< லூக்கா 10 >

1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
Are xbꞌantaj we jastaq riꞌ, ri Jesús xuꞌchaꞌ oxkꞌal lajuj utijoxelabꞌ, xuꞌtaq bꞌik pa e kakabꞌ pa taq ri tinimit ri xraj xebꞌe wi.
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
Kꞌa te riꞌ xubꞌij: Man e kꞌo ta kꞌi ajchakibꞌ chuyakik ronojel ri unimal ri xwachinik. Chita kꞌu che ri Ajawxel kuꞌtaq loq ajchakibꞌ pa ri uchak.
3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
¡Jix bꞌaꞌ! Qas chiwila na rumal kixintaq bꞌik jetaq ri chij chikixoꞌl kayoꞌt.
4 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
Mikꞌam bꞌik yakbꞌal irajil, xuqujeꞌ ixajabꞌ, man kixtakꞌiꞌ ta pa ri bꞌe chuyaꞌik rutzil uwach japachinaq.
5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
Are kixok pa jun ja, nabꞌe chibꞌij: “Jaꞌmaril pa we ja kꞌolibꞌal ri.”
6 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
We kꞌu kꞌo jun winaq taqal ri jaꞌmaril che pa ri ja kꞌolibꞌal, kayaꞌtaj riꞌ ri tewechibꞌal che. We maj, katzalij riꞌ ri tewechibꞌal iwukꞌ ix.
7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
Chixkanaj kanoq pa ri ja riꞌ, chitijaꞌ xuqujeꞌ chiqumuj ri kakiya chiꞌwe, rumal cher ri ajchak taqal che chi katojik. Man xaq ta kixikꞌow pa jaljoj taq ja.
8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
Are kixok pa jun tinimit, ri kixkꞌamawaꞌx wi, chitijaꞌ ri kakiya chiꞌwe.
9 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
Chiꞌkunaj ri yawabꞌibꞌ ri e kꞌo chilaꞌ, chibꞌij chike: “Ri ajawarem rech ri Dios xnaqajir loq.”
10 ௧0 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
Are kꞌu man kixkꞌamawaꞌx taj pa jun tinimit, jix chibꞌij pa ri kꞌayibꞌal:
11 ௧௧ எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
“Ri ulew ri xnakꞌiꞌ bꞌik pa qaqan, kaqatota kanoq, kꞌutbꞌal rech chi man xujikꞌamawaꞌj taj, naꞌtaj kꞌu chiꞌwe chi xnaqajir loq ri ajawarem rech ri Dios.”
12 ௧௨ அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Kinbꞌij kꞌu chiꞌwe che ri qꞌij riꞌ, kꞌo na ri kꞌaxkꞌolal ri kape pa kiwiꞌ we tinimit cho ri xpe puꞌwiꞌ ri tinimit Sodoma ojer.
13 ௧௩ கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
¡Kꞌax iwe winaq ri kixel pa ri tinimit Corazín! ¡Kꞌax iwe winaq ri ix kꞌo pa ri tinimit Betsaida! We ta xbꞌan ri mayijabꞌal taq jastaq ri xbꞌan iwukꞌ pa ri tinimit Tiro xuqujeꞌ Sidón, rukꞌ oqꞌej ta waꞌ xkikꞌex kikꞌuꞌx ri winaq ri keꞌl chilaꞌ.
14 ௧௪ நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
Rumal kꞌu waꞌ, katan wi ri kꞌaxkꞌolal ri kape na pa kiwiꞌ ri tinimit Tiro xuqujeꞌ Sidón cho ri kꞌaxkꞌolal ri kape na pa iwiꞌ ix.
15 ௧௫ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
Xuqujeꞌ ri ix winaq ri ix kꞌo pa ri tinimit Capernaúm, ¿teꞌq pa ikꞌuꞌx kixpaqabꞌax bꞌik pa ri kaj? Man je ta kꞌu riꞌ, kꞌa pa ri nimalaj jul ri maj ukꞌisik kixkꞌyaq wi bꞌik. (Hadēs g86)
16 ௧௬ சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
Xapachin ri kixutatabꞌej, in riꞌ kinutatabꞌej, xapachin ri kaketzelaj iwach, in kinretzelaj. Xapachin kꞌu ri kinretzelaj in, karetzelaj ri xintaqow loq.
