< யோவான் 7 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲛⲁϥⲙⲟϣⲓ ⲡⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⲟⲩ ⲅⲁⲣ ⲛⲁϥⲟⲩⲱϣ ⲁⲛ ⲡⲉ ⳿ⲉⲙⲟϣⲓ ϧⲉⲛ ϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ϫⲉ ⲛⲁⲩⲕⲱϯ ⳿ⲛⲥⲱϥ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⳿ⲉϧⲟⲑⲃⲉϥ.
2 ௨ யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
ⲃ̅ⲛⲁϥϧⲉⲛⲧ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⳿ⲡϣⲁⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ϯ⳿ⲥⲕⲏⲛⲟⲡⲏⲅⲓⲁ.
3 ௩ அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
ⲅ̅ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ ⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ ϫⲉ ⲟⲩⲟⲑⲃⲉⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲧⲁⲓ ⲟⲩⲟϩ ⲙⲁϣⲉ ⲛⲁⲕ ⳿ⲉϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲕⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛⲁⲩ ⳿ⲉⲛⲉⲕ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ ⲉⲧⲉⲕ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ.
4 ௪ பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
ⲇ̅ⲟⲩ ⲅⲁⲣ ⳿ⲙⲡⲁⲣⲉ ⳿ϩⲗⲓ ⲉⲣϩⲱⲃ ϧⲉⲛ ⲡⲉⲧϩⲏⲡ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲕⲱϯ ⳿ⲛⲥⲱϥ ϧⲉⲛ ⲡⲉⲑⲟⲩⲱⲛϩ ⲓⲥϫⲉ ⳿ⲭⲛⲁⲉⲣ ⲛⲁⲓ ⲟⲩⲟⲛϩⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ.
5 ௫ அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
ⲉ̅ⲟⲩⲇⲉ ⲅⲁⲣ ⲛⲉϥⲕⲉ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲁⲩⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ ⲡⲉ.
6 ௬ இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
ⲋ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲛ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲡⲁⲥⲏⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ⳿ⲙⲡⲁⲧⲉϥ⳿ⲓ ⲡⲉⲧⲉⲛⲥⲏⲟⲩ ⲇⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ϥⲥⲉⲃⲧⲱⲧ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ.
7 ௭ உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
ⲍ̅⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⲙⲉⲥⲧⲉ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ⳿ϥⲙⲟⲥϯ ⳿ⲙⲙⲟⲓ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ϯⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲉⲑⲃⲏⲧϥ ϫⲉ ⲛⲉϥ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ ⲥⲉϩⲱⲟⲩ.
8 ௮ நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
ⲏ̅⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⲙⲁϣⲉ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲡϣⲁⲓ ⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ⳿ⲛϯⲛⲁ⳿ⲓ ⲁⲛ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲡⲓϣⲁⲓ ϫⲉ ⳿ⲙⲡⲁⲧⲉ ⲡⲁⲥⲏⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ.
9 ௯ இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
ⲑ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲉⲧⲁϥϫⲟⲧⲟⲩ ⳿ⲛⲑⲟϥ ϧⲉⲛ ϯ ⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ.
10 ௧0 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
ⲓ̅ϩⲟⲧⲉ ⲇⲉ ⲉⲧⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲡϣⲁⲓ ⳿ⲛϫⲉ ⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ ⲧⲟⲧⲉ ⳿ⲛⲑⲟϥ ϩⲱϥ ⲁϥ⳿Ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲟⲩⲟⲩⲱⲛϩ ⲁⲛ ⲁⲗⲗⲁ ϩⲱⲥ ϧⲉⲛ ⲟⲩⲭⲱⲡ.
11 ௧௧ பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
ⲓ̅ⲁ̅ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲛ ⲛⲁⲩⲕⲱϯ ⳿ⲛⲥⲱϥ ⲡⲉ ϧⲉⲛ ⳿ⲡϣⲁⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϥⲑⲱⲛ ⲫⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
12 ௧௨ மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ⲓ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲭⲣⲉⲙⲣⲉⲙ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲓⲙⲏϣ ⲉⲑⲃⲏⲧϥ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲙⲉⲛ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ⳿ⲁⲅⲁⲑⲟⲥ ⲡⲉ ϩⲁⲛⲕⲉ ⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲁⲗⲗⲁ ⲁϥⲥⲱⲣⲉⲙ ⳿ⲙⲡⲓⲙⲏϣ.
