< யோசுவா 22 >

1 அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
یوشع مردان جنگی قبایل رئوبین، جاد و نصف قبیلهٔ منسی را فرا خواند
2 அவர்களை நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
و به ایشان چنین فرمود: «هر چه موسی خدمتگزار خداوند به شما امر فرموده بود، انجام داده‌اید، و تمام دستورهای مرا نیز اطاعت کرده‌اید.
3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
هر چند جنگ خیلی طول کشید، ولی شما در این مدت برادران خود را ترک نکردید بلکه مأموریتی را که یهوه، خدایتان به شما داده بود، انجام دادید.
4 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
اکنون یهوه، خدای شما مطابق وعدهٔ خود، به برادرانتان پیروزی و آرامش بخشیده است. پس به خانه‌های خود در آن سوی رود اردن که خداوند توسط خدمتگزار خود موسی به شما به ملکیت داده است، برگردید.
5 ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
به دقت آنچه را که موسی به شما دستور داده است، انجام دهید: یهوه، خدای خود را دوست بدارید، در راه او گام بردارید، احکامش را اطاعت کنید، به او بچسبید و با دل و جان او را خدمت نمایید.»
6 இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
پس یوشع آنها را برکت داده، ایشان را به خانه‌هایشان روانه ساخت.
7 மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தான் நதிக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
(موسی قبلاً در شرق رود اردن در باشان به نصف قبیلهٔ منسی زمین داده بود، و یوشع هم در غرب رود اردن به نصف دیگر آن قبیله، در میان قبایل دیگر، زمین بخشید.) در حالی که مردان جنگی عازم خانه‌های خود بودند، یوشع ایشان را برکت داده، گفت: «با ثروت بسیار، گله و رمه‌های بی‌شمار، طلا و نقره، مس و آهن، و پوشاک فراوان به خانه‌های خود بازگردید و این غنایم را با بستگان خود تقسیم نمایید.»
8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
9 அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
پس مردان جنگی قبایل رئوبین، جاد، و نصف قبیلهٔ منسی، بنی‌اسرائیل را در شیلوه در سرزمین کنعان ترک نمودند و به سوی سرزمین خود در جلعاد که بنا به دستور خداوند به موسی، آن را تصرف کرده بودند، روانه شدند.
10 ௧0 கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தான் நதியின் மேற்கு பகுதியில் பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
وقتی قبایل رئوبین، جاد و نصف قبیله منسی به جلیلوت در کنار رود اردن در کنعان رسیدند، مذبح بسیار بزرگ و چشمگیری در کنار رود اردن بنا کردند. اما هنگامی که بقیهٔ قبایل اسرائیل این را شنیدند، در شیلوه جمع شدند تا به جنگ آنها بروند.
11 ௧௧ ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
12 ௧௨ அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
13 ௧௩ கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
ولی اول، عده‌ای را به رهبری فینحاس پسر العازار کاهن نزد ایشان به سرزمین جلعاد فرستادند.
14 ௧௪ அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
افرادی که همراه فینحاس رفتند ده نفر بودند که هر کدام از آنها مقام سرپرستی خاندانی را بر عهده داشتند و به نمایندگی از طرف قبیلهٔ خود آمده بودند.
15 ௧௫ அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
وقتی این گروه به نزد قبایل رئوبین، جاد و نصف قبیلهٔ منسی در سرزمین جلعاد رسیدند،
16 ௧௬ நீங்கள் இந்த நாளிலே யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
به نمایندگی از طرف تمام قوم خداوند گفتند: «چرا از پیروی خداوند برگشته‌اید و با ساختن این مذبح از او روگردان شده، بر ضد خدای اسرائیل برخاسته‌اید؟
17 ௧௭ பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? யெகோவாவுடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
آیا عقوبت پرستش بت بعل فغور برای ما کم بود؟ مگر فراموش کرده‌اید چه بلای وحشتناکی بر قوم خداوند عارض شد، به طوری که هنوز هم از آن کاملاً آزاد نشده‌ایم؟ مگر نمی‌دانید اگر امروز از دستور خداوند سرپیچی کنید فردا او بار دیگر بر همهٔ قوم اسرائیل خشمگین خواهد شد؟
18 ௧௮ நீங்கள் இந்த நாளில் யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
19 ௧௯ உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
اگر زمین شما برای عبادت خداوند مناسب نیست، بهتر است به سرزمین خداوند که خیمهٔ عبادت در آنجاست بیایید و در این سرزمین با ما زندگی کنید، و با ساختن یک مذبح دیگر علاوه بر مذبحی که برای خداوند، خدای ما ساخته شده است، بر ضد خداوند و بر ضد ما برنخیزید.
