< யோவான் 2 >
1 ௧ மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள்.
అనన్తరం త్రుతీయదివసే గాలీల్ ప్రదేశియే కాన్నానామ్ని నగరే వివాహ ఆసీత్ తత్ర చ యీశోర్మాతా తిష్ఠత్|
2 ௨ இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
తస్మై వివాహాయ యీశుస్తస్య శిష్యాశ్చ నిమన్త్రితా ఆసన్|
3 ௩ திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.
తదనన్తరం ద్రాక్షారసస్య న్యూనత్వాద్ యీశోర్మాతా తమవదత్ ఏతేషాం ద్రాక్షారసో నాస్తి|
4 ௪ அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார்.
తదా స తామవోచత్ హే నారి మయా సహ తవ కిం కార్య్యం? మమ సమయ ఇదానీం నోపతిష్ఠతి|
5 ௫ அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
తతస్తస్య మాతా దాసానవోచద్ అయం యద్ వదతి తదేవ కురుత|
6 ௬ யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.
తస్మిన్ స్థానే యిహూదీయానాం శుచిత్వకరణవ్యవహారానుసారేణాఢకైకజలధరాణి పాషాణమయాని షడ్వృహత్పాత్రాణిఆసన్|
7 ௭ இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
తదా యీశుస్తాన్ సర్వ్వకలశాన్ జలైః పూరయితుం తానాజ్ఞాపయత్, తతస్తే సర్వ్వాన్ కుమ్భానాకర్ణం జలైః పర్య్యపూరయన్|
8 ௮ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
అథ తేభ్యః కిఞ్చిదుత్తార్య్య భోజ్యాధిపాతేఃసమీపం నేతుం స తానాదిశత్, తే తదనయన్|
9 ௯ அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து:
అపరఞ్చ తజ్జలం కథం ద్రాక్షారసోఽభవత్ తజ్జలవాహకాదాసా జ్ఞాతుం శక్తాః కిన్తు తద్భోజ్యాధిపో జ్ఞాతుం నాశక్నోత్ తదవలిహ్య వరం సంమ్బోద్యావదత,
10 ௧0 எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
లోకాః ప్రథమం ఉత్తమద్రాక్షారసం దదతి తషు యథేష్టం పితవత్సు తస్మా కిఞ్చిదనుత్తమఞ్చ దదతి కిన్తు త్వమిదానీం యావత్ ఉత్తమద్రాక్షారసం స్థాపయసి|
11 ௧௧ இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ఇత్థం యీశుర్గాలీలప్రదేశే ఆశ్చర్య్యకార్మ్మ ప్రారమ్భ నిజమహిమానం ప్రాకాశయత్ తతః శిష్యాస్తస్మిన్ వ్యశ్వసన్|
12 ௧௨ அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள்.
తతః పరమ్ స నిజమాత్రుభ్రాత్రుస్శిష్యైః సార్ద్ధ్ం కఫర్నాహూమమ్ ఆగమత్ కిన్తు తత్ర బహూదినాని ఆతిష్ఠత్|
13 ௧௩ பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய்,
తదనన్తరం యిహూదియానాం నిస్తారోత్సవే నికటమాగతే యీశు ర్యిరూశాలమ్ నగరమ్ ఆగచ్ఛత్|
14 ௧௪ தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து,
తతో మన్దిరస్య మధ్యే గోమేషపారావతవిక్రయిణో వాణిజక్ష్చోపవిష్టాన్ విలోక్య
15 ௧௫ கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,
రజ్జుభిః కశాం నిర్మ్మాయ సర్వ్వగోమేషాదిభిః సార్ద్ధం తాన్ మన్దిరాద్ దూరీకృతవాన్|
16 ௧௬ புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
వణిజాం ముద్రాది వికీర్య్య ఆసనాని న్యూబ్జీకృత్య పారావతవిక్రయిభ్యోఽకథయద్ అస్మాత్ స్థానాత్ సర్వాణ్యేతాని నయత, మమ పితుగృహం వాణిజ్యగృహం మా కార్ష్ట|
17 ௧௭ அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
తస్మాత్ తన్మన్దిరార్థ ఉద్యోగో యస్తు స గ్రసతీవ మామ్| ఇమాం శాస్త్రీయలిపిం శిష్యాఃసమస్మరన్|
18 ௧௮ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
తతః పరమ్ యిహూదీయలోకా యీషిమవదన్ తవమిదృశకర్మ్మకరణాత్ కిం చిహ్నమస్మాన్ దర్శయసి?
19 ௧௯ இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார்.
తతో యీశుస్తానవోచద్ యుష్మాభిరే తస్మిన్ మన్దిరే నాశితే దినత్రయమధ్యేఽహం తద్ ఉత్థాపయిష్యామి|
20 ௨0 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள்.
తదా యిహూదియా వ్యాహార్షుః, ఏతస్య మన్దిరస నిర్మ్మాణేన షట్చత్వారింశద్ వత్సరా గతాః, త్వం కిం దినత్రయమధ్యే తద్ ఉత్థాపయిష్యసి?
21 ௨௧ அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார்.
కిన్తు స నిజదేహరూపమన్దిరే కథామిమాం కథితవాన్|
22 ௨௨ அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
స యదేతాదృశం గదితవాన్ తచ్ఛిష్యాః శ్మశానాత్ తదీయోత్థానే సతి స్మృత్వా ధర్మ్మగ్రన్థే యీశునోక్తకథాయాం చ వ్యశ్వసిషుః|
23 ௨௩ பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
అనన్తరం నిస్తారోత్సవస్య భోజ్యసమయే యిరూశాలమ్ నగరే తత్క్రుతాశ్చర్య్యకర్మ్మాణి విలోక్య బహుభిస్తస్య నామని విశ్వసితం|
24 ௨௪ அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை.
కిన్తు స తేషాం కరేషు స్వం న సమర్పయత్, యతః స సర్వ్వానవైత్|
25 ௨௫ மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.
స మానవేషు కస్యచిత్ ప్రమాణం నాపేక్షత యతో మనుజానాం మధ్యే యద్యదస్తి తత్తత్ సోజానాత్|