< யோவான் 6 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
ଆକେନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ଗାଲିଲୀ ବା ତିବିରିଆ କେଣ୍ତିଆନେ ଇନୁମେତା ୱେଗେ ।
2 அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
ଗୁଲେ ରେମୁଆଁ ଜିସୁନେ ପ୍ଲା ୱେ ଡିଂଆର୍‌କେ ଡାଗ୍ଲା ଜିସୁ ମେଁନେ ଇରିଆତୁଗ୍ ବପୁ ଏତେ ଆଃସିଲେକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ନିମାଣ୍ତା ଆଡିଙ୍ଗ୍‌ନେ ମେଇଂ କିକେ ଡିଂଆର୍‌ଗେ ।
3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
ଜିସୁ ମୁଇଙ୍ଗ୍ କାଣ୍ଡା ଆଡ଼ାତ୍ରା ୱେଚେ ସିସ୍ଇଂ ଆଃତେ କକେ ।
4 அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
ଆତେନ୍‌ ବେଲା ଜିଉଦିଇଂନେ ଉଦାର୍ ପାଣ୍ତୁଏ ଡାଗ୍ରା ପିଙ୍ଗ୍‌ଚାଡିଙ୍ଗ୍‌କେ ।
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
ମେଁନେ ଡାଗ୍ରା ଗୁଲୁଏ ରେମୁଆଁ ପାଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌କ୍ନେ କେଚେ ଜିସୁ ପିଲିପ୍‌କେ ସାଲ୍ୟାକୁକେ: “ଅଃକେନ୍ ରେମୁଆଁଇଂ ନ୍‌ସା ଆଣ୍ଡିବାନ୍ ଗୁଲୁଏ ରୁଟି ନେବ୍ୟାର୍‌ଏ?”
6 தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
ପିଲିପ୍‌କେ ପରିକ୍ୟା ଡିଙ୍ଗ୍ ନ୍‌ସା ଜିସୁ ଆକେନ୍ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌ବକେ । ଡାଗ୍ଲା ମେଁ ନିଜେ ମେଁନେ ଡିଙ୍ଗ୍‌ଏ ମ୍ୟାଲେଃକେ ।
7 பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
ପିଲିପ୍‌ ଉତର୍ ବିକେ “ସାପାରେକେ ଇତୁଡ଼ା ମେଃଡିଗ୍ ଆଚଙ୍ଗ୍ ନ୍‌ସା ମ୍ୱାର୍‌ସବାନ୍‌ ଜବର୍ ରୁପା ଡାବୁନେ ରୁଟି ବ୍ୟାଆର୍‌ଲା ଡିଙ୍ଗ୍‌ଏ ।”
8 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
ଜିସୁନେ ବିନ୍ ମୁଇଂଜା ସିସ୍ ପିତର୍‌ନେ ବୟାଁ ଆନ୍ଦ୍ରିୟ ବାସଙ୍ଗ୍‌କେ
9 இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
“ଆକ୍‌ଅରିଆ ମୁଇଙ୍ଗ୍ ଗଡ଼େଅ ଲେଃକେ ମେଁନେ ଡାଗ୍ରା ମାଲିକ୍ଲିଗ୍ ରୁଟି ମ୍ବାକ୍ଲିଗ୍ ଆଡ଼ ଲେଃକେ, ଡାଗ୍ଲା ଅଃକେନ୍ ରେମୁଆଁ ନ୍‌ସା ଆତେନ୍‌ ଆଅଣ୍ଟେ ଣ୍ତୁ ।”
10 ௧0 இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
ଜିସୁ ସିସ୍‌ଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ: “ରେମୁଆଁଇଂକେ ଆଃକବିପା ।” ଆତେନ୍‌ ଟାନ୍‌ନ୍ନିଆ ଜାବର୍ ଚେଃମୁଆଁ ଲେଃକେ । ଆତେନ୍‌ ଚେଃମୁଆଁ ଆଡ଼ାତ୍ରା ସାପାରେ କ‍ଆର୍‌କେ । ଆତ୍‌ଅରିଆ ମାଲ୍‌ ଅଜାର୍‌ ଙ୍ଗିର୍‌ବଏ ରେମୁଆଁ ଲେଃକେ ।
11 ௧௧ இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
ଜିସୁ ରୁଟି ଡୁଙ୍ଗ୍‌ୱେଚେ ଇସ୍‌ପର୍‌କେ ଦନ୍ୟବାଦ୍ ବିଃଚେ ଆତ୍‌ଅରିଆ କଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ବିତ୍ରେ ବାଟାବିଃକେ । ମ୍ୱାକ୍ଲିଗ୍‌ ଆଃଡ଼ ଡିଙ୍ଗ୍ ଦେତ୍‌ରକମ୍ ମେଁ ବାଟାକେ । ମେଇଂ ଗୁଲେ ଚଙ୍ଗ୍‌ନେ ବାଆର୍‌କେ ।
