< யோனா 3 >
1 ௧ இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
Авэр моло сля лав РАЕСТАР Ионасти:
2 ௨ நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார்.
— Вщи, джя ды Ниневия, баро форо, тай роспхэн ды лэ када, со Мэ пхэндом тути.
3 ௩ யோனா எழுந்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்று நாட்கள் நடை பிரயாண தூரமும் விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது.
Иона вщиля тай джиля ды Ниневия, сар пхэнда лэсти РАЙ. Ниневия сля баро форо Дэвлэстэ, пэ трин дивэ тэ джя пэза.
4 ௪ யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
Иона заджиля ды форо и састо диво пхирэлас тай пхэнэлас: «Интэ саранда дивэ, и Ниневия хасявэла!»
5 ௫ அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள்.
Мануша ды Ниневия патиле Дэвлэсти тай отпхэндэпэ тэ ха и тэ пэ. Всаворэ — барвалэ и чёрорэ — урявдэпэ ды їда гонэндар.
6 ௬ இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
Кала кадыва лав доджиля ды тхагари, вов вщиля троностар, слиля барвали їда, урявдапэ ды їда гонэндар тай бэшля ды прахо.
7 ௭ மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும்,
Вов прыакхарда барэ манушэн, тай вонэ пхэндэ всаворэнди ды Ниневия: «Мануша нисо тэ на хан, тэ на пэн пани. Тай хулаимо, гурува, бакрэ бузненца тэ на пхирэн пы мален и тэ на пэн пани.
8 ௮ மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும்.
Мануша тай хулаимо тэ авэн ушаравдэ ды похтан гонэндар тай зоралэс тэ типисявэн Дэвлэстэ. Соб кажно мануш отрисардапэ пэхкэрэндар мижэ дромэндар тай прохарицики рындонэндар.
9 ௯ யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனமிரங்கி, தம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று சொல்லச்சொன்னான்.
Ко джянэл, на парувэла ли Дэвэл Пэхкиро гындо тай отрисарэла амэндар Пэхкири холи, тай амэ на хасяваґа».
10 ௧0 அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய செயல்களைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார்.
Дэвэл удыкхля лэндирэ рындуря, со вонэ отрисардэпэ пэхкирэ мижэ дромэндар, и ачиля Лэсти дор лэн, тай на бичялда бида, сави камля тэ бичялэ.