< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
നികദിമനാമാ യിഹൂദീയാനാമ് അധിപതിഃ ഫിരൂശീ ക്ഷണദായാം
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
യീശൗരഭ്യർണമ് ആവ്രജ്യ വ്യാഹാർഷീത്, ഹേ ഗുരോ ഭവാൻ ഈശ്വരാദ് ആഗത് ഏക ഉപദേഷ്ടാ, ഏതദ് അസ്മാഭിർജ്ഞായതേ; യതോ ഭവതാ യാന്യാശ്ചര്യ്യകർമ്മാണി ക്രിയന്തേ പരമേശ്വരസ്യ സാഹായ്യം വിനാ കേനാപി തത്തത്കർമ്മാണി കർത്തും ന ശക്യന്തേ|
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
തദാ യീശുരുത്തരം ദത്തവാൻ തവാഹം യഥാർഥതരം വ്യാഹരാമി പുനർജന്മനി ന സതി കോപി മാനവ ഈശ്വരസ്യ രാജ്യം ദ്രഷ്ടും ന ശക്നോതി|
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
തതോ നികദീമഃ പ്രത്യവോചത് മനുജോ വൃദ്ധോ ഭൂത്വാ കഥം ജനിഷ്യതേ? സ കിം പുന ർമാതൃർജഠരം പ്രവിശ്യ ജനിതും ശക്നോതി?
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
യീശുരവാദീദ് യഥാർഥതരമ് അഹം കഥയാമി മനുജേ തോയാത്മഭ്യാം പുന ർന ജാതേ സ ഈശ്വരസ്യ രാജ്യം പ്രവേഷ്ടും ന ശക്നോതി|
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
മാംസാദ് യത് ജായതേ തൻ മാംസമേവ തഥാത്മനോ യോ ജായതേ സ ആത്മൈവ|
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
യുഷ്മാഭിഃ പുന ർജനിതവ്യം മമൈതസ്യാം കഥായാമ് ആശ്ചര്യം മാ മംസ്ഥാഃ|
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
സദാഗതിര്യാം ദിശമിച്ഛതി തസ്യാമേവ ദിശി വാതി, ത്വം തസ്യ സ്വനം ശുണോഷി കിന്തു സ കുത ആയാതി കുത്ര യാതി വാ കിമപി ന ജാനാസി തദ്വാദ് ആത്മനഃ സകാശാത് സർവ്വേഷാം മനുജാനാം ജന്മ ഭവതി|
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
തദാ നികദീമഃ പൃഷ്ടവാൻ ഏതത് കഥം ഭവിതും ശക്നോതി?
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
യീശുഃ പ്രത്യക്തവാൻ ത്വമിസ്രായേലോ ഗുരുർഭൂത്വാപി കിമേതാം കഥാം ന വേത്സി?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
തുഭ്യം യഥാർഥം കഥയാമി, വയം യദ് വിദ്മസ്തദ് വച്മഃ യംച്ച പശ്യാമസ്തസ്യൈവ സാക്ഷ്യം ദദ്മഃ കിന്തു യുഷ്മാഭിരസ്മാകം സാക്ഷിത്വം ന ഗൃഹ്യതേ|
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ഏതസ്യ സംസാരസ്യ കഥായാം കഥിതായാം യദി യൂയം ന വിശ്വസിഥ തർഹി സ്വർഗീയായാം കഥായാം കഥം വിശ്വസിഷ്യഥ?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
യഃ സ്വർഗേഽസ്തി യം ച സ്വർഗാദ് അവാരോഹത് തം മാനവതനയം വിനാ കോപി സ്വർഗം നാരോഹത്|
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
അപരഞ്ച മൂസാ യഥാ പ്രാന്തരേ സർപം പ്രോത്ഥാപിതവാൻ മനുഷ്യപുത്രോഽപി തഥൈവോത്ഥാപിതവ്യഃ;
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
തസ്മാദ് യഃ കശ്ചിത് തസ്മിൻ വിശ്വസിഷ്യതി സോഽവിനാശ്യഃ സൻ അനന്തായുഃ പ്രാപ്സ്യതി| (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ഈശ്വര ഇത്ഥം ജഗദദയത യത് സ്വമദ്വിതീയം തനയം പ്രാദദാത് തതോ യഃ കശ്ചിത് തസ്മിൻ വിശ്വസിഷ്യതി സോഽവിനാശ്യഃ സൻ അനന്തായുഃ പ്രാപ്സ്യതി| (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
ഈശ്വരോ ജഗതോ ലോകാൻ ദണ്ഡയിതും സ്വപുത്രം ന പ്രേഷ്യ താൻ പരിത്രാതും പ്രേഷിതവാൻ|
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
അതഏവ യഃ കശ്ചിത് തസ്മിൻ വിശ്വസിതി സ ദണ്ഡാർഹോ ന ഭവതി കിന്തു യഃ കശ്ചിത് തസ്മിൻ ന വിശ്വസിതി സ ഇദാനീമേവ ദണ്ഡാർഹോ ഭവതി, യതഃ സ ഈശ്വരസ്യാദ്വിതീയപുത്രസ്യ നാമനി പ്രത്യയം ന കരോതി|
