< யோவான் 21 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
ⲁ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲛⲁⲓ̈ ⲟⲛ ⲁⲓ̅ⲥ̅ ⲟⲩⲟⲛϩϥ̅ ⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϩⲓϫⲛ̅ⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲛ̅ⲧⲓⲃⲉⲣⲓⲁⲥ. ⲛ̅ⲧⲁϥⲟⲩⲟⲛϩϥ̅ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲓ̈ϩⲉ.
2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
ⲃ̅ⲛⲉⲩϣⲟⲟⲡ ϩⲓⲟⲩⲥⲟⲡ ⲡⲉ ⲛ̅ϭⲓⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ⲛⲙ̅ⲑⲱⲙⲁⲥ ⲡⲉϣⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲇⲓⲇⲩⲙⲟⲥ ⲁⲩⲱ ⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲡⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲕⲁⲛⲁ ⲛ̅ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲛⲙ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲛ̅ⲍⲉⲃⲉⲇⲁⲓⲟⲥ ⲁⲩⲱ ⲕⲉⲥⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ.
3 சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ⲛ̅ϭⲓⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ϫⲉ ϯⲛⲁⲃⲱⲕ ⲉϭⲉⲡⲧⲃⲧ̅. ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ. ϫⲉ ⲧⲛ̅ⲛⲏⲩ ϩⲱⲱⲛ ⲛⲙ̅ⲙⲁⲕ. ⲁⲩⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ⲁⲩⲁⲗⲉ ⲉⲡϫⲟⲉⲓ ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩϭⲉⲡⲗⲁⲁⲩ ϩⲛ̅ⲧⲉⲩϣⲏ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ.
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
ⲇ̅ⲛ̅ⲧⲉⲣⲉϩⲧⲟⲟⲩⲉ ⲇⲉ ϣⲱⲡⲉ ⲁⲓ̅ⲥ̅ ⲁϩⲉⲣⲁⲧϥ ϩⲓⲡⲉⲕⲣⲟ. ⲙ̅ⲡⲟⲩⲓ̈ⲙⲉ ⲇⲉ ⲛ̅ϭⲓⲙ̅ⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲓ̅ⲥ̅ ⲡⲉ.
5 இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ⲛⲉⲓ̈ϣⲏⲣⲉ ϣⲏⲙ. ⲙⲏ ⲟⲩⲛⲗⲁⲁⲩ ⲛ̅ⲧⲃⲧ̅ ⲛ̅ⲧⲉⲧⲏⲩⲧⲛ̅. ⲁⲩⲟⲩⲱϣⲃ̅ ⲛⲁϥ. ϫⲉ ⲙ̅ⲙⲟⲛ.
6 அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
ⲋ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ. ϫⲉ ⲁⲛⲓⲛⲉ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ϣⲛⲉ ⲛ̅ⲥⲁⲟⲩⲛⲁⲙ ⲙⲡϫⲟⲉ͡ⲓ ⲁⲩⲱ ⲧⲉⲧⲛⲁϩⲉ ⲉⲟⲩⲟⲛ. ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ϫⲉ ⲁⲛϣⲡ̅ϩⲓⲥⲉ ⲛ̅ⲧⲉⲩϣⲏ ⲧⲏⲣⲉⲥ ⲙ̅ⲡⲛ̅ϭⲉⲡⲗⲁⲁⲩ. ⲉϫⲙ̅ⲡⲉⲕⲣⲁⲛ ⲇⲉ ⲧⲛ̅ⲛⲁⲛⲟϫϥ̅. ⲁⲩⲛⲟϫϥ̅ ⲇⲉ ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩⲉϣϭⲙ̅ϭⲟⲙ ⲉⲥⲟⲕϥ̅ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲁϣⲏ ⲛ̅ⲧⲃⲧ̅.
