନ୍ନା, ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବାଟା କିଜ଼ି ହିଦେଂ ନା ତାକେ ଇନାକା ହିଲୁତ୍‌,
7 வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான்.
ଆରେ ହେ ବିତ୍ରେତାଂ ଏଲେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିନାନ୍‌, ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ କସ୍ଟ ହିଦ୍‌ମା; ଦୁୱେର୍‌ ଗେହ୍‍ୟା ଆତାତେ ଆରେ ନା ହିମ୍‌ଣାଂ ନା ଲାହାଙ୍ଗ୍‌ ହୁଞ୍ଜୁନାରା; ଆନ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହିଦ୍‌ଦେଂ ଆଡ଼୍‌ଦୁଙ୍ଗ୍‌ ।
8 பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ହେୱାନ୍‌ ଆତିସ୍‌ପା ତା ସାଙ୍ଗ ଆତିଲେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ହିଉନ୍‍, ଆତିସ୍‌ପା ହେୱାନ୍‌ ଲାଜାଆୱାଦାଂ ଚାନେକ୍‌ ଚାନେକ୍‌ ଏନ୍ତିଲେ ହେୱାନ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି, ହେୱାନ୍ତି ଏଚେକ୍‌ ଲଡ଼ା ହେୱାନିଂ ହେ ଏଚେକ୍‌ ହିନାନ୍‌ ।
9 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
ଆନ୍‌ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଏନାଟ୍‌, ହେବେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହିଦ୍‌ନାନ୍‌; ଡେକାଟ୍‌, ହେବେ ଏପେଙ୍ଗ୍‌ ଗାଟା ଆନାଦେର୍‌; ଦୁୱେର୍‌ରିଂ ଇଡ଼ାଟ୍‌, ହେବେ ମି କାଜିଂ ଜେସ୍‌ସି ହିଦ୍‌ନାର୍‌ ।
10 ௧0 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ଇନାକିଦେଂକି ଇନେର୍‌ ଏନ୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ ପାୟା ଆନାନ୍‌; ଇନେର୍‌ ଡେକ୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ ଗାଟାଆନାନ୍; ଆରେ, ଇନେର୍‌ ଦୁୱେର୍‌ତ ଇଡ଼୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ କାଜିଂ ଜେୟାନାତ୍‌ ।
11 ௧௧ உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா?
ଆରେ, ମି ବିତ୍ରେ ଏଲେଙ୍ଗ୍‌ ଆବା ଇନେନ୍‌ ମାନାନ୍‌, ଇନେରିଂ ଜାର୍‌ ମାଜ଼ି ମିନ୍‌ ଏନ୍ତିସ୍‌ ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମିନ୍‌ ବାଦୁଲ୍‌ ରାଚ୍‌ ହିନାନ୍‌?
12 ௧௨ அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
ଆତିସ୍‌ପା ରଣ୍ଡା ଏନ୍ତିସ୍‌ ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ କାଚାକୁପି ହିନାନ୍‌?
13 ௧௩ பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ କୁଲ୍‍କୁଲିଆ ଆତିସ୍‌ପା ଏଚେକାଡ଼୍‌ଦ ଜାର୍‌ ଜାର୍‌ ହିମ୍‌ଣାକାଂ ହାର୍ଦି ହାର୍ଦି ଦାନ୍‌ ହିଦେଂ ପୁନାଟ୍‌, ଲାଗିଂ ଇମ୍‌ଣି ଆବା ସାର୍ଗେତାଂ ଦାନ୍‌ ହିଦ୍‍ନାନ୍‍, ହେୱାନ୍‌ ତା ମୁମ୍‌ଦ ଏନ୍‍ନାସ୍‌ ମାନାୟାରିଂ କେତେକ୍‌ ଆଦିକ୍‌ ଲାକେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ ହିଦ୍‍ନାନ୍‍!”
