< யூதா 1 >

1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
যীশুখ্রীষ্টস্য দাসো যাকূবো ভ্রাতা যিহূদাস্তাতেনেশ্ৱরেণ পৱিত্রীকৃতান্ যীশুখ্রীষ্টেন রক্ষিতাংশ্চাহূতান্ লোকান্ প্রতি পত্রং লিখতি|
2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
কৃপা শান্তিঃ প্রেম চ বাহুল্যরূপেণ যুষ্মাস্ৱধিতিষ্ঠতু|
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
হে প্রিযাঃ, সাধারণপরিত্রাণমধি যুষ্মান্ প্রতি লেখিতুং মম বহুযত্নে জাতে পূর্ৱ্ৱকালে পৱিত্রলোকেষু সমর্পিতো যো ধর্ম্মস্তদর্থং যূযং প্রাণৱ্যযেনাপি সচেষ্টা ভৱতেতি ৱিনযার্থং যুষ্মান্ প্রতি পত্রলেখনমাৱশ্যকম্ অমন্যে|
4 ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
যস্মাদ্ এতদ্রূপদণ্ডপ্রাপ্তযে পূর্ৱ্ৱং লিখিতাঃ কেচিজ্জনা অস্মান্ উপসৃপ্তৱন্তঃ, তে ঽধার্ম্মিকলোকা অস্মাকম্ ঈশ্ৱরস্যানুগ্রহং ধ্ৱজীকৃত্য লম্পটতাম্ আচরন্তি, অদ্ৱিতীযো ঽধিপতি র্যো ঽস্মাকং প্রভু র্যীশুখ্রীষ্টস্তং নাঙ্গীকুর্ৱ্ৱন্তি|
5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
তস্মাদ্ যূযং পুরা যদ্ অৱগতাস্তৎ পুন র্যুষ্মান্ স্মারযিতুম্ ইচ্ছামি, ফলতঃ প্রভুরেককৃৎৱঃ স্ৱপ্রজা মিসরদেশাদ্ উদধার যৎ ততঃ পরম্ অৱিশ্ৱাসিনো ৱ্যনাশযৎ|
6 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
যে চ স্ৱর্গদূতাঃ স্ৱীযকর্তৃৎৱপদে ন স্থিৎৱা স্ৱৱাসস্থানং পরিত্যক্তৱন্তস্তান্ স মহাদিনস্য ৱিচারার্থম্ অন্ধকারমযে ঽধঃস্থানে সদাস্থাযিভি র্বন্ধনৈরবধ্নাৎ| (aïdios g126)
7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
অপরং সিদোমম্ অমোরা তন্নিকটস্থনগরাণি চৈতেষাং নিৱাসিনস্তৎসমরূপং ৱ্যভিচারং কৃতৱন্তো ৱিষমমৈথুনস্য চেষ্টযা ৱিপথং গতৱন্তশ্চ তস্মাৎ তান্যপি দৃষ্টান্তস্ৱরূপাণি ভূৎৱা সদাতনৱহ্নিনা দণ্ডং ভুঞ্জতে| (aiōnios g166)
8 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
তথৈৱেমে স্ৱপ্নাচারিণোঽপি স্ৱশরীরাণি কলঙ্কযন্তি রাজাধীনতাং ন স্ৱীকুর্ৱ্ৱন্ত্যুচ্চপদস্থান্ নিন্দন্তি চ|
9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
কিন্তু প্রধানদিৱ্যদূতো মীখাযেলো যদা মূসসো দেহে শযতানেন ৱিৱদমানঃ সমভাষত তদা তিস্মন্ নিন্দারূপং দণ্ডং সমর্পযিতুং সাহসং ন কৃৎৱাকথযৎ প্রভুস্ত্ৱাং ভর্ত্সযতাং|
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
১০কিন্ত্ৱিমে যন্ন বুধ্যন্তে তন্নিন্দন্তি যচ্চ নির্ব্বোধপশৱ ইৱেন্দ্রিযৈরৱগচ্ছন্তি তেন নশ্যন্তি|
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
১১তান্ ধিক্, তে কাবিলো মার্গে চরন্তি পারিতোষিকস্যাশাতো বিলিযমো ভ্রান্তিমনুধাৱন্তি কোরহস্য দুর্ম্মুখৎৱেন ৱিনশ্যন্তি চ|
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