12 ௧௨ அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
ମେଇଂ ସାପାରେ ଚଙ୍ଗ୍‍କ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ସିସ୍ଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ: “ମେଁନେ ସାପା ଲୁଆଁ ଲେଃକେ ଆତେନ୍‌ ସାପା ରାସିଂଚେ ବପା ଡିରକମ୍ ମେଃଡିଗ୍ ଦଦ୍ୟା ଆଡିଙ୍ଗ୍ ଣ୍ତୁ ।”
13 ௧௩ அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
ରେମୁଆଁ ମାଲିକ୍ଲିଗ୍ ରୁଟି ଚଙ୍ଗ୍‍ଚେ ଉଡ଼ି ଲୁଆଁ ଲେଃକେ ସିସ୍‌ଇଂ ଆତେନ୍‌ ସାପା ରାସିଂଚେ ତ୍ମାକ୍ଲିଗ୍ ଆଣ୍ତ୍ରା ବର୍ତି ଡିଙ୍ଗ୍‌ଆର୍କେ ।
14 ௧௪ இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
ଜିସୁନେ ଆକେନ୍ ଇରିଆତୁଗ୍ କାମ୍ କେଚେ ରେମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌କେ “ଆଣ୍ଡିନେ ବାବବାଦି ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନ୍ନିଆ ପାଙ୍ଗ୍‌ନେ ଲେଃକେ କ୍ମେ ସତେଆଃ ମେଁ ।”
15 ௧௫ ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
ରେମୁଆଁଇଂ ଜିସୁକେ ଜବର୍‌ଜସ୍ତି ଇଃସାଙ୍ଗ୍‌ ଆଡିଙ୍ଗ୍ ନ୍‌ସା ସାଃନ୍‌ସା ୱେଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ ଡାଗ୍‌ଚେ ମ୍ୟାଚେ ଜିସୁ ମୁଇଂଜାଆ ଡାଗ୍ରାନେ କଣ୍ତାପାକା ଅଲେଙ୍ଗ୍ ୱେକେ ।
16 ௧௬ மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
ମିଡିଗ୍ ୱେଲା ଜିସୁନେ ସିସ୍ଇଂ କେଣ୍ତିଆ ଆଃଡା ୱେଗେ ।
17 ௧௭ படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
ଆରି ତରାନ୍ନିଆ ଡେଃଚେ କେଣ୍ତିଆ ଇନୁମେତା କପର୍ନାହୂମ ପାକା ୱେନେ ମୁଲେଆର୍‌କେ । ମିଡିଗ୍ ଡିଙ୍ଗ୍ ପାଙ୍ଗ୍‌ଡିଙ୍କେ ବାରି ଜିସୁ ଆତେନ୍‌ ଜାକ ମେଁଇଂନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ ଆଲେଃକେ ଣ୍ତୁ
18 ௧௮ பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
ଆରି ଜବର୍ ୱେଡ଼ିଆ ପାଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌ଲା ଣ୍ତିଆଃନ୍ନିଆ ଲଅଡ଼ି ତଡ଼ିଆଡିଂକେ ।
19 ௧௯ அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
ଏନ୍‌ ବିତ୍ରେ ସିସ୍‌ଇଂ କେଣ୍ତିଆ ବିତ୍ରେ ମାଲ୍ ବା ତୁର୍ କିଲମିଟର୍ ତରା ଡୁଙ୍ଗ୍‌ୱେକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ କେଆର୍‌କେ ଜିସୁ ଣ୍ଡିଆ ଆଡ଼ାତ୍ରା ଅଲେଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍‌ଚେ ତରା ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌କେ । ଆକ୍‌ଅରିଆ ମେଇଂ ଇରିୟାଃତୁଗ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍‌କେ ।
20 ௨0 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