14 ௧௪ பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
ରଗ ଜିସୁ ର ପୁଦା ପିହି କିଜ଼ି ମାଚାନ୍‌, ହେ ପୁଦା ଗୁଲି । ପୁଦା ହସି ହାଚିପାଚେ ଗୁଲା ମାନାୟ୍‌ ବେଣ୍‌ ଇଚାନ୍‌, ହେବେ ମାନାୟାର୍‌ କାବା ଆଜ଼ି ହାଚାର୍‌ ।
15 ௧௫ அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
ମାତର୍‌ ହେୱାର୍‌ ବିତ୍ରେତାଂ ଇନେର୍‌ ଇନେର୍‌ ଇଚାର୍‌, “ଜିସୁ ମୁଣିକା ବାଲ୍‌ଜିବୁଲ୍‌ ସାକ୍ୟାତାଂ ପୁଦାଂ ପିହିକିନାନ୍‌ ।”
16 ௧௬ வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
ବିନ୍‌ଲଗୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡ଼ୁକାତ ହେଜ଼ି କିଦେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ମାନ୍‌କିଜ଼ି ମାଚାର୍‌ । ଲାଗିଂ ଇସ୍ୱର୍‌ ଜେ ତା ସାଇଜ କାର୍‌ୟା ଇଚାକାଂ ପରିକ୍ୟା କିଦେଙ୍ଗ୍‌ ଆକାସ୍‌ତାଂ ର ଚିନ୍‌ ଏନ୍ତାର୍‌ ।
17 ௧௭ அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் அழிந்துபோகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தக் குடும்பமும் நிலைத்திருக்காது.
ମାତର୍‌ ଜିସୁ ହେୱାରିଂ ମାନ୍ତିନି ବାବ୍‍ନା ପୁଞ୍ଜି ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଇମ୍‌ଣି ରାଜି ବାଗ୍‌ ଆଜ଼ି ଜାର୍‌ ବିରୁଦ୍‌ତ ନିଙ୍ଗ୍‌ତିସ୍‌, ହେଦାଂ ନସ୍ଟ ଆଜ଼ି ହାନାତ୍‌, ଆରେ ଇମ୍‌ଣି ଇଲ୍‌ ରିବାଗ୍‌ ଆନାତ୍‌ ହେ ଇଲ୍‌ ଜପି ଲେଦି ଆଜ଼ି ନସ୍ଟ ଆନାତ୍‌ ।
18 ௧௮ சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
ଆରେ, ସୟ୍‌ତାନ୍‌ ପା ଜଦି ବାଗ୍‌ ଆଜ଼ି ଜାର୍‌ ବିରୁଦ୍‌ତ ନିଙ୍ଗ୍‌ନାତ୍‌, ତା ଆତିସ୍‌ ତା ରାଜି ଇନେସ୍‌ ତିର୍‌ ଆଜ଼ି ମାନାତ୍‌? ଆନ୍‌ ବାଲ୍‌ଜିବୁଲ୍‌ ସାଇଜତାଂ ପୁଦାକାଂ ପିହିକିନାନା ଇଞ୍ଜି ଏପେଙ୍ଗ୍‌ ତ ଇଞ୍ଜ୍‌ନାଦେରା ।”
19 ௧௯ நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
ମାତର୍‌ ଆନ୍‌ ଇନାୱାଡ଼ାଂ ବାଲ୍‌ଜିବୁଲ୍‌ ସାଇଜତାଂ ପୁଦାକାଂ ପିହିକିନାଙ୍ଗ୍‌, ଲାଗିଂ ମି ହିମ୍‍ଣାଙ୍ଗ୍‍ ଇନେର୍‌ ସାଇଜତାଂ ହେୱାକାଂ ପିହିକିନାର୍‌? ଲାଗିଂ ହେୱାର୍‌ ନେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବିଚାର୍‌କାର୍‌ୟାର୍‌ ଆଦ୍‌ନାର୍‌ ।
20 ௨0 நான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
ଆନ୍‌ ଆରି ଇସ୍ୱର୍‌ ସାକ୍ତି ସାଇଜତାଂ ଆନ୍‌ ପୁଦାକାଂ ପିହିକିନାଙ୍ଗ୍‌, ଆରି ଇଦାଂ ପାର୍ମାଣ୍‌ କିନାତ୍‌ ଜେ, ଇସ୍ୱର୍‌ ରାଜି ମିଦାଙ୍ଗ୍‌ ଲାଗେ ଆତାତେ ।
21 ௨௧ ஆயுதம் அணிந்த பலசாலி தன் அரண்மனையை காவல்காக்கும்போது, அவனுடைய பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும்.
