< யோவான் 19 >

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
పీలాతో యీశుమ్ ఆనీయ కశయా ప్రాహారయత్|
2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
పశ్చాత్ సేనాగణః కణ్టకనిర్మ్మితం ముకుటం తస్య మస్తకే సమర్ప్య వార్త్తాకీవర్ణం రాజపరిచ్ఛదం పరిధాప్య,
3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
హే యిహూదీయానాం రాజన్ నమస్కార ఇత్యుక్త్వా తం చపేటేనాహన్తుమ్ ఆరభత|
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
తదా పీలాతః పునరపి బహిర్గత్వా లోకాన్ అవదత్, అస్య కమప్యపరాధం న లభేఽహం, పశ్యత తద్ యుష్మాన్ జ్ఞాపయితుం యుష్మాకం సన్నిధౌ బహిరేనమ్ ఆనయామి|
5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
తతః పరం యీశుః కణ్టకముకుటవాన్ వార్త్తాకీవర్ణవసనవాంశ్చ బహిరాగచ్ఛత్| తతః పీలాత ఉక్తవాన్ ఏనం మనుష్యం పశ్యత|
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
తదా ప్రధానయాజకాః పదాతయశ్చ తం దృష్ట్వా, ఏనం క్రుశే విధ, ఏనం క్రుశే విధ, ఇత్యుక్త్వా రవితుం ఆరభన్త| తతః పీలాతః కథితవాన్ యూయం స్వయమ్ ఏనం నీత్వా క్రుశే విధత, అహమ్ ఏతస్య కమప్యపరాధం న ప్రాప్తవాన్|
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
యిహూదీయాః ప్రత్యవదన్ అస్మాకం యా వ్యవస్థాస్తే తదనుసారేణాస్య ప్రాణహననమ్ ఉచితం యతోయం స్వమ్ ఈశ్వరస్య పుత్రమవదత్|
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
పీలాత ఇమాం కథాం శ్రుత్వా మహాత్రాసయుక్తః
9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
సన్ పునరపి రాజగృహ ఆగత్య యీశుం పృష్టవాన్ త్వం కుత్రత్యో లోకః? కిన్తు యీశస్తస్య కిమపి ప్రత్యుత్తరం నావదత్|
10 ௧0 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
తతః పీలాత్ కథితవాన త్వం కిం మయా సార్ద్ధం న సంలపిష్యసి? త్వాం క్రుశే వేధితుం వా మోచయితుం శక్తి ర్మమాస్తే ఇతి కిం త్వం న జానాసి? తదా యీశుః ప్రత్యవదద్ ఈశ్వరేణాదం మమోపరి తవ కిమప్యధిపతిత్వం న విద్యతే, తథాపి యో జనో మాం తవ హస్తే సమార్పయత్ తస్య మహాపాతకం జాతమ్|
11 ௧௧ இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
తదా యీశుః ప్రత్యవదద్ ఈశ్వరేణాదత్తం మమోపరి తవ కిమప్యధిపతిత్వం న విద్యతే, తథాపి యో జనో మాం తవ హస్తే సమార్పయత్ తస్య మహాపాతకం జాతమ్|
12 ௧௨ அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
తదారభ్య పీలాతస్తం మోచయితుం చేష్టితవాన్ కిన్తు యిహూదీయా రువన్తో వ్యాహరన్ యదీమం మానవం త్యజసి తర్హి త్వం కైసరస్య మిత్రం న భవసి, యో జనః స్వం రాజానం వక్తి సఏవ కైమరస్య విరుద్ధాం కథాం కథయతి|
13 ௧௩ பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
ఏతాం కథాం శ్రుత్వా పీలాతో యీశుం బహిరానీయ నిస్తారోత్సవస్య ఆసాదనదినస్య ద్వితీయప్రహరాత్ పూర్వ్వం ప్రస్తరబన్ధననామ్ని స్థానే ఽర్థాత్ ఇబ్రీయభాషయా యద్ గబ్బిథా కథ్యతే తస్మిన్ స్థానే విచారాసన ఉపావిశత్|
14 ௧௪ அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