13 ௧௩ ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
ⲓ̅ⲅ̅⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ⲙⲉⲛⲧⲟⲓ ⲥⲁϫⲓ ⲉⲑⲃⲏⲧϥ ϧⲉⲛ ⲟⲩⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲃⲉ ⳿ⲧϩⲟϯ ⳿ⲛⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ.
14 ௧௪ பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
ⲓ̅ⲇ̅ϩⲏⲇⲏ ⲇⲉ ⲉⲧⲁ ⲡⲓϣⲁⲓ ⲉⲣⲫⲁϣⲓ ⲁϥ⳿Ⲓ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲟⲩⲟϩ ⲛⲁϥϯ⳿ⲥⲃⲱ ⲡⲉ.
15 ௧௫ அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
ⲓ̅ⲉ̅ⲛⲁⲩⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲟⲩⲛ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲱⲥ ⲫⲁⲓ ⲥⲱⲟⲩⲛ ⳿ⲛ⳿ⲥϧⲁⲓ ⳿ⲙⲡⲉϥⲥⲁⲃⲟ.
16 ௧௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
ⲓ̅ⲋ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲧⲁ⳿ⲥⲃⲱ ⳿ⲁⲛⲟⲕ ⲑⲱⲓ ⲁⲛ ⲧⲉ.
17 ௧௭ அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
ⲓ̅ⲍ̅ⲫⲏⲉⲑⲛⲁⲉⲣ⳿ⲫⲟⲩⲱϣ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ ⲉϥ⳿ⲉⲥⲟⲩⲉⲛ ⲧⲁ⳿ⲥⲃⲱ ϫⲉ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲫϯ ⲧⲉ ϣⲁⲛ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉⲧⲥⲁϫⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧ ⳿ⲙⲙⲁⲩⲁⲧ.
18 ௧௮ சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
ⲓ̅ⲏ̅ⲫⲏⲉⲧⲥⲁϫⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁϥⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲡⲉϥⲱⲟⲩ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲫⲏ ⲇⲉ ⲉⲧⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⳿ⲡⲱⲟⲩ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟϥ ⲫⲁⲓ ⲟⲩ⳿ⲑⲙⲏⲓ ⲡⲉ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲁⲇⲓⲕⲓ⳿ⲁ ⳿ⲛϧⲏⲧϥ.
19 ௧௯ மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
ⲓ̅ⲑ̅ⲙⲏ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲁⲛ ⲁϥϯ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲉⲑⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲕⲱϯ ⳿ⲛⲥⲱⲓ ⳿ⲉϧⲟⲑⲃⲉⲧ.
20 ௨0 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
ⲕ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲏϣ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲇⲉⲙⲱⲛ ⲛⲉⲙⲁⲕ ⲛⲓⲙ ⲡⲉⲧⲕⲱϯ ⳿ⲛⲥⲱⲕ ⳿ⲉϧⲟⲑⲃⲉⲕ.
21 ௨௧ இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
ⲕ̅ⲁ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩϩⲱⲃ ⳿ⲛⲟⲩⲱⲧ ⲡⲉⲧⲁⲓⲁⲓϥ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ϣⲫⲏ ⲣⲓ ⲧⲏⲣⲟⲩ.
22 ௨௨ விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
ⲕ̅ⲃ̅ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲁ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ϯ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲓⲥⲉⲃⲓ ⲟⲩⲭ ⲟⲧⲓ ϫⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲡⲉ ⲡⲓⲥⲉⲃⲓ ⲁⲗⲗⲁ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲓⲟϯ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛⲥⲉⲃⲓ ⳿ⲛⲟⲩⲣⲱⲙⲓ ϧⲉⲛ ⳿ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ.