“ସାକ୍ତି ଲଗୁ ଏଚେକାଡ଼୍‌ଦ ପାତେକ୍‌ ଆତ୍‌ ଆତିୟାର୍‌ ତା ହାକ୍‌ଡ଼ିତ ଜାଲ୍‌ଦି ଆଜ଼ି ତା କାଲ୍‌ ରାକ୍ୟା କିନାନ୍‌, ହେ ପାତେକ୍‌ ତା ଦାନ୍‌ ଜାଗ୍ରତ୍‌ତାଂ ମାନ୍‌ଗାନାତ୍‌;
22 ௨௨ அவனைவிட பலசாலி வந்து, அவனைத் தோற்கடித்து, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய பொருட்களை கொள்ளையிடுவான்.
ମାତର୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ତା ତାକେଣ୍ଡାଂ ଆଦିକ୍‌ ସାକ୍ତି ମାନାୟ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାଣ୍ଡ୍ରୁ କିଜ଼ି ଆବାର୍‌ ଆହ୍‌ନାନ୍‌, ହେୱାଡ଼ାଂ ଇମ୍‌ଣି ଆତିୟାର୍‌ ଜପି ତା ବାର୍ସି ମାଚାତ୍‌, ହେୱାନ୍ତି ୱିଜ଼ୁ କିସ୍ତି ଅନାନ୍‌ ଆରେ ତାଦାଙ୍ଗ୍‌ ଚର୍‌ କିଜ଼ିମାନି ଦନ୍‌ସମ୍ପତି ବାଟାକିଜ଼ି ଅନାନ୍‌ ।
23 ௨௩ என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான்.
ଇନେର୍‌ ନା ପାକ୍ୟା ଆକାୟ୍‌, ହେୱାନ୍‌ ନା ବେରିୟା; ଆରେ, ଇନେର୍‌ ନା ଲାହାଙ୍ଗ୍‌ ରୁଣ୍ଡାୟ୍‌ କିଉନ୍‌, ହେୱାନ୍‌ ଜେଡ଼େ କେତେ କିନାନ୍‌ ।”
24 ௨௪ அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் போகும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாற இடம் தேடியும் கிடைக்காமல்: நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
“ବାନ୍ୟା ଜିବୁନ୍‌ ରକାନ୍‌ ମାନାୟ୍‌ତିଂ ହସିହାଚି ପାଚେ ଚିମ୍‌ରା ବାହା ୱିଜ଼ୁ ବୁଲାଆଜ଼ି ଜମ୍‍ନାକା ଡେକ୍‌ନାତ୍‌ ଆରେ ହେଦାଂ ଗାଟାଆୱିତିସ୍‍ ଇନାନ୍‌, ଆନ୍‌ ଇମ୍‌ଣି ଇଞ୍ଜାଙ୍ଗ୍‌ ହସିୱାଜ଼ି ମାଚାଙ୍ଗ୍‌, ଆନ୍‌ ହେ ଇଞ୍ଜ ଲେଉଟା ଆଜ଼ି ହାନାଂ;
25 ௨௫ திரும்பிவரும்போது, அது சுத்தப்படுத்தி ஜோடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு,
ଆରି, ହେଦାଂ ୱାଜ଼ି ହେଦାଂ ନିର୍ମଲ୍‌ ଆରି ହାର୍‍ଦାକା ହୁଡ଼୍‌ନାତ୍‌ ।
26 ௨௬ திரும்பிப்போய், தன்னைவிட பொல்லாத மற்ற ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உள்ளே புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனிதனுடைய முன் நிலைமையை விட அவனுடைய பின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார்.
ହେପାଦ୍‌ନା ହେଦାଂ ହାଲ୍‌ଜି ଜାର୍‌ତାଂ ଆଦିକ୍‌ ବାନ୍ୟା ଆରେ ସାତ୍‌ଗଟା ପୁଦାଂ ରଚେ ତାସି ୱାନାତ୍‌, ଆରି ହେୱାଙ୍ଗ୍‌ ହଣ୍‌ଜି ହେବେ ବାହାକିନିକ୍‌, ଆରେ ହେ ମାନାୟ୍‌ତିଂ ପର୍ତୁମ୍‌ ଦସା ବାଟା ହାରିହାନି ଦସା ଆଦିକ୍‌ ବାନ୍ୟା ଆନାତ୍‌ ।”
27 ௨௭ இயேசு இவைகளைச் சொல்லும்பொழுது, மக்கள் கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகள் என்று சத்தமிட்டுச் சொன்னாள்.
