< யோவான் 19 >

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
ಪೀಲಾತೋ ಯೀಶುಮ್ ಆನೀಯ ಕಶಯಾ ಪ್ರಾಹಾರಯತ್|
2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
ಪಶ್ಚಾತ್ ಸೇನಾಗಣಃ ಕಣ್ಟಕನಿರ್ಮ್ಮಿತಂ ಮುಕುಟಂ ತಸ್ಯ ಮಸ್ತಕೇ ಸಮರ್ಪ್ಯ ವಾರ್ತ್ತಾಕೀವರ್ಣಂ ರಾಜಪರಿಚ್ಛದಂ ಪರಿಧಾಪ್ಯ,
3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
ಹೇ ಯಿಹೂದೀಯಾನಾಂ ರಾಜನ್ ನಮಸ್ಕಾರ ಇತ್ಯುಕ್ತ್ವಾ ತಂ ಚಪೇಟೇನಾಹನ್ತುಮ್ ಆರಭತ|
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
ತದಾ ಪೀಲಾತಃ ಪುನರಪಿ ಬಹಿರ್ಗತ್ವಾ ಲೋಕಾನ್ ಅವದತ್, ಅಸ್ಯ ಕಮಪ್ಯಪರಾಧಂ ನ ಲಭೇಽಹಂ, ಪಶ್ಯತ ತದ್ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಿತುಂ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ಬಹಿರೇನಮ್ ಆನಯಾಮಿ|
5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
ತತಃ ಪರಂ ಯೀಶುಃ ಕಣ್ಟಕಮುಕುಟವಾನ್ ವಾರ್ತ್ತಾಕೀವರ್ಣವಸನವಾಂಶ್ಚ ಬಹಿರಾಗಚ್ಛತ್| ತತಃ ಪೀಲಾತ ಉಕ್ತವಾನ್ ಏನಂ ಮನುಷ್ಯಂ ಪಶ್ಯತ|
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
ತದಾ ಪ್ರಧಾನಯಾಜಕಾಃ ಪದಾತಯಶ್ಚ ತಂ ದೃಷ್ಟ್ವಾ, ಏನಂ ಕ್ರುಶೇ ವಿಧ, ಏನಂ ಕ್ರುಶೇ ವಿಧ, ಇತ್ಯುಕ್ತ್ವಾ ರವಿತುಂ ಆರಭನ್ತ| ತತಃ ಪೀಲಾತಃ ಕಥಿತವಾನ್ ಯೂಯಂ ಸ್ವಯಮ್ ಏನಂ ನೀತ್ವಾ ಕ್ರುಶೇ ವಿಧತ, ಅಹಮ್ ಏತಸ್ಯ ಕಮಪ್ಯಪರಾಧಂ ನ ಪ್ರಾಪ್ತವಾನ್|
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
ಯಿಹೂದೀಯಾಃ ಪ್ರತ್ಯವದನ್ ಅಸ್ಮಾಕಂ ಯಾ ವ್ಯವಸ್ಥಾಸ್ತೇ ತದನುಸಾರೇಣಾಸ್ಯ ಪ್ರಾಣಹನನಮ್ ಉಚಿತಂ ಯತೋಯಂ ಸ್ವಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಪುತ್ರಮವದತ್|
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
ಪೀಲಾತ ಇಮಾಂ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ಮಹಾತ್ರಾಸಯುಕ್ತಃ
9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
ಸನ್ ಪುನರಪಿ ರಾಜಗೃಹ ಆಗತ್ಯ ಯೀಶುಂ ಪೃಷ್ಟವಾನ್ ತ್ವಂ ಕುತ್ರತ್ಯೋ ಲೋಕಃ? ಕಿನ್ತು ಯೀಶಸ್ತಸ್ಯ ಕಿಮಪಿ ಪ್ರತ್ಯುತ್ತರಂ ನಾವದತ್|
10 ௧0 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
