< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
యీశుఖ్రీష్టస్య దాసో యాకూబో భ్రాతా యిహూదాస్తాతేనేశ్వరేణ పవిత్రీకృతాన్ యీశుఖ్రీష్టేన రక్షితాంశ్చాహూతాన్ లోకాన్ ప్రతి పత్రం లిఖతి|
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
కృపా శాన్తిః ప్రేమ చ బాహుల్యరూపేణ యుష్మాస్వధితిష్ఠతు|
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
హే ప్రియాః, సాధారణపరిత్రాణమధి యుష్మాన్ ప్రతి లేఖితుం మమ బహుయత్నే జాతే పూర్వ్వకాలే పవిత్రలోకేషు సమర్పితో యో ధర్మ్మస్తదర్థం యూయం ప్రాణవ్యయేనాపి సచేష్టా భవతేతి వినయార్థం యుష్మాన్ ప్రతి పత్రలేఖనమావశ్యకమ్ అమన్యే|
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
యస్మాద్ ఏతద్రూపదణ్డప్రాప్తయే పూర్వ్వం లిఖితాః కేచిజ్జనా అస్మాన్ ఉపసృప్తవన్తః, తే ఽధార్మ్మికలోకా అస్మాకమ్ ఈశ్వరస్యానుగ్రహం ధ్వజీకృత్య లమ్పటతామ్ ఆచరన్తి, అద్వితీయో ఽధిపతి ర్యో ఽస్మాకం ప్రభు ర్యీశుఖ్రీష్టస్తం నాఙ్గీకుర్వ్వన్తి|
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
తస్మాద్ యూయం పురా యద్ అవగతాస్తత్ పున ర్యుష్మాన్ స్మారయితుమ్ ఇచ్ఛామి, ఫలతః ప్రభురేకకృత్వః స్వప్రజా మిసరదేశాద్ ఉదధార యత్ తతః పరమ్ అవిశ్వాసినో వ్యనాశయత్|
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
యే చ స్వర్గదూతాః స్వీయకర్తృత్వపదే న స్థిత్వా స్వవాసస్థానం పరిత్యక్తవన్తస్తాన్ స మహాదినస్య విచారార్థమ్ అన్ధకారమయే ఽధఃస్థానే సదాస్థాయిభి ర్బన్ధనైరబధ్నాత్| (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
అపరం సిదోమమ్ అమోరా తన్నికటస్థనగరాణి చైతేషాం నివాసినస్తత్సమరూపం వ్యభిచారం కృతవన్తో విషమమైథునస్య చేష్టయా విపథం గతవన్తశ్చ తస్మాత్ తాన్యపి దృష్టాన్తస్వరూపాణి భూత్వా సదాతనవహ్నినా దణ్డం భుఞ్జతే| (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
తథైవేమే స్వప్నాచారిణోఽపి స్వశరీరాణి కలఙ్కయన్తి రాజాధీనతాం న స్వీకుర్వ్వన్త్యుచ్చపదస్థాన్ నిన్దన్తి చ|
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
కిన్తు ప్రధానదివ్యదూతో మీఖాయేలో యదా మూససో దేహే శయతానేన వివదమానః సమభాషత తదా తిస్మన్ నిన్దారూపం దణ్డం సమర్పయితుం సాహసం న కృత్వాకథయత్ ప్రభుస్త్వాం భర్త్సయతాం|
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
కిన్త్విమే యన్న బుధ్యన్తే తన్నిన్దన్తి యచ్చ నిర్బ్బోధపశవ ఇవేన్ద్రియైరవగచ్ఛన్తి తేన నశ్యన్తి|
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
తాన్ ధిక్, తే కాబిలో మార్గే చరన్తి పారితోషికస్యాశాతో బిలియమో భ్రాన్తిమనుధావన్తి కోరహస్య దుర్మ్ముఖత్వేన వినశ్యన్తి చ|
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
యుష్మాకం ప్రేమభోజ్యేషు తే విఘ్నజనకా భవన్తి, ఆత్మమ్భరయశ్చ భూత్వా నిర్లజ్జయా యుష్మాభిః సార్ద్ధం భుఞ్జతే| తే వాయుభిశ్చాలితా నిస్తోయమేఘా హేమన్తకాలికా నిష్ఫలా ద్వి ర్మృతా ఉన్మూలితా వృక్షాః,
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
స్వకీయలజ్జాఫేణోద్వమకాః ప్రచణ్డాః సాముద్రతరఙ్గాః సదాకాలం యావత్ ఘోరతిమిరభాగీని భ్రమణకారీణి నక్షత్రాణి చ భవన్తి| (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
ఆదమతః సప్తమః పురుషో యో హనోకః స తానుద్దిశ్య భవిష్యద్వాక్యమిదం కథితవాన్, యథా, పశ్య స్వకీయపుణ్యానామ్ అయుతై ర్వేష్టితః ప్రభుః|
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
సర్వ్వాన్ ప్రతి విచారాజ్ఞాసాధనాయాగమిష్యతి| తదా చాధార్మ్మికాః సర్వ్వే జాతా యైరపరాధినః| విధర్మ్మకర్మ్మణాం తేషాం సర్వ్వేషామేవ కారణాత్| తథా తద్వైపరీత్యేనాప్యధర్మ్మాచారిపాపినాం| ఉక్తకఠోరవాక్యానాం సర్వ్వేషామపి కారణాత్| పరమేశేన దోషిత్వం తేషాం ప్రకాశయిష్యతే||
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
తే వాక్కలహకారిణః స్వభాగ్యనిన్దకాః స్వేచ్ఛాచారిణో దర్పవాదిముఖవిశిష్టా లాభార్థం మనుష్యస్తావకాశ్చ సన్తి|
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
కిన్తు హే ప్రియతమాః, అస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య ప్రేరితై ర్యద్ వాక్యం పూర్వ్వం యుష్మభ్యం కథితం తత్ స్మరత,
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
ఫలతః శేషసమయే స్వేచ్ఛాతో ఽధర్మ్మాచారిణో నిన్దకా ఉపస్థాస్యన్తీతి|
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
ఏతే లోకాః స్వాన్ పృథక్ కుర్వ్వన్తః సాంసారికా ఆత్మహీనాశ్చ సన్తి|
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
కిన్తు హే ప్రియతమాః, యూయం స్వేషామ్ అతిపవిత్రవిశ్వాసే నిచీయమానాః పవిత్రేణాత్మనా ప్రార్థనాం కుర్వ్వన్త
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ఈశ్వరస్య ప్రేమ్నా స్వాన్ రక్షత, అనన్తజీవనాయ చాస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య కృపాం ప్రతీక్షధ్వం| (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
అపరం యూయం వివిచ్య కాంశ్చిద్ అనుకమ్పధ్వం
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
కాంశ్చిద్ అగ్నిత ఉద్ధృత్య భయం ప్రదర్శ్య రక్షత, శారీరికభావేన కలఙ్కితం వస్త్రమపి ఋతీయధ్వం|
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
అపరఞ్చ యుష్మాన్ స్ఖలనాద్ రక్షితుమ్ ఉల్లాసేన స్వీయతేజసః సాక్షాత్ నిర్ద్దోషాన్ స్థాపయితుఞ్చ సమర్థో
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
యో ఽస్మాకమ్ అద్వితీయస్త్రాణకర్త్తా సర్వ్వజ్ఞ ఈశ్వరస్తస్య గౌరవం మహిమా పరాక్రమః కర్తృత్వఞ్చేదానీమ్ అనన్తకాలం యావద్ భూయాత్| ఆమేన్| (aiōn )