ହେଦେଲ୍‌ ଇ ୱିଜ଼ୁ ବେରଣ୍‌ ଇନି ୱାଡ଼ାଙ୍ଗ୍‍ ମାନାୟାର୍‌ ବିତ୍ରେ ରଞ୍ଜେଲ୍‌ କଗ୍‌ଲେହିମ୍‌ଣା ଗାଜା କାଟ୍‌ତାଂ ଇଚାତ୍‌, ଦନ୍ୟ ହେ ଗରବ୍‍, “ଇନାକା ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜଲମ୍‌ କିତ୍‌ତାତ୍‌ ଆରି ମାୟ୍ ହେବେତାଂ ଉଟାୟ୍‍ ।”
28 ௨௮ அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
ମତର୍‌ ଜିସୁ ଇଚାନ୍‌, “ଆନ୍‌ ଆକାୟ୍‌, ଇମ୍‌ଣାକାର୍‌ ଇସ୍ୱର୍‌ ବେରଣ୍‌ ୱେନାର୍‌ ଆରି ମାନିକିନାର୍‌ ଇଚିସ୍‌, ହେୱାର୍‌ ଦନ୍ୟ ।”
29 ௨௯ மக்கள் கூட்டமாக கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்த வம்சத்தார் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்தவிர வேறு எந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
ବେସିହେନି ମାନାୟ୍‌ ମାନ୍ଦା ମାନ୍ଦା ଆଜ଼ି ଜିସୁ ତାକେ ରୁଣ୍ଡାଆନି ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ଜିସୁ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌, ଇ ନଙ୍ଗ୍‌ନି ଆଣ୍ଡ୍ରାହିମ୍‌ଣାଂ ବାନ୍ୟାନିକାର୍; ଇୱାର୍‌ ଚିନ୍‌ ଡେକ୍‌ନାର୍‌, ମତର୍‌ ଜୁନସ୍‌ତି ଚିନ୍‌ ପିସ୍ତି ଅଲ୍‌ଗା ଇମ୍‌ଣି ଚିନ୍‌ ହେୱାରିଂ ହିୟାଆଉତ୍‌ ।
30 ௩0 யோனா நினிவே பட்டணத்தார்களுக்கு அடையாளமாக இருந்ததுபோல, மனிதகுமாரனும் இந்த வம்சத்திற்கு அடையாளமாக இருப்பார்.
ଇନାକିଦେଂକି ଜୁନସ୍‌ ଇନେସ୍‌ ନିନିବିୟର୍ତି କାଜିଂ ଚିନ୍‌ଲାକେ ଆତାର୍‌, ମାନାୟ୍‌ ମାଜ଼ି ପା ହେ ଲାକେ ଇ ନଙ୍ଗ୍‌ନି ଆଣ୍ଡ୍ରାହିମ୍‌ଣାଂ କାଜିଂ ଆନାତ୍‌ ।
31 ௩௧ தெற்கு தேசத்து ராணி சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லையிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
ତିନିବାଗାଙ୍ଗ୍‌ନି ଦେସ୍‌ନି ରାଣି ବିଚାର୍ଣ୍ଣାତ ଇ ନଙ୍ଗ୍‍ନି ଆଣ୍ଡ୍ରାହିମ୍‌ଣାଂ ମାନାୟାର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ନିନ୍ଦା କିନାତ୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ସଲମନ୍‌ତି ବୁଦିନି କାତା ୱେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ପୁର୍ତିନି ବାହାତାଂ ୱାଜ଼ି ମାଚାତ୍‌; ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ସଲମନ୍‌ତାଂ ଗାଜା ବିସ୍ରେ ଇ ବାହାତ ମାନାତ୍‌ ।
32 ௩௨ யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
ନିନିବିନି ମାନାୟାର୍‌ ବିଚାର୍ଣ୍ଣାତ ଇ ନଙ୍ଗ୍‌ନି ଆଣ୍ଡ୍ରାହିମ୍‌ଣାଂ ଲାହାଙ୍ଗ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ଇ ଜୁଗ୍‌ନି ମାନାୟାର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ହେୱାରିଂ ନିନ୍ଦା କିତାର୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାର୍‌ ଜୁନସ୍‌ତି ସୁଣାୟ୍‌ କିନାକା ମାନ୍‌ବାଦ୍‌ଲାୟ୍‌ କିଜ଼ି ମାଚାର୍‌; ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ଜୁନସ୍‌ତି ଗାଜା ବିସ୍ରେ ଇ ବାହାତ ମାନାତ୍‌ ।
33 ௩௩ ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
“ଇନେର୍‌ ବଇଟା ଆହି କିଜ଼ି ଡ଼ୁକ୍‌ତି ବାହା ଇଲ୍‌ କି ମାଣ୍‌ ତାରେନ୍‌ ଇଟୁର୍‌, ମାତର୍‌ ବଇଟା ଇଟ୍‌ନି ଜପି ଇଟ୍‌ନାର୍‌, ଇନେସ୍‌କି ବିତ୍ରେ ହଣାକାର୍‍ ମାନାୟାର୍‌ ଅଜଡ଼୍‌ ହୁଡ଼୍‌ଦେଂ ଆଡ୍‌ନାର୍‌ ।
34 ௩௪ கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்.