ଜିସୁ ବାସଙ୍ଗ୍‌କେ: “ଆବ୍‌ଟଗେପା ନାମଃ । ଆକେନ୍ ତ ନେଙ୍ଗ୍ ।”
21 ௨௧ அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
ତେସା ମେଇଂ ଜିସୁକେ ତରାନ୍ନିଆ ଡୁଂୱିଗ୍‌ନେ ଇକ୍‌ଚା ଡିଙ୍ଗ୍‌ଆର୍କେ ବାରି ମେଇଂ ଆଣ୍ତିନେ ଜାଗାନ୍ନିଆ ୱେଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ, ତରାଲେ ଟାପ୍‌ନା ଆତେନ୍‌ ଜାଗାନ୍ନିଆ ୱେଚାକେ ।
22 ௨௨ மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
ଆର୍‌ମୁଇଂ ଦିନା କେଣ୍ତିଆନେ ବିନ୍ ପାକା ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ମ୍ୟାଆର୍‌କେ ଜେ ଆତ୍‌ଅରିଆ ମାତର୍‌‌ ମୁଇଂ ଆଃ ତରା ଲେଃକେ ଆରି ସିସ୍ଇଂ ଜିସୁକେ ସଙ୍ଗେ ଡୁଂମାୱେଚେ ଆତେନ୍‌ ତରାନ୍ନିଆ କେଣ୍ତିଆ ବିତ୍ରେ ଅଲେଙ୍ଗ୍ ୱେଲେଃଆର୍‌କେ ।
23 ௨௩ கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
ଆଣ୍ଡିଅରିଆ ମାପ୍‌ରୁ ପାର୍‌ତନା ଡିଂଚେ ରେମୁଆଁଇଂକେ ରୁଟି ଚଙ୍ଗ୍‌ନେସା ବିଃବଗେ, ତିବିରିଆବାନ୍‌ ଆରି ଉଡ଼ିକ୍ଲିଗ୍ ତରା ଆତେନ୍‌ ଜାଗା ଡାଗ୍ରା ପିଙ୍ଗ୍‌ଚାକେ ।
24 ௨௪ அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
ଜିସୁ ଣ୍ତୁଲା ମେଁନେ ସିସ୍ଇଂକେ ଆତ୍‌ଅରିଆ ମା‍ଅବାଚେ ରେମୁଆଁଇଂ ଜିସୁକେ ତୁର୍‌ନ୍‌ସା ତରାନ୍ନିଆ ଡେଃଚେ କପର୍ନାହୂମନ୍ନିଆ ୱେଆର୍‌କେ ।
25 ௨௫ கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
ଜିସୁକେ କେଣ୍ତିଆ ଇନୁମେତା କେଚେ ରେମୁଆଁଇଂ ସାଲ୍ୟାକୁ ଆର୍‌କେ “ଗୁରୁ ନାଁ ଉଡ଼ିବେଲା ପାଙ୍ଗ୍‌ଚେ ଆକ୍‌ଅରିଆ ନାପିଙ୍ଗ୍‍ଚାକେ?”
26 ௨௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଜିସୁ ଆମେଇଂକେ ଉତର୍ ବିଃକେ “ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍‌ଣ୍ଡିଂ, ନେଙ୍ଗ୍‌ନେ ଇରିଆତୁଗ୍ କାମ୍ କେପେଲେକେସା ଜେ ଆନେଙ୍ଗ୍ ତୁର୍ ନ୍‌ସା ପାଙ୍ଗ୍‌ପେଲେଃକେ ଣ୍ତୁ । ଡାଗ୍ଲା ରୁଟି ଚଙ୍ଗ୍‌ଚେ ସୁଲୁଏ ଆବ୍‌ସେ ପେବକେସା ପାଙ୍ଗ୍‌ପେଲେଃକେ ।
27 ௨௭ அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
ଆଣ୍ଡିନେ ବଲେ ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍‌ଏ ମେଁ ନ୍‌ସା ଅଃକେନ୍ କଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍‌ପା ନାମଃ । ଣ୍ତୁଲା ଆଣ୍ଡିନେ ନସ୍ଟ ଆଡିଂନେ ବଲେ ମାଡାନେ ଜିବନ୍‌ ବିଃଏ ଆତେନ୍‌‌ସା କଷ୍ଟ ଡିଙ୍ଗ୍‌ପା । ଆକେନ୍ ବଲେ ଇସ୍‌ପର୍ ଉଙ୍ଗ୍‌ଡେ ବିଃଏ ଡାଗ୍ଲା ଆବା ଇସ୍‌ପର୍ ଆତେନ୍‌‌ସା ଆମେକେ ଅଦିକାର୍ ବିଃବକେ ।” (aiōnios g166)
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
ଆତ୍‌ବାନ୍ ମେଇଂ ଆମେକେ ସାଲ୍ୟାକୁ ଆର୍‌କେ, “ଇସ୍‌ପର୍‌ ମେଃନେ ଇକ୍‌ଚା ଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍କେ, ଆତେନ୍‌ ଡିଙ୍ଗ୍ ନ୍‌ସା ଆନେକେ ମେଃନେ ଡିଙ୍ଗ୍‌ ପଡ଼େଏ?”