అనన్తరం పీలాతో యిహూదీయాన్ అవదత్, యుష్మాకం రాజానం పశ్యత|
15 ௧௫ அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
కిన్తు ఏనం దూరీకురు, ఏనం దూరీకురు, ఏనం క్రుశే విధ, ఇతి కథాం కథయిత్వా తే రవితుమ్ ఆరభన్త; తదా పీలాతః కథితవాన్ యుష్మాకం రాజానం కిం క్రుశే వేధిష్యామి? ప్రధానయాజకా ఉత్తరమ్ అవదన్ కైసరం వినా కోపి రాజాస్మాకం నాస్తి|
16 ௧௬ அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
తతః పీలాతో యీశుం క్రుశే వేధితుం తేషాం హస్తేషు సమార్పయత్, తతస్తే తం ధృత్వా నీతవన్తః|
17 ௧௭ அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
తతః పరం యీశుః క్రుశం వహన్ శిరఃకపాలమ్ అర్థాద్ యద్ ఇబ్రీయభాషయా గుల్గల్తాం వదన్తి తస్మిన్ స్థాన ఉపస్థితః|
18 ௧௮ அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
తతస్తే మధ్యస్థానే తం తస్యోభయపార్శ్వే ద్వావపరౌ క్రుశేఽవిధన్|
19 ௧௯ பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
అపరమ్ ఏష యిహూదీయానాం రాజా నాసరతీయయీశుః, ఇతి విజ్ఞాపనం లిఖిత్వా పీలాతస్తస్య క్రుశోపరి సమయోజయత్|
20 ௨0 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
సా లిపిః ఇబ్రీయయూనానీయరోమీయభాషాభి ర్లిఖితా; యీశోః క్రుశవేధనస్థానం నగరస్య సమీపం, తస్మాద్ బహవో యిహూదీయాస్తాం పఠితుమ్ ఆరభన్త|
21 ௨௧ அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
యిహూదీయానాం ప్రధానయాజకాః పీలాతమితి న్యవేదయన్ యిహూదీయానాం రాజేతి వాక్యం న కిన్తు ఏష స్వం యిహూదీయానాం రాజానమ్ అవదద్ ఇత్థం లిఖతు|
22 ௨௨ பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
తతః పీలాత ఉత్తరం దత్తవాన్ యల్లేఖనీయం తల్లిఖితవాన్|
23 ௨௩ படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
ఇత్థం సేనాగణో యీశుం క్రుశే విధిత్వా తస్య పరిధేయవస్త్రం చతురో భాగాన్ కృత్వా ఏకైకసేనా ఏకైకభాగమ్ అగృహ్లత్ తస్యోత్తరీయవస్త్రఞ్చాగృహ్లత్| కిన్తూత్తరీయవస్త్రం సూచిసేవనం వినా సర్వ్వమ్ ఊతం|
24 ௨௪ அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
తస్మాత్తే వ్యాహరన్ ఏతత్ కః ప్రాప్స్యతి? తన్న ఖణ్డయిత్వా తత్ర గుటికాపాతం కరవామ| విభజన్తేఽధరీయం మే వసనం తే పరస్పరం| మమోత్తరీయవస్త్రార్థం గుటికాం పాతయన్తి చ| ఇతి యద్వాక్యం ధర్మ్మపుస్తకే లిఖితమాస్తే తత్ సేనాగణేనేత్థం వ్యవహరణాత్ సిద్ధమభవత్|
25 ௨௫ இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
తదానీం యీశో ర్మాతా మాతు ర్భగినీ చ యా క్లియపా భార్య్యా మరియమ్ మగ్దలీనీ మరియమ్ చ ఏతాస్తస్య క్రుశస్య సన్నిధౌ సమతిష్ఠన్|
26 ௨௬ அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
తతో యీశుః స్వమాతరం ప్రియతమశిష్యఞ్చ సమీపే దణ్డాయమానౌ విలోక్య మాతరమ్ అవదత్, హే యోషిద్ ఏనం తవ పుత్రం పశ్య,
27 ௨௭ பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
శిష్యన్త్వవదత్, ఏనాం తవ మాతరం పశ్య| తతః స శిష్యస్తద్ఘటికాయాం తాం నిజగృహం నీతవాన్|
28 ௨௮ அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
