< நியாயாதிபதிகள் 11 >

1 கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
Иефта, Галаадитул, ера ун ом витяз. Ел ера фиул уней курве. Галаад нэскусе пе Иефта.
2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
Неваста луй Галаад й-а нэскут фий, каре, фэкынду-се марь, ау изгонит пе Иефта ши й-ау зис: „Ту ну вей авя моштенире ын каса татэлуй ностру, кэч ешть фиул уней алте фемей.”
3 அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
Ши Иефта а фуӂит де ла фраций луй ши а локуит ын цара Тоб. Ниште оамень фэрэ кэпэтый с-ау стрынс ла Иефта ши фэчяу плимбэрь ку ел.
4 சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
Дупэ кытва тимп, фиий луй Амон ау порнит ку рэзбой ымпотрива луй Исраел.
5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
Ши пе кынд фиий луй Амон фэчяу рэзбой ку Исраел, бэтрыний Галаадулуй с-ау дус сэ кауте пе Иефта дин цара Тоб.
6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
Ей ау зис луй Иефта: „Вино де фий кэпетения ноастрэ ши сэ батем пе фиий луй Амон.”
7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
Иефта а рэспунс бэтрынилор Галаадулуй: „Ну м-аць урыт вой ши ну м-аць изгонит вой дин каса татэлуй меу? Пентру че вениць ла мине акум, кынд сунтець ын стрымтораре?”
8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
Бэтрыний Галаадулуй ау зис луй Иефта: „Не ынтоарчем ла тине акум ка сэ мерӂь ку ной, сэ баць пе фиий луй Амон ши сэ фий кэпетения ноастрэ, кэпетения тутурор локуиторилор Галаадулуй.”
9 அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
Иефта а рэспунс бэтрынилор Галаадулуй: „Дакэ мэ адучець ынапой ка сэ бат пе фиий луй Амон ши дакэ Домнул ый ва да ынаинтя мя, вой фи еу оаре кэпетения воастрэ?”
10 ௧0 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
Бэтрыний Галаадулуй ау зис луй Иефта: „Домнул сэ не аудэ ши сэ жудече дакэ ну вом фаче че спуй.”
11 ௧௧ அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான்.
Ши Иефта а порнит ку бэтрыний Галаадулуй. Попорул л-а пус ын фрунтя луй ши л-а ашезат кэпетение, ши Иефта а спус дин ноу ынаинтя Домнулуй, ла Мицпа, тоате кувинтеле пе каре ле ростисе.
12 ௧௨ பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
Иефта а тримис соль ымпэратулуй фиилор луй Амон ка сэ-й спунэ: „Че ай ку мине де вий ымпотрива мя сэ фачь рэзбой ымпотрива цэрий меле?”
13 ௧௩ அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
Ымпэратул фиилор луй Амон а рэспунс солилор луй Иефта: „Пентру кэ Исраел, кынд с-а суит дин Еӂипт, а пус мына пе цара мя, де ла Арнон пынэ ла Иабок ши Йордан. Дэ-мь-о ынапой акум де бунэвое.”
14 ௧௪ யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
Иефта а тримис ярэшь соль ымпэратулуй фиилор луй Амон
15 ௧௫ யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
ка сэ-й спунэ: „Аша ворбеште Иефта: ‘Исраел н-а пус мына пе цара Моабулуй, нич пе цара фиилор луй Амон.
16 ௧௬ இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
Кэч, кынд с-а суит Исраел дин Еӂипт, а мерс ын пустиу пынэ ла Маря Рошие ши а ажунс ла Кадес.
17 ௧௭ இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
Атунч, Исраел а тримис соль ымпэратулуй Едомулуй ка сэ-й спунэ: «Ласэ-мэ сэ трек прин цара та.» Дар ымпэратул Едомулуй н-а воит. А тримис ши ла ымпэратул Моабулуй, ши нич ел н-а врут. Ши Исраел а рэмас ла Кадес.
18 ௧௮ பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
Апой а мерс прин пустиу, а околит цара Едомулуй ши цара Моабулуй ши а венит ла рэсэритул цэрий Моабулуй; ау тэбэрыт динколо де Арнон, фэрэ сэ интре пе цинутул Моабулуй, кэч Арнонул ера хотарул Моабулуй.
19 ௧௯ அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
Исраел а тримис соль луй Сихон, ымпэратул аморицилор, ымпэратул Хесбонулуй. Ши Исраел й-а зис: «Ласэ-мэ сэ трек прин цара та пынэ ла локул спре каре мерӂем.»
20 ௨0 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
Дар Сихон н-а авут ынкредере ын Исраел, ка сэ-л ласе сэ трякэ пе цинутул луй, шь-а стрынс тот попорул, а тэбэрыт ла Иахат ши а луптат ымпотрива луй Исраел.
