< யோவான் 8 >

1 இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
ප්‍රත්‍යූෂේ යීශුඃ පනර්මන්දිරම් ආගච්ඡත්
2 மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
තතඃ සර්ව්වේෂු ලෝකේෂු තස්‍ය සමීප ආගතේෂු ස උපවිශ්‍ය තාන් උපදේෂ්ටුම් ආරභත|
3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
තදා අධ්‍යාපකාඃ ඵිරූශිනඤ්ච ව්‍යභිචාරකර්ම්මණි ධෘතං ස්ත්‍රියමේකාම් ආනිය සර්ව්වේෂාං මධ්‍යේ ස්ථාපයිත්වා ව්‍යාහරන්
4 போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
හේ ගුරෝ යෝෂිතම් ඉමාං ව්‍යභිචාරකර්ම්ම කුර්ව්වාණාං ලෝකා ධෘතවන්තඃ|
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
ඒතාදෘශලෝකාඃ පාෂාණාඝාතේන හන්තව්‍යා ඉති විධිර්මූසාව්‍යවස්ථාග්‍රන්ථේ ලිඛිතෝස්ති කින්තු භවාන් කිමාදිශති?
6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
තේ තමපවදිතුං පරීක්‍ෂාභිප්‍රායේණ වාක්‍යමිදම් අපෘච්ඡන් කින්තු ස ප්‍රහ්වීභූය භූමාවඞ්ගල්‍යා ලේඛිතුම් ආරභත|
7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,
තතස්තෛඃ පුනඃ පුනඃ පෘෂ්ට උත්ථාය කථිතවාන් යුෂ්මාකං මධ්‍යේ යෝ ජනෝ නිරපරාධී සඒව ප්‍රථමම් ඒනාං පාෂාණේනාහන්තු|
8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
පශ්චාත් ස පුනශ්ච ප්‍රහ්වීභූය භූමෞ ලේඛිතුම් ආරභත|
9 அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.
තාං කථං ශ්‍රුත්වා තේ ස්වස්වමනසි ප්‍රබෝධං ප්‍රාප්‍ය ජ්‍යේෂ්ඨානුක්‍රමං ඒකෛකශඃ සර්ව්වේ බහිරගච්ඡන් තතෝ යීශුරේකාකී තයක්ත්තෝභවත් මධ්‍යස්ථානේ දණ්ඩායමානා සා යෝෂා ච ස්ථිතා|
10 ௧0 இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
තත්පශ්චාද් යීශුරුත්ථාය තාං වනිතාං විනා කමප්‍යපරං න විලෝක්‍ය පෘෂ්ටවාන් හේ වාමේ තවාපවාදකාඃ කුත්‍ර? කෝපි ත්වාං කිං න දණ්ඩයති?
11 ௧௧ அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.
සාවදත් හේ මහේච්ඡ කෝපි න තදා යීශුරවෝචත් නාහමපි දණ්ඩයාමි යාහි පුනඃ පාපං මාකාර්ෂීඃ|
12 ௧௨ மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
තතෝ යීශුඃ පුනරපි ලෝකේභ්‍ය ඉත්ථං කථයිතුම් ආරභත ජගතෝහං ජ්‍යෝතිඃස්වරූපෝ යඃ කශ්චින් මත්පශ්චාද ගච්ඡති ස තිමිරේ න භ්‍රමිත්වා ජීවනරූපාං දීප්තිං ප්‍රාප්ස්‍යති|
13 ௧௩ அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
තතඃ ඵිරූශිනෝ(අ)වාදිෂුස්ත්වං ස්වාර්ථේ ස්වයං සාක්‍ෂ්‍යං දදාසි තස්මාත් තව සාක්‍ෂ්‍යං ග්‍රාහ්‍යං න භවති|
14 ௧௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
තදා යීශුඃ ප්‍රත්‍යුදිතවාන් යද්‍යපි ස්වාර්ථේ(අ)හං ස්වයං සාක්‍ෂ්‍යං දදාමි තථාපි මත් සාක්‍ෂ්‍යං ග්‍රාහ්‍යං යස්මාද් අහං කුත ආගතෝස්මි ක්ව යාමි ච තදහං ජානාමි කින්තු කුත ආගතෝස්මි කුත්‍ර ගච්ඡාමි ච තද් යූයං න ජානීථ|
15 ௧௫ நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
යූයං ලෞකිකං විචාරයථ නාහං කිමපි විචාරයාමි|
16 ௧௬ நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
කින්තු යදි විචාරයාමි තර්හි මම විචාරෝ ග්‍රහීතව්‍යෝ යතෝහම් ඒකාකී නාස්මි ප්‍රේරයිතා පිතා මයා සහ විද්‍යතේ|
17 ௧௭ இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.
