< யோவான் 8 >
1 ௧ இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
ప్రత్యూషే యీశుః పనర్మన్దిరమ్ ఆగచ్ఛత్
2 ௨ மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
తతః సర్వ్వేషు లోకేషు తస్య సమీప ఆగతేషు స ఉపవిశ్య తాన్ ఉపదేష్టుమ్ ఆరభత|
3 ௩ அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
తదా అధ్యాపకాః ఫిరూశినఞ్చ వ్యభిచారకర్మ్మణి ధృతం స్త్రియమేకామ్ ఆనియ సర్వ్వేషాం మధ్యే స్థాపయిత్వా వ్యాహరన్
4 ௪ போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
హే గురో యోషితమ్ ఇమాం వ్యభిచారకర్మ్మ కుర్వ్వాణాం లోకా ధృతవన్తః|
5 ௫ இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
ఏతాదృశలోకాః పాషాణాఘాతేన హన్తవ్యా ఇతి విధిర్మూసావ్యవస్థాగ్రన్థే లిఖితోస్తి కిన్తు భవాన్ కిమాదిశతి?
6 ௬ அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
తే తమపవదితుం పరీక్షాభిప్రాయేణ వాక్యమిదమ్ అపృచ్ఛన్ కిన్తు స ప్రహ్వీభూయ భూమావఙ్గల్యా లేఖితుమ్ ఆరభత|
7 ௭ அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,
తతస్తైః పునః పునః పృష్ట ఉత్థాయ కథితవాన్ యుష్మాకం మధ్యే యో జనో నిరపరాధీ సఏవ ప్రథమమ్ ఏనాం పాషాణేనాహన్తు|
8 ௮ அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
పశ్చాత్ స పునశ్చ ప్రహ్వీభూయ భూమౌ లేఖితుమ్ ఆరభత|
9 ௯ அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.
తాం కథం శ్రుత్వా తే స్వస్వమనసి ప్రబోధం ప్రాప్య జ్యేష్ఠానుక్రమం ఏకైకశః సర్వ్వే బహిరగచ్ఛన్ తతో యీశురేకాకీ తయక్త్తోభవత్ మధ్యస్థానే దణ్డాయమానా సా యోషా చ స్థితా|
10 ௧0 இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
తత్పశ్చాద్ యీశురుత్థాయ తాం వనితాం వినా కమప్యపరం న విలోక్య పృష్టవాన్ హే వామే తవాపవాదకాః కుత్ర? కోపి త్వాం కిం న దణ్డయతి?
11 ௧௧ அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.
సావదత్ హే మహేచ్ఛ కోపి న తదా యీశురవోచత్ నాహమపి దణ్డయామి యాహి పునః పాపం మాకార్షీః|
12 ௧௨ மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
తతో యీశుః పునరపి లోకేభ్య ఇత్థం కథయితుమ్ ఆరభత జగతోహం జ్యోతిఃస్వరూపో యః కశ్చిన్ మత్పశ్చాద గచ్ఛతి స తిమిరే న భ్రమిత్వా జీవనరూపాం దీప్తిం ప్రాప్స్యతి|
13 ௧௩ அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
తతః ఫిరూశినోఽవాదిషుస్త్వం స్వార్థే స్వయం సాక్ష్యం దదాసి తస్మాత్ తవ సాక్ష్యం గ్రాహ్యం న భవతి|
14 ௧௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
తదా యీశుః ప్రత్యుదితవాన్ యద్యపి స్వార్థేఽహం స్వయం సాక్ష్యం దదామి తథాపి మత్ సాక్ష్యం గ్రాహ్యం యస్మాద్ అహం కుత ఆగతోస్మి క్వ యామి చ తదహం జానామి కిన్తు కుత ఆగతోస్మి కుత్ర గచ్ఛామి చ తద్ యూయం న జానీథ|
15 ௧௫ நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
యూయం లౌకికం విచారయథ నాహం కిమపి విచారయామి|
16 ௧௬ நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
కిన్తు యది విచారయామి తర్హి మమ విచారో గ్రహీతవ్యో యతోహమ్ ఏకాకీ నాస్మి ప్రేరయితా పితా మయా సహ విద్యతే|
17 ௧௭ இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.
