< யோவான் 2 >

1 மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள்.
ଅନନ୍ତରଂ ତ୍ରୁତୀଯଦିୱସେ ଗାଲୀଲ୍ ପ୍ରଦେଶିଯେ କାନ୍ନାନାମ୍ନି ନଗରେ ୱିୱାହ ଆସୀତ୍ ତତ୍ର ଚ ଯୀଶୋର୍ମାତା ତିଷ୍ଠତ୍|
2 இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ତସ୍ମୈ ୱିୱାହାଯ ଯୀଶୁସ୍ତସ୍ୟ ଶିଷ୍ୟାଶ୍ଚ ନିମନ୍ତ୍ରିତା ଆସନ୍|
3 திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.
ତଦନନ୍ତରଂ ଦ୍ରାକ୍ଷାରସସ୍ୟ ନ୍ୟୂନତ୍ୱାଦ୍ ଯୀଶୋର୍ମାତା ତମୱଦତ୍ ଏତେଷାଂ ଦ୍ରାକ୍ଷାରସୋ ନାସ୍ତି|
4 அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார்.
ତଦା ସ ତାମୱୋଚତ୍ ହେ ନାରି ମଯା ସହ ତୱ କିଂ କାର୍ୟ୍ୟଂ? ମମ ସମଯ ଇଦାନୀଂ ନୋପତିଷ୍ଠତି|
5 அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
ତତସ୍ତସ୍ୟ ମାତା ଦାସାନୱୋଚଦ୍ ଅଯଂ ଯଦ୍ ୱଦତି ତଦେୱ କୁରୁତ|
6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.
ତସ୍ମିନ୍ ସ୍ଥାନେ ଯିହୂଦୀଯାନାଂ ଶୁଚିତ୍ୱକରଣୱ୍ୟୱହାରାନୁସାରେଣାଢକୈକଜଲଧରାଣି ପାଷାଣମଯାନି ଷଡ୍ୱୃହତ୍ପାତ୍ରାଣିଆସନ୍|
7 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
ତଦା ଯୀଶୁସ୍ତାନ୍ ସର୍ୱ୍ୱକଲଶାନ୍ ଜଲୈଃ ପୂରଯିତୁଂ ତାନାଜ୍ଞାପଯତ୍, ତତସ୍ତେ ସର୍ୱ୍ୱାନ୍ କୁମ୍ଭାନାକର୍ଣଂ ଜଲୈଃ ପର୍ୟ୍ୟପୂରଯନ୍|
8 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
ଅଥ ତେଭ୍ୟଃ କିଞ୍ଚିଦୁତ୍ତାର୍ୟ୍ୟ ଭୋଜ୍ୟାଧିପାତେଃସମୀପଂ ନେତୁଂ ସ ତାନାଦିଶତ୍, ତେ ତଦନଯନ୍|
9 அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து:
ଅପରଞ୍ଚ ତଜ୍ଜଲଂ କଥଂ ଦ୍ରାକ୍ଷାରସୋଽଭୱତ୍ ତଜ୍ଜଲୱାହକାଦାସା ଜ୍ଞାତୁଂ ଶକ୍ତାଃ କିନ୍ତୁ ତଦ୍ଭୋଜ୍ୟାଧିପୋ ଜ୍ଞାତୁଂ ନାଶକ୍ନୋତ୍ ତଦୱଲିହ୍ୟ ୱରଂ ସଂମ୍ବୋଦ୍ୟାୱଦତ,
10 ௧0 எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
ଲୋକାଃ ପ୍ରଥମଂ ଉତ୍ତମଦ୍ରାକ୍ଷାରସଂ ଦଦତି ତଷୁ ଯଥେଷ୍ଟଂ ପିତୱତ୍ସୁ ତସ୍ମା କିଞ୍ଚିଦନୁତ୍ତମଞ୍ଚ ଦଦତି କିନ୍ତୁ ତ୍ୱମିଦାନୀଂ ଯାୱତ୍ ଉତ୍ତମଦ୍ରାକ୍ଷାରସଂ ସ୍ଥାପଯସି|
11 ௧௧ இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ଇତ୍ଥଂ ଯୀଶୁର୍ଗାଲୀଲପ୍ରଦେଶେ ଆଶ୍ଚର୍ୟ୍ୟକାର୍ମ୍ମ ପ୍ରାରମ୍ଭ ନିଜମହିମାନଂ ପ୍ରାକାଶଯତ୍ ତତଃ ଶିଷ୍ୟାସ୍ତସ୍ମିନ୍ ୱ୍ୟଶ୍ୱସନ୍|
12 ௧௨ அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள்.