7 ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
ⲍ̅ⲡⲉϫⲁϥ ϭⲉ ⲙ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲛ̅ϭⲓⲡⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲛⲉⲣⲉⲓ̅ⲥ̅ ⲙⲉ ⲙ̅ⲙⲟϥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲉ. ⲥⲓⲙⲱⲛ ϭⲉ ⲡⲉⲧⲣⲟⲥ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲥⲱⲧⲙ̅ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲉ. ⲁϥⲙⲟⲣϥ̅ ⲙ̅ⲡⲉϥⲉⲡⲉⲛⲇⲩⲧⲏⲥ. ⲛⲉϥⲕⲏ ⲅⲁⲣ ⲕⲁϩⲏⲩ ⲡⲉ ⲁⲩⲱ ⲁϥϥⲟϭϥ̅ ⲉⲑⲁⲗⲁⲥⲥⲁ.
8 மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
ⲏ̅ⲛ̅ⲕⲉⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲇⲉ ⲁⲩⲉ͡ⲓ ϩⲓⲡϫⲟⲉ͡ⲓ. ⲛⲉⲩⲟⲩⲏⲟⲩ ⲅⲁⲣ ⲁⲛ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲕⲣⲟ ⲁⲗⲗⲁ ⲛ̅ⲁϣⲏⲧ ⲙ̅ⲙⲁϩⲉ ⲉⲩⲥⲱⲕ ⲙ̅ⲡⲉϣⲛⲉ ⲛⲛ̅ⲧⲃⲧ̅.
9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
ⲑ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲙⲟⲟⲛⲉ ⲇⲉ ⲉⲡⲉⲕⲣⲟ. ⲁⲩⲛⲁⲩ ⲉⲩϣⲁϩ ⲉⲣⲉⲟⲩⲧⲃⲧ̅ ϩⲓϫⲱϥ ⲁⲩⲱ ⲟⲩⲟⲓ̈ⲕ ⲉϥⲕⲏ ⲉϩⲣⲁⲓ̈.
10 ௧0 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
ⲓ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁⲩ. ϫⲉ ⲁⲛⲓⲛⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛ̅ⲧⲃⲧ̅ ⲉⲛⲧⲁⲧⲉⲧⲛ̅ϭⲟⲡⲟⲩ ⲧⲉⲛⲟⲩ.
11 ௧௧ சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
ⲓ̅ⲁ̅ⲁϥⲁⲗⲉ ⲛ̅ϭⲓⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ⲁⲩⲱ ⲁϥⲥⲱⲕ ⲙ̅ⲡⲉϣⲛⲉ ⲉⲡⲉⲕⲣⲟ ⲉϥⲙⲉϩ ⲛ̅ⲛⲟϭ ⲛ̅ⲧⲃⲧ̅ ⲉⲩⲉ͡ⲓⲣⲉ ⲛ̅ϣⲉ ⲧⲁⲓ̈ⲟⲩ ϣⲟⲙⲧⲉ. ⲁⲩⲱ ⲉⲣⲉⲧⲉⲓ̈ⲁϣⲏ ⲛ̅ⲧⲃⲧ̅ ⲙ̅ⲙⲁⲩ ⲙ̅ⲡⲉⲡⲉϣⲛⲉ ⲡⲱϩ.
12 ௧௨ இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
ⲓ̅ⲃ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁⲩ. ϫⲉ ⲁⲙⲏⲉ͡ⲓⲧⲛ̅ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲟⲩⲱⲙ. ⲙ̅ⲡⲉⲗⲁⲁⲩ ⲛ̅ⲙ̅ⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲧⲟⲗⲙⲁ ⲉϫⲛⲟⲩϥ ϫⲉ ⲛ̅ⲧⲕⲛⲓⲙ ⲉⲩⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲉ.
13 ௧௩ அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
ⲓ̅ⲅ̅ⲁϥⲉ͡ⲓ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ⲁϥϫⲓ ⲙ̅ⲡⲟⲓ̈ⲕ ⲁϥϯ ⲛⲁⲩ ⲁⲩⲱ ⲟⲛ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲧⲃⲧ̅.
14 ௧௪ இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ⲓ̅ⲇ̅ⲡⲁⲓ̈ ⲇⲉ ⲡⲉ ⲡⲙⲉϩϣⲟⲙⲛⲧ̅ ⲛ̅ⲥⲟⲡ ⲛ̅ⲧⲁⲓ̅ⲥ̅ ⲟⲩⲟⲛϩϥ̅ ⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲧⲱⲟⲩⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ.