১২যুষ্মাকং প্রেমভোজ্যেষু তে ৱিঘ্নজনকা ভৱন্তি, আত্মম্ভরযশ্চ ভূৎৱা নির্লজ্জযা যুষ্মাভিঃ সার্দ্ধং ভুঞ্জতে| তে ৱাযুভিশ্চালিতা নিস্তোযমেঘা হেমন্তকালিকা নিষ্ফলা দ্ৱি র্মৃতা উন্মূলিতা ৱৃক্ষাঃ,
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
১৩স্ৱকীযলজ্জাফেণোদ্ৱমকাঃ প্রচণ্ডাঃ সামুদ্রতরঙ্গাঃ সদাকালং যাৱৎ ঘোরতিমিরভাগীনি ভ্রমণকারীণি নক্ষত্রাণি চ ভৱন্তি| (aiōn g165)
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
১৪আদমতঃ সপ্তমঃ পুরুষো যো হনোকঃ স তানুদ্দিশ্য ভৱিষ্যদ্ৱাক্যমিদং কথিতৱান্, যথা, পশ্য স্ৱকীযপুণ্যানাম্ অযুতৈ র্ৱেষ্টিতঃ প্রভুঃ|
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
১৫সর্ৱ্ৱান্ প্রতি ৱিচারাজ্ঞাসাধনাযাগমিষ্যতি| তদা চাধার্ম্মিকাঃ সর্ৱ্ৱে জাতা যৈরপরাধিনঃ| ৱিধর্ম্মকর্ম্মণাং তেষাং সর্ৱ্ৱেষামেৱ কারণাৎ| তথা তদ্ৱৈপরীত্যেনাপ্যধর্ম্মাচারিপাপিনাং| উক্তকঠোরৱাক্যানাং সর্ৱ্ৱেষামপি কারণাৎ| পরমেশেন দোষিৎৱং তেষাং প্রকাশযিষ্যতে||
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
১৬তে ৱাক্কলহকারিণঃ স্ৱভাগ্যনিন্দকাঃ স্ৱেচ্ছাচারিণো দর্পৱাদিমুখৱিশিষ্টা লাভার্থং মনুষ্যস্তাৱকাশ্চ সন্তি|
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
১৭কিন্তু হে প্রিযতমাঃ, অস্মাকং প্রভো র্যীশুখ্রীষ্টস্য প্রেরিতৈ র্যদ্ ৱাক্যং পূর্ৱ্ৱং যুষ্মভ্যং কথিতং তৎ স্মরত,
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
১৮ফলতঃ শেষসমযে স্ৱেচ্ছাতো ঽধর্ম্মাচারিণো নিন্দকা উপস্থাস্যন্তীতি|
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
১৯এতে লোকাঃ স্ৱান্ পৃথক্ কুর্ৱ্ৱন্তঃ সাংসারিকা আত্মহীনাশ্চ সন্তি|
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
২০কিন্তু হে প্রিযতমাঃ, যূযং স্ৱেষাম্ অতিপৱিত্রৱিশ্ৱাসে নিচীযমানাঃ পৱিত্রেণাত্মনা প্রার্থনাং কুর্ৱ্ৱন্ত
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
২১ঈশ্ৱরস্য প্রেম্না স্ৱান্ রক্ষত, অনন্তজীৱনায চাস্মাকং প্রভো র্যীশুখ্রীষ্টস্য কৃপাং প্রতীক্ষধ্ৱং| (aiōnios g166)
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
২২অপরং যূযং ৱিৱিচ্য কাংশ্চিদ্ অনুকম্পধ্ৱং
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
২৩কাংশ্চিদ্ অগ্নিত উদ্ধৃত্য ভযং প্রদর্শ্য রক্ষত, শারীরিকভাৱেন কলঙ্কিতং ৱস্ত্রমপি ঋতীযধ্ৱং|
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
২৪অপরঞ্চ যুষ্মান্ স্খলনাদ্ রক্ষিতুম্ উল্লাসেন স্ৱীযতেজসঃ সাক্ষাৎ নির্দ্দোষান্ স্থাপযিতুঞ্চ সমর্থো
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
২৫যো ঽস্মাকম্ অদ্ৱিতীযস্ত্রাণকর্ত্তা সর্ৱ্ৱজ্ঞ ঈশ্ৱরস্তস্য গৌরৱং মহিমা পরাক্রমঃ কর্তৃৎৱঞ্চেদানীম্ অনন্তকালং যাৱদ্ ভূযাৎ| আমেন্| (aiōn g165)

< யூதா 1 >