ତତଃ ପରମ୍ ସ ନିଜମାତ୍ରୁଭ୍ରାତ୍ରୁସ୍ଶିଷ୍ୟୈଃ ସାର୍ଦ୍ଧ୍ଂ କଫର୍ନାହୂମମ୍ ଆଗମତ୍ କିନ୍ତୁ ତତ୍ର ବହୂଦିନାନି ଆତିଷ୍ଠତ୍|
13 ௧௩ பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய்,
ତଦନନ୍ତରଂ ଯିହୂଦିଯାନାଂ ନିସ୍ତାରୋତ୍ସୱେ ନିକଟମାଗତେ ଯୀଶୁ ର୍ୟିରୂଶାଲମ୍ ନଗରମ୍ ଆଗଚ୍ଛତ୍|
14 ௧௪ தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து,
ତତୋ ମନ୍ଦିରସ୍ୟ ମଧ୍ୟେ ଗୋମେଷପାରାୱତୱିକ୍ରଯିଣୋ ୱାଣିଜକ୍ଷ୍ଚୋପୱିଷ୍ଟାନ୍ ୱିଲୋକ୍ୟ
15 ௧௫ கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,
ରଜ୍ଜୁଭିଃ କଶାଂ ନିର୍ମ୍ମାଯ ସର୍ୱ୍ୱଗୋମେଷାଦିଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ତାନ୍ ମନ୍ଦିରାଦ୍ ଦୂରୀକୃତୱାନ୍|
16 ௧௬ புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
ୱଣିଜାଂ ମୁଦ୍ରାଦି ୱିକୀର୍ୟ୍ୟ ଆସନାନି ନ୍ୟୂବ୍ଜୀକୃତ୍ୟ ପାରାୱତୱିକ୍ରଯିଭ୍ୟୋଽକଥଯଦ୍ ଅସ୍ମାତ୍ ସ୍ଥାନାତ୍ ସର୍ୱାଣ୍ୟେତାନି ନଯତ, ମମ ପିତୁଗୃହଂ ୱାଣିଜ୍ୟଗୃହଂ ମା କାର୍ଷ୍ଟ|
17 ௧௭ அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
ତସ୍ମାତ୍ ତନ୍ମନ୍ଦିରାର୍ଥ ଉଦ୍ୟୋଗୋ ଯସ୍ତୁ ସ ଗ୍ରସତୀୱ ମାମ୍| ଇମାଂ ଶାସ୍ତ୍ରୀଯଲିପିଂ ଶିଷ୍ୟାଃସମସ୍ମରନ୍|
18 ௧௮ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
ତତଃ ପରମ୍ ଯିହୂଦୀଯଲୋକା ଯୀଷିମୱଦନ୍ ତୱମିଦୃଶକର୍ମ୍ମକରଣାତ୍ କିଂ ଚିହ୍ନମସ୍ମାନ୍ ଦର୍ଶଯସି?
19 ௧௯ இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார்.
ତତୋ ଯୀଶୁସ୍ତାନୱୋଚଦ୍ ଯୁଷ୍ମାଭିରେ ତସ୍ମିନ୍ ମନ୍ଦିରେ ନାଶିତେ ଦିନତ୍ରଯମଧ୍ୟେଽହଂ ତଦ୍ ଉତ୍ଥାପଯିଷ୍ୟାମି|
20 ௨0 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள்.
ତଦା ଯିହୂଦିଯା ୱ୍ୟାହାର୍ଷୁଃ, ଏତସ୍ୟ ମନ୍ଦିରସ ନିର୍ମ୍ମାଣେନ ଷଟ୍ଚତ୍ୱାରିଂଶଦ୍ ୱତ୍ସରା ଗତାଃ, ତ୍ୱଂ କିଂ ଦିନତ୍ରଯମଧ୍ୟେ ତଦ୍ ଉତ୍ଥାପଯିଷ୍ୟସି?
21 ௨௧ அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார்.
କିନ୍ତୁ ସ ନିଜଦେହରୂପମନ୍ଦିରେ କଥାମିମାଂ କଥିତୱାନ୍|
22 ௨௨ அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
ସ ଯଦେତାଦୃଶଂ ଗଦିତୱାନ୍ ତଚ୍ଛିଷ୍ୟାଃ ଶ୍ମଶାନାତ୍ ତଦୀଯୋତ୍ଥାନେ ସତି ସ୍ମୃତ୍ୱା ଧର୍ମ୍ମଗ୍ରନ୍ଥେ ଯୀଶୁନୋକ୍ତକଥାଯାଂ ଚ ୱ୍ୟଶ୍ୱସିଷୁଃ|
23 ௨௩ பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ଅନନ୍ତରଂ ନିସ୍ତାରୋତ୍ସୱସ୍ୟ ଭୋଜ୍ୟସମଯେ ଯିରୂଶାଲମ୍ ନଗରେ ତତ୍କ୍ରୁତାଶ୍ଚର୍ୟ୍ୟକର୍ମ୍ମାଣି ୱିଲୋକ୍ୟ ବହୁଭିସ୍ତସ୍ୟ ନାମନି ୱିଶ୍ୱସିତଂ|
24 ௨௪ அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை.
କିନ୍ତୁ ସ ତେଷାଂ କରେଷୁ ସ୍ୱଂ ନ ସମର୍ପଯତ୍, ଯତଃ ସ ସର୍ୱ୍ୱାନୱୈତ୍|
25 ௨௫ மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.
ସ ମାନୱେଷୁ କସ୍ୟଚିତ୍ ପ୍ରମାଣଂ ନାପେକ୍ଷତ ଯତୋ ମନୁଜାନାଂ ମଧ୍ୟେ ଯଦ୍ୟଦସ୍ତି ତତ୍ତତ୍ ସୋଜାନାତ୍|

< யோவான் 2 >