17 ௧௭ பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
Rukꞌ kiꞌkotemal xetzalij loq ri oxkꞌal lajuj tijoxelabꞌ xkibꞌij: Ajawxel, pune are ri itzel taq uxlabꞌal kakimochꞌ kibꞌ pa ri bꞌiꞌ la.
18 ௧௮ அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
Ri Jesús xubꞌij: In xinwil ri Itzel, je ri xubꞌan jun kayapaꞌ xtzaq loq cho ri kaj.
19 ௧௯ இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
Jeꞌ, nuyoꞌm kwinem chiꞌwe kiꞌtakꞌaleꞌj kumatz xuqujeꞌ escorpión, xuqujeꞌ kichꞌek ri ukwinem ri kꞌulel, maj kabꞌanow kꞌax chiꞌwe.
20 ௨0 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
Pune jeriꞌ, man kikiꞌkotebꞌej taj are kakimochꞌ kibꞌ ri itzel taq uxlabꞌal chiꞌwach, xane are chikiꞌkotebꞌej chi tzꞌibꞌatal ri ibꞌiꞌ pa ri kaj.
21 ௨௧ அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
Qas pa ri qꞌotaj riꞌ, ri Jesús xkiꞌkot pa ri Uxlabꞌixel, xubꞌij: Tataxel, ajawxel re ri kaj xuqujeꞌ ri ulew, xawaj la we jastaq riꞌ chikiwach ri achyabꞌ ri kꞌo ketaꞌmabꞌal, ri kꞌo kinoꞌjibꞌal, xkꞌut la chikiwach ri e winaq ri je ri e kꞌo nitzꞌ taq akꞌalabꞌ. Are waꞌ ri xrajawaj kuꞌx la, jeꞌ Tataxel.
22 ௨௨ சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
Ri nuTat xujach pa nuqꞌabꞌ ronojel ri jastaq ri kꞌolik. Maj jun etaꞌmaninaq uwach ri alkꞌwaꞌlaxel, xwi ri tataxel. Maj xuqujeꞌ jun retaꞌm uwach ri Tataxel, xaq xwi ri alkꞌwaꞌlaxel, xuqujeꞌ ri winaq ri yaꞌtal bꞌe che rumal ri alkꞌwaꞌlaxel.
23 ௨௩ பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
Ri Jesús xtzalqꞌomij kukꞌ ri utijoxelabꞌ, xubꞌij: Utz ke ri winaq ri kakil ri kiwil ix.
24 ௨௪ அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Kinbꞌij chiꞌwe e kꞌo qꞌalajisal taq utzij ri Dios xuqujeꞌ e taqanelabꞌ ojer, xkaj kil ronojel we kiwil ix kamik, man xkil ta kꞌut, xkaj xuqujeꞌ xkita we kita ix kamik, man xekwin ta kꞌu chutatabꞌexik.
25 ௨௫ அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
Xopan kꞌu jun nimalaj etaꞌmanel rech ri taqanik are karaj kukoj jun kꞌaꞌmabꞌal che ri Jesús, xubꞌij che: ¿Ajtij, jas rajawaxik kinbꞌano kinwechabꞌej ri jun alik kꞌaslemal? (aiōnios g166)
26 ௨௬ அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
Ri Jesús kꞌut xubꞌij che: ¿Jas kabꞌan chusolik rij ri tzꞌibꞌatal pa ri taqanik?
27 ௨௭ அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
Ri achi etaꞌmanel rech ri taqanik xubꞌij: Chaloqꞌaj ri aDios rukꞌ ronojel awanimaꞌ, rukꞌ ronojel achuqꞌabꞌ, rukꞌ ronojel achomanik. Xuqujeꞌ chaloqꞌaj ri ajil tzꞌaqat jetaq ri kabꞌan chuloqꞌaxik awibꞌ at.
28 ௨௮ அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
Ri Jesús xubꞌij: Utz xabꞌan che ubꞌixik, we kabꞌan ri xabꞌij, katkꞌasiꞌ na.
