< யோவான் 20 >

1 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
अफ़्ते रे पईले दिने मरियम मगदलिनी कुछ ओर जवाणसा साथे प्यागा ई न्हेरे-न्हेरे कब्रा पाँदे आयी और तिने पात्थर कब्रा पाँदा ते आटेया रा देखेया।
2 உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
तेबे सेयो दौड़ी की शमौन पतरस और बाकि चेलेया गे गईया, जिना खे यीशु प्यार करो थे, और बोलेया, “सेयो प्रभुए रे शरीरो खे कब्रा ते निकाल़ी की लयी गे रे और आसे नि जाणदिया कि तिना खे केयी लयी गे रे।”
3 அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
तेबे पतरस और दूजा चेला निकल़ी की कब्रा गे गये।
4 பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து,
और दोनो साथे-साथे दौड़ने लगी रे थे, पर दूजा चेला पतरसो ते आगे दौड़ी की कब्रा पाँदे पईले पऊँछेया।
5 அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
तिने नपी की टाले ई पड़े रे देखे, पर से पीतरे नि गया।
6 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து,
तेबे शमौन पतरस तेसते पीछे-पीछे पऊँछेया और कब्रा रे पीतरे गया और टाले पड़े रे देखे।
7 துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.
और से टाल्ला जो तिना रे सिरो रे था बानेया रा, से टालेया साथे नि था, पर एक लग जगा रे था लपेटेया रा।
8 முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான்.
तेबे दूजा चेला बी, जो कब्रा पाँदे पईले पऊँछेया था, पीतरे गया और देखी की विश्वास कित्तेया कि यीशु मरेया रे बीचा ते जिऊँदा ऊईगा रा।
9 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.
सेयो एबुए तक पवित्र शास्त्रो री गल्ल नि समजे थे कि से मरेया रे बीचा ते जिऊँदा ऊणा था।
10 ௧0 பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
तेबे सेयो चेले आपणे कअरो खे वापस ऊईगे।
11 ௧௧ மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து,
पर मरियम रोंदी ऊई कब्रा गे ई बारे खड़ी री रई और रोंदे-रोंदे कब्रा खे चूकी की देखदी रई।
12 ௧௨ இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள்.
तेबे तेसे दो स्वर्गदूत सफेद टाले पईने रे, एक सरयाणे रे और दूजा पाईंदिया रे बैठे रे देखे, जेती यीशुए री लोथ थी पड़ी री।
13 ௧௩ அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
तिने तेसा खे बोलेया, “ओ जवाणसे तूँ कऊँ लगी री रोणे?” तेसे तिना खे बोलेया, “सेयो मेरे प्रभुए रे शरीरो खे चकी की लयी गे रे और आऊँ नि जाणदी कि सेयो केयी लयी गे रे।”
14 ௧௪ இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள்.
ये बोली कि से पीछे मुड़ी और यीशु खड़े रे देखे और पछयाणे नि कि यीशु ए।
15 ௧௫ இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள்.
यीशुए तेसा खे बोलेया, “ओ जवाणसे तूँ कऊँ लगी री रोणे? केसखे टोल़ेई?” तेसे माली समजी की तिना खे बोलेया, “ओ महाराज! जे तुसे तिना रा शरीर चकी की लयी गे रे तो मांगे बताई दे कि केयी राखी राखे और आऊँ तिना खे लयी जाऊँगी।”
16 ௧௬ இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம்.
यीशुए तेसा खे बोलेया, “मरियम!” तेसे पीछे मुड़ी की तिना खे इब्रानी पाषा रे बोलेया, “रब्बुनी!” मतलब-ओ गुरू!
17 ௧௭ இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
यीशुए तेसा खे बोलेया, “माखे नि छूँ, कऊँकि आऊँ एबुए तक ऊबे पिते गे नि जाई रा, पर मेरे पाईया गे जाई की तिना खे बोली दे कि आऊँ आपणे पिते गे और तुसा रे परमेशरो गे ऊबे जाऊँआ।”
18 ௧௮ மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.
मरियम मगदलिनिये जाई की चेलेया गे बताया, “मैं प्रभु देखे, तिने मां साथे गल्ला कित्तिया।”
19 ௧௯ வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
तेसी दिने, जो अफ़्ते रा पईला दिन था, साँजके बखते, जेबे तेथो रे द्वार, जेती चेले थे, यहूदी अगुओ रे डरो रे मारे बंद थे, तेबे यीशु आए और बीचे खड़े ऊई की तिना खे बोलेया, “तुसा खे शान्ति मिलो।”
20 ௨0 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
और ये बोली की तिने आपणे आथ और आपणी पसल़ी तिना खे दखाए, तेबे चेले यीशुए खे देखी की खुश ऊए।
21 ௨௧ இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
यीशुए तिना खे फेर बोलेया, “तुसा खे शान्ति मिलो; जिंयाँ पिते आऊँ पेजी राखेया, तिंयाँ ई आऊँ बी तुसा खे दुनिया रे पेजुँआ।”
22 ௨௨ அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
ये बोली की तिने तिना पाँदे फूकर दित्ती और बोलेया, “पवित्र आत्मा लओ।
23 ௨௩ எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
जिना रे पाप तुसे माफ करो, तिना खे माफ ऊईगे और जिना रे पाप तुसे माफ नि करोगे, तिना रे पाप माफ नि ऊणे।”
24 ௨௪ இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை.
पर बारा चेलेया बीचा ते एक, मतलब-थोमा, जेसखे दिदुमुस बी बोलोए, जेबे यीशु आए, तो से तिना साथे नि था।
25 ௨௫ மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
जेबे ओर चेले तेसखे बोलणे लगे, “आसे यीशु देखे,” तेबे तिने तिना खे बोलेया, “जदुओ तक आऊँ तिना रे आथो रे परेगा रे छेद नि देखी लऊँ और परेगा रे छेदो रे आपणी गूठी और तिना री पसल़िया रे आपणा आथ नि पाई लऊँ, तदुओ तक आऊँ विश्वास नि करदा कि से मरेया रे बीचा ते जिऊँदा ऊईगा रा।”
26 ௨௬ மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
एक अफ़्ते ते बाद फेर तिना रे चेले पीतरे थे और थोमा तिना साथे था और द्वार बंद थे, तेबे यीशुए आयी की और बीचे खड़ी की बोलेया, “तुसा खे शान्ति मिलो।”
27 ௨௭ பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார்.
तेबे तिने थोमे खे बोलेया, “आपणी गूठी ओरे ल्याई की मेरी पसल़िया रे पा और अविश्वासी नि, पर विश्वासी बण।”
28 ௨௮ தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
ये सुणी की थोमे बोलेया, “ओ मेरे प्रभु! ओ मेरे परमेशर!”
29 ௨௯ அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
यीशुए तेसखे बोलेया, “तैं तो माखे देखी की विश्वास करी राखेया, पर धन्य सेयो, जिने बिना देखे विश्वास कित्तेया।”
30 ௩0 இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார்.
यीशुए ओर बी बऊत चमत्कार चेलेया सामणे दखाए, जो एसा कताबा रे लिखी नि राखे।
31 ௩௧ இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
पर यो तेबे लिखे, ताकि तुसे विश्वास करो कि यीशु ई परमेशरो रा पुत्र मसीह ए, और विश्वास करी की तिना रे नाओं ते अनन्त जीवन पाओ।

< யோவான் 20 >