< யோவான் 1 >
1 ௧ ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
ਆਦੌ ਵਾਦ ਆਸੀਤ੍ ਸ ਚ ਵਾਦ ਈਸ਼੍ਵਰੇਣ ਸਾਰ੍ਧਮਾਸੀਤ੍ ਸ ਵਾਦਃ ਸ੍ਵਯਮੀਸ਼੍ਵਰ ਏਵ|
2 ௨ அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
ਸ ਆਦਾਵੀਸ਼੍ਵਰੇਣ ਸਹਾਸੀਤ੍|
3 ௩ எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
ਤੇਨ ਸਰ੍ੱਵੰ ਵਸ੍ਤੁ ਸਸ੍ਰੁʼਜੇ ਸਰ੍ੱਵੇਸ਼਼ੁ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਸ੍ਤੁਸ਼਼ੁ ਕਿਮਪਿ ਵਸ੍ਤੁ ਤੇਨਾਸ੍ਰੁʼਸ਼਼੍ਟੰ ਨਾਸ੍ਤਿ|
4 ௪ அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
ਸ ਜੀਵਨਸ੍ਯਾਕਾਰਃ, ਤੱਚ ਜੀਵਨੰ ਮਨੁਸ਼਼੍ਯਾਣਾਂ ਜ੍ਯੋਤਿਃ
5 ௫ அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
ਤੱਜ੍ਯੋਤਿਰਨ੍ਧਕਾਰੇ ਪ੍ਰਚਕਾਸ਼ੇ ਕਿਨ੍ਤ੍ਵਨ੍ਧਕਾਰਸ੍ਤੰਨ ਜਗ੍ਰਾਹ|
6 ௬ தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
ਯੋਹਨ੍ ਨਾਮਕ ਏਕੋ ਮਨੁਜ ਈਸ਼੍ਵਰੇਣ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਞ੍ਚਕ੍ਰੇ|
7 ௭ அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
ਤਦ੍ਵਾਰਾ ਯਥਾ ਸਰ੍ੱਵੇ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤਿ ਤਦਰ੍ਥੰ ਸ ਤੱਜ੍ਯੋਤਿਸ਼਼ਿ ਪ੍ਰਮਾਣੰ ਦਾਤੁੰ ਸਾਕ੍ਸ਼਼ਿਸ੍ਵਰੂਪੋ ਭੂਤ੍ਵਾਗਮਤ੍,
8 ௮ அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
ਸ ਸ੍ਵਯੰ ਤੱਜ੍ਯੋਤਿ ਰ੍ਨ ਕਿਨ੍ਤੁ ਤੱਜ੍ਯੋਤਿਸ਼਼ਿ ਪ੍ਰਮਾਣੰ ਦਾਤੁਮਾਗਮਤ੍|
9 ௯ உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
ਜਗਤ੍ਯਾਗਤ੍ਯ ਯਃ ਸਰ੍ੱਵਮਨੁਜੇਭ੍ਯੋ ਦੀਪ੍ਤਿੰ ਦਦਾਤਿ ਤਦੇਵ ਸਤ੍ਯਜ੍ਯੋਤਿਃ|
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
ਸ ਯੱਜਗਦਸ੍ਰੁʼਜਤ੍ ਤਨ੍ਮਦ੍ਯ ਏਵ ਸ ਆਸੀਤ੍ ਕਿਨ੍ਤੁ ਜਗਤੋ ਲੋਕਾਸ੍ਤੰ ਨਾਜਾਨਨ੍|
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ਨਿਜਾਧਿਕਾਰੰ ਸ ਆਗੱਛਤ੍ ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਜਾਸ੍ਤੰ ਨਾਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍|
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ਤਥਾਪਿ ਯੇ ਯੇ ਤਮਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ ਅਰ੍ਥਾਤ੍ ਤਸ੍ਯ ਨਾਮ੍ਨਿ ਵ੍ਯਸ਼੍ਵਸਨ੍ ਤੇਭ੍ਯ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੁਤ੍ਰਾ ਭਵਿਤੁਮ੍ ਅਧਿਕਾਰਮ੍ ਅਦਦਾਤ੍|