20 ௨0 சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
آیا فراموش کرده‌اید که وقتی عخان پسر زارح مال حرام را برداشت، نه فقط او بلکه تمام قوم اسرائیل با او مجازات شدند؟»
21 ௨௧ அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
قبایل رئوبین، جاد و نصف قبیلهٔ منسی به نمایندگان قبایل چنین پاسخ دادند:
22 ௨௨ தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
«یهوه، خدای خدایان می‌داند که قصد ما از بنای این مذبح چه بوده است و می‌خواهیم شما نیز بدانید. اگر ما با این کار از پیروی خداوند روگردان شده‌ایم و به او خیانت ورزیده‌ایم، شما ما را زنده نگذارید.
23 ௨௩ ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக.
اگر از خداوند برگشته و این مذبح را ساخته‌ایم تا روی آن قربانی سوختنی، هدیه آردی و قربانی سلامتی تقدیم کنیم، خداوند خودش ما را مجازات کند.
24 ௨௪ நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் என்ன?
ما این کار را از روی احتیاط انجام داده‌ایم، چون می‌ترسیم در آینده فرزندان شما به فرزندان ما بگویند: شما حق ندارید خداوند، خدای اسرائیل را پرستش کنید،
25 ௨௫ ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்தார்; யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் யெகோவா வுக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
زیرا شما سهمی در خداوند ندارید. خداوند رود اردن را بین ما و شما قرار داده است. و به این ترتیب فرزندان شما، فرزندان ما را از پرستش خداوند باز دارند.
26 ௨௬ சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
پس تصمیم گرفتیم آن مذبح را بنا کنیم، البته نه برای تقدیم قربانی سوختنی و سایر قربانیها، بلکه تا بین ما و شما و فرزندانمان شاهدی باشد که ما هم حق داریم در خانهٔ خداوند او را با تقدیم قربانیهای سوختنی و سلامتی پرستش نماییم، و اگر فرزندان شما به فرزندان ما بگویند: شما سهمی در خداوند ندارید،
27 ௨௭ யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
28 ௨௮ நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின யெகோவாவுடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
فرزندان ما بتوانند بگویند: این مذبح را نگاه کنید که پدران ما از روی نمونهٔ مذبح خداوند ساخته‌اند. این مذبح، برای تقدیم قربانیهای سوختنی و سایر قربانیها نیست بلکه نشانهٔ این است که ما هم حق داریم بیاییم و خدا را بپرستیم.
29 ௨௯ நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
ما هرگز از پیروی خداوند دست برنمی‌داریم و با ساختن مذبحی برای تقدیم قربانی سوختنی، هدیهٔ آردی و سایر قربانیها از دستورهای او سرپیچی نمی‌کنیم. ما می‌دانیم تنها مذبحی که باید بر آن قربانی کرد، همان است که در عبادتگاه خداوند قرار دارد.»
30 ௩0 ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது பார்வைக்கு நன்றாக இருந்தது.
فینحاس کاهن و نمایندگان قبایل بنی‌اسرائیل که همراه وی بودند، چون این سخنان را از قبیله‌های رئوبین، جاد و نصف قبیلهٔ منسی شنیدند، قانع شدند.
31 ௩௧ அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
فینحاس پسر العازار به ایشان گفت: «امروز فهمیدیم که خداوند در میان ماست، زیرا شما بر ضد او برنخاسته‌اید بلکه برعکس، قوم ما را از نابودی نجات داده‌اید.»
32 ௩௨ ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
پس فینحاس پسر العازار و نمایندگان، از جلعاد به کنعان بازگشتند و هر آنچه را که شنیده بودند به بنی‌اسرائیل گزارش دادند.
33 ௩௩ அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள் மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
با شنیدن گزارش آنها، همهٔ مردم اسرائیل شاد شدند و خدا را شکر نمودند و دیگر سخنی از جنگ با قبایل رئوبین و جاد و یا خراب کردن سرزمین آنها به میان نیامد.
34 ௩௪ யெகோவா தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
قبایل رئوبین و جاد آن مذبحی را که بنا کرده بودند «مذبح شاهد» نامیدند و گفتند: «این مذبح بین ما و برادران ما شاهد است که خداوند، خدای ما نیز هست.»

< யோசுவா 22 >