23 ௨௩ மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
ⲕ̅ⲅ̅ⲓⲥϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⲛⲁϭⲓ ⳿ⲙⲡⲓⲥⲉⲃⲓ ϧⲉⲛ ⳿ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ϩⲓⲛⲁ ϫⲉ ⳿ⲛⲛⲉϥⲃⲱⲗ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲡⲓⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲓⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲉⲛϫⲱⲛⲧ ⳿ⲉⲣⲟⲓ ϫⲉ ⲁⲓ⳿ⲑⲣⲉ ⲟⲩⲣⲱⲙⲓ ⲧⲏⲣϥ ⲟⲩϫⲁⲓ ϧⲉⲛ ⳿ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ.
24 ௨௪ தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
ⲕ̅ⲇ̅⳿ⲙⲡⲉⲣϯϩⲁⲡ ⲕⲁⲧⲁ ϩⲟ ⲁⲗⲗⲁ ⲙⲁϩⲁⲡ ϧⲉⲛ ⲟⲩϩⲁⲡ ⳿ⲙⲙⲏⲓ.
25 ௨௫ அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
ⲕ̅ⲉ̅ⲛⲁⲩϫⲱ ⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲥ ⲡⲉ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲁ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ϫⲉ ⲙⲏ ⲫⲁⲓ ⲁⲛ ⲡⲉ ⲫⲏⲉⲧⲟⲩⲕⲱϯ ⳿ⲛⲥⲱϥ ⳿ⲉϧⲟⲑⲃⲉϥ.
26 ௨௬ இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
ⲕ̅ⲋ̅ϩⲏⲡⲡⲉ ⳿ϥⲥⲁϫⲓ ϧⲉⲛ ⲟⲩⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ⲟⲩⲟϩ ⲥⲉϫⲉ ⳿ϩⲗⲓ ⲛⲁϥ ⲁⲛ ⲙⲏⲡⲱⲥ ⲣⲱ ⲁⲩ⳿ⲉⲙⲓ ⲧⲁ⳿ⲫⲙⲏⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲱⲛ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅.
27 ௨௭ இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
ⲕ̅ⲍ̅ⲁⲗⲗⲁ ⲫⲁⲓ ⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ϫⲉ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲛⲁ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ ⲡⲉ.
28 ௨௮ அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
ⲕ̅ⲏ̅ⲁϥⲱϣ ⲟⲩⲛ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲉϥϯ⳿ⲥⲃⲱ ⲟⲩⲟϩ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲓ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲉⲧⲁⲓ⳿Ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ ⲟⲩⲟϩ ⲛⲉⲧⲁⲓ⳿ⲓ ⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧ ⳿ⲙⲙⲁⲩⲁⲧ ⲁⲗⲗⲁ ⲟⲩ⳿ⲑⲙⲏⲓ ⲡⲉ ⲫⲏⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ ⲫⲏ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲉⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ⲁⲛ.
29 ௨௯ நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
ⲕ̅ⲑ̅⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ϯⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲫⲏ ⲡⲉ ⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ.
30 ௩0 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ⲗ̅ⲛⲁⲩⲕⲱϯ ⲟⲩⲛ ⳿ⲉⲧⲁϩⲟϥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲉⲛ ⲛⲉϥϫⲓϫ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ ϫⲉ ⲟⲩⲏⲓ ⲛⲉ ⳿ⲙⲡⲁⲧⲉⲥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲧⲉϥⲟⲩⲛⲟⲩ.
31 ௩௧ மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
ⲗ̅ⲁ̅ϩⲁⲛⲙⲏϣ ⲟⲩⲛ ⲁⲩⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲙⲏϣ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ⲙⲏ ⳿ϥⲛⲁⲉⲣ ϩⲟⲩ⳿ⲟ ⲣⲱ ⳿ⲉⲛⲁⲓⲙⲏⲓⲛⲓ ⲉⲧⲁ ⲫⲁⲓ ⲁⲓⲧⲟⲩ.