ମି କାଣ୍‌କୁ ଗାଗାଡ଼୍‌ନି ଅଜଡ଼୍‌ । ଏଚେକାଡ଼୍‌ଦ ମି କାଣ୍‌କୁ ଅଣ୍ଡାଙ୍ଗ୍‌ ମାଚିସ୍‌, ହେପାଦ୍‌ନା ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍‌ ପା ଅଜଡ଼୍‌ ଲାକେ ଆନାତ୍‌; ମାତର୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ହେଦାଂ ବାନ୍ୟା ମାନାତ୍‌, ହେପାଦ୍‌ନା ମି ଗାଗାଡ଼୍‌ ପା ମାଜ୍‌ଗା ଆନାତ୍‌ ।
35 ௩௫ எனவே உனக்குள் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாக இரு.
ଲାଗିଂ ଜାଗ୍ରତ୍‌, ଇନେସ୍‌କି ମି ୱାସ୍ତିନି ଅଜଡ଼୍‌ ମାଜ୍‌ଗା ଆଉତ୍‌ ।
36 ௩௬ உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார்.
ଲାଗିଂ ଜଦି ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍‌ ଅଜଡ଼୍‌ ଆଦ୍‌ନାତ୍‌ ଆରେ ହେବେ ଇମ୍‌ଣି ଆଦା ମାଜ୍‌ଗା ମାନ୍‌ଗୁତ୍‌, ତା ଆତିସ୍‌ ଅଜଡ଼୍‌ ଇନେସ୍‌ ବଇଟା ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଅଜଡ଼୍‌ ହିଦ୍‌ନାତ୍‌, ହେ ଲାକେ ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍‌ ଅଜଡ଼୍‌ ଆନାତ୍‌ ।”
37 ௩௭ இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.
ଜିସୁ କାତା ଇନିୱାଡ଼ାଲିଂ ରୱାନ୍‌ ପାରୁସି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ଇଞ୍ଜ ତିନି କାଜିଂ ଗୱାରି କିଜ଼ି କୁକ୍‌ତାନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ଇଞ୍ଜ ହଣ୍‌ଜିପା ଚିଞ୍ଜେଙ୍ଗ୍‌ କୁଚ୍‌ଚାନ୍‌ ।
38 ௩௮ அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான்.
ମତର୍‌ ତିନିହିଙ୍ଗ୍‌ ଆଗେ ହେୱାନ୍‌ ଜେ ପର୍ତୁମ୍‌ ନୁସ୍‌ୱାଦାଂ ମାଚାନ୍‌, ଇଦାଂ ହୁଡ଼୍‌ଜି ହେ ପାରୁସି କାବା ଆତାନ୍‌ ।
39 ௩௯ கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
ହେବେ ମାପ୍ରୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ପାରୁସିକାଦେର୍‌ ହିନା ଗିନା ଆରେ ତାଡ଼ିୟାନି ବାର୍‌ ବାଗାଙ୍ଗ୍‌ ସକଟ୍‌ କିଜ଼ି ମାନାଟ୍‌, ମତର୍‌ ମି ବିତ୍ରେ ନାଡ଼ାଇ କାମାୟ୍‌ ଆରି ପାଟ୍‌କାର୍‌ ବିତ୍ରେ ବାର୍ତି ।
40 ௪0 மதிகெட்டவர்களே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உள்புறத்தையும் உண்டாக்கவில்லையா?
ଏ ନିର୍‌ବୁଦିୟାର୍‌, ଇନେର୍‌ ବାର୍ତ ରଚ୍‌ଚାନ୍‌, ହେୱାନ୍‌ ଜେ ବିତ୍ରେ ପା ରଚ୍‍ୱାତାନ୍‌?