29 ௨௯ அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
Are kꞌu karaj ri achi kuqꞌalajisaj ri rutzilal, xuta kꞌu che ri Jesús: ¿Jachin kꞌu riꞌ ri nukꞌul ja?
30 ௩0 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
Ri Jesús xubꞌij: Upetik jun achi pa Jerusalén, xulanem bꞌik rij pa ri tinimit Jericó. Xqaj kꞌu pa kiqꞌabꞌ eleqꞌomabꞌ, xkesaj kan ri ratzꞌyaq, xkichꞌay kanoq, jubꞌiqꞌ karaj kakamik are xkitzaq kanoq.
31 ௩௧ அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
Bꞌenaq kꞌu pa ri bꞌe riꞌ jun chꞌawenel cho ri Dios pa kiwiꞌ ri winaq. Are xrilo, xujelechꞌuj ubꞌe, kꞌa te riꞌ xusukꞌu, xeꞌek.
32 ௩௨ அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
Xikꞌow xuqujeꞌ jun rijaꞌl ri Leví, are xril we achi, xujelechꞌuj xuqujeꞌ ri ubꞌe, xikꞌow bꞌik.
33 ௩௩ பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
Bꞌenaq kꞌu jun achi aj Samaria pa ri bꞌe riꞌ. Are xril ri achi, xel ukꞌuꞌx che.
34 ௩௪ அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
Xqebꞌ rukꞌ, xukunaj ri sokotajik rukꞌ vino xuqujeꞌ aceite rech olivo, xupiso, kꞌa te riꞌ xuya bꞌik puꞌwiꞌ ri ubꞌur, xukꞌam bꞌik pa jun ja chilaꞌ xuchajij wi.
35 ௩௫ மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
Chukabꞌ qꞌij xuya kan kebꞌ saq taq pwaq che ri ajchoqꞌe ri ja warabꞌal, xubꞌij kan che: “Chajij la we achi riꞌ che la. We kꞌu kꞌo kusach na puꞌwiꞌ le xinya kan che la, kintoj che la are kintzalij loq.”
36 ௩௬ இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
¿Jachin chike we achyabꞌ riꞌ kabꞌij at chi xukꞌutu chi qas ukꞌulja we achi we xqaj pa kiqꞌabꞌ we eleqꞌomabꞌ?
37 ௩௭ அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
Are ri achi ri xel ukꞌuꞌx che, xcha ri etaꞌmanel rech ri taqanik. Xubꞌij kꞌu ri Jesús che: Jat, jaꞌbꞌana jas ri xubꞌan we achi riꞌ.
38 ௩௮ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
Are bꞌenaq ri Jesús pa ri bꞌe rachiꞌl ri utijoxelabꞌ xiꞌkꞌow bꞌik pa ri jun leꞌaj, kꞌo kꞌu jun ixoq ubꞌiꞌ Marta, xukꞌamawaꞌj ri Jesús cho ri rachoch.
39 ௩௯ அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
Kꞌo kꞌu jun rachalal ubꞌiꞌ María xpetik, xultꞌuyul rukꞌ ri Jesús, xok chutatabꞌej ri tajin kubꞌij ri Jesús.
40 ௪0 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
Are kꞌu ri Marta sibꞌalaj kel chꞌuꞌj rumal ronojel ri tajin kubꞌano. Xqebꞌ kꞌu rukꞌ ri Jesús xubꞌij che: Ajawxel, ¿la man kil la inuyoꞌm kan nutukel le wachalal cho le patanijik? Bꞌij la che kinutoꞌo.
41 ௪௧ இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
Ri Jesús kꞌut xubꞌij che: Marta, Marta, sibꞌalaj kꞌaxirinaq awanimaꞌ rumal ri ukꞌiyal ri jastaq tajin kabꞌano.
42 ௪௨ தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
Xa kꞌu jun jastaq ri qas sibꞌalaj rajawaxik ubꞌanik. Are kꞌu waꞌ xuchaꞌ ri María, maj kꞌu jun kesan che.

< லூக்கா 10 >