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
ଜିସୁ ଆମେଇଂକେ ଉତର୍ ବିଃକେ: “ଆଜାକେ ଇସ୍‌ପର୍ ବେ ବକେ, ମେଁନେ ଡାଗ୍ରା ବିସ୍‌ବାସ୍ ଡିଙ୍ଗ୍‌ନେ ବାନ୍ ପେଇଂ ଆତେନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ପେୟାଏ ।”
30 ௩0 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
ଆତ୍‌ବାନ୍ ମେଇଂ ଆମେକେ ସାଲ୍ୟାକୁ ଆର୍‌କେ “ନାଁନେ ଡାଗ୍ରା ନେଁ ଡିରକମ୍ ବିସ୍‌ବାସ୍ ନେଡିଙ୍ଗ୍‌ଏ ଆତେନ୍‌‌ସା ଆନେକେ ଡିଡି ଇରିୟାତୁଗ୍ କାମ୍ ଆସୁଏ ନାୟାଏ? ବାସଙ୍ଗ୍‌ ମେଁନେ ଡିଙ୍ଗ୍ ନାୟାଏ?
31 ௩௧ வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
ନେଁନେ ଅସେଣ୍ଡ୍ରେଇଂ ବାଲିଲନ୍ନିଆ ମାନ୍ନା ଚଙ୍ଗ୍‍ଲେ ଆର୍‌କେ । ନେଁନେ ଦର୍ମ ସାସ୍ତର୍‌ ରକମ୍ ମେଁ ଆକେନ୍ ବଲେ କିତଂଇନିବାନ୍ ଡୁଙ୍ଗ୍‌ପାଙ୍ଗ୍‌ଚେ ବିକେ ।”
32 ௩௨ இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଆତ୍‌ବାନ୍ ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‍ଡିଂକେ “ସତ୍ ସତ୍ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍‌ ଣ୍ଡିଙ୍ଗ୍ ମେଁନେ ମୋଶା ଆପେକେ ବିଃବକେ ଆତେନ୍‌ କିତଂବାନ୍‌ ପାଙ୍ଗ୍‌କ୍ନେ କାଦି ଣ୍ତୁ ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍‌ନେ ଆବା ଆପେକେ କିତଂବାନ୍‌ ସତେଆଃ କାଦି ବିଃଏ ।
33 ௩௩ வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
ଡାଗ୍ଲା ଆଣ୍ତିନେ କାଦି ଆଡ଼ାତ୍ରାବାନ୍ ଜାର୍‌ଚେ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନ୍ନିଆ ପାରାନ୍ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍‌ଏ ଆତେନ୍‌ ଇସ୍‌ପର୍ ବିଃକ୍ନେ ବଲେ ।”
34 ௩௪ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
ମେଇଂ ଜିସୁକେ ବାସଙ୍ଗ୍‌ଆର୍‌କେ, “ମାପ୍‌ରୁ, ଆନେକେ କାଲାଆଃ ଆକେନ୍ କାଦି ବିଃଲା ।”
35 ௩௫ இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ନେଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ପାରନ୍‌ ବିଃନେ ବଲେ । ଜାଣ୍ତେ ନେଙ୍ଗ୍‌ନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଏ ମେଁ ଅଃନାଡିଗ୍ କେଡ଼େସ ଆଡିଙ୍ଗ୍ ଣ୍ତୁ ଆରି ଜାଣ୍ଡେ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ବିସ୍‌ବାସ୍ ଡିଙ୍ଗ୍‌ଏ ମେଁ ଅଃନାଡିଗ୍ ଉଗ୍‌ଡ୍ୟା ଆଡ ଣ୍ତୁ ।
36 ௩௬ நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍‌ଣ୍ଡିଂ, ଆନେଙ୍ଗ୍ କେଚେ ଡିଗ୍ ପେ ବିସ୍‌ବାସ୍ ପେଡିଙ୍ଗ୍‌କେ ଣ୍ତୁ ।
37 ௩௭ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
ଜାଣ୍ତେକେ ନେଙ୍ଗ୍ ଆବା ଆନେଙ୍ଗ୍ ବିଃବକେ ମେଇଂ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଆର୍‌ଏ । ଜାଣ୍ଡେ କି ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଏ ନେଙ୍ଗ୍ ଅଃନା ଆମେକେ ଆଣ୍ତେ ନ୍ନାବି ଣ୍ତୁ ।
38 ௩௮ என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍‌ନେ ନିଜର୍ ଇକ୍‌ଚା ବର୍ତି ଆଡିଙ୍ଗ୍‌ନେ ଣ୍ତୁ ଡାଗ୍ଲା ଆନେଙ୍ଗ୍ ବେବକ୍ନେ ଇକ୍‌ଚା ବର୍ତି ଆଡିଙ୍ଗ୍‌ନେ ନେଙ୍ଗ୍ କିତଂଇନିବାନ୍ ପାଙ୍ଗ୍ ନ୍‌ଲେଃକେ ।
39 ௩௯ அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
