< யோவான் 9 >

1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
फिरी यीशुऐ जांदे बेले इक माणुऐ जो दिखया, जड़ा जमदा ही अन्ना था।
2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
कने उदे चेलयां उसला पुछया, “गुरू जी, कुनी पाप कितया था की ऐ अन्ना जमया, इनी माणुऐ, या उदे माता पिता?”
3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
यीशुऐ जबाब दिता, ना तां इनी पाप कितया था, ना तां इदे माता पिता: पर ऐ इस तांई अन्ना जमया, की परमेश्वरे दी शक्ति इदे च प्रगट होऐ।
4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
जिनी मिंजो भेजया है; सांझो झट ही उदे दितयो कम्मा जो पूरा करणा है: सै रात ओंणे बाली है जिदे च कोई कम्म नी करी सकदा है।
5 நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
जालू दीकर मैं संसारे च है, तालू दीकर संसारे दी लौ मैं है।
6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
ऐ बोली करी उनी जमिना पर थूक्या कने उसी थूके ने मिटी सेड़ी कने सेई मिटी उस अन्ने दिया हखी पर लगाई करी।
7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
उसयो बोलया, “जा, कने अपणा मु शीलोह दे कुण्डे च धोई ले” (शीलोह दे कुण्डे दा मतलब है भेजया है) तां उनी जाई करी धोता, कने जालू सै घरे जो बापस ओणा लग्गा तां उसयो मिलणा लगी पिया।
8 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
तालू उदे पड़ोसी कने होर लोक जिना उसयो पेहले भीख मंगदे दिखया था, इक दुज्जे ने बोलणा लग्गे, “क्या ऐ सै ही नी है, जड़ा बेईकरी भीख मंगदा था?”
9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
केईयां लोंका बोलया, ऐ सैई है, होरनी बोलया, नी, पर उदे सांई है उनी बोलया, “मैं सेई है जड़ा बेईकरी भीख मंगदा था।”
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
तां सै उसला पूछणा लग्गे, “तेरियां हखी दी लौ कियां बापस आई?”
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
उनी जबाब दिता, “यीशु नाऐ दे इकी माणुऐ मिट्टी सेड़ी, कने मेरियां हखी पर लगाई करी मिंजो बोलया, शीलोह दे कुण्ड च जाई करी मु धोई ले, मैं गिया कने धोई करी मिंजो मिलणा लगी पिया।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
उना उसयो पुछया, सै माणु कुथु है? उनी बोलया, “मैं नी जाणदा।”
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
लोक उस मांणुऐ जो जड़ा पेहले अन्ना था उसयो फरीसियाँ बाल लेई गे।
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
जिस दिने यीशुऐ मिट्टी सेड़ी करी उदियां हखी ठीक कितियां थियां सै सब्ते दा रोज था।
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
फिरी फरीसियां भी उसयो पुछया; तेरी हखी कियां ठीक होईयां? उनी उना जो बोलया, “उनी मेरी हखी पर मिट्टी लाई, फिरी मैं धोई लेई, कने हुण मिंजो मिलणा लगी पिया।”
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
इस पर केई फरीसी बोलणा लग्गे, “ऐ माणु परमेश्वरे दिया तरफा ला नी है, क्योंकि सै सब्ते दे रोजे जो नी मंनदा है।” होरनी बोलया, इस सांई पापी माणु इस तरीके ने चमत्कार कियां दस्सी सकदा है? इसा गल्ला जो लेईकरी उना च फुट पेई गेई।
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
उना उस अन्ने ने फिरी बोलया, उनी तेरियां हखी ठीक कितियां न, तू उदे बारे च क्या बोलदा है? उनी बोलया, “सै परमेश्वरे दा संदेश देणेबाला है।”
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
पर यहूदी अगुवां जो भरोसा नी होया की ऐ अन्ना था कने हुण दिखणा लग्गी गिया है जालू दीकर उदे माता पिता जो सदया जिदियां हखी ठीक होईयां थियां।
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
कने उना ला पुछया, “क्या ऐ तुहाड़ा पुत्र है, इसयो तुसां बोलदे थे की अन्ना जमया था? फिरी इसयो कियां मिलणा लगी पिया है?”