ద్వయో ర్జనయోః సాక్ష్యం గ్రహణీయం భవతీతి యుష్మాకం వ్యవస్థాగ్రన్థే లిఖితమస్తి|
18 ௧௮ நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.
అహం స్వార్థే స్వయం సాక్షిత్వం దదామి యశ్చ మమ తాతో మాం ప్రేరితవాన్ సోపి మదర్థే సాక్ష్యం దదాతి|
19 ௧௯ அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
తదా తేఽపృచ్ఛన్ తవ తాతః కుత్ర? తతో యీశుః ప్రత్యవాదీద్ యూయం మాం న జానీథ మత్పితరఞ్చ న జానీథ యది మామ్ అక్షాస్యత తర్హి మమ తాతమప్యక్షాస్యత|
20 ௨0 தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
యీశు ర్మన్దిర ఉపదిశ్య భణ్డాగారే కథా ఏతా అకథయత్ తథాపి తం ప్రతి కోపి కరం నోదతోలయత్|
21 ௨௧ இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
తతః పరం యీశుః పునరుదితవాన్ అధునాహం గచ్ఛామి యూయం మాం గవేషయిష్యథ కిన్తు నిజైః పాపై ర్మరిష్యథ యత్ స్థానమ్ అహం యాస్యామి తత్ స్థానమ్ యూయం యాతుం న శక్ష్యథ|
22 ௨௨ அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
తదా యిహూదీయాః ప్రావోచన్ కిమయమ్ ఆత్మఘాతం కరిష్యతి? యతో యత్ స్థానమ్ అహం యాస్యామి తత్ స్థానమ్ యూయం యాతుం న శక్ష్యథ ఇతి వాక్యం బ్రవీతి|
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
తతో యీశుస్తేభ్యః కథితవాన్ యూయమ్ అధఃస్థానీయా లోకా అహమ్ ఊర్ద్వ్వస్థానీయః యూయమ్ ఏతజ్జగత్సమ్బన్ధీయా అహమ్ ఏతజ్జగత్సమ్బన్ధీయో న|
24 ௨௪ ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
తస్మాత్ కథితవాన్ యూయం నిజైః పాపై ర్మరిష్యథ యతోహం స పుమాన్ ఇతి యది న విశ్వసిథ తర్హి నిజైః పాపై ర్మరిష్యథ|
25 ௨௫ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
తదా తే ఽపృచ్ఛన్ కస్త్వం? తతో యీశుః కథితవాన్ యుష్మాకం సన్నిధౌ యస్య ప్రస్తావమ్ ఆ ప్రథమాత్ కరోమి సఏవ పురుషోహం|
26 ௨௬ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
యుష్మాసు మయా బహువాక్యం వక్త్తవ్యం విచారయితవ్యఞ్చ కిన్తు మత్ప్రేరయితా సత్యవాదీ తస్య సమీపే యదహం శ్రుతవాన్ తదేవ జగతే కథయామి|
27 ௨௭ பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
కిన్తు స జనకే వాక్యమిదం ప్రోక్త్తవాన్ ఇతి తే నాబుధ్యన్త|
28 ௨௮ ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
తతో యీశురకథయద్ యదా మనుష్యపుత్రమ్ ఊర్ద్వ్వ ఉత్థాపయిష్యథ తదాహం స పుమాన్ కేవలః స్వయం కిమపి కర్మ్మ న కరోమి కిన్తు తాతో యథా శిక్షయతి తదనుసారేణ వాక్యమిదం వదామీతి చ యూయం జ్ఞాతుం శక్ష్యథ|
29 ௨௯ என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
మత్ప్రేరయితా పితా మామ్ ఏకాకినం న త్యజతి స మయా సార్ద్ధం తిష్ఠతి యతోహం తదభిమతం కర్మ్మ సదా కరోమి|
30 ௩0 இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
తదా తస్యైతాని వాక్యాని శ్రుత్వా బహువస్తాస్మిన్ వ్యశ్వసన్|
31 ௩௧ இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
యే యిహూదీయా వ్యశ్వసన్ యీశుస్తేభ్యోఽకథయత్
32 ௩௨ சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
మమ వాక్యే యది యూయమ్ ఆస్థాం కురుథ తర్హి మమ శిష్యా భూత్వా సత్యత్వం జ్ఞాస్యథ తతః సత్యతయా యుష్మాకం మోక్షో భవిష్యతి|
33 ௩௩ அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
తదా తే ప్రత్యవాదిషుః వయమ్ ఇబ్రాహీమో వంశః కదాపి కస్యాపి దాసా న జాతాస్తర్హి యుష్మాకం ముక్త్తి ర్భవిష్యతీతి వాక్యం కథం బ్రవీషి?