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
ਤੇਸ਼਼ਾਂ ਜਨਿਃ ਸ਼ੋਣਿਤਾੰਨ ਸ਼ਾਰੀਰਿਕਾਭਿਲਾਸ਼਼ਾੰਨ ਮਾਨਵਾਨਾਮਿੱਛਾਤੋ ਨ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਾਦਭਵਤ੍|
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
ਸ ਵਾਦੋ ਮਨੁਸ਼਼੍ਯਰੂਪੇਣਾਵਤੀਰ੍ੱਯ ਸਤ੍ਯਤਾਨੁਗ੍ਰਹਾਭ੍ਯਾਂ ਪਰਿਪੂਰ੍ਣਃ ਸਨ੍ ਸਾਰ੍ਧਮ੍ ਅਸ੍ਮਾਭਿ ਰ੍ਨ੍ਯਵਸਤ੍ ਤਤਃ ਪਿਤੁਰਦ੍ਵਿਤੀਯਪੁਤ੍ਰਸ੍ਯ ਯੋਗ੍ਯੋ ਯੋ ਮਹਿਮਾ ਤੰ ਮਹਿਮਾਨੰ ਤਸ੍ਯਾਪਸ਼੍ਯਾਮ|
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
ਤਤੋ ਯੋਹਨਪਿ ਪ੍ਰਚਾਰ੍ੱਯ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਮਿਦੰ ਦੱਤਵਾਨ੍ ਯੋ ਮਮ ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਸ ਮੱਤੋ ਗੁਰੁਤਰਃ; ਯਤੋ ਮਤ੍ਪੂਰ੍ੱਵੰ ਸ ਵਿਦ੍ਯਮਾਨ ਆਸੀਤ੍; ਯਦਰ੍ਥਮ੍ ਅਹੰ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਮਿਦਮ੍ ਅਦਾਂ ਸ ਏਸ਼਼ਃ|
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
ਅਪਰਞ੍ਚ ਤਸ੍ਯ ਪੂਰ੍ਣਤਾਯਾ ਵਯੰ ਸਰ੍ੱਵੇ ਕ੍ਰਮਸ਼ਃ ਕ੍ਰਮਸ਼ੋਨੁਗ੍ਰਹੰ ਪ੍ਰਾਪ੍ਤਾਃ|
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
ਮੂਸਾਦ੍ਵਾਰਾ ਵ੍ਯਵਸ੍ਥਾ ਦੱਤਾ ਕਿਨ੍ਤ੍ਵਨੁਗ੍ਰਹਃ ਸਤ੍ਯਤ੍ਵਞ੍ਚ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਦ੍ਵਾਰਾ ਸਮੁਪਾਤਿਸ਼਼੍ਠਤਾਂ|
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
ਕੋਪਿ ਮਨੁਜ ਈਸ਼੍ਵਰੰ ਕਦਾਪਿ ਨਾਪਸ਼੍ਯਤ੍ ਕਿਨ੍ਤੁ ਪਿਤੁਃ ਕ੍ਰੋਡਸ੍ਥੋ(ਅ)ਦ੍ਵਿਤੀਯਃ ਪੁਤ੍ਰਸ੍ਤੰ ਪ੍ਰਕਾਸ਼ਯਤ੍|
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
ਤ੍ਵੰ ਕਃ? ਇਤਿ ਵਾਕ੍ਯੰ ਪ੍ਰੇਸ਼਼੍ਟੁੰ ਯਦਾ ਯਿਹੂਦੀਯਲੋਕਾ ਯਾਜਕਾਨ੍ ਲੇਵਿਲੋਕਾਂਸ਼੍ਚ ਯਿਰੂਸ਼ਾਲਮੋ ਯੋਹਨਃ ਸਮੀਪੇ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਮਾਸੁਃ,
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
ਤਦਾ ਸ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਨਾਪਹ੍ਨੂਤਵਾਨ੍ ਨਾਹਮ੍ ਅਭਿਸ਼਼ਿਕ੍ਤ ਇਤ੍ਯਙ੍ਗੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