32 ௩௨ மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
ⲗ̅ⲃ̅ⲁⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲛϫⲉ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⳿ⲉⲛⲓⲙⲏϣ ⲉⲩ⳿ⲭⲣⲉⲙⲣⲉⲙ ⳿ⲛⲛⲁⲓ ⲉⲑⲃⲏⲧϥ ⲟⲩⲟϩ ⲁⲩⲟⲩⲱⲣⲡ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⳿ⲛϩⲁⲛϩⲩⲡⲏ ⲣⲉⲧⲏⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉⲧⲁϩⲟϥ.
33 ௩௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
ⲗ̅ⲅ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲛ ϫⲉ ⲉⲧⲓ ⲕⲉⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲭ ⲣⲟⲛⲟⲥ ϯϣⲟⲡ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⲟⲩⲟϩ ϯⲛⲁϣⲉ ⲛⲏⲓ ϩⲁ ⲫⲏⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ.
34 ௩௪ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
ⲗ̅ⲇ̅ⲧⲉⲧⲉⲛⲕⲱϯ ⳿ⲛⲥⲱⲓ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛⲛⲁϫⲉⲙⲧ ⲁⲛ ⲟⲩⲟϩ ⳿ⲫⲙⲁ ⳿ⲉϯⲛⲁϣⲉ ⲛⲏⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲓ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ.
35 ௩௫ அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
ⲗ̅ⲉ̅ⲡⲉϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲛ ⳿ⲛⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ ϫⲉ ⲁⲣⲉ ⲫⲁⲓ ⲛⲁϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲑⲱⲛ ⳿ⲛⲧⲉⲛ⳿ϣⲧⲉⲙϫⲉⲙϥ ⲙⲏ ⳿ϥⲛⲁϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲡⲓϫⲱⲣ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲟⲩⲉⲓⲛⲓⲛ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛⲛⲓⲟⲩⲉⲓⲛⲓⲛ.
36 ௩௬ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ⲗ̅ⲋ̅ⲡⲁⲓⲥⲁϫⲓ ⲟⲩ ⲡⲉ ⲉⲧⲁϥϫⲟⲥ ϫⲉ ⲧⲉⲧⲉⲛⲛⲁⲕⲱϯ ⳿ⲛⲥⲱⲓ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛⲛⲁϫⲉⲙⲧ ⲁⲛ ⲟⲩⲟϩ ⲡⲓⲙⲁ ⳿ⲉϯⲛⲁϣⲉ ⲛⲏⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲉ⳿ⲓ ⳿ⲉⲣⲟϥ.
37 ௩௭ பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
ⲗ̅ⲍ̅⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛϧⲁ⳿ⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲛⲓϣϯ ⳿ⲛϣⲁⲓ ⲁϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⲛⲁϥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲏⲉⲧ⳿ⲟⲃⲓ ⲙⲁⲣⲉϥ⳿ⲓ ϩⲁⲣⲟⲓ ⳿ⲛⲧⲉϥⲥⲱ.
38 ௩௮ வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
ⲗ̅ⲏ̅ⲫⲏⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟⲓ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁⲥϫⲟⲥ ⳿ⲛϫⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲉ ϩⲁⲛⲓⲁⲣⲱⲟⲩ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲛⲱⲛϧ ⲉⲑⲛⲁϧⲁϯ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲧⲉϥⲛⲉϫⲓ.
39 ௩௯ தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
ⲗ̅ⲑ̅ⲫⲁⲓ ⲇⲉ ⲁϥϫⲟϥ ⲉⲑⲃⲉ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⳿ⲉⲛⲁⲩⲛⲁϭ ⲓⲧϥ ⳿ⲛϫⲉ ⲛⲏⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⲛⲉ ⳿ⲙⲡⲁⲧⲉ ⲡ͞ⲛⲁ̅ ⲅⲁⲣ ϣⲱⲡⲓ ⲡⲉ ϫⲉ ⲛⲉ ⳿ⲙⲡⲁⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϭⲓⲱⲟⲩ ⲡⲉ.