ଜାଣ୍ତେକେ ମେଁ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ବେବକେ ମେଇଂନେ ବିତ୍ରେ ନେଙ୍ଗ୍ ମୁଇଂଜାକେ ଡିଗ୍ ନାଁ ଆନ୍ତାର୍ ଡାଗ୍ଲା ଡାକ୍ନେ ଦିନା ଆତେନ୍‌ ସାପାରେକେ ଆର୍‌ମୁଇଂତର୍‌ ପାରାନ୍ ମ୍ୱିଏ ଆକେନ୍ ମେଁନେ ଇକ୍‌ଚା ।
40 ௪0 குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
ଡାଗ୍ଲା ଆବା ଚାଏଁଡିଂକେ ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ଉଙ୍ଗ୍‌ଡେକେ କେଚେ ମେଁନେ ଡାଗ୍ରା ବିସ୍‌ବାସ୍ ଡିଙ୍ଗ୍‌ଆର୍‌ଏ ମେଇଂ ମାଡାନେ ପାରାନ୍ ବାଆର୍‌ଲେଃ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡାକ୍ନେ ଦିନା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ସାପାରେକେ ଆରି ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ ।” (aiōnios g166)
41 ௪௧ நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
ଜିସୁ ନିଜେକେ କିତଂଇନିବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଲେଃକ୍ନେ ବଲେ ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ଲା ଜିଉଦିଇଂ ଆକେନ୍ ସାମୁଆଁକେ ନିନ୍ଦା ଡିଙ୍ଗ୍‌ନେ ମୁଲେଆର୍‌କେ ।
42 ௪௨ இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
ଆରି ବାସଙ୍ଗ୍ଆର୍କେ “ଆକେନ୍ ରେମୁଆଁ ଯୋସେଫ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜିସୁ ଣ୍ତୁ ଲେଃ? ମେଁନେ ଆବା ଇୟାଙ୍ଗ୍‌କେ ନେଁ ମ୍ୟାନେଲେକେ । ତେଲା ମେଁ କିତଂଇନିବାନ୍ ଜାର୍‌ନ୍ଲେଃକେ ଡାଗ୍‌ଚେ ଡିରକମ୍ ବାସଙ୍ଗ୍‌ଡିଂକେ?”
43 ௪௩ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ: “ଆକେନ୍ ସାପା ନିନ୍ଦା ବନ୍ଦ୍ ଆଡିଙ୍ଗ୍‌ପା ।
44 ௪௪ என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
ନେଙ୍ଗ୍ ଆବା ଆନେଙ୍ଗ୍ ବେବକେ ମେଁ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ଉର୍‌ଗୁ ଡୁଂଆପାଙ୍ଗ୍‌ଲା ଜାଣ୍ଡେ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ ଆୟା ଣ୍ତୁ । ଜାଣ୍ଡେଇଂ ପାଙ୍ଗ୍‌ଆର୍‌ଏ ଆମେଇଂକେ ନେଙ୍ଗ୍ ଡାକ୍ନେ ଦିନା ଆରି ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ ।
45 ௪௫ எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
ବାବବାଦିଇଂ ଦର୍ମ ସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ: ଡିଲାଡିଗ୍‌ ଇସ୍‌ପର୍‌ନେ ବାନ୍ ସାପାରେ ଗ୍ୟାନ୍ ବାଆର୍‌ଏ । ଜାଣ୍ଡେ କି ଆବାନେ ସାମୁଆଁ ଅଁଚେ ମେଁନେ ବାନ୍ ଗ୍ୟାନ୍ ଗ୍ର‍ଅନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଏ ମେଁ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଏ ।
46 ௪௬ தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
ଆକେନ୍ ଅର୍‌ତ ଣ୍ତୁ ଜେ ଜାଣ୍ଡେ ଆବାକେ କେଲେଃକେ । ଜାଣ୍ତେ ଇସ୍‌ପର୍‌ନେବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଲେଃକେ ମେଁ ମାତର୍‌‌ ଆମେକେ କେଲେଃକେ ।
47 ௪௭ என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍‌ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ କି ବିସ୍‌ବାସ୍ ଡିଙ୍ଗ୍‌ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios g166)
48 ௪௮ ஜீவ அப்பம் நானே.