ද්වයෝ ර්ජනයෝඃ සාක්‍ෂ්‍යං ග්‍රහණීයං භවතීති යුෂ්මාකං ව්‍යවස්ථාග්‍රන්ථේ ලිඛිතමස්ති|
18 ௧௮ நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.
අහං ස්වාර්ථේ ස්වයං සාක්‍ෂිත්වං දදාමි යශ්ච මම තාතෝ මාං ප්‍රේරිතවාන් සෝපි මදර්ථේ සාක්‍ෂ්‍යං දදාති|
19 ௧௯ அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
තදා තේ(අ)පෘච්ඡන් තව තාතඃ කුත්‍ර? තතෝ යීශුඃ ප්‍රත්‍යවාදීද් යූයං මාං න ජානීථ මත්පිතරඤ්ච න ජානීථ යදි මාම් අක්‍ෂාස්‍යත තර්හි මම තාතමප්‍යක්‍ෂාස්‍යත|
20 ௨0 தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
යීශු ර්මන්දිර උපදිශ්‍ය භණ්ඩාගාරේ කථා ඒතා අකථයත් තථාපි තං ප්‍රති කෝපි කරං නෝදතෝලයත්|
21 ௨௧ இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
තතඃ පරං යීශුඃ පුනරුදිතවාන් අධුනාහං ගච්ඡාමි යූයං මාං ගවේෂයිෂ්‍යථ කින්තු නිජෛඃ පාපෛ ර්මරිෂ්‍යථ යත් ස්ථානම් අහං යාස්‍යාමි තත් ස්ථානම් යූයං යාතුං න ශක්‍ෂ්‍යථ|
22 ௨௨ அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
තදා යිහූදීයාඃ ප්‍රාවෝචන් කිමයම් ආත්මඝාතං කරිෂ්‍යති? යතෝ යත් ස්ථානම් අහං යාස්‍යාමි තත් ස්ථානම් යූයං යාතුං න ශක්‍ෂ්‍යථ ඉති වාක්‍යං බ්‍රවීති|
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
තතෝ යීශුස්තේභ්‍යඃ කථිතවාන් යූයම් අධඃස්ථානීයා ලෝකා අහම් ඌර්ද්ව්වස්ථානීයඃ යූයම් ඒතජ්ජගත්සම්බන්ධීයා අහම් ඒතජ්ජගත්සම්බන්ධීයෝ න|
24 ௨௪ ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
තස්මාත් කථිතවාන් යූයං නිජෛඃ පාපෛ ර්මරිෂ්‍යථ යතෝහං ස පුමාන් ඉති යදි න විශ්වසිථ තර්හි නිජෛඃ පාපෛ ර්මරිෂ්‍යථ|
25 ௨௫ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
තදා තේ (අ)පෘච්ඡන් කස්ත්වං? තතෝ යීශුඃ කථිතවාන් යුෂ්මාකං සන්නිධෞ යස්‍ය ප්‍රස්තාවම් ආ ප්‍රථමාත් කරෝමි සඒව පුරුෂෝහං|
26 ௨௬ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
යුෂ්මාසු මයා බහුවාක්‍යං වක්ත්තව්‍යං විචාරයිතව්‍යඤ්ච කින්තු මත්ප්‍රේරයිතා සත්‍යවාදී තස්‍ය සමීපේ යදහං ශ්‍රුතවාන් තදේව ජගතේ කථයාමි|
27 ௨௭ பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
කින්තු ස ජනකේ වාක්‍යමිදං ප්‍රෝක්ත්තවාන් ඉති තේ නාබුධ්‍යන්ත|
28 ௨௮ ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
තතෝ යීශුරකථයද් යදා මනුෂ්‍යපුත්‍රම් ඌර්ද්ව්ව උත්ථාපයිෂ්‍යථ තදාහං ස පුමාන් කේවලඃ ස්වයං කිමපි කර්ම්ම න කරෝමි කින්තු තාතෝ යථා ශික්‍ෂයති තදනුසාරේණ වාක්‍යමිදං වදාමීති ච යූයං ඥාතුං ශක්‍ෂ්‍යථ|
29 ௨௯ என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
මත්ප්‍රේරයිතා පිතා මාම් ඒකාකිනං න ත්‍යජති ස මයා සාර්ද්ධං තිෂ්ඨති යතෝහං තදභිමතං කර්ම්ම සදා කරෝමි|
30 ௩0 இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
තදා තස්‍යෛතානි වාක්‍යානි ශ්‍රුත්වා බහුවස්තාස්මින් ව්‍යශ්වසන්|
31 ௩௧ இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
යේ යිහූදීයා ව්‍යශ්වසන් යීශුස්තේභ්‍යෝ(අ)කථයත්
32 ௩௨ சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
මම වාක්‍යේ යදි යූයම් ආස්ථාං කුරුථ තර්හි මම ශිෂ්‍යා භූත්වා සත්‍යත්වං ඥාස්‍යථ තතඃ සත්‍යතයා යුෂ්මාකං මෝක්‍ෂෝ භවිෂ්‍යති|
33 ௩௩ அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
තදා තේ ප්‍රත්‍යවාදිෂුඃ වයම් ඉබ්‍රාහීමෝ වංශඃ කදාපි කස්‍යාපි දාසා න ජාතාස්තර්හි යුෂ්මාකං මුක්ත්ති ර්භවිෂ්‍යතීති වාක්‍යං කථං බ්‍රවීෂි?
