< யோவான் 7 >

1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
ತತಃ ಪರಂ ಯಿಹೂದೀಯಲೋಕಾಸ್ತಂ ಹನ್ತುಂ ಸಮೈಹನ್ತ ತಸ್ಮಾದ್ ಯೀಶು ರ್ಯಿಹೂದಾಪ್ರದೇಶೇ ಪರ್ಯ್ಯಟಿತುಂ ನೇಚ್ಛನ್ ಗಾಲೀಲ್ ಪ್ರದೇಶೇ ಪರ್ಯ್ಯಟಿತುಂ ಪ್ರಾರಭತ|
2 யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
ಕಿನ್ತು ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಯಿಹೂದೀಯಾನಾಂ ದೂಷ್ಯವಾಸನಾಮೋತ್ಸವ ಉಪಸ್ಥಿತೇ
3 அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
ತಸ್ಯ ಭ್ರಾತರಸ್ತಮ್ ಅವದನ್ ಯಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ತ್ವಯಾ ಕ್ರಿಯನ್ತೇ ತಾನಿ ಯಥಾ ತವ ಶಿಷ್ಯಾಃ ಪಶ್ಯನ್ತಿ ತದರ್ಥಂ ತ್ವಮಿತಃ ಸ್ಥಾನಾದ್ ಯಿಹೂದೀಯದೇಶಂ ವ್ರಜ|
4 பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
ಯಃ ಕಶ್ಚಿತ್ ಸ್ವಯಂ ಪ್ರಚಿಕಾಶಿಷತಿ ಸ ಕದಾಪಿ ಗುಪ್ತಂ ಕರ್ಮ್ಮ ನ ಕರೋತಿ ಯದೀದೃಶಂ ಕರ್ಮ್ಮ ಕರೋಷಿ ತರ್ಹಿ ಜಗತಿ ನಿಜಂ ಪರಿಚಾಯಯ|
5 அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
ಯತಸ್ತಸ್ಯ ಭ್ರಾತರೋಪಿ ತಂ ನ ವಿಶ್ವಸನ್ತಿ|
6 இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
ತದಾ ಯೀಶುಸ್ತಾನ್ ಅವೋಚತ್ ಮಮ ಸಮಯ ಇದಾನೀಂ ನೋಪತಿಷ್ಠತಿ ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಕಂ ಸಮಯಃ ಸತತಮ್ ಉಪತಿಷ್ಠತಿ|
7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
ಜಗತೋ ಲೋಕಾ ಯುಷ್ಮಾನ್ ಋತೀಯಿತುಂ ನ ಶಕ್ರುವನ್ತಿ ಕಿನ್ತು ಮಾಮೇವ ಋತೀಯನ್ತೇ ಯತಸ್ತೇಷಾಂ ಕರ್ಮಾಣಿ ದುಷ್ಟಾನಿ ತತ್ರ ಸಾಕ್ಷ್ಯಮಿದಮ್ ಅಹಂ ದದಾಮಿ|
8 நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
ಅತಏವ ಯೂಯಮ್ ಉತ್ಸವೇಽಸ್ಮಿನ್ ಯಾತ ನಾಹಮ್ ಇದಾನೀಮ್ ಅಸ್ಮಿನ್ನುತ್ಸವೇ ಯಾಮಿ ಯತೋ ಮಮ ಸಮಯ ಇದಾನೀಂ ನ ಸಮ್ಪೂರ್ಣಃ|
9 இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
ಇತಿ ವಾಕ್ಯಮ್ ಉಕ್ತ್ತ್ವಾ ಸ ಗಾಲೀಲಿ ಸ್ಥಿತವಾನ್
10 ௧0 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
ಕಿನ್ತು ತಸ್ಯ ಭ್ರಾತೃಷು ತತ್ರ ಪ್ರಸ್ಥಿತೇಷು ಸತ್ಸು ಸೋಽಪ್ರಕಟ ಉತ್ಸವಮ್ ಅಗಚ್ಛತ್|
11 ௧௧ பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
ಅನನ್ತರಮ್ ಉತ್ಸವಮ್ ಉಪಸ್ಥಿತಾ ಯಿಹೂದೀಯಾಸ್ತಂ ಮೃಗಯಿತ್ವಾಪೃಚ್ಛನ್ ಸ ಕುತ್ರ?