34 ௩௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
తదా యీశుః ప్రత్యవదద్ యుష్మానహం యథార్థతరం వదామి యః పాపం కరోతి స పాపస్య దాసః|
35 ௩௫ அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
దాసశ్చ నిరన్తరం నివేశనే న తిష్ఠతి కిన్తు పుత్రో నిరన్తరం తిష్ఠతి| (aiōn )
36 ௩௬ ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
అతః పుత్రో యది యుష్మాన్ మోచయతి తర్హి నితాన్తమేవ ముక్త్తా భవిష్యథ|
37 ௩௭ நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
యుయమ్ ఇబ్రాహీమో వంశ ఇత్యహం జానామి కిన్తు మమ కథా యుష్మాకమ్ అన్తఃకరణేషు స్థానం న ప్రాప్నువన్తి తస్మాద్ధేతో ర్మాం హన్తుమ్ ఈహధ్వే|
38 ௩௮ நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.
అహం స్వపితుః సమీపే యదపశ్యం తదేవ కథయామి తథా యూయమపి స్వపితుః సమీపే యదపశ్యత తదేవ కురుధ్వే|
39 ௩௯ அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.
తదా తే ప్రత్యవోచన్ ఇబ్రాహీమ్ అస్మాకం పితా తతో యీశురకథయద్ యది యూయమ్ ఇబ్రాహీమః సన్తానా అభవిష్యత తర్హి ఇబ్రాహీమ ఆచారణవద్ ఆచరిష్యత|
40 ௪0 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
ఈశ్వరస్య ముఖాత్ సత్యం వాక్యం శ్రుత్వా యుష్మాన్ జ్ఞాపయామి యోహం తం మాం హన్తుం చేష్టధ్వే ఇబ్రాహీమ్ ఏతాదృశం కర్మ్మ న చకార|
41 ௪௧ நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.
యూయం స్వస్వపితుః కర్మ్మాణి కురుథ తదా తైరుక్త్తం న వయం జారజాతా అస్మాకమ్ ఏకఏవ పితాస్తి స ఏవేశ్వరః
42 ௪௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
తతో యీశునా కథితమ్ ఈశ్వరో యది యుష్మాకం తాతోభవిష్యత్ తర్హి యూయం మయి ప్రేమాకరిష్యత యతోహమ్ ఈశ్వరాన్నిర్గత్యాగతోస్మి స్వతో నాగతోహం స మాం ప్రాహిణోత్|
43 ௪௩ என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
యూయం మమ వాక్యమిదం న బుధ్యధ్వే కుతః? యతో యూయం మమోపదేశం సోఢుం న శక్నుథ|
44 ௪௪ நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.
యూయం శైతాన్ పితుః సన్తానా ఏతస్మాద్ యుష్మాకం పితురభిలాషం పూరయథ స ఆ ప్రథమాత్ నరఘాతీ తదన్తః సత్యత్వస్య లేశోపి నాస్తి కారణాదతః స సత్యతాయాం నాతిష్ఠత్ స యదా మృషా కథయతి తదా నిజస్వభావానుసారేణైవ కథయతి యతో స మృషాభాషీ మృషోత్పాదకశ్చ|
45 ௪௫ நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
అహం తథ్యవాక్యం వదామి కారణాదస్మాద్ యూయం మాం న ప్రతీథ|
46 ௪௬ என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.