ନେଙ୍ଗ୍ ପାରାନ୍ ବିଃନେ ବଲେ ।
49 ௪௯ உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
ପେନେ ଅସେଣ୍ଡ୍ରେଇଂ ବାଲିଲନ୍ନିଆ ମାନ୍ନା ଚଙ୍ଗ୍‍ଲେଃଆର୍କେ ଏଲେଡିଗ୍ ମେଇଂ ଗୁଏଆର୍‌କେ ।
50 ௫0 இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
ଡାଗ୍ଲା ଆଣ୍ତିନେ ବଲେ କିତଂଇନିବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଏ ଆମେକେ ଜାଣ୍ଡେ ଚଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ ।
51 ௫௧ நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
ନେଙ୍ଗ୍ ଆଡ଼ାତ୍ରାବାନ୍ ପାଙ୍ଗ୍‌ନ୍ଲେଃକ୍ନେ ଆତେନ୍‌ ପାରାନ୍ ବିଃନେ ବଲେ । ଆକେନ୍ ବଲେ ଜାଣ୍ଡେ ଚଙ୍ଗ୍‌ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । ନେଙ୍ଗ୍ ଆଣ୍ତିନେ ବଲେ ମ୍ୱିଏ ଆତେନ୍‌ ନେଙ୍ଗ୍‌ନେ ଚିଲି । ମଞ୍ଚ୍‌ପୁର୍‌କେ ଆମ୍ୱ୍ର ନ୍‌ସା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ଦାନ୍ ଣ୍ତିଙ୍ଗ୍ଏ ।” (aiōn g165)
52 ௫௨ அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
ଆକେନ୍ ସାମୁଆଁ ଅଁଚେ ଜିଉଦିଇଂ ରିସାଡିଙ୍ଗ୍‍ଚେ କିର‍ଆର୍‌କେ: “ଆକେନ୍ ରେମୁଆଁ ମେଁନେ ଚିଲି ଡିରକମ୍ ଆନେକେ ଚଙ୍ଗ୍ ନ୍‌ସା ବିଃଏ?”
53 ௫௩ அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ: “ନେଙ୍ଗ୍ ସତ୍ ବାସଙ୍ଗ୍‌ଣ୍ଡିଂ, ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍‌ଡେନେ ଚିଲି ପେଚଙ୍ଗ୍‌ଲା ଆରି ମେଁନେ ମ୍ୟା ପେଉଗ୍‌ଲା ପେଇଂ ପାରାନ୍ ବା ପେୟା ଣ୍ତୁ ।
54 ௫௪ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
ଜାଣ୍ଡେ କି ନେଙ୍ଗ୍‌ନେ ଚିଲି ପେଚଙ୍ଗ୍ଏ ଆରି ନେଙ୍ଗ୍‌ନେ ମ୍ୟା ପେଉଙ୍ଗ୍‌ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ଲାବ୍‌ ପେଡିଂଏ ଆରି ନେଙ୍ଗ୍ ଆମେକେ ଡାକ୍ନେ ଦିନା ଆର୍‌ମୁଇଂତର୍‌ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ । (aiōnios g166)
55 ௫௫ என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍‌ନେ ଚିଲି ଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍କେ ସତେଆ ବଲେ ଆରି ନେଙ୍ଗ୍‌ନେ ମ୍‌ମ୍ୟାଁ ସତେଆ ଣ୍ଡିଆ ।