12 ௧௨ மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ತತೋ ಲೋಕಾನಾಂ ಮಧ್ಯೇ ತಸ್ಮಿನ್ ನಾನಾವಿಧಾ ವಿವಾದಾ ಭವಿತುಮ್ ಆರಬ್ಧವನ್ತಃ| ಕೇಚಿದ್ ಅವೋಚನ್ ಸ ಉತ್ತಮಃ ಪುರುಷಃ ಕೇಚಿದ್ ಅವೋಚನ್ ನ ತಥಾ ವರಂ ಲೋಕಾನಾಂ ಭ್ರಮಂ ಜನಯತಿ|
13 ௧௩ ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯಾನಾಂ ಭಯಾತ್ ಕೋಪಿ ತಸ್ಯ ಪಕ್ಷೇ ಸ್ಪಷ್ಟಂ ನಾಕಥಯತ್|
14 ௧௪ பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
ತತಃ ಪರಮ್ ಉತ್ಸವಸ್ಯ ಮಧ್ಯಸಮಯೇ ಯೀಶು ರ್ಮನ್ದಿರಂ ಗತ್ವಾ ಸಮುಪದಿಶತಿ ಸ್ಮ|
15 ௧௫ அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
ತತೋ ಯಿಹೂದೀಯಾ ಲೋಕಾ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಜ್ಞಾತ್ವಾಕಥಯನ್ ಏಷಾ ಮಾನುಷೋ ನಾಧೀತ್ಯಾ ಕಥಮ್ ಏತಾದೃಶೋ ವಿದ್ವಾನಭೂತ್?
16 ௧௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯವೋಚದ್ ಉಪದೇಶೋಯಂ ನ ಮಮ ಕಿನ್ತು ಯೋ ಮಾಂ ಪ್ರೇಷಿತವಾನ್ ತಸ್ಯ|
17 ௧௭ அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
ಯೋ ಜನೋ ನಿದೇಶಂ ತಸ್ಯ ಗ್ರಹೀಷ್ಯತಿ ಮಮೋಪದೇಶೋ ಮತ್ತೋ ಭವತಿ ಕಿಮ್ ಈಶ್ವರಾದ್ ಭವತಿ ಸ ಗನಸ್ತಜ್ಜ್ಞಾತುಂ ಶಕ್ಷ್ಯತಿ|
18 ௧௮ சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
ಯೋ ಜನಃ ಸ್ವತಃ ಕಥಯತಿ ಸ ಸ್ವೀಯಂ ಗೌರವಮ್ ಈಹತೇ ಕಿನ್ತು ಯಃ ಪ್ರೇರಯಿತು ರ್ಗೌರವಮ್ ಈಹತೇ ಸ ಸತ್ಯವಾದೀ ತಸ್ಮಿನ್ ಕೋಪ್ಯಧರ್ಮ್ಮೋ ನಾಸ್ತಿ|
19 ௧௯ மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
ಮೂಸಾ ಯುಷ್ಮಭ್ಯಂ ವ್ಯವಸ್ಥಾಗ್ರನ್ಥಂ ಕಿಂ ನಾದದಾತ್? ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಕಂ ಕೋಪಿ ತಾಂ ವ್ಯವಸ್ಥಾಂ ನ ಸಮಾಚರತಿ| ಮಾಂ ಹನ್ತುಂ ಕುತೋ ಯತಧ್ವೇ?
20 ௨0 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
ತದಾ ಲೋಕಾ ಅವದನ್ ತ್ವಂ ಭೂತಗ್ರಸ್ತಸ್ತ್ವಾಂ ಹನ್ತುಂ ಕೋ ಯತತೇ?
21 ௨௧ இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
ತತೋ ಯೀಶುರವೋಚದ್ ಏಕಂ ಕರ್ಮ್ಮ ಮಯಾಕಾರಿ ತಸ್ಮಾದ್ ಯೂಯಂ ಸರ್ವ್ವ ಮಹಾಶ್ಚರ್ಯ್ಯಂ ಮನ್ಯಧ್ವೇ|
22 ௨௨ விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
ಮೂಸಾ ಯುಷ್ಮಭ್ಯಂ ತ್ವಕ್ಛೇದವಿಧಿಂ ಪ್ರದದೌ ಸ ಮೂಸಾತೋ ನ ಜಾತಃ ಕಿನ್ತು ಪಿತೃಪುರುಷೇಭ್ಯೋ ಜಾತಃ ತೇನ ವಿಶ್ರಾಮವಾರೇಽಪಿ ಮಾನುಷಾಣಾಂ ತ್ವಕ್ಛೇದಂ ಕುರುಥ|
23 ௨௩ மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
ಅತಏವ ವಿಶ್ರಾಮವಾರೇ ಮನುಷ್ಯಾಣಾಂ ತ್ವಕ್ಛೇದೇ ಕೃತೇ ಯದಿ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಾಮಙ್ಗನಂ ನ ಭವತಿ ತರ್ಹಿ ಮಯಾ ವಿಶ್ರಾಮವಾರೇ ಮಾನುಷಃ ಸಮ್ಪೂರ್ಣರೂಪೇಣ ಸ್ವಸ್ಥೋಽಕಾರಿ ತತ್ಕಾರಣಾದ್ ಯೂಯಂ ಕಿಂ ಮಹ್ಯಂ ಕುಪ್ಯಥ?