ਤਦਾ ਤੇ(ਅ)ਪ੍ਰੁʼੱਛਨ੍ ਤਰ੍ਹਿ ਕੋ ਭਵਾਨ੍? ਕਿੰ ਏਲਿਯਃ? ਸੋਵਦਤ੍ ਨ; ਤਤਸ੍ਤੇ(ਅ)ਪ੍ਰੁʼੱਛਨ੍ ਤਰ੍ਹਿ ਭਵਾਨ੍ ਸ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ? ਸੋਵਦਤ੍ ਨਾਹੰ ਸਃ|
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
ਤਦਾ ਤੇ(ਅ)ਪ੍ਰੁʼੱਛਨ੍ ਤਰ੍ਹਿ ਭਵਾਨ੍ ਕਃ? ਵਯੰ ਗਤ੍ਵਾ ਪ੍ਰੇਰਕਾਨ੍ ਤ੍ਵਯਿ ਕਿੰ ਵਕ੍ਸ਼਼੍ਯਾਮਃ? ਸ੍ਵਸ੍ਮਿਨ੍ ਕਿੰ ਵਦਸਿ?
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
ਤਦਾ ਸੋਵਦਤ੍| ਪਰਮੇਸ਼ਸ੍ਯ ਪਨ੍ਥਾਨੰ ਪਰਿਸ਼਼੍ਕੁਰੁਤ ਸਰ੍ੱਵਤਃ| ਇਤੀਦੰ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਵਾਕ੍ਯੰ ਵਦਤਃ ਕਸ੍ਯਚਿਦ੍ਰਵਃ| ਕਥਾਮਿਮਾਂ ਯਸ੍ਮਿਨ੍ ਯਿਸ਼ਯਿਯੋ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ ਲਿਖਿਤਵਾਨ੍ ਸੋਹਮ੍|
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
ਯੇ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਾਸ੍ਤੇ ਫਿਰੂਸ਼ਿਲੋਕਾਃ|
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
ਤਦਾ ਤੇ(ਅ)ਪ੍ਰੁʼੱਛਨ੍ ਯਦਿ ਨਾਭਿਸ਼਼ਿਕ੍ਤੋਸਿ ਏਲਿਯੋਸਿ ਨ ਸ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦ੍ਯਪਿ ਨਾਸਿ ਚ, ਤਰ੍ਹਿ ਲੋਕਾਨ੍ ਮੱਜਯਸਿ ਕੁਤਃ?
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
ਤਤੋ ਯੋਹਨ੍ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਤ੍, ਤੋਯੇ(ਅ)ਹੰ ਮੱਜਯਾਮੀਤਿ ਸਤ੍ਯੰ ਕਿਨ੍ਤੁ ਯੰ ਯੂਯੰ ਨ ਜਾਨੀਥ ਤਾਦ੍ਰੁʼਸ਼ ਏਕੋ ਜਨੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯ ਉਪਤਿਸ਼਼੍ਠਤਿ|
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
ਸ ਮਤ੍ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਗਤੋਪਿ ਮਤ੍ਪੂਰ੍ੱਵੰ ਵਰ੍ੱਤਮਾਨ ਆਸੀਤ੍ ਤਸ੍ਯ ਪਾਦੁਕਾਬਨ੍ਧਨੰ ਮੋਚਯਿਤੁਮਪਿ ਨਾਹੰ ਯੋਗ੍ਯੋਸ੍ਮਿ|
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
ਯਰ੍ੱਦਨਨਦ੍ਯਾਃ ਪਾਰਸ੍ਥਬੈਥਬਾਰਾਯਾਂ ਯਸ੍ਮਿਨ੍ਸ੍ਥਾਨੇ ਯੋਹਨਮੱਜਯਤ੍ ਤਸ੍ਮਿਨ ਸ੍ਥਾਨੇ ਸਰ੍ੱਵਮੇਤਦ੍ ਅਘਟਤ|
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
ਪਰੇ(ਅ)ਹਨਿ ਯੋਹਨ੍ ਸ੍ਵਨਿਕਟਮਾਗੱਛਨ੍ਤੰ ਯਿਸ਼ੁੰ ਵਿਲੋਕ੍ਯ ਪ੍ਰਾਵੋਚਤ੍ ਜਗਤਃ ਪਾਪਮੋਚਕਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮੇਸ਼਼ਸ਼ਾਵਕੰ ਪਸ਼੍ਯਤ|
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
ਯੋ ਮਮ ਪਸ਼੍ਚਾਦਾਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਸ ਮੱਤੋ ਗੁਰੁਤਰਃ, ਯਤੋ ਹੇਤੋਰ੍ਮਤ੍ਪੂਰ੍ੱਵੰ ਸੋ(ਅ)ਵਰ੍ੱਤਤ ਯਸ੍ਮਿੰਨਹੰ ਕਥਾਮਿਮਾਂ ਕਥਿਤਵਾਨ੍ ਸ ਏਵਾਯੰ|
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
ਅਪਰੰ ਨਾਹਮੇਨੰ ਪ੍ਰਤ੍ਯਭਿਜ੍ਞਾਤਵਾਨ੍ ਕਿਨ੍ਤੁ ਇਸ੍ਰਾਯੇੱਲੋਕਾ ਏਨੰ ਯਥਾ ਪਰਿਚਿਨ੍ਵਨ੍ਤਿ ਤਦਭਿਪ੍ਰਾਯੇਣਾਹੰ ਜਲੇ ਮੱਜਯਿਤੁਮਾਗੱਛਮ੍|
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
ਪੁਨਸ਼੍ਚ ਯੋਹਨਪਰਮੇਕੰ ਪ੍ਰਮਾਣੰ ਦਤ੍ਵਾ ਕਥਿਤਵਾਨ੍ ਵਿਹਾਯਸਃ ਕਪੋਤਵਦ੍ ਅਵਤਰਨ੍ਤਮਾਤ੍ਮਾਨਮ੍ ਅਸ੍ਯੋਪਰ੍ੱਯਵਤਿਸ਼਼੍ਠਨ੍ਤੰ ਚ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨਹਮ੍|
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
ਨਾਹਮੇਨੰ ਪ੍ਰਤ੍ਯਭਿਜ੍ਞਾਤਵਾਨ੍ ਇਤਿ ਸਤ੍ਯੰ ਕਿਨ੍ਤੁ ਯੋ ਜਲੇ ਮੱਜਯਿਤੁੰ ਮਾਂ ਪ੍ਰੈਰਯਤ੍ ਸ ਏਵੇਮਾਂ ਕਥਾਮਕਥਯਤ੍ ਯਸ੍ਯੋਪਰ੍ੱਯਾਤ੍ਮਾਨਮ੍ ਅਵਤਰਨ੍ਤਮ੍ ਅਵਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਞ੍ਚ ਦ੍ਰਕ੍ਸ਼਼ਯਸਿ ਸਏਵ ਪਵਿਤ੍ਰੇ ਆਤ੍ਮਨਿ ਮੱਜਯਿਸ਼਼੍ਯਤਿ|
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
ਅਵਸ੍ਤੰਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯਾਯਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਤਨਯ ਇਤਿ ਪ੍ਰਮਾਣੰ ਦਦਾਮਿ|
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
ਪਰੇ(ਅ)ਹਨਿ ਯੋਹਨ੍ ਦ੍ਵਾਭ੍ਯਾਂ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਭ੍ਯਾਂ ਸਾਰ੍ੱਧੇਂ ਤਿਸ਼਼੍ਠਨ੍
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
ਯਿਸ਼ੁੰ ਗੱਛਨ੍ਤੰ ਵਿਲੋਕ੍ਯ ਗਦਿਤਵਾਨ੍, ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮੇਸ਼਼ਸ਼ਾਵਕੰ ਪਸ਼੍ਯਤੰ|
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
ਇਮਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਦ੍ਵੌ ਸ਼ਿਸ਼਼੍ਯੌ ਯੀਸ਼ੋਃ ਪਸ਼੍ਚਾਦ੍ ਈਯਤੁਃ|
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਪਰਾਵ੍ਰੁʼਤ੍ਯ ਤੌ ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਗੱਛਨ੍ਤੌ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍ ਯੁਵਾਂ ਕਿੰ ਗਵੇਸ਼ਯਥਃ? ਤਾਵਪ੍ਰੁʼੱਛਤਾਂ ਹੇ ਰੱਬਿ ਅਰ੍ਥਾਤ੍ ਹੇ ਗੁਰੋ ਭਵਾਨ੍ ਕੁਤ੍ਰ ਤਿਸ਼਼੍ਠਤਿ?
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
ਤਤਃ ਸੋਵਾਦਿਤ੍ ਏਤ੍ਯ ਪਸ਼੍ਯਤੰ| ਤਤੋ ਦਿਵਸਸ੍ਯ ਤ੍ਰੁʼਤੀਯਪ੍ਰਹਰਸ੍ਯ ਗਤਤ੍ਵਾਤ੍ ਤੌ ਤੱਦਿਨੰ ਤਸ੍ਯ ਸਙ੍ਗੇ(ਅ)ਸ੍ਥਾਤਾਂ|
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
ਯੌ ਦ੍ਵੌ ਯੋਹਨੋ ਵਾਕ੍ਯੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਯਿਸ਼ੋਃ ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਗਮਤਾਂ ਤਯੋਃ ਸ਼ਿਮੋਨ੍ਪਿਤਰਸ੍ਯ ਭ੍ਰਾਤਾ ਆਨ੍ਦ੍ਰਿਯਃ
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
ਸ ਇਤ੍ਵਾ ਪ੍ਰਥਮੰ ਨਿਜਸੋਦਰੰ ਸ਼ਿਮੋਨੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਪ੍ਰਾਪ੍ਯ ਕਥਿਤਵਾਨ੍ ਵਯੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਮ੍ ਅਰ੍ਥਾਤ੍ ਅਭਿਸ਼਼ਿਕ੍ਤਪੁਰੁਸ਼਼ੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਤੰ ਯਿਸ਼ੋਃ ਸਮੀਪਮ੍ ਆਨਯਤ੍| ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾਵਦਤ੍ ਤ੍ਵੰ ਯੂਨਸਃ ਪੁਤ੍ਰਃ ਸ਼ਿਮੋਨ੍ ਕਿਨ੍ਤੁ ਤ੍ਵੰਨਾਮਧੇਯੰ ਕੈਫਾਃ ਵਾ ਪਿਤਰਃ ਅਰ੍ਥਾਤ੍ ਪ੍ਰਸ੍ਤਰੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
ਪਰੇ(ਅ)ਹਨਿ ਯੀਸ਼ੌ ਗਾਲੀਲੰ ਗਨ੍ਤੁੰ ਨਿਸ਼੍ਚਿਤਚੇਤਸਿ ਸਤਿ ਫਿਲਿਪਨਾਮਾਨੰ ਜਨੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਪ੍ਰਾਪ੍ਯਾਵੋਚਤ੍ ਮਮ ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਗੱਛ|
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
ਬੈਤ੍ਸੈਦਾਨਾਮ੍ਨਿ ਯਸ੍ਮਿਨ੍ ਗ੍ਰਾਮੇ ਪਿਤਰਾਨ੍ਦ੍ਰਿਯਯੋਰ੍ਵਾਸ ਆਸੀਤ੍ ਤਸ੍ਮਿਨ੍ ਗ੍ਰਾਮੇ ਤਸ੍ਯ ਫਿਲਿਪਸ੍ਯ ਵਸਤਿਰਾਸੀਤ੍|
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਫਿਲਿਪੋ ਨਿਥਨੇਲੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਪ੍ਰਾਪ੍ਯਾਵਦਤ੍ ਮੂਸਾ ਵ੍ਯਵਸ੍ਥਾ ਗ੍ਰਨ੍ਥੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਗ੍ਰਨ੍ਥੇਸ਼਼ੁ ਚ ਯਸ੍ਯਾਖ੍ਯਾਨੰ ਲਿਖਿਤਮਾਸ੍ਤੇ ਤੰ ਯੂਸ਼਼ਫਃ ਪੁਤ੍ਰੰ ਨਾਸਰਤੀਯੰ ਯੀਸ਼ੁੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਅਕਾਰ੍ਸ਼਼੍ਮ ਵਯੰ|