56 ௫௬ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ଜାଣ୍ଡେ ନେଙ୍ଗ୍‌ନେ ଚିଲି ଚଙ୍ଗ୍‌ଏ ଆରି ନେଙ୍ଗ୍ ମ୍‌ମ୍ୟାଁ ଉଗ୍‌ଏ, ମେଁ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ଲେଃଏ ଆରି ନେଙ୍ଗ୍ ମେଁଡାଗ୍ରା ନ୍ଲେଃଏ ।
57 ௫௭ ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
ମ୍ୱ୍ରକ୍ନେ ଆବା ଆନେଙ୍ଗ୍ ବେବକେ; ମେଃନ୍‌ସା ନେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ମ୍ୱ୍ରନ୍ଲେଃକେ । ଦେତ୍‌ରକମ୍ ଜା ନେଙ୍ଗ୍‌ନେ ଚିଲି ଚଙ୍ଗ୍ଏ ନେଙ୍ଗ୍ ନ୍‌ସା ମେଁ ଡିଙ୍ଗ୍ ମ୍ୱ୍ରଲେଃଏ ।
58 ௫௮ வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
ଆକେନ୍ ଆଃ କିତଂବାନ୍‌ ଜାର୍‌କ୍ନେ ବଲେ । ଆଣ୍ତିନେ ବଲେ ଚଙ୍ଗ୍‍ଚେ ପେନେ ଅସେଣ୍ଡ୍ରେଇଂ ଗୁଏଆର୍‌କେ ଦେତ୍‌ରକମ୍ ଣ୍ତୁ ଆକେନ୍ ବଲେ ଜା ଚଙ୍ଗ୍‌ଏ ମେଁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ୱ୍ର ଲେଃଏ ।” (aiōn g165)
59 ௫௯ கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
ଜିସୁ କପର୍ନାହୁମ୍‍ ପାର୍‌ତନା ଡୁଆନ୍ନିଆ ଗ୍ୟାନ୍ ବିଃକେଲା ଆକେନ୍ ସାପା ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌କେ ।
60 ௬0 அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
ଜିସୁନେ ସିସ୍ଇଂନେ ବିତ୍ରେ ଗୁଲୁଏ ମେଁନେ ଆକେନ୍ ସାପା ସାମୁଆଁ ଅଁଚେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଆକେନ୍ ଗ୍ୟାନ୍ ବୁଜେନେ ଜାବର୍ କଷ୍ଟ ଜାଣ୍ଡେ ଆକେନ୍ ସାପା ଅଁଏ?”
61 ௬௧ சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
ଆକେନ୍ ବିସୟ୍‌ରେ ଜିସୁକେ ଜାଣ୍ଡେ ମେଃଡିଗ୍‌ ବାସଙ୍ଗ୍ ଆବଲା ଡିଗ୍ ମେଁନେ ସିସ୍ଇଂ ନିନ୍ଦା ଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍କେ ଡାଗ୍‌ଚେ ଜିସୁ ମ୍ୟାଚେ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ: “ଆକେନ୍ ସାମୁଆଁକେ ମୁର୍ମୁରା ଡିଙ୍ଗ୍‌ପେଡିଙ୍ଗ୍‌କେ?
62 ௬௨ மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍‌ଡେ ଆଣ୍ତିବାନ୍ ପାଙ୍ଗ୍‍ଲେଃକେ ଆତ୍‌ଅରିଆ ଆମେକେ ଆଣ୍ଡେ ୱିଗ୍‌ନେ ପେକେଲା ମେଁନେ ପେଡିଙ୍ଗ୍‌ଏ?