24 ௨௪ தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
ಸಪಕ್ಷಪಾತಂ ವಿಚಾರಮಕೃತ್ವಾ ನ್ಯಾಯ್ಯಂ ವಿಚಾರಂ ಕುರುತ|
25 ௨௫ அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
ತದಾ ಯಿರೂಶಾಲಮ್ ನಿವಾಸಿನಃ ಕತಿಪಯಜನಾ ಅಕಥಯನ್ ಇಮೇ ಯಂ ಹನ್ತುಂ ಚೇಷ್ಟನ್ತೇ ಸ ಏವಾಯಂ ಕಿಂ ನ?
26 ௨௬ இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
ಕಿನ್ತು ಪಶ್ಯತ ನಿರ್ಭಯಃ ಸನ್ ಕಥಾಂ ಕಥಯತಿ ತಥಾಪಿ ಕಿಮಪಿ ಅ ವದನ್ತ್ಯೇತೇ ಅಯಮೇವಾಭಿಷಿಕ್ತ್ತೋ ಭವತೀತಿ ನಿಶ್ಚಿತಂ ಕಿಮಧಿಪತಯೋ ಜಾನನ್ತಿ?
27 ௨௭ இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
ಮನುಜೋಯಂ ಕಸ್ಮಾದಾಗಮದ್ ಇತಿ ವಯಂ ಜಾನೋಮಃ ಕಿನ್ತ್ವಭಿಷಿಕ್ತ್ತ ಆಗತೇ ಸ ಕಸ್ಮಾದಾಗತವಾನ್ ಇತಿ ಕೋಪಿ ಜ್ಞಾತುಂ ನ ಶಕ್ಷ್ಯತಿ|
28 ௨௮ அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
ತದಾ ಯೀಶು ರ್ಮಧ್ಯೇಮನ್ದಿರಮ್ ಉಪದಿಶನ್ ಉಚ್ಚೈಃಕಾರಮ್ ಉಕ್ತ್ತವಾನ್ ಯೂಯಂ ಕಿಂ ಮಾಂ ಜಾನೀಥ? ಕಸ್ಮಾಚ್ಚಾಗತೋಸ್ಮಿ ತದಪಿ ಕಿಂ ಜಾನೀಥ? ನಾಹಂ ಸ್ವತ ಆಗತೋಸ್ಮಿ ಕಿನ್ತು ಯಃ ಸತ್ಯವಾದೀ ಸಏವ ಮಾಂ ಪ್ರೇಷಿತವಾನ್ ಯೂಯಂ ತಂ ನ ಜಾನೀಥ|
29 ௨௯ நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
ತಮಹಂ ಜಾನೇ ತೇನಾಹಂ ಪ್ರೇರಿತ ಅಗತೋಸ್ಮಿ|
30 ௩0 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ತಸ್ಮಾದ್ ಯಿಹೂದೀಯಾಸ್ತಂ ಧರ್ತ್ತುಮ್ ಉದ್ಯತಾಸ್ತಥಾಪಿ ಕೋಪಿ ತಸ್ಯ ಗಾತ್ರೇ ಹಸ್ತಂ ನಾರ್ಪಯದ್ ಯತೋ ಹೇತೋಸ್ತದಾ ತಸ್ಯ ಸಮಯೋ ನೋಪತಿಷ್ಠತಿ|
31 ௩௧ மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
ಕಿನ್ತು ಬಹವೋ ಲೋಕಾಸ್ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸ್ಯ ಕಥಿತವಾನ್ತೋಽಭಿಷಿಕ್ತ್ತಪುರುಷ ಆಗತ್ಯ ಮಾನುಷಸ್ಯಾಸ್ಯ ಕ್ರಿಯಾಭ್ಯಃ ಕಿಮ್ ಅಧಿಕಾ ಆಶ್ಚರ್ಯ್ಯಾಃ ಕ್ರಿಯಾಃ ಕರಿಷ್ಯತಿ?