అనన్తరం సర్వ్వం కర్మ్మాధునా సమ్పన్నమభూత్ యీశురితి జ్ఞాత్వా ధర్మ్మపుస్తకస్య వచనం యథా సిద్ధం భవతి తదర్థమ్ అకథయత్ మమ పిపాసా జాతా|
29 ௨௯ காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
తతస్తస్మిన్ స్థానే అమ్లరసేన పూర్ణపాత్రస్థిత్యా తే స్పఞ్జమేకం తదమ్లరసేనార్ద్రీకృత్య ఏసోబ్నలే తద్ యోజయిత్వా తస్య ముఖస్య సన్నిధావస్థాపయన్|
30 ௩0 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
తదా యీశురమ్లరసం గృహీత్వా సర్వ్వం సిద్ధమ్ ఇతి కథాం కథయిత్వా మస్తకం నమయన్ ప్రాణాన్ పర్య్యత్యజత్|
31 ௩௧ அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
తద్వినమ్ ఆసాదనదినం తస్మాత్ పరేఽహని విశ్రామవారే దేహా యథా క్రుశోపరి న తిష్ఠన్తి, యతః స విశ్రామవారో మహాదినమాసీత్, తస్మాద్ యిహూదీయాః పీలాతనికటం గత్వా తేషాం పాదభఞ్జనస్య స్థానాన్తరనయనస్య చానుమతిం ప్రార్థయన్త|
32 ௩௨ அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
అతః సేనా ఆగత్య యీశునా సహ క్రుశే హతయోః ప్రథమద్వితీయచోరయోః పాదాన్ అభఞ్జన్;
33 ௩௩ அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
కిన్తు యీశోః సన్నిధిం గత్వా స మృత ఇతి దృష్ట్వా తస్య పాదౌ నాభఞ్జన్|
34 ௩௪ ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
పశ్చాద్ ఏకో యోద్ధా శూలాఘాతేన తస్య కుక్షిమ్ అవిధత్ తత్క్షణాత్ తస్మాద్ రక్తం జలఞ్చ నిరగచ్ఛత్|
35 ௩௫ அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
యో జనోఽస్య సాక్ష్యం దదాతి స స్వయం దృష్టవాన్ తస్యేదం సాక్ష్యం సత్యం తస్య కథా యుష్మాకం విశ్వాసం జనయితుం యోగ్యా తత్ స జానాతి|
36 ௩௬ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
తస్యైకమ్ అస్ధ్యపి న భంక్ష్యతే,
37 ௩௭ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
తద్వద్ అన్యశాస్త్రేపి లిఖ్యతే, యథా, "దృష్టిపాతం కరిష్యన్తి తేఽవిధన్ యన్తు తమ్ప్రతి| "
38 ௩௮ இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
అరిమథీయనగరస్య యూషఫ్నామా శిష్య ఏక ఆసీత్ కిన్తు యిహూదీయేభ్యో భయాత్ ప్రకాశితో న భవతి; స యీశో ర్దేహం నేతుం పీలాతస్యానుమతిం ప్రార్థయత, తతః పీలాతేనానుమతే సతి స గత్వా యీశో ర్దేహమ్ అనయత్|
39 ௩௯ ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
అపరం యో నికదీమో రాత్రౌ యీశోః సమీపమ్ అగచ్ఛత్ సోపి గన్ధరసేన మిశ్రితం ప్రాయేణ పఞ్చాశత్సేటకమగురుం గృహీత్వాగచ్ఛత్|
40 ௪0 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
తతస్తే యిహూదీయానాం శ్మశానే స్థాపనరీత్యనుసారేణ తత్సుగన్ధిద్రవ్యేణ సహితం తస్య దేహం వస్త్రేణావేష్టయన్|
41 ௪௧ அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
అపరఞ్చ యత్ర స్థానే తం క్రుశేఽవిధన్ తస్య నికటస్థోద్యానే యత్ర కిమపి మృతదేహం కదాపి నాస్థాప్యత తాదృశమ్ ఏకం నూతనం శ్మశానమ్ ఆసీత్|
42 ௪௨ யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
యిహూదీయానామ్ ఆసాదనదినాగమనాత్ తే తస్మిన్ సమీపస్థశ్మశానే యీశుమ్ అశాయయన్|

< யோவான் 19 >