< யோவான் 18 >
1 ௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.
ⲁ̅ⲚⲀⲒ ⲈⲦⲀϤϪⲞⲦⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀϤⲒ ⲈⲂⲞⲖ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲈⲘⲎⲢ ⲘⲠⲒⲘⲞⲨⲚⲤⲰⲢⲈⲘ ⲚⲦⲈⲚⲒϢⲈⲚⲤⲒϤⲒ ⲠⲒⲘⲀ ⲈⲦⲈⲞⲨⲞⲚ ⲞⲨϬⲰⲘ ⲘⲘⲞϤ ⲪⲀⲒ ⲀϤϢⲈ ⲈϦⲞⲨⲚ ⲈⲢⲞϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
2 ௨ இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
ⲃ̅ⲞⲨⲞϨ ⲒⲞⲨⲆⲀⲤ ⲪⲎ ⲈⲚⲀϤⲚⲀⲦⲎⲒϤ ⲚⲀϤⲤⲰⲞⲨⲚ ϨⲰϤ ⲘⲠⲒⲘⲀ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ϪⲈ ⲞⲨⲘⲎ ϢⲚⲤⲞⲠ ⲀϤⲐⲰⲞⲨϮ ⲈⲘⲀⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
3 ௩ யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான்.
ⲅ̅ⲒⲞⲨⲆⲀⲤ ⲞⲨⲚ ⲈⲦⲀϤϬⲒ ⲘⲠⲒⲘⲎϢ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲨⲠⲈⲢⲈⲦⲎⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲀϤⲒ ⲈⲘⲀⲨ ⲚⲈⲘ ϨⲀⲚⲪⲀⲚⲞⲤ ⲚⲈⲘ ϨⲀⲚⲖⲀⲘⲠⲀⲤ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲞⲠⲖⲞⲚ.
4 ௪ இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
ⲇ̅ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲈϤⲤⲰⲞⲨⲚ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲎ ⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ ⲀϤⲒ ⲈⲂⲞⲖ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲢⲈⲦⲈⲚⲔⲰϮ ⲚⲤⲀⲚⲒⲘ.
5 ௫ அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.
ⲉ̅ⲀⲨⲈⲢⲞⲨⲰ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲒⲚⲀⲌⲰⲢⲈⲞⲤ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲚⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲚⲈⲘⲰⲞⲨ ⲠⲈ ⲚϪⲈⲒⲞⲨⲆⲀⲤ ⲪⲎ ⲈⲚⲀϤⲚⲀⲦⲎⲒϤ.
6 ௬ நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
ⲋ̅ϨⲞⲦⲈ ⲞⲨⲚ ⲈⲦⲀϤϪⲞⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲀⲨⲪⲰⲦ ⲈⲪⲀϨⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲨϨⲈⲒ ⲈⲠⲈⲤⲎⲦ.
7 ௭ அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
ⲍ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤϢⲈⲚⲞⲨ ϪⲈ ⲀⲢⲈⲦⲈⲚⲔⲰϮ ⲚⲤⲀⲚⲒⲘ ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲠⲈϪⲰⲞⲨ ϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲒⲚⲀⲌⲰⲢⲈⲞⲤ.
8 ௮ இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
ⲏ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲀⲒϪⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲒⲤϪⲈ ⲀⲢⲈⲦⲈⲚⲔⲰϮ ⲚⲤⲰⲒ ⲬⲀ ⲚⲀⲒ ⲈⲂⲞⲖ ⲘⲀⲢⲞⲨϢⲈ ⲚⲰⲞⲨ
9 ௯ நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
ⲑ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲠⲒⲤⲀϪⲒ ϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲈⲦⲀϤϪⲞϤ ϪⲈ ⲚⲎ ⲈⲦⲀⲔⲦⲎⲒⲦⲞⲨ ⲚⲎⲒ ⲘⲠⲒⲦⲀⲔⲈ ϨⲖⲒ ⲈⲂⲞⲖ ⲚϦⲎⲦⲞⲨ.
10 ௧0 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
ⲓ̅ⲤⲒⲘⲰⲚ ⲞⲨⲚ ⲠⲈⲦⲢⲞⲤ ⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲤⲎϤⲒ ⲚⲦⲞⲦϤ ⲀϤⲐⲞⲔⲘⲈⲤ ⲞⲨⲞϨ ⲀϤϨⲒⲞⲨⲒ ⲚⲤⲀⲪⲂⲰⲔ ⲘⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲞⲨⲞϨ ⲀϤϪⲰϪⲒ ⲘⲠⲈϤⲘⲀϢϪ ⲚⲞⲨⲒⲚⲀⲘ ⲈⲂⲞⲖ ⲪⲢⲀⲚ ⲆⲈ ⲘⲠⲒⲂⲰⲔ ⲠⲈ ⲘⲀⲖⲬⲞⲤ.