32 ௩௨ மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
ತತಃ ಪರಂ ಲೋಕಾಸ್ತಸ್ಮಿನ್ ಇತ್ಥಂ ವಿವದನ್ತೇ ಫಿರೂಶಿನಃ ಪ್ರಧಾನಯಾಜಕಾಞ್ಚೇತಿ ಶ್ರುತವನ್ತಸ್ತಂ ಧೃತ್ವಾ ನೇತುಂ ಪದಾತಿಗಣಂ ಪ್ರೇಷಯಾಮಾಸುಃ|
33 ௩௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
ತತೋ ಯೀಶುರವದದ್ ಅಹಮ್ ಅಲ್ಪದಿನಾನಿ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಸ್ಥಿತ್ವಾ ಮತ್ಪ್ರೇರಯಿತುಃ ಸಮೀಪಂ ಯಾಸ್ಯಾಮಿ|
34 ௩௪ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
ಮಾಂ ಮೃಗಯಿಷ್ಯಧ್ವೇ ಕಿನ್ತೂದ್ದೇಶಂ ನ ಲಪ್ಸ್ಯಧ್ವೇ ರತ್ರ ಸ್ಥಾಸ್ಯಾಮಿ ತತ್ರ ಯೂಯಂ ಗನ್ತುಂ ನ ಶಕ್ಷ್ಯಥ|
35 ௩௫ அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
ತದಾ ಯಿಹೂದೀಯಾಃ ಪರಸ್ಪರಂ ವಕ್ತ್ತುಮಾರೇಭಿರೇ ಅಸ್ಯೋದ್ದೇಶಂ ನ ಪ್ರಾಪ್ಸ್ಯಾಮ ಏತಾದೃಶಂ ಕಿಂ ಸ್ಥಾನಂ ಯಾಸ್ಯತಿ? ಭಿನ್ನದೇಶೇ ವಿಕೀರ್ಣಾನಾಂ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಸನ್ನಿಧಿಮ್ ಏಷ ಗತ್ವಾ ತಾನ್ ಉಪದೇಕ್ಷ್ಯತಿ ಕಿಂ?
36 ௩௬ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ನೋ ಚೇತ್ ಮಾಂ ಗವೇಷಯಿಷ್ಯಥ ಕಿನ್ತೂದ್ದೇಶಂ ನ ಪ್ರಾಪ್ಸ್ಯಥ ಏಷ ಕೋದೃಶಂ ವಾಕ್ಯಮಿದಂ ವದತಿ?
37 ௩௭ பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
ಅನನ್ತರಮ್ ಉತ್ಸವಸ್ಯ ಚರಮೇಽಹನಿ ಅರ್ಥಾತ್ ಪ್ರಧಾನದಿನೇ ಯೀಶುರುತ್ತಿಷ್ಠನ್ ಉಚ್ಚೈಃಕಾರಮ್ ಆಹ್ವಯನ್ ಉದಿತವಾನ್ ಯದಿ ಕಶ್ಚಿತ್ ತೃಷಾರ್ತ್ತೋ ಭವತಿ ತರ್ಹಿ ಮಮಾನ್ತಿಕಮ್ ಆಗತ್ಯ ಪಿವತು|
38 ௩௮ வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
ಯಃ ಕಶ್ಚಿನ್ಮಯಿ ವಿಶ್ವಸಿತಿ ಧರ್ಮ್ಮಗ್ರನ್ಥಸ್ಯ ವಚನಾನುಸಾರೇಣ ತಸ್ಯಾಭ್ಯನ್ತರತೋಽಮೃತತೋಯಸ್ಯ ಸ್ರೋತಾಂಸಿ ನಿರ್ಗಮಿಷ್ಯನ್ತಿ|
39 ௩௯ தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
ಯೇ ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸನ್ತಿ ತ ಆತ್ಮಾನಂ ಪ್ರಾಪ್ಸ್ಯನ್ತೀತ್ಯರ್ಥೇ ಸ ಇದಂ ವಾಕ್ಯಂ ವ್ಯಾಹೃತವಾನ್ ಏತತ್ಕಾಲಂ ಯಾವದ್ ಯೀಶು ರ್ವಿಭವಂ ನ ಪ್ರಾಪ್ತಸ್ತಸ್ಮಾತ್ ಪವಿತ್ರ ಆತ್ಮಾ ನಾದೀಯತ|
40 ௪0 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
ಏತಾಂ ವಾಣೀಂ ಶ್ರುತ್ವಾ ಬಹವೋ ಲೋಕಾ ಅವದನ್ ಅಯಮೇವ ನಿಶ್ಚಿತಂ ಸ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ|
41 ௪௧ வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
ಕೇಚಿದ್ ಅಕಥಯನ್ ಏಷಏವ ಸೋಭಿಷಿಕ್ತ್ತಃ ಕಿನ್ತು ಕೇಚಿದ್ ಅವದನ್ ಸೋಭಿಷಿಕ್ತ್ತಃ ಕಿಂ ಗಾಲೀಲ್ ಪ್ರದೇಶೇ ಜನಿಷ್ಯತೇ?