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
उदे माता पिता जबाब दिता, “असां तां जाणदे न की ऐ साड़ा पुत्र है, कने अन्ना जमया था।
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
पर असां ऐ नी जाणदे की हुण कियां करी इसयो मिलणा लगी पीया है; कने ना ऐ जाणदे की कुनी इसदियां हखी ठीक कितियां; सै अपणे जबाब देणे तांई काफी बडा है; उसी ला पूछी लिया; उसी ला पुच्छी लिया उनी अपणे बारे च अपु बोली देणा है।”
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
ऐ गल्लां उदे माता पिता तां बोलियां क्योंकि सै यहूदी अगुवां ला डरदे थे; क्योंकि यहूदी अगुवे एका करी के बैठयो थे, की अगर कोई भरोसा करे की सै मसीह है, तां सै यहूदी जंज घर ला कडी देणा।
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
इसा बजा ने उदे माता पिता बोलया की सै सबालां दा जबाब देणे तांई बतेरा बडा है, उसला ही पूछी लिया।
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
तालू यहूदी अगुवां उस माणुऐ जो फिरी सदया जड़ा अन्ना था उसयो बोलया, “परमेश्वरे दे सामणे बायदा कर की तू सच्च बोलगा; असां तां जाणदे न की सै माणु पापी है।”
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
उनी जबाब दिता, “मैं नी जाणदा सै पापी है या नी: मैं तां बस इक गल्ल जाणदा है की मैं अन्ना था कने हुण दिखदा है।”
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
उना उसला फिरी पूछया, “उनी तेरे ने क्या किता? उनी तिजो कियां ठीक किता?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
उनी उना ने बोलया, “मैं तां तुसां ने बोली बैठया है, कने तुसां नी सुणाया; हुण दुई बरी कजो सुणना चांदा न? क्या तुसां भी उदे चेले बणना चांदे न?”
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
तालू उना उसयो बुरा भला बोलया कने बोलया, तू ही उदा चेला है; असां तां परमेश्वर दे संदेश देणेबाले मूसा दे चेले न।
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
असां जाणदे न की परमेश्वरे मूसा ने गल्लां कितियां न; पर इस माणुऐ जो नी जाणदे न की कुथु ला आया है।
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
उनी उना जो जबाब दिता, ऐ तां हेरानिया दी गल्ल है की तुसां नी जाणदे कुथु दा है पर तमी उनी मेरियां हखी ठीक करी दितियां।
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
असां जाणदे न की परमेश्वर पापियां दी नी सुणदा है पर अगर कोई परमेश्वरे दा भक्त हो, कने उदिया इच्छा पर चलदा है, तां सै उदी सुणदा है।
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
जालू ला इस संसारे जो बणाया है तालू ला ऐ कदी नी सुणाया, की कुनी भी जनमे दे अन्ने दियां हखी ठीक कितियो होन। (aiōn g165)
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
अगर ऐ माणु परमेश्वरे दिया तरफा ला नी होंदा, तां उनी कुछ भी नी करी सकणा था।
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
उना उसयो जबाब दिता, तू तां बिलकुल पापां च जमया है, तू क्या सांझो सिखा दा है? तालू उना उसयो यहूदी जंज घर ला बाहर कडी दिता।
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
यीशुऐ सुणया, की उना उसयो यहूदी जंज घरे ला बाहर कडी दितया है; कने जालू उसला मिलया तां बोलया, “क्या तू परमेश्वरे दे पुत्रे पर भरोसा करदा है?”
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
उनी जबाब दिता, “श्रीमान जी, मिंजो दस की ऐ परमेश्वरे दा पुत्र कुण है, ताकि मैं उस पर भरोसा करी सके?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
यीशुऐ उसला बोलया, मैं, “तू मिंजो पेहले भी दिखया है कने मैं ही सै परमेश्वरे दा पुत्र है, जड़ा हुण तिजो ने गल्लां करा दा है।”
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
उनी बोलया, “प्रभु जी, मैं तिजो पर भरोसा करदा है।” कने उसयो दण्डवत किता।
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
तालू यीशुऐ बोलया, “मैं इस संसारे च इस न्याय जो करणे तांई आया है: ताकि अन्ने लोकां जो मिलणा लग्गी पोणा कने जिना लोकां जो मिलदा है सै अन्ने होई जाणे।”
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
जड़े फरीसी उदे सोगी थे, उना ऐ गल्लां सुणीकरी उसला बोलया, “क्या तू बोला दा है की असां भी अन्ने न?”
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
यीशुऐ उना ने बोलया, अगर तुसां अन्ने होंदे तां पापी नी होणा था पर हुण बोलदे न, की सांझो मिलदा है, इस तांई तुहाड़े पाप माफ नी किते जाणे न।

< யோவான் 9 >