೧ ತತಃ ಪೀಲಾತ್ ಕಥಿತವಾನ ತ್ವಂ ಕಿಂ ಮಯಾ ಸಾರ್ದ್ಧಂ ನ ಸಂಲಪಿಷ್ಯಸಿ? ತ್ವಾಂ ಕ್ರುಶೇ ವೇಧಿತುಂ ವಾ ಮೋಚಯಿತುಂ ಶಕ್ತಿ ರ್ಮಮಾಸ್ತೇ ಇತಿ ಕಿಂ ತ್ವಂ ನ ಜಾನಾಸಿ? ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯವದದ್ ಈಶ್ವರೇಣಾದಂ ಮಮೋಪರಿ ತವ ಕಿಮಪ್ಯಧಿಪತಿತ್ವಂ ನ ವಿದ್ಯತೇ, ತಥಾಪಿ ಯೋ ಜನೋ ಮಾಂ ತವ ಹಸ್ತೇ ಸಮಾರ್ಪಯತ್ ತಸ್ಯ ಮಹಾಪಾತಕಂ ಜಾತಮ್|
11 ௧௧ இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯವದದ್ ಈಶ್ವರೇಣಾದತ್ತಂ ಮಮೋಪರಿ ತವ ಕಿಮಪ್ಯಧಿಪತಿತ್ವಂ ನ ವಿದ್ಯತೇ, ತಥಾಪಿ ಯೋ ಜನೋ ಮಾಂ ತವ ಹಸ್ತೇ ಸಮಾರ್ಪಯತ್ ತಸ್ಯ ಮಹಾಪಾತಕಂ ಜಾತಮ್|
12 ௧௨ அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
ತದಾರಭ್ಯ ಪೀಲಾತಸ್ತಂ ಮೋಚಯಿತುಂ ಚೇಷ್ಟಿತವಾನ್ ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯಾ ರುವನ್ತೋ ವ್ಯಾಹರನ್ ಯದೀಮಂ ಮಾನವಂ ತ್ಯಜಸಿ ತರ್ಹಿ ತ್ವಂ ಕೈಸರಸ್ಯ ಮಿತ್ರಂ ನ ಭವಸಿ, ಯೋ ಜನಃ ಸ್ವಂ ರಾಜಾನಂ ವಕ್ತಿ ಸಏವ ಕೈಮರಸ್ಯ ವಿರುದ್ಧಾಂ ಕಥಾಂ ಕಥಯತಿ|
13 ௧௩ பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
ಏತಾಂ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ಪೀಲಾತೋ ಯೀಶುಂ ಬಹಿರಾನೀಯ ನಿಸ್ತಾರೋತ್ಸವಸ್ಯ ಆಸಾದನದಿನಸ್ಯ ದ್ವಿತೀಯಪ್ರಹರಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಪ್ರಸ್ತರಬನ್ಧನನಾಮ್ನಿ ಸ್ಥಾನೇ ಽರ್ಥಾತ್ ಇಬ್ರೀಯಭಾಷಯಾ ಯದ್ ಗಬ್ಬಿಥಾ ಕಥ್ಯತೇ ತಸ್ಮಿನ್ ಸ್ಥಾನೇ ವಿಚಾರಾಸನ ಉಪಾವಿಶತ್|
14 ௧௪ அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
ಅನನ್ತರಂ ಪೀಲಾತೋ ಯಿಹೂದೀಯಾನ್ ಅವದತ್, ಯುಷ್ಮಾಕಂ ರಾಜಾನಂ ಪಶ್ಯತ|
15 ௧௫ அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
ಕಿನ್ತು ಏನಂ ದೂರೀಕುರು, ಏನಂ ದೂರೀಕುರು, ಏನಂ ಕ್ರುಶೇ ವಿಧ, ಇತಿ ಕಥಾಂ ಕಥಯಿತ್ವಾ ತೇ ರವಿತುಮ್ ಆರಭನ್ತ; ತದಾ ಪೀಲಾತಃ ಕಥಿತವಾನ್ ಯುಷ್ಮಾಕಂ ರಾಜಾನಂ ಕಿಂ ಕ್ರುಶೇ ವೇಧಿಷ್ಯಾಮಿ? ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಉತ್ತರಮ್ ಅವದನ್ ಕೈಸರಂ ವಿನಾ ಕೋಪಿ ರಾಜಾಸ್ಮಾಕಂ ನಾಸ್ತಿ|
16 ௧௬ அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