41 ௪௧ உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குள் எல்லாம் சுத்தமாக இருக்கும்.
ଏପେଙ୍ଗ୍‌ ଲବ୍‌ତାଂ ଇନାକା ରୁଣ୍ଡାୟ୍‌ କିନାଦେରା ହେଦାଂ ଅର୍କିତ୍‌ତାରିଂ ଦାନ୍‌ କିୟାଟ୍‌ ଲାଗିଂ ପୁରାପୁରି ସକଟ୍‌ ଆନାଦେର୍‌ ।”
42 ௪௨ பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.
“ହାୟ୍‌ ଦାଣ୍ଡ୍‌ନି ବାହା ପାରୁସିର୍‌, ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ପଦିନା, ଆରୁଦ ଆରି ୱିଜ଼ୁ ଲାକେ କୁଚାନି ଦାନ୍‌ ହିଜ଼ି ମାନାଟ୍‌, ଆରେ ନ୍ୟାୟ୍‌ ବିଚାର୍‌ ଆରି ଇସ୍ୱର୍‌ ଜିଉନନିତ ଏଲା କିନାଦେରା; ମତର୍‌ ଇ ୱିଜ଼ୁ ମାନିକିନାସ୍ ଆରି ବିନେ ୱିଜ଼ୁ ଏଲା ଆୱାକା ମାନାତ୍‌ ।”
43 ௪௩ பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைகளில் வணக்கங்களையும் விரும்புகிறீர்கள்.
“ହାୟ୍‌ ଦାଣ୍ଡ୍‌ନି ବାହା ପାରୁସିର୍‌, ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ କୁଟୁମ୍‌ ଇଞ୍ଜ ମୁଡ଼୍‌ଦି ବାହା ଆରେ ଆଟ୍‌ ବାଜାର୍‌ତାକେ ଜୁୱାର୍‌ ପାୟା ଆଦେଂ ଜିଉନନାଦେର୍‌ ।
44 ௪௪ வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது.
ହାୟ୍‌, ଡାଣ୍ଡ୍‌ନି, ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ୱିତି ଦୁଗେର୍‌ ଲାକେ; ତା ଜପି ହାନାକାଦେରେ ମାନାୟ୍‌ ହେଦାଂ ଦୁଗେର୍‌ ଇଞ୍ଜି ପୁନୁର୍‌ ।”
45 ௪௫ அப்பொழுது நியாயப்பண்டிதர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் அவமதிக்கிறீர் என்றான்.
ଇବେ ମସାତି ବିଦି ସାସ୍ତିର୍‌ ବିତ୍ରେ ରକାନ୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏ ଗୁରୁ, ଇଦାଂ ଇଞ୍ଜି ଏନ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପା ଲାଜୁ କିଦ୍‌ନାୟା ।”
46 ௪௬ அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
ଜିସୁ ଇଚାନ୍‌, ହାୟ୍‌, “ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ ଜେ ଏପେଙ୍ଗ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ପା ଦାଣ୍ଡ୍‌ନି ବାହା, ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ମାନାୟାର୍‌ ଜପି ବଜ୍‌ ଲାଦିକିନାଦେରା ଆରି ଜାର୍‌ ର ୱାଚ୍‌କାତାଂ ହିଜ଼ି ହେଦାଂ ଡୁଜ଼ି ହାଙ୍ଗ୍‌କିଦୁୟା ।
47 ௪௭ உங்களுக்கு ஐயோ, உங்களுடைய முற்பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
ହାୟ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ଡାଣ୍ଡ୍‌ନି ବାହା ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାନ୍ତି ଦୁଗେର୍‌ ରଚ୍‌ଚି ମାନାଟ୍‌, ଇମ୍‌ଣାକାରିଂ ଦାଦିର୍‌ଆକର୍ ହେୱାରିଂ ଅଜ଼ି ମାଚାର୍‌ ।
48 ௪௮ ஆகவே, உங்களுடைய முற்பிதாக்களுடைய செயல்களுக்கு நீங்களும் உடன்பட்டவர்கள் என்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்களுடைய முற்பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
ଲାଗିଂ, ମି ଦାଦିର୍‌ ଆକର୍‌ତି କାମାୟ୍‌ ବିସ୍ରେ ଏପେଙ୍ଗ୍‌ ସାକି ଆନାଦେରା ଆରି ବାଚି କିନାଦେରା; ଇନାକିଦେଂକି ହେୱାର୍‌ ହିନା ହେୱେରିଂ ଅସ୍ତି ମାଚାର୍‌, ମତର୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ହେୱାର୍‌ତି ଦୁଗେର୍‌ବାହା ରଚ୍‌ଚି କିଜ଼ି ମାନାଟ୍‌ ।”
49 ௪௯ ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
ଲାଗିଂ ଇସ୍ୱର୍‌ ପା ଜାର୍‌ ବୁଦିତାଙ୍ଗ୍‍ ୱେଚ୍‍ତାନ୍‍ନା, ଆସେଙ୍ଗ୍‌ ହେୱାର୍‌ ତାକେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ ଆରି ପକ୍ୟାତାକାର୍‌ରିଂ; ପକ୍‍ନାପ୍‍ ହେୱାର୍‌ ବିତ୍ରେ ଇନେ ଇନେରିଂ ହେୱାର୍‌ ଟ୍ରାକ୍‌ନାର୍‌ ଆରି ଇନେ ଇନେରିଂ ନିନ୍ଦା କିନାର୍‌,
50 ௫0 ஆபேலின் இரத்தத்திலிருந்து பலிபீடத்திற்கும் தேவ ஆலயத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றத்திலிருந்து சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்த வம்சத்தாரிடம் கேட்கப்படுவதற்காக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
ଇନେସ୍‌ ହେ ବଲ୍‌ନି ନେତେର୍‌ତାଂ, ଇମ୍‌ଣି ଜିକିରିୟ ଗାର୍‌ଣି ଆରି ମନ୍ଦିର୍‌ନି ପୁଇପୁୟା ବାହାନି ମାଦି ହାତାନ୍‌, ହେୱାନ୍ତି ନେତେର୍‌ ପାତେକ୍‌ ପୁର୍ତିନି ଆରମ୍‌ତାଂ ଏଚେକ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ତି ନେତେର୍‌ ହାଚାତ୍‌ନା,
51 ௫௧ நிச்சயமாகவே இந்த வம்சத்தாரிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ହେବଲ୍‌ ଟୁଟିତାଂ ଆରମ୍‌ କିଜ଼ି ଜିକରିୟ ପାତେକ୍‌, ଇମ୍‌ଣାକାନିଂ ଗାର୍‌ଣି ଆରି ପୁଇପୁୟା ବାହା ବିତ୍ରେ ଟୁଣ୍‌ଚି ମାଚାର୍‌ । ଆଁ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଇ ଜୁଗ୍‌ନି ମାନାୟାର୍‌ ହେୱାନ୍‌ ୱିଜ଼ାର୍‌ତି କାଜିଂ ନେତେର୍‌ନି ଦାଣ୍ଡ୍‌ ବଗି କିନାନ୍‌ ।
52 ௫௨ நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
“ହାୟ୍‌, ଡାଣ୍ଡ୍‌ନି ବାହା ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌, ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ବୁଦିନି କୁଚିକାଡି ଆରାୟ୍‌ କିନାଦେର୍‌; ଏପେଙ୍ଗ୍‌ ନିଜେ ନିଜେ ହଣ୍‌ୱାତାଦେର୍‌, ଆରି ହଣି କାଜିଂ ମାନ୍‍କିତି ମାନାୟାରିଂ କସ୍ଟ ହିତାଦେର୍‌ ।”
53 ௫௩ இவைகளை இயேசு அவர்களுக்குச் சொல்லும்போது, வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டுவதற்காக, அவர் வார்த்தைகளில் ஏதாவது பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிசெய்து அவரை மிகவும் நெருக்கவும்,
ଆରି, ଜିସୁ ହେବେତାଂ ହସି ହାଚି ପାଚେ ସାସ୍ତିର୍‌ ଆରି ପାରୁସିର୍‌ ବେସି ବେରୁଆଜ଼ି,
54 ௫௪ அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள்.
ତା ୱେଇଦାଂ ଇନା ବେଣ୍‌ ଆସ୍ତେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଡ଼ୁକା ଉଚ୍‍ଚି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଆଦିକ୍‌ ବିସ୍ରେ ପର୍‌ସନ୍‌ ୱେନ୍‌ବେଦେଂ‍ ଲଗାତାନ୍‍ ।

< லூக்கா 11 >