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
ਤਦਾ ਨਿਥਨੇਲ੍ ਕਥਿਤਵਾਨ੍ ਨਾਸਰੰਨਗਰਾਤ ਕਿੰ ਕਸ਼੍ਚਿਦੁੱਤਮ ਉਤ੍ਪਨ੍ਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ? ਤਤਃ ਫਿਲਿਪੋ (ਅ)ਵੋਚਤ੍ ਏਤ੍ਯ ਪਸ਼੍ਯ|
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
ਅਪਰਞ੍ਚ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਵਸ੍ਯ ਸਮੀਪੰ ਤਮ੍ ਆਗੱਛਨ੍ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਵ੍ਯਾਹ੍ਰੁʼਤਵਾਨ੍, ਪਸ਼੍ਯਾਯੰ ਨਿਸ਼਼੍ਕਪਟਃ ਸਤ੍ਯ ਇਸ੍ਰਾਯੇੱਲੋਕਃ|
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
ਤਤਃ ਸੋਵਦਦ੍, ਭਵਾਨ੍ ਮਾਂ ਕਥੰ ਪ੍ਰਤ੍ਯਭਿਜਾਨਾਤਿ? ਯੀਸ਼ੁਰਵਾਦੀਤ੍ ਫਿਲਿਪਸ੍ਯ ਆਹ੍ਵਾਨਾਤ੍ ਪੂਰ੍ੱਵੰ ਯਦਾ ਤ੍ਵਮੁਡੁਮ੍ਬਰਸ੍ਯ ਤਰੋਰ੍ਮੂਲੇ(ਅ)ਸ੍ਥਾਸ੍ਤਦਾ ਤ੍ਵਾਮਦਰ੍ਸ਼ਮ੍|
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
ਨਿਥਨੇਲ੍ ਅਚਕਥਤ੍, ਹੇ ਗੁਰੋ ਭਵਾਨ੍ ਨਿਤਾਨ੍ਤਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੁਤ੍ਰੋਸਿ, ਭਵਾਨ੍ ਇਸ੍ਰਾਯੇਲ੍ਵੰਸ਼ਸ੍ਯ ਰਾਜਾ|
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁ ਰ੍ਵ੍ਯਾਹਰਤ੍, ਤ੍ਵਾਮੁਡੁਮ੍ਬਰਸ੍ਯ ਪਾਦਪਸ੍ਯ ਮੂਲੇ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨਾਹੰ ਮਮੈਤਸ੍ਮਾਦ੍ਵਾਕ੍ਯਾਤ੍ ਕਿੰ ਤ੍ਵੰ ਵ੍ਯਸ਼੍ਵਸੀਃ? ਏਤਸ੍ਮਾਦਪ੍ਯਾਸ਼੍ਚਰ੍ੱਯਾਣਿ ਕਾਰ੍ੱਯਾਣਿ ਦ੍ਰਕ੍ਸ਼਼੍ਯਸਿ|
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਅਨ੍ਯੱਚਾਵਾਦੀਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਯਥਾਰ੍ਥੰ ਵਦਾਮਿ, ਇਤਃ ਪਰੰ ਮੋਚਿਤੇ ਮੇਘਦ੍ਵਾਰੇ ਤਸ੍ਮਾਨ੍ਮਨੁਜਸੂਨੁਨਾ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਦੂਤਗਣਮ੍ ਅਵਰੋਹਨ੍ਤਮਾਰੋਹਨ੍ਤਞ੍ਚ ਦ੍ਰਕ੍ਸ਼਼੍ਯਥ|