15 ௧௫ அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
ⲓ̅ⲉ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲱⲙ ⲇⲉ. ⲡⲉϫⲁϥ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ⲛ̅ⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ. ϫⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲕⲙⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲉϩⲟⲩⲉⲛⲁⲓ̈. ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲥⲉ ⲡϫⲟⲉⲓⲥ. ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉⲧⲥⲟⲟⲩⲛ ϫⲉ ϯⲙⲉ ⲙ̅ⲙⲟⲕ. ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲙⲟⲟⲛⲉ ⲛ̅ⲛⲁϩⲓⲓ̈ⲃ.
16 ௧௬ இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ⲓ̅ⲋ̅ⲡⲉϫⲁϥ ⲟⲛ ⲛⲁϥ ⲙ̅ⲡⲙⲉϩⲥⲉⲡⲥⲛⲁⲩ. ϫⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲕⲙⲉ ⲙ̅ⲙⲟⲓ̈. ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲥⲉ ⲡϫⲟⲉⲓⲥ. ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉⲧⲥⲟⲟⲩⲛ ϫⲉ ϯⲙⲉ ⲙ̅ⲙⲟⲕ. ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲙⲟⲟⲛⲉ ⲛ̅ⲛⲁⲉⲥⲟⲟⲩ.
17 ௧௭ மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ⲓ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ⲙ̅ⲡⲙⲉϩϣⲟⲙⲛⲧ̅ ⲛ̅ⲥⲟⲡ. ϫⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲕⲙⲉ ⲙ̅ⲙⲟⲓ̈. ⲁϥⲗⲩⲡⲓ ⲛ̅ϭⲓⲡⲉⲧⲣⲟⲥ ϫⲉ ⲁϥϫⲟⲟⲥ ⲛⲁϥ ⲙ̅ⲡⲙⲉϩϣⲙⲛⲧ̅ ⲥⲱⲱⲡ ϫⲉ ⲕⲙⲉ ⲙ̅ⲙⲟⲓ̈. ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ. ⲕⲥⲟⲟⲩⲛ ⲛ̅ϩⲱⲃ ⲛⲓⲙ. ⲛ̅ⲧⲟⲕ ⲕⲥⲟⲟⲩⲛ ϫⲉ ϯⲙⲉ ⲙ̅ⲙⲟⲕ. ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁϥ. ϫⲉ ⲙⲟⲟⲛⲉ ⲛ̅ⲛⲁⲉⲥⲟⲟⲩ.
18 ௧௮ நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲓ̅ⲏ̅ϩⲁⲙⲏⲛ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⲙ̅ⲡⲉⲩⲟⲓ̈ϣ ⲉⲛⲉⲕⲟ ⲛ̅ϣⲏⲣⲉ ϣⲏⲙ. ⲛⲉϣⲁⲕⲙⲟⲣⲕ ⲡⲉ ⲛⲅ̅ⲃⲱⲕ ⲉⲡⲙⲁ ⲉⲧⲕ̅ⲟⲩⲁϣϥ̅. ϩⲟⲧⲁⲛ ⲇⲉ ⲉⲕϣⲁⲛⲣ̅ϩⲗ̅ⲗⲟ. ⲕⲛⲁⲡⲣϣⲛⲉⲕϭⲓϫ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲕⲉⲟⲩⲁ ⲙⲟⲣⲕ ⲛϥ̅ϫⲓⲧⲕ̅ ⲉⲡⲙⲁ ⲉⲧⲉⲛⲅ̅ⲟⲩⲁϣϥ̅ ⲁⲛ.
19 ௧௯ இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
ⲓ̅ⲑ̅ⲛ̅ⲧⲁϥϫⲉⲡⲁⲓ̈ ⲇⲉ ⲉϥⲥⲏⲙⲁⲛⲉ ϫⲉ ϩⲛ̅ⲁϣ ⲙ̅ⲙⲟⲩ ⲉϥⲛⲁϯⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲛ̅ⲧⲉⲣⲉϥϫⲉⲡⲁⲓ̈ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲟⲩⲁϩⲕ̅ ⲛ̅ⲥⲱⲉⲓ.
20 ௨0 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
ⲕ̅ⲁϥⲕⲧⲟϥ ⲛ̅ϭⲓⲡⲉⲧⲣⲟⲥ ⲁϥⲛⲁⲩ ⲉⲡⲙⲁⲑⲏⲧⲏⲥ (ⲉⲛ)ⲉⲣⲉⲓ̅ⲥ̅ ⲙⲉ ⲙ̅ⲙⲟϥ ⲉϥⲟⲩⲏϩ ⲛ̅ⲥⲱϥ ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲁϥⲛⲟϫϥ̅ ϩⲙ̅ⲡⲇⲉⲓⲡⲛⲟⲛ ⲉϫⲛ̅ⲧⲉϥⲙⲉⲥⲧϩⲏⲧ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲓⲙ ⲡⲉⲧⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙ̅ⲙⲟⲕ.
21 ௨௧ அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
ⲕ̅ⲁ̅ⲛ̅ⲧⲉⲣⲉⲡⲉⲧⲣⲟⲥ ϭⲉ ⲛⲁⲩ ⲉⲡⲁⲓ̈ ⲡⲉϫⲁϥ ⲛ̅ⲓ̅ⲥ̅. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲁⲓ̈ ⲇⲉ ⲛ̅ⲧⲟϥ ⲛⲉ.
22 ௨௨ அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
ⲕ̅ⲃ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁϥ. ϫⲉ ⲉⲓ̈ϣⲁⲛⲟⲩⲱϣ ⲉⲧⲣⲉϥϭⲱ ϣⲁⲛϯⲉ͡ⲓ ⲛ̅ⲧⲕ̅ⲛⲓⲙ ⲛ̅ⲧⲟⲕ ⲟⲩⲁϩⲕ ⲛ̅ⲥⲱⲉ͡ⲓ ⲛ̅ⲧⲟⲕ.
23 ௨௩ ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
ⲕ̅ⲅ̅ⲁⲡⲉⲉ͡ⲓϣⲁϫⲉ ϭⲉ ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲥⲛⲏⲩ ϫⲉ ⲙ̅ⲡⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲛⲁⲙⲟⲩ ⲁⲛ. ⲛ̅ⲧⲁϥϫⲟⲟⲥ ⲇⲉ ⲛⲁϥ ⲁⲛ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ϫⲉ ⲛϥ̅ⲛⲁⲙⲟⲩ ⲁⲛ. ⲁⲗⲗⲁ ⲉⲓ̈ϣⲁⲛⲟⲩⲱϣ ⲉⲧⲣⲉϥϭⲱ ϣⲁⲛϯⲉⲓ ⲛ̅ⲧⲕⲛⲓⲙ ⲛ̅ⲧⲟⲕ.
24 ௨௪ அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
ⲕ̅ⲇ̅ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲧⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲉⲧⲃⲉⲛⲁⲓ̈ ⲁⲩⲱ ⲡⲉⲛⲧⲁϥⲥⲉϩⲛⲁⲓ̈. ⲁⲩⲱ ⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲟⲩⲙⲉ ⲧⲉ ⲧⲉϥⲙⲛⲧ̅ⲙⲛ̅ⲧⲣⲉ.
25 ௨௫ இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.
ⲕ̅ⲉ̅ⲟⲩⲛ̅ϩⲉⲛⲕⲉϩⲃⲏⲩⲉ ⲇⲉ ⲉⲛⲁϣⲱⲟⲩ ⲉⲁϥⲁⲁⲩ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ⲛⲁⲓ̈ ⲉⲩϣⲁⲛⲥⲁϩⲟⲩ ⲟⲩⲁ ⲟⲩⲁ ϯϫⲱ (ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ) ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲁϣⲡ̅ⲛ̅ϫⲱⲱⲙⲉ ⲁⲛ ⲉⲧⲟⲩⲛⲁⲥⲁϩⲟⲩ· ⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲛⲕⲁⲧⲁⲓ̈ⲱⲁⲛⲛⲏⲥ

< யோவான் 21 >