40 ௪0 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
ⲙ̅ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲙⲏϣ ⲉⲧⲁⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲛⲁⲓⲥⲁϫⲓ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲧⲁ⳿ⲫⲙⲏⲓ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
41 ௪௧ வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
ⲙ̅ⲁ̅ϩⲁⲛⲕⲉⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ϩⲁⲛⲕⲉⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲏ ⲁⲣⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ.
42 ௪௨ தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
ⲙ̅ⲃ̅ⲙⲏ ⲛⲉⲧⲁⲥϫⲟⲥ ⲁⲛ ⳿ⲛϫⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡ⳿ϫⲣⲟϫ ⳿ⲛⲇⲁⲩⲓⲇ ⲡⲉ ⲟⲩⲟϩ ϫⲉ ⲁⲣⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲃⲏⲑⲗⲉⲉⲙ ⲡⲓ ϯⲙⲓ ⳿ⲉⲛⲁⲣⲉ ⲇⲁⲩⲓⲇ ⲭⲏ ⳿ⲙⲙⲁⲩ.
43 ௪௩ இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
ⲙ̅ⲅ̅ⲟⲩ⳿ⲥⲭⲓⲥⲙⲁ ⲟⲩⲛ ⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲡⲓⲙⲏ ϣ ⲉⲑⲃⲏⲧϥ.
44 ௪௪ அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ⲙ̅ⲇ̅ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲇⲉ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲛⲁⲩⲟⲩⲱϣ ⳿ⲉⲧⲁϩⲟϥ ⲡⲉ ⲁⲗⲗⲁ ⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ϣⲉⲛ ⲛⲉϥϫⲓϫ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ.
45 ௪௫ பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
ⲙ̅ⲉ̅ⲁⲩ⳿ⲓ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ ⲛⲓϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ϩⲁ ⲛⲓⲁⲣⲭ ⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⳿ⲙⲡⲉⲧⲉⲛ⳿ⲉⲛϥ.
46 ௪௬ காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
ⲙ̅ⲋ̅ⲁⲩⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲛⲓϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲙⲡⲉ ⲣⲱⲙⲓ ⲥⲁϫⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲉⲛⲉϩ.
47 ௪௭ அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
ⲙ̅ⲍ̅ⲁⲩⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲏ ⲁⲣⲉⲧⲉⲛⲥⲱⲣⲉⲙ ϩⲱⲧⲉⲛ.
48 ௪௮ அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
ⲙ̅ⲏ̅ⲙⲏ ⲁ ⳿ϩⲗⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲁⲣⲭⲱⲛ ⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⲓⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ.
49 ௪௯ வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
ⲙ̅ⲑ̅ⲁⲗⲗⲁ ⲡⲁⲓⲙⲏϣ ⲉⲧⲉ⳿ⲛⲥⲉⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲁⲛ ⲥⲉⲭⲏ ϧⲁ ⳿ⲡⲥⲁϩⲟⲩ⳿ⲓ.
50 ௫0 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
ⲛ̅ⲡⲉϫⲉ ⲛⲓⲕⲟⲇⲏⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ⲫⲏⲉⲧⲁϥ⳿Ⲓ ϩⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϣⲟⲣⲡ ⳿ⲛϫⲱⲣϩ ⳿ⲉⲟⲩⲁⲓ ⲡⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲟⲩ.
51 ௫௧ ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
ⲛ̅ⲁ̅ϫⲉ ⲙⲏ ⲡⲉⲛⲛⲟⲙⲟⲥ ⲛⲁϯϩⲁⲡ ⳿ⲉⲡⲓⲣⲱⲙⲓ ⲁϥ⳿ϣⲧⲉⲙⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϣⲟⲣⲡ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ.
52 ௫௨ அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
ⲛ̅ⲃ̅ⲁⲩⲉⲣⲟⲩⲱ ⲛⲁϥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲏ ⳿ⲛⲑⲟⲕ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ϩⲱⲕ ϧⲟⲧϧⲉⲧ ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲁⲩ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲁⲧⲱⲛϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ.
53 ௫௩ பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
ⲛ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲉ⳿ⲫⲟⲩⲁⲓ ⳿ⲫⲟⲩⲁⲓ ⳿ⲉⲡⲉϥⲙⲁ