21 ௨௧ அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
Домнул Думнезеул луй Исраел а дат пе Сихон ши пе тот попорул луй ын мыниле луй Исраел, каре й-а бэтут. Исраел а пус мына пе тоатэ цара аморицилор каре ерау ашезаць ын цара ачаста.
22 ௨௨ யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
Ау пус мына пе тот цинутул аморицилор, де ла Арнон пынэ ла Иабок ши де ла пустиу пынэ ла Йордан.
23 ௨௩ இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
Ши акум, кынд Домнул Думнезеул луй Исраел а изгонит пе амориць динаинтя попорулуй Сэу Исраел, ту сэ ле стэпынешть цара?
24 ௨௪ உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
Оаре че-ць дэ ын стэпынире думнезеул тэу, Кемош, ну вей стэпыни? Ши тот че не-а дат ын стэпынире Домнул Думнезеул ностру, ынаинтя ноастрэ, ной сэ ну стэпыним?
25 ௨௫ மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
Ешть ту май бун декыт Балак, фиул луй Ципор, ымпэратул Моабулуй? С-а чертат ел ку Исраел сау а фэкут ел рэзбой ымпотрива луй?
26 ௨௬ இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
Ятэ кэ сунт трей суте де ань де кынд локуеште Исраел ла Хесбон ши ын сателе дин журул луй, ла Ароер ши ын сателе дин журул луй ши ын тоате четэциле каре сунт пе малул Арнонулуй. Пентру че ну и ле-аць луат ын тот тимпул ачеста?
27 ௨௭ நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Еу ну те-ам супэрат делок, ши рэу те-ай пуртат ку мине, фэкынду-мь рэзбой. Домнул сэ жудече лукрул ачеста. Ел сэ фие астэзь жудекэтор ынтре фиий луй Исраел ши фиий луй Амон.’”
28 ௨௮ ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
Ымпэратул фиилор луй Амон н-а аскултат кувинтеле пе каре а тримис Иефта сэ и ле спунэ.
29 ௨௯ அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
Духул Домнулуй а венит песте Иефта. Иефта а стрэбэтут Галаадул ши Манасе; а трекут ла Мицпе, ын Галаад, ши дин Мицпе, дин Галаад, а порнит ымпотрива фиилор луй Амон.
30 ௩0 அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
Иефта а фэкут о журуинцэ Домнулуй ши а зис: „Дакэ вей да ын мыниле меле пе фиий луй Амон,
31 ௩௧ நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
орьчине ва еши пе порциле касей меле ынаинтя мя, ла ынтоарчеря мя феричитэ де ла фиий луй Амон, ва фи ынкинат Домнулуй ши-л вой адуче ка ардере-де-тот.”
32 ௩௨ யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Иефта а порнит ымпотрива фиилор луй Амон ши Домнул й-а дат ын мыниле луй.
33 ௩௩ அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
Ле-а причинуит о фоарте маре ынфрынӂере, де ла Ароер пынэ спре Минит, лок каре куприндя доуэзечь де четэць, ши пынэ ла Абел-Керамим. Ши фиий луй Амон ау фост смериць ынаинтя копиилор луй Исраел.
34 ௩௪ யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
Иефта с-а ынторс акасэ ла Мицпа. Ши ятэ кэ фийкэ-са й-а ешит ынаинте ку тимпане ши жокурь. Еа ера сингурул луй копил; н-авя фий ши нич алтэ фатэ.
35 ௩௫ அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
Кум а вэзут-о, ел шь-а рупт хайнеле ши а зис: „Ах, фата мя, адынк мэ ловешть ши мэ тулбурь! Ам фэкут о журуинцэ Домнулуй ши н-о пот ынтоарче.”
36 ௩௬ அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
Еа й-а зис: „Татэ, ай фэкут о журуинцэ Домнулуй, фэ-мь потривит ку чея че ць-а ешит дин гурэ, акум, кынд Домнул те-а рэзбунат пе врэжмаший тэй, пе фиий луй Амон.”
37 ௩௭ பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
Ши еа а зис татэлуй сэу: „Атыт ынгэдуе-мь: ласэ-мэ слободэ доуэ лунь, ка сэ мэ дук сэ мэ кобор ын мунць ши сэ-мь плынг фечория ку товарэшеле меле.”
38 ௩௮ அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
Ел а рэспунс: „Ду-те!” Ши а лэсат-о слободэ доуэ лунь. Еа с-а дус ку товарэшеле ей ши шь-а плынс фечория пе мунць.
39 ௩௯ இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.
Дупэ челе доуэ лунь, с-а ынторс ла татэл ей ши ел а ымплинит ку еа журуинца пе каре о фэкусе. Еа ну куноскусе ымпреунаря ку бэрбат. Де атунч с-а фэкут ын Исраел обичеюл
40 ௪0 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
кэ, ын тоць аний, фетеле луй Исраел се дук сэ прэзнуяскэ пе фийка луй Иефта, Галаадитул, патру зиле пе ан.

< நியாயாதிபதிகள் 11 >