34 ௩௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
තදා යීශුඃ ප්‍රත්‍යවදද් යුෂ්මානහං යථාර්ථතරං වදාමි යඃ පාපං කරෝති ස පාපස්‍ය දාසඃ|
35 ௩௫ அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
දාසශ්ච නිරන්තරං නිවේශනේ න තිෂ්ඨති කින්තු පුත්‍රෝ නිරන්තරං තිෂ්ඨති| (aiōn g165)
36 ௩௬ ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
අතඃ පුත්‍රෝ යදි යුෂ්මාන් මෝචයති තර්හි නිතාන්තමේව මුක්ත්තා භවිෂ්‍යථ|
37 ௩௭ நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
යුයම් ඉබ්‍රාහීමෝ වංශ ඉත්‍යහං ජානාමි කින්තු මම කථා යුෂ්මාකම් අන්තඃකරණේෂු ස්ථානං න ප්‍රාප්නුවන්ති තස්මාද්ධේතෝ ර්මාං හන්තුම් ඊහධ්වේ|
38 ௩௮ நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.
අහං ස්වපිතුඃ සමීපේ යදපශ්‍යං තදේව කථයාමි තථා යූයමපි ස්වපිතුඃ සමීපේ යදපශ්‍යත තදේව කුරුධ්වේ|
39 ௩௯ அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.
තදා තේ ප්‍රත්‍යවෝචන් ඉබ්‍රාහීම් අස්මාකං පිතා තතෝ යීශුරකථයද් යදි යූයම් ඉබ්‍රාහීමඃ සන්තානා අභවිෂ්‍යත තර්හි ඉබ්‍රාහීම ආචාරණවද් ආචරිෂ්‍යත|
40 ௪0 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
ඊශ්වරස්‍ය මුඛාත් සත්‍යං වාක්‍යං ශ්‍රුත්වා යුෂ්මාන් ඥාපයාමි යෝහං තං මාං හන්තුං චේෂ්ටධ්වේ ඉබ්‍රාහීම් ඒතාදෘශං කර්ම්ම න චකාර|
41 ௪௧ நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.
යූයං ස්වස්වපිතුඃ කර්ම්මාණි කුරුථ තදා තෛරුක්ත්තං න වයං ජාරජාතා අස්මාකම් ඒකඒව පිතාස්ති ස ඒවේශ්වරඃ
42 ௪௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
තතෝ යීශුනා කථිතම් ඊශ්වරෝ යදි යුෂ්මාකං තාතෝභවිෂ්‍යත් තර්හි යූයං මයි ප්‍රේමාකරිෂ්‍යත යතෝහම් ඊශ්වරාන්නිර්ගත්‍යාගතෝස්මි ස්වතෝ නාගතෝහං ස මාං ප්‍රාහිණෝත්|
43 ௪௩ என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
යූයං මම වාක්‍යමිදං න බුධ්‍යධ්වේ කුතඃ? යතෝ යූයං මමෝපදේශං සෝඪුං න ශක්නුථ|
44 ௪௪ நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.
යූයං ශෛතාන් පිතුඃ සන්තානා ඒතස්මාද් යුෂ්මාකං පිතුරභිලාෂං පූරයථ ස ආ ප්‍රථමාත් නරඝාතී තදන්තඃ සත්‍යත්වස්‍ය ලේශෝපි නාස්ති කාරණාදතඃ ස සත්‍යතායාං නාතිෂ්ඨත් ස යදා මෘෂා කථයති තදා නිජස්වභාවානුසාරේණෛව කථයති යතෝ ස මෘෂාභාෂී මෘෂෝත්පාදකශ්ච|
45 ௪௫ நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
අහං තථ්‍යවාක්‍යං වදාමි කාරණාදස්මාද් යූයං මාං න ප්‍රතීථ|
46 ௪௬ என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.