ತತಃ ಪೀಲಾತೋ ಯೀಶುಂ ಕ್ರುಶೇ ವೇಧಿತುಂ ತೇಷಾಂ ಹಸ್ತೇಷು ಸಮಾರ್ಪಯತ್, ತತಸ್ತೇ ತಂ ಧೃತ್ವಾ ನೀತವನ್ತಃ|
17 ௧௭ அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
ತತಃ ಪರಂ ಯೀಶುಃ ಕ್ರುಶಂ ವಹನ್ ಶಿರಃಕಪಾಲಮ್ ಅರ್ಥಾದ್ ಯದ್ ಇಬ್ರೀಯಭಾಷಯಾ ಗುಲ್ಗಲ್ತಾಂ ವದನ್ತಿ ತಸ್ಮಿನ್ ಸ್ಥಾನ ಉಪಸ್ಥಿತಃ|
18 ௧௮ அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
ತತಸ್ತೇ ಮಧ್ಯಸ್ಥಾನೇ ತಂ ತಸ್ಯೋಭಯಪಾರ್ಶ್ವೇ ದ್ವಾವಪರೌ ಕ್ರುಶೇಽವಿಧನ್|
19 ௧௯ பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
ಅಪರಮ್ ಏಷ ಯಿಹೂದೀಯಾನಾಂ ರಾಜಾ ನಾಸರತೀಯಯೀಶುಃ, ಇತಿ ವಿಜ್ಞಾಪನಂ ಲಿಖಿತ್ವಾ ಪೀಲಾತಸ್ತಸ್ಯ ಕ್ರುಶೋಪರಿ ಸಮಯೋಜಯತ್|
20 ௨0 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
ಸಾ ಲಿಪಿಃ ಇಬ್ರೀಯಯೂನಾನೀಯರೋಮೀಯಭಾಷಾಭಿ ರ್ಲಿಖಿತಾ; ಯೀಶೋಃ ಕ್ರುಶವೇಧನಸ್ಥಾನಂ ನಗರಸ್ಯ ಸಮೀಪಂ, ತಸ್ಮಾದ್ ಬಹವೋ ಯಿಹೂದೀಯಾಸ್ತಾಂ ಪಠಿತುಮ್ ಆರಭನ್ತ|
21 ௨௧ அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
ಯಿಹೂದೀಯಾನಾಂ ಪ್ರಧಾನಯಾಜಕಾಃ ಪೀಲಾತಮಿತಿ ನ್ಯವೇದಯನ್ ಯಿಹೂದೀಯಾನಾಂ ರಾಜೇತಿ ವಾಕ್ಯಂ ನ ಕಿನ್ತು ಏಷ ಸ್ವಂ ಯಿಹೂದೀಯಾನಾಂ ರಾಜಾನಮ್ ಅವದದ್ ಇತ್ಥಂ ಲಿಖತು|
22 ௨௨ பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
ತತಃ ಪೀಲಾತ ಉತ್ತರಂ ದತ್ತವಾನ್ ಯಲ್ಲೇಖನೀಯಂ ತಲ್ಲಿಖಿತವಾನ್|
23 ௨௩ படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
ಇತ್ಥಂ ಸೇನಾಗಣೋ ಯೀಶುಂ ಕ್ರುಶೇ ವಿಧಿತ್ವಾ ತಸ್ಯ ಪರಿಧೇಯವಸ್ತ್ರಂ ಚತುರೋ ಭಾಗಾನ್ ಕೃತ್ವಾ ಏಕೈಕಸೇನಾ ಏಕೈಕಭಾಗಮ್ ಅಗೃಹ್ಲತ್ ತಸ್ಯೋತ್ತರೀಯವಸ್ತ್ರಞ್ಚಾಗೃಹ್ಲತ್| ಕಿನ್ತೂತ್ತರೀಯವಸ್ತ್ರಂ ಸೂಚಿಸೇವನಂ ವಿನಾ ಸರ್ವ್ವಮ್ ಊತಂ|
24 ௨௪ அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
ತಸ್ಮಾತ್ತೇ ವ್ಯಾಹರನ್ ಏತತ್ ಕಃ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ? ತನ್ನ ಖಣ್ಡಯಿತ್ವಾ ತತ್ರ ಗುಟಿಕಾಪಾತಂ ಕರವಾಮ| ವಿಭಜನ್ತೇಽಧರೀಯಂ ಮೇ ವಸನಂ ತೇ ಪರಸ್ಪರಂ| ಮಮೋತ್ತರೀಯವಸ್ತ್ರಾರ್ಥಂ ಗುಟಿಕಾಂ ಪಾತಯನ್ತಿ ಚ| ಇತಿ ಯದ್ವಾಕ್ಯಂ ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕೇ ಲಿಖಿತಮಾಸ್ತೇ ತತ್ ಸೇನಾಗಣೇನೇತ್ಥಂ ವ್ಯವಹರಣಾತ್ ಸಿದ್ಧಮಭವತ್|