63 ௬௩ ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
ମାତର୍‌‌ ଇସ୍‌ପର୍‌ନେ ଆତ୍ମା ପାରାନ୍ ବିୟାଏ । ରେମୁଆଁନେ ବପୁ ମେଃଡିଗ୍‌ ଡିଙ୍ଗ୍ ଆୟା ଣ୍ତୁ । ଇସ୍‌ପର୍‌ନେ ଆତେନ୍‌ ପାରାନ୍ ବିନେ ଆତ୍ମାକେ ପେଇଂ ଡିରକମ୍ ମ୍ୟାପେୟାଏ ଆତେନ୍‌‌ସା ନେଙ୍ଗ୍ ଆକେନ୍ ସାପା ସାମୁଆଁ ମ୍ବାସଙ୍ଗ୍‌କେ ।
64 ௬௪ ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
ଡାଗ୍ଲା ପେଇଂନେ ବିତ୍ରେ ଜାଣ୍ଡେ ଜାଣ୍ଡେ ବିସ୍‌ବାସ୍ ଆଡିଙ୍ଗ୍‌ଆର୍‌କେ ଣ୍ତୁ ।” ଡାଗ୍ଲା ଜାଣ୍ଡେଇଂ ବିସ୍‌ବାସ୍ ଆଡିଙ୍ଗ୍‌କେ ଣ୍ତୁ ଆରି ଜାଣ୍ଡେ ଆମେକେ ବିରଦ୍‌ଣ୍ତ୍ରେନ୍ନିଆ ଆଃସାଃ ବିଃଏ, ଆତେନ୍‌ ଜିସୁ ଅଃସେବାନ୍ ମ୍ୟାଲେଃକେ ।
65 ௬௫ ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
ଜିସୁ ବାରି ବାସଙ୍ଗ୍‍କେ: “ଆକେନ୍‌ସା ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍‌ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଆବାନେ ବାନ୍ ଲିବିସ ପେ ବାଲା ଜାଣ୍ଡେ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ ପେୟା ଣ୍ତୁ ।”
66 ௬௬ அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
ଆକେନ୍ ସାମୁଆଁ ଅଁଚେ ଜିସୁନେ ପ୍ଲା ୱେଣ୍ଡ୍ରେଇଂନେ ବିତ୍ରେବାନ୍ ଗୁଲେ ରେମୁଆଁ ମେଁନେ ଆଃତେ ୱେ ନ୍‌ସା ଇକ୍‌ଚା ମାଡିଙ୍ଗ୍‌ଚେ ଆଣ୍ତେ ୱିଗ୍‌ଆର୍‌କେ ।
67 ௬௭ அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
ଆକେନ୍ କେଚେ ଜିସୁ ମେଁନେ ତ୍ମାକ୍ଲିଗ୍ ସିସ୍‌‌କେ ସାଲ୍ୟାକୁକେ “ପେଇଂ ଡିଙ୍ଗ୍ ମେଁନେ ଆନେଙ୍ଗ୍ ଆଃତାର୍‌ଚେ ୱିଗ୍ ନ୍‌ସା ଇକ୍‌ଚା ଡିଙ୍ଗ୍‌ପେଡିଙ୍ଗ୍?”
68 ௬௮ சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
ଶିମୋନ ପିତର୍ ଜିସୁକେ ଉତର୍ ବିଃଆର୍‌କେ “ମାପ୍ରୁ ଜାଣ୍ଡେ ଡାଗ୍ରା ନେୱେଏ? ମାଡାନେ ପାରାନ୍‌ନେ ସାମୁଆଁ ନାଁ ଡାଗ୍ରା ଲେଃକେ; (aiōnios g166)
69 ௬௯ நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
ନାଁ ଜେ ଇସ୍‌ପର୍‌ନେ ବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଲେଃକ୍ନେ ଆତେନ୍‌ ପବିତ୍ର ରେମୁଆଁ ଆକେନ୍ ସାମୁଆଁ ନେଁ ଏକ୍ରେ ବିସ୍‌ବାସ୍ ନେଡିଙ୍ଗ୍‌କେ ଆରି ନେମ୍ୟାକେ ।”
70 ௭0 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
ଜିସୁ ଆମେଇଂକେ ଉତର୍ ବିଃକେ, “ନେଙ୍ଗ୍ ମେଁନେ ପେ ତ୍ମାକ୍ଲିଗ୍ ନ୍ନାସ୍ରିକେ କି? ଆରି ପେଇଂନେ ବିତ୍ରେ ମୁଇଂଜା ସ‍ଏତାନ୍‌ ।”
71 ௭௧ சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
ଜିସୁ ଇଷ୍କରିୟଥ୍ ଶିମୋନ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜିଉଦାକେ କେଚେ ଆକେନ୍ ବାସଙ୍ଗ୍‌କେ ଡାଗ୍ଲା ମେଁ ତ୍ମାକ୍ଲିଗ୍ ସିସ୍‌‌ ବିତ୍ରେ ମୁଇଂଜା ଡିଙ୍ଗ୍‌ଲା ଡିଗ୍ ଆରି ମେଁ ଜିସୁକେ ସତ୍ରୁନେ ନ୍ତିନ୍ନିଆ ଆଃସାଃ ବିଃନେ‍ ୱେଡିଙ୍ଗ୍‌କେ ।

< யோவான் 6 >