මයි පාපමස්තීති ප්‍රමාණං යුෂ්මාකං කෝ දාතුං ශක්නෝති? යද්‍යහං තථ්‍යවාක්‍යං වදාමි තර්හි කුතෝ මාං න ප්‍රතිථ?
47 ௪௭ தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.
යඃ කශ්චන ඊශ්වරීයෝ ලෝකඃ ස ඊශ්වරීයකථායාං මනෝ නිධත්තේ යූයම් ඊශ්වරීයලෝකා න භවථ තන්නිදානාත් තත්‍ර න මනාංසි නිධද්වේ|
48 ௪௮ அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
තදා යිහූදීයාඃ ප්‍රත්‍යවාදිෂුඃ ත්වමේකඃ ශෝමිරෝණීයෝ භූතග්‍රස්තශ්ච වයං කිමිදං භද්‍රං නාවාදිෂ්ම?
49 ௪௯ அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.
තතෝ යීශුඃ ප්‍රත්‍යවාදීත් නාහං භූතග්‍රස්තඃ කින්තු නිජතාතං සම්මන්‍යේ තස්මාද් යූයං මාම් අපමන්‍යධ්වේ|
50 ௫0 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
අහං ස්වසුඛ්‍යාතිං න චේෂ්ටේ කින්තු චේෂ්ටිතා විචාරයිතා චාපර ඒක ආස්තේ|
51 ௫௧ ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
අහං යුෂ්මභ්‍යම් අතීව යථාර්ථං කථයාමි යෝ නරෝ මදීයං වාචං මන්‍යතේ ස කදාචන නිධනං න ද්‍රක්‍ෂ්‍යති| (aiōn g165)
52 ௫௨ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
යිහූදීයාස්තමවදන් ත්වං භූතග්‍රස්ත ඉතීදානීම් අවෛෂ්ම| ඉබ්‍රාහීම් භවිෂ්‍යද්වාදිනඤ්ච සර්ව්වේ මෘතාඃ කින්තු ත්වං භාෂසේ යෝ නරෝ මම භාරතීං ගෘහ්ලාති ස ජාතු නිධානාස්වාදං න ලප්ස්‍යතේ| (aiōn g165)
53 ௫௩ எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.
තර්හි ත්වං කිම් අස්මාකං පූර්ව්වපුරුෂාද් ඉබ්‍රාහීමෝපි මහාන්? යස්මාත් සෝපි මෘතඃ භවිෂ්‍යද්වාදිනෝපි මෘතාඃ ත්වං ස්වං කං පුමාංසං මනුෂේ?
54 ௫௪ இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
යීශුඃ ප්‍රත්‍යවෝචද් යද්‍යහං ස්වං ස්වයං සම්මන්‍යේ තර්හි මම තත් සම්මනනං කිමපි න කින්තු මම තාතෝ යං යූයං ස්වීයම් ඊශ්වරං භාෂධ්වේ සඒව මාං සම්මනුතේ|
55 ௫௫ ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.
යූයං තං නාවගච්ඡථ කින්ත්වහං තමවගච්ඡාමි තං නාවගච්ඡාමීති වාක්‍යං යදි වදාමි තර්හි යූයමිව මෘෂාභාෂී භවාමි කින්ත්වහං තමවගච්ඡාමි තදාක්‍ෂාමපි ගෘහ්ලාමි|
56 ௫௬ உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.
යුෂ්මාකං පූර්ව්වපුරුෂ ඉබ්‍රාහීම් මම සමයං ද්‍රෂ්ටුම් අතීවාවාඤ්ඡත් තන්නිරීක්‍ෂ්‍යානන්දච්ච|
57 ௫௭ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
තදා යිහූදීයා අපෘච්ඡන් තව වයඃ පඤ්චාශද්වත්සරා න ත්වං කිම් ඉබ්‍රාහීමම් අද්‍රාක්‍ෂීඃ?
58 ௫௮ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
යීශුඃ ප්‍රත්‍යවාදීද් යුෂ්මානහං යථාර්ථතරං වදාමි ඉබ්‍රාහීමෝ ජන්මනඃ පූර්ව්වකාලමාරභ්‍යාහං විද්‍යේ|
59 ௫௯ அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.
තදා තේ පාෂාණාන් උත්තෝල්‍ය තමාහන්තුම් උදයච්ඡන් කින්තු යීශු ර්ගුප්තෝ මන්තිරාද් බහිර්ගත්‍ය තේෂාං මධ්‍යේන ප්‍රස්ථිතවාන්|

< யோவான் 8 >