25 ௨௫ இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
ತದಾನೀಂ ಯೀಶೋ ರ್ಮಾತಾ ಮಾತು ರ್ಭಗಿನೀ ಚ ಯಾ ಕ್ಲಿಯಪಾ ಭಾರ್ಯ್ಯಾ ಮರಿಯಮ್ ಮಗ್ದಲೀನೀ ಮರಿಯಮ್ ಚ ಏತಾಸ್ತಸ್ಯ ಕ್ರುಶಸ್ಯ ಸನ್ನಿಧೌ ಸಮತಿಷ್ಠನ್|
26 ௨௬ அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
ತತೋ ಯೀಶುಃ ಸ್ವಮಾತರಂ ಪ್ರಿಯತಮಶಿಷ್ಯಞ್ಚ ಸಮೀಪೇ ದಣ್ಡಾಯಮಾನೌ ವಿಲೋಕ್ಯ ಮಾತರಮ್ ಅವದತ್, ಹೇ ಯೋಷಿದ್ ಏನಂ ತವ ಪುತ್ರಂ ಪಶ್ಯ,
27 ௨௭ பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
ಶಿಷ್ಯನ್ತ್ವವದತ್, ಏನಾಂ ತವ ಮಾತರಂ ಪಶ್ಯ| ತತಃ ಸ ಶಿಷ್ಯಸ್ತದ್ಘಟಿಕಾಯಾಂ ತಾಂ ನಿಜಗೃಹಂ ನೀತವಾನ್|
28 ௨௮ அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
ಅನನ್ತರಂ ಸರ್ವ್ವಂ ಕರ್ಮ್ಮಾಧುನಾ ಸಮ್ಪನ್ನಮಭೂತ್ ಯೀಶುರಿತಿ ಜ್ಞಾತ್ವಾ ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕಸ್ಯ ವಚನಂ ಯಥಾ ಸಿದ್ಧಂ ಭವತಿ ತದರ್ಥಮ್ ಅಕಥಯತ್ ಮಮ ಪಿಪಾಸಾ ಜಾತಾ|
29 ௨௯ காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
ತತಸ್ತಸ್ಮಿನ್ ಸ್ಥಾನೇ ಅಮ್ಲರಸೇನ ಪೂರ್ಣಪಾತ್ರಸ್ಥಿತ್ಯಾ ತೇ ಸ್ಪಞ್ಜಮೇಕಂ ತದಮ್ಲರಸೇನಾರ್ದ್ರೀಕೃತ್ಯ ಏಸೋಬ್ನಲೇ ತದ್ ಯೋಜಯಿತ್ವಾ ತಸ್ಯ ಮುಖಸ್ಯ ಸನ್ನಿಧಾವಸ್ಥಾಪಯನ್|
30 ௩0 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
ತದಾ ಯೀಶುರಮ್ಲರಸಂ ಗೃಹೀತ್ವಾ ಸರ್ವ್ವಂ ಸಿದ್ಧಮ್ ಇತಿ ಕಥಾಂ ಕಥಯಿತ್ವಾ ಮಸ್ತಕಂ ನಮಯನ್ ಪ್ರಾಣಾನ್ ಪರ್ಯ್ಯತ್ಯಜತ್|
31 ௩௧ அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
ತದ್ವಿನಮ್ ಆಸಾದನದಿನಂ ತಸ್ಮಾತ್ ಪರೇಽಹನಿ ವಿಶ್ರಾಮವಾರೇ ದೇಹಾ ಯಥಾ ಕ್ರುಶೋಪರಿ ನ ತಿಷ್ಠನ್ತಿ, ಯತಃ ಸ ವಿಶ್ರಾಮವಾರೋ ಮಹಾದಿನಮಾಸೀತ್, ತಸ್ಮಾದ್ ಯಿಹೂದೀಯಾಃ ಪೀಲಾತನಿಕಟಂ ಗತ್ವಾ ತೇಷಾಂ ಪಾದಭಞ್ಜನಸ್ಯ ಸ್ಥಾನಾನ್ತರನಯನಸ್ಯ ಚಾನುಮತಿಂ ಪ್ರಾರ್ಥಯನ್ತ|
32 ௩௨ அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
ಅತಃ ಸೇನಾ ಆಗತ್ಯ ಯೀಶುನಾ ಸಹ ಕ್ರುಶೇ ಹತಯೋಃ ಪ್ರಥಮದ್ವಿತೀಯಚೋರಯೋಃ ಪಾದಾನ್ ಅಭಞ್ಜನ್;
33 ௩௩ அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
