< யோவான் 21 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
इना गल्लां दे बाद यीशुऐ अपणे आपे जो तिबिरियास झिला दे बखे चेलयां जो दर्शण दिते कने इस तरीके ने दर्शण दिते।
2 ௨ சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
शमौन पतरस कने थोमा जिसयो दिदुमुस बोलदे न, कने गलील प्रदेश दे काना शेहरे दा नतनएल कने जब्दी दे पुत्र, कने उदे चेलयां चे दो जणे होर गिठे होए थे।
3 ௩ சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
शमौन पतरसे उना जो बोलया, मैं मछियां पकड़ना चलया है। उना उसला बोलया, “असां भी तेरे सोगी चलदे न।” तां सै निकली करी किस्तिया पर चढ़ी गे, पर उसा राती उना कुछ नी पकड़या।
4 ௪ விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
अगले दिने ब्याग होंदे ही यीशु कनारे पर खड़ोतया था, पर चेलयां उसयो पछेणया नी की ऐ यीशु है।
5 ௫ இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
तालू यीशुऐ उना जो बोलया, हे मेरे प्यारो, क्या तुहाड़े बाल कुछ खांणे जो है? उना जबाब दिता, “नी।”
6 ௬ அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
यीशुऐ उना जो बोलया, “किस्तिया दे सजे पास्से जाल फेंका, तां मिलणियां।” तालू उना जाल फेंकया, कने हुण मछियां जादा होणे दिया बजा ने उना ला जाल नी खिची होया।
7 ௭ ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
इस तांई उस चेले ने जिसने प्रभु प्यार रखदा था पतरसे जो बोलया, “ऐ तां प्रभु है।” जालू शमौने ऐ सुणया की प्रभु यीशु है, तां उनी अपणे सै कपड़े पाई ले जड़े उनी कम्म करदे बेले उतारी दितयो थे कने पाणिये च छाल देई दिती।
8 ௮ மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
पर होर चेले डोंगिया पर मछियां ने भरूऐ जाले जो खिंज्जी लेई आऐ, क्योंकि सै कनारे ला जादा दूर नी थे, कोई सो मीटर दूर थे।
9 ௯ அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
जालू सै कनारे पर पुज्जे, तां उना कोलयां दिया अग्गी पर मछियां कने उदे बखे रोटियां रखियां दिखियां।
10 ௧0 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
यीशुऐ उना जो बोलया, “जड़ियां मछियां तुसां हुण पकड़िया न, उना चे थोड़िया लेई ओआ।”
11 ௧௧ சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
शमौन पतरसे डोंगिया पर चढ़ी करी इकसो त्रियूँजा मछियां ने भरया जाल कनारे पर खिचया, कने इतणियां मछियां होंणे ने भी जाल नी फटया।
12 ௧௨ இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
यीशुऐ उना जो बोलया, “ओआ रोटी खाई लिया।” कने चेलयां चे कुसयो भी होंसला नी होया, की उसला पूछन, तू कुण है? “क्योंकि सै जाणदे थे की ऐ प्रभु ही है।”
13 ௧௩ அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
यीशुऐ रोटी लेईकरी उना जो दिती, कने तियां ही मच्छी भी दिती।
14 ௧௪ இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ऐ तिजी बरी है की यीशुऐ मरी करी जिंदा होणे बाद चेलयां जो दर्शण दिते न।
15 ௧௫ அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
रोटी खाणे बाद यीशुऐ शमौन पतरसे जो पुछया, हे यूहन्ना दे पुत्र शमौन, क्या तू सच्ची इना बाकियां ला जादा मिंजो ने प्यार करदा है? उनी यीशुऐ जो बोलया, हां प्रभु; तू तां जाणदा है, की मैं तिजो पर भरोसा रखदा है, उनी उना जो बोलया, “मेरे छेलुआं दी रखबाली कर।”
16 ௧௬ இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
यीशुऐ फिरी दूजी बरी उसयो पुछया, “हे यूहन्ना दे पुत्र शमौन, क्या तू मिंजो ने प्यार रखदा है?” उनी उसयो बोलया, “हाँ, प्रभु तू तां जाणदा हे की मैं तिजो ने प्यार करदा है?” उनी उसयो बोलया, “मेरियां भेडां दा पुआल बण।”
17 ௧௭ மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
यीशुऐ तीजी बरी उसयो पुछया, “यूहन्ना दे पुत्र शमौन, क्या तू मिंजो ने प्यार करदा है?” पतरस उदास होई गिया, की उनी उसयो तीजी बरी ऐसा बोलया, “क्या तू मिंजो ने प्यार करदा है।” कने उनी बोलया, “प्रभु जी, तू तां सब कुछ जाणदा है की मैं तिजो ने प्यार करदा है।” यीशुऐ उसला बोलया, “मेरियां भेडां जो चुगा।”
18 ௧௮ நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
“मैं तुसां ने सच्च-सच्च बोलदा है, जालू तू जवान था, तां अपणे लक्के जो बन्नी करी जिथू चांदा था, ओथु गुमदा था; पर जालू तू बुडा होइ जाणा, तां तू अपणे हथां जो फेलांगा, कने कोई तिजो बन्नी लेंगा कने तिजो ओथु लेई जाणा जिथू तू जाणा नी चांदा।”
19 ௧௯ இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
यीशुऐ ऐसा ऐ दसणे तांई बोलया की पतरसे कियां मरणा कने परमेश्वरे दी महिमा करणी है; ऐ बोली करी, उसयो बोलया, “मेरा चेला बणी रे।”
20 ௨0 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
पतरसे मुड़ी करी उस चेले जो पिच्छे ओंदे दिखया जिसने यीशु प्यार रखदा था। ऐ सै ही है जिनी फसह दी रोटी खाणे बेले यीशुऐ बखे बेईकरी पुछया था, “प्रभु जी, तिजो पकड़ाणे बाला कुण है?”
21 ௨௧ அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
उसयो दिखीकरी पतरसे यीशुऐ जो बोलया, “प्रभु जी, इदे सोगी क्या होणा है?”
22 ௨௨ அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
यीशुऐ उसयो बोलया, “अगर मैं चां की सै मेरे ओंणे दीकर जिन्दा रे, तां तिजो क्या? तू मेरा चेला बणी रे।”
23 ௨௩ ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
तांई तां भाईयां च ऐ गल्ल फेली गेई की उनी दुज्जे चेले नी मरणा है; तमी यीशुऐ उसयो ऐ नी बोलया, की इनी नी मरणा है, पर ऐ की “अगर मैं चां की ऐ मेरे ओणे दीकर जिन्दा रे, तां तिजो इसला क्या?”
24 ௨௪ அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
जिनी माणुऐ ऐ सब कुछ दिखया, उनी ऐ गबाई दिती है, ताकि तुसां भी यीशु पर भरोसा करी सकन। कने उदी गबाई सच्ची है। कने असां जाणदे न की सै सच्चाईया ने बोलदा है।
25 ௨௫ இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.
यीशुऐ होर भी मते कम्म किते, अगर उना सारे कम्मा जो लिखया जांदा, तां मिंजो लगदा की सारे संसार च इतणी भी जगा नी होणी थी की उना सारियां कताबां जो रखी सके।