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
ജഗതോ മധ്യേ ജ്യോതിഃ പ്രാകാശത കിന്തു മനുഷ്യാണാം കർമ്മണാം ദൃഷ്ടത്വാത് തേ ജ്യോതിഷോപി തിമിരേ പ്രീയന്തേ ഏതദേവ ദണ്ഡസ്യ കാരണാം ഭവതി|
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
യഃ കുകർമ്മ കരോതി തസ്യാചാരസ്യ ദൃഷ്ടത്വാത് സ ജ്യോതിരൄതീയിത്വാ തന്നികടം നായാതി;
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
കിന്തു യഃ സത്കർമ്മ കരോതി തസ്യ സർവ്വാണി കർമ്മാണീശ്വരേണ കൃതാനീതി സഥാ പ്രകാശതേ തദഭിപ്രായേണ സ ജ്യോതിഷഃ സന്നിധിമ് ആയാതി|
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
തതഃ പരമ് യീശുഃ ശിഷ്യൈഃ സാർദ്ധം യിഹൂദീയദേശം ഗത്വാ തത്ര സ്ഥിത്വാ മജ്ജയിതുമ് ആരഭത|
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
തദാ ശാലമ് നഗരസ്യ സമീപസ്ഥായിനി ഐനൻ ഗ്രാമേ ബഹുതരതോയസ്ഥിതേസ്തത്ര യോഹൻ അമജ്ജയത് തഥാ ച ലോകാ ആഗത്യ തേന മജ്ജിതാ അഭവൻ|
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
തദാ യോഹൻ കാരായാം ന ബദ്ധഃ|
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
അപരഞ്ച ശാചകർമ്മണി യോഹാനഃ ശിഷ്യൈഃ സഹ യിഹൂദീയലോകാനാം വിവാദേ ജാതേ, തേ യോഹനഃ സംന്നിധിം ഗത്വാകഥയൻ,
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
ഹേ ഗുരോ യർദ്ദനനദ്യാഃ പാരേ ഭവതാ സാർദ്ധം യ ആസീത് യസ്മിംശ്ച ഭവാൻ സാക്ഷ്യം പ്രദദാത് പശ്യതു സോപി മജ്ജയതി സർവ്വേ തസ്യ സമീപം യാന്തി ച|
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
തദാ യോഹൻ പ്രത്യവോചദ് ഈശ്വരേണ ന ദത്തേ കോപി മനുജഃ കിമപി പ്രാപ്തും ന ശക്നോതി|
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
അഹം അഭിഷിക്തോ ന ഭവാമി കിന്തു തദഗ്രേ പ്രേഷിതോസ്മി യാമിമാം കഥാം കഥിതവാനാഹം തത്ര യൂയം സർവ്വേ സാക്ഷിണഃ സ്ഥ|
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
യോ ജനഃ കന്യാം ലഭതേ സ ഏവ വരഃ കിന്തു വരസ്യ സന്നിധൗ ദണ്ഡായമാനം തസ്യ യന്മിത്രം തേന വരസ്യ ശബ്ദേ ശ്രുതേഽതീവാഹ്ലാദ്യതേ മമാപി തദ്വദ് ആനന്ദസിദ്ധിർജാതാ|
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
തേന ക്രമശോ വർദ്ധിതവ്യം കിന്തു മയാ ഹ്സിതവ്യം|
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
യ ഊർധ്വാദാഗച്ഛത് സ സർവ്വേഷാം മുഖ്യോ യശ്ച സംസാരാദ് ഉദപദ്യത സ സാംസാരികഃ സംസാരീയാം കഥാഞ്ച കഥയതി യസ്തു സ്വർഗാദാഗച്ഛത് സ സർവ്വേഷാം മുഖ്യഃ|
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
സ യദപശ്യദശൃണോച്ച തസ്മിന്നേവ സാക്ഷ്യം ദദാതി തഥാപി പ്രായശഃ കശ്ചിത് തസ്യ സാക്ഷ്യം ന ഗൃഹ്ലാതി;
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
കിന്തു യോ ഗൃഹ്ലാതി സ ഈശ്വരസ്യ സത്യവാദിത്വം മുദ്രാങ്ഗിതം കരോതി|
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
ഈശ്വരേണ യഃ പ്രേരിതഃ സഏവ ഈശ്വരീയകഥാം കഥയതി യത ഈശ്വര ആത്മാനം തസ്മൈ അപരിമിതമ് അദദാത്|
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
പിതാ പുത്രേ സ്നേഹം കൃത്വാ തസ്യ ഹസ്തേ സർവ്വാണി സമർപിതവാൻ|
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
യഃ കശ്ചിത് പുത്രേ വിശ്വസിതി സ ഏവാനന്തമ് പരമായുഃ പ്രാപ്നോതി കിന്തു യഃ കശ്ചിത് പുത്രേ ന വിശ്വസിതി സ പരമായുഷോ ദർശനം ന പ്രാപ്നോതി കിന്ത്വീശ്വരസ്യ കോപഭാജനം ഭൂത്വാ തിഷ്ഠതി| (aiōnios g166)

< யோவான் 3 >