42 ௪௨ தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
ಸೋಭಿಷಿಕ್ತ್ತೋ ದಾಯೂದೋ ವಂಶೇ ದಾಯೂದೋ ಜನ್ಮಸ್ಥಾನೇ ಬೈತ್ಲೇಹಮಿ ಪತ್ತನೇ ಜನಿಷ್ಯತೇ ಧರ್ಮ್ಮಗ್ರನ್ಥೇ ಕಿಮಿತ್ಥಂ ಲಿಖಿತಂ ನಾಸ್ತಿ?
43 ௪௩ இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
ಇತ್ಥಂ ತಸ್ಮಿನ್ ಲೋಕಾನಾಂ ಭಿನ್ನವಾಕ್ಯತಾ ಜಾತಾ|
44 ௪௪ அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ಕತಿಪಯಲೋಕಾಸ್ತಂ ಧರ್ತ್ತುಮ್ ಐಚ್ಛನ್ ತಥಾಪಿ ತದ್ವಪುಷಿ ಕೋಪಿ ಹಸ್ತಂ ನಾರ್ಪಯತ್|
45 ௪௫ பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
ಅನನ್ತರಂ ಪಾದಾತಿಗಣೇ ಪ್ರಧಾನಯಾಜಕಾನಾಂ ಫಿರೂಶಿನಾಞ್ಚ ಸಮೀಪಮಾಗತವತಿ ತೇ ತಾನ್ ಅಪೃಚ್ಛನ್ ಕುತೋ ಹೇತೋಸ್ತಂ ನಾನಯತ?
46 ௪௬ காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
ತದಾ ಪದಾತಯಃ ಪ್ರತ್ಯವದನ್ ಸ ಮಾನವ ಇವ ಕೋಪಿ ಕದಾಪಿ ನೋಪಾದಿಶತ್|
47 ௪௭ அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
ತತಃ ಫಿರೂಶಿನಃ ಪ್ರಾವೋಚನ್ ಯೂಯಮಪಿ ಕಿಮಭ್ರಾಮಿಷ್ಟ?
48 ௪௮ அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
ಅಧಿಪತೀನಾಂ ಫಿರೂಶಿನಾಞ್ಚ ಕೋಪಿ ಕಿಂ ತಸ್ಮಿನ್ ವ್ಯಶ್ವಸೀತ್?
49 ௪௯ வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
ಯೇ ಶಾಸ್ತ್ರಂ ನ ಜಾನನ್ತಿ ತ ಇಮೇಽಧಮಲೋಕಾಏವ ಶಾಪಗ್ರಸ್ತಾಃ|
50 ௫0 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
ತದಾ ನಿಕದೀಮನಾಮಾ ತೇಷಾಮೇಕೋ ಯಃ ಕ್ಷಣದಾಯಾಂ ಯೀಶೋಃ ಸನ್ನಿಧಿಮ್ ಅಗಾತ್ ಸ ಉಕ್ತ್ತವಾನ್
51 ௫௧ ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
ತಸ್ಯ ವಾಕ್ಯೇ ನ ಶ್ರುತೇ ಕರ್ಮ್ಮಣಿ ಚ ನ ವಿದಿತೇ ಽಸ್ಮಾಕಂ ವ್ಯವಸ್ಥಾ ಕಿಂ ಕಞ್ಚನ ಮನುಜಂ ದೋಷೀಕರೋತಿ?
52 ௫௨ அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
ತತಸ್ತೇ ವ್ಯಾಹರನ್ ತ್ವಮಪಿ ಕಿಂ ಗಾಲೀಲೀಯಲೋಕಃ? ವಿವಿಚ್ಯ ಪಶ್ಯ ಗಲೀಲಿ ಕೋಪಿ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ ನೋತ್ಪದ್ಯತೇ|
53 ௫௩ பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
ತತಃ ಪರಂ ಸರ್ವ್ವೇ ಸ್ವಂ ಸ್ವಂ ಗೃಹಂ ಗತಾಃ ಕಿನ್ತು ಯೀಶು ರ್ಜೈತುನನಾಮಾನಂ ಶಿಲೋಚ್ಚಯಂ ಗತವಾನ್|

< யோவான் 7 >