ಕಿನ್ತು ಯೀಶೋಃ ಸನ್ನಿಧಿಂ ಗತ್ವಾ ಸ ಮೃತ ಇತಿ ದೃಷ್ಟ್ವಾ ತಸ್ಯ ಪಾದೌ ನಾಭಞ್ಜನ್|
34 ௩௪ ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
ಪಶ್ಚಾದ್ ಏಕೋ ಯೋದ್ಧಾ ಶೂಲಾಘಾತೇನ ತಸ್ಯ ಕುಕ್ಷಿಮ್ ಅವಿಧತ್ ತತ್ಕ್ಷಣಾತ್ ತಸ್ಮಾದ್ ರಕ್ತಂ ಜಲಞ್ಚ ನಿರಗಚ್ಛತ್|
35 ௩௫ அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
ಯೋ ಜನೋಽಸ್ಯ ಸಾಕ್ಷ್ಯಂ ದದಾತಿ ಸ ಸ್ವಯಂ ದೃಷ್ಟವಾನ್ ತಸ್ಯೇದಂ ಸಾಕ್ಷ್ಯಂ ಸತ್ಯಂ ತಸ್ಯ ಕಥಾ ಯುಷ್ಮಾಕಂ ವಿಶ್ವಾಸಂ ಜನಯಿತುಂ ಯೋಗ್ಯಾ ತತ್ ಸ ಜಾನಾತಿ|
36 ௩௬ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
ತಸ್ಯೈಕಮ್ ಅಸ್ಧ್ಯಪಿ ನ ಭಂಕ್ಷ್ಯತೇ,
37 ௩௭ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
ತದ್ವದ್ ಅನ್ಯಶಾಸ್ತ್ರೇಪಿ ಲಿಖ್ಯತೇ, ಯಥಾ, "ದೃಷ್ಟಿಪಾತಂ ಕರಿಷ್ಯನ್ತಿ ತೇಽವಿಧನ್ ಯನ್ತು ತಮ್ಪ್ರತಿ| "
38 ௩௮ இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
ಅರಿಮಥೀಯನಗರಸ್ಯ ಯೂಷಫ್ನಾಮಾ ಶಿಷ್ಯ ಏಕ ಆಸೀತ್ ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯೇಭ್ಯೋ ಭಯಾತ್ ಪ್ರಕಾಶಿತೋ ನ ಭವತಿ; ಸ ಯೀಶೋ ರ್ದೇಹಂ ನೇತುಂ ಪೀಲಾತಸ್ಯಾನುಮತಿಂ ಪ್ರಾರ್ಥಯತ, ತತಃ ಪೀಲಾತೇನಾನುಮತೇ ಸತಿ ಸ ಗತ್ವಾ ಯೀಶೋ ರ್ದೇಹಮ್ ಅನಯತ್|
39 ௩௯ ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
ಅಪರಂ ಯೋ ನಿಕದೀಮೋ ರಾತ್ರೌ ಯೀಶೋಃ ಸಮೀಪಮ್ ಅಗಚ್ಛತ್ ಸೋಪಿ ಗನ್ಧರಸೇನ ಮಿಶ್ರಿತಂ ಪ್ರಾಯೇಣ ಪಞ್ಚಾಶತ್ಸೇಟಕಮಗುರುಂ ಗೃಹೀತ್ವಾಗಚ್ಛತ್|
40 ௪0 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
ತತಸ್ತೇ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಶ್ಮಶಾನೇ ಸ್ಥಾಪನರೀತ್ಯನುಸಾರೇಣ ತತ್ಸುಗನ್ಧಿದ್ರವ್ಯೇಣ ಸಹಿತಂ ತಸ್ಯ ದೇಹಂ ವಸ್ತ್ರೇಣಾವೇಷ್ಟಯನ್|
41 ௪௧ அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
ಅಪರಞ್ಚ ಯತ್ರ ಸ್ಥಾನೇ ತಂ ಕ್ರುಶೇಽವಿಧನ್ ತಸ್ಯ ನಿಕಟಸ್ಥೋದ್ಯಾನೇ ಯತ್ರ ಕಿಮಪಿ ಮೃತದೇಹಂ ಕದಾಪಿ ನಾಸ್ಥಾಪ್ಯತ ತಾದೃಶಮ್ ಏಕಂ ನೂತನಂ ಶ್ಮಶಾನಮ್ ಆಸೀತ್|
42 ௪௨ யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
ಯಿಹೂದೀಯಾನಾಮ್ ಆಸಾದನದಿನಾಗಮನಾತ್ ತೇ ತಸ್ಮಿನ್ ಸಮೀಪಸ್ಥಶ್ಮಶಾನೇ ಯೀಶುಮ್ ಅಶಾಯಯನ್|

< யோவான் 19 >