మయి పాపమస్తీతి ప్రమాణం యుష్మాకం కో దాతుం శక్నోతి? యద్యహం తథ్యవాక్యం వదామి తర్హి కుతో మాం న ప్రతిథ?
47 ௪௭ தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.
యః కశ్చన ఈశ్వరీయో లోకః స ఈశ్వరీయకథాయాం మనో నిధత్తే యూయమ్ ఈశ్వరీయలోకా న భవథ తన్నిదానాత్ తత్ర న మనాంసి నిధద్వే|
48 ௪௮ அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
తదా యిహూదీయాః ప్రత్యవాదిషుః త్వమేకః శోమిరోణీయో భూతగ్రస్తశ్చ వయం కిమిదం భద్రం నావాదిష్మ?
49 ௪௯ அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.
తతో యీశుః ప్రత్యవాదీత్ నాహం భూతగ్రస్తః కిన్తు నిజతాతం సమ్మన్యే తస్మాద్ యూయం మామ్ అపమన్యధ్వే|
50 ௫0 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
అహం స్వసుఖ్యాతిం న చేష్టే కిన్తు చేష్టితా విచారయితా చాపర ఏక ఆస్తే|
51 ௫௧ ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
అహం యుష్మభ్యమ్ అతీవ యథార్థం కథయామి యో నరో మదీయం వాచం మన్యతే స కదాచన నిధనం న ద్రక్ష్యతి| (aiōn )
52 ௫௨ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
యిహూదీయాస్తమవదన్ త్వం భూతగ్రస్త ఇతీదానీమ్ అవైష్మ| ఇబ్రాహీమ్ భవిష్యద్వాదినఞ్చ సర్వ్వే మృతాః కిన్తు త్వం భాషసే యో నరో మమ భారతీం గృహ్లాతి స జాతు నిధానాస్వాదం న లప్స్యతే| (aiōn )
53 ௫௩ எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.
తర్హి త్వం కిమ్ అస్మాకం పూర్వ్వపురుషాద్ ఇబ్రాహీమోపి మహాన్? యస్మాత్ సోపి మృతః భవిష్యద్వాదినోపి మృతాః త్వం స్వం కం పుమాంసం మనుషే?
54 ௫௪ இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
యీశుః ప్రత్యవోచద్ యద్యహం స్వం స్వయం సమ్మన్యే తర్హి మమ తత్ సమ్మననం కిమపి న కిన్తు మమ తాతో యం యూయం స్వీయమ్ ఈశ్వరం భాషధ్వే సఏవ మాం సమ్మనుతే|
55 ௫௫ ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.
యూయం తం నావగచ్ఛథ కిన్త్వహం తమవగచ్ఛామి తం నావగచ్ఛామీతి వాక్యం యది వదామి తర్హి యూయమివ మృషాభాషీ భవామి కిన్త్వహం తమవగచ్ఛామి తదాక్షామపి గృహ్లామి|
56 ௫௬ உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.
యుష్మాకం పూర్వ్వపురుష ఇబ్రాహీమ్ మమ సమయం ద్రష్టుమ్ అతీవావాఞ్ఛత్ తన్నిరీక్ష్యానన్దచ్చ|
57 ௫௭ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
తదా యిహూదీయా అపృచ్ఛన్ తవ వయః పఞ్చాశద్వత్సరా న త్వం కిమ్ ఇబ్రాహీమమ్ అద్రాక్షీః?
58 ௫௮ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
యీశుః ప్రత్యవాదీద్ యుష్మానహం యథార్థతరం వదామి ఇబ్రాహీమో జన్మనః పూర్వ్వకాలమారభ్యాహం విద్యే|
59 ௫௯ அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.
తదా తే పాషాణాన్ ఉత్తోల్య తమాహన్తుమ్ ఉదయచ్ఛన్ కిన్తు యీశు ర్గుప్తో మన్తిరాద్ బహిర్గత్య తేషాం మధ్యేన ప్రస్థితవాన్|