11 ௧௧ அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார்.
ⲓ̅ⲁ̅ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲚ ⲘⲠⲈⲦⲢⲞⲤ ϪⲈ ϨⲒⲞⲨⲒ ⲚϮⲤⲎϤⲒ ⲈⲦⲈⲤⲐⲎⲔⲎ ⲠⲒⲀⲪⲞⲦ ⲈⲦⲀϤⲦⲎⲒϤ ⲚⲎⲒ ⲚϪⲈⲠⲀⲒⲰⲦ ⲀⲚ ϮⲚⲀⲤⲞϤ ⲀⲚ.
12 ௧௨ அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
ⲓ̅ⲃ̅ⲠⲒⲘⲎϢ ⲞⲨⲚ ⲚⲈⲘ ⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ⲚⲈⲘ ⲚⲒϨⲨⲠⲎⲢⲈⲦⲎⲤ ⲚⲦⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲀⲨⲀⲘⲞⲚⲒ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲀⲨⲤⲞⲚϨϤ
13 ௧௩ முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲈⲚϤ ⲚϢⲞⲢⲠ ϨⲀ ⲀⲚⲚⲀ ⲚⲈⲠϢⲞⲘ ⲄⲀⲢ ⲚⲔⲀⲒⲀⲪⲀ ⲪⲎ ⲈⲚⲀϤⲞⲒ ⲚⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲚⲦⲈϮⲢⲞⲘⲠⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ
14 ௧௪ மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
ⲓ̅ⲇ̅ⲚⲈ ⲪⲀⲒ ⲆⲈ ⲠⲈ ⲔⲀⲒⲀⲪⲀ ⲪⲎ ⲈⲦⲀϤⲤⲞϬ ⲚⲒ ⲚⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲤⲈⲢⲚⲞϤⲢⲒ ⲚⲦⲈⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲞⲨⲰⲦ ⲘⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲠⲒⲖⲀⲞⲤ.
15 ௧௫ சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.
ⲓ̅ⲉ̅ⲚⲀϤⲘⲞϢⲒ ⲆⲈ ⲠⲈ ⲚⲤⲀⲒⲎⲤⲞⲨⲤ ⲚϪⲈⲤⲒⲘⲰⲚ ⲠⲈⲦⲢⲞⲤ ⲚⲈⲘ ⲔⲈⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲠⲒⲘⲀⲐⲎ ⲦⲎⲤ ⲆⲈ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲚⲀϤⲞⲒ ⲚⲤⲞⲨⲒⲚ ⲠⲈ ⲚⲦⲈⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲞⲨⲞϨ ⲀϤⲒ ⲈϦⲞⲨⲚ ⲚⲈⲘ ⲒⲎⲤⲞⲨⲤ ⲈϮⲀⲨⲖⲎ ⲚⲦⲈⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ.
16 ௧௬ பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
ⲓ̅ⲋ̅ⲠⲈⲦⲢⲞⲤ ⲚⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲤⲀⲂⲞⲖ ϦⲀⲦⲈⲚ ⲠⲒⲢⲞ ⲀϤⲒ ⲞⲨⲚ ⲚϪⲈⲠⲒⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲪⲎ ⲈⲚⲀϤⲞⲒ ⲚⲢⲈⲘⲤⲰⲞⲨⲚ ⲈⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘ ϮⲈⲘⲚⲞⲨⲦ ⲞⲨⲞϨ ⲀϤⲒⲚⲒ ⲘⲠⲈⲦⲢⲞⲤ ⲈϦⲞⲨⲚ.
17 ௧௭ அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான்.
ⲓ̅ⲍ̅ⲠⲈϪⲈ ϮⲀⲖⲞⲨ ⲚⲈⲘⲚⲞⲨⲦ ⲘⲠⲈⲦⲢⲞⲤ ϪⲈ ⲘⲎ ⲚⲐⲞⲔ ⲞⲨⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲚⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲘⲠⲀⲒⲢⲰⲘⲒ ϨⲰⲔ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲘⲘⲞⲚ.
18 ௧௮ குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
ⲓ̅ⲏ̅ⲚⲀⲨⲞϨⲒ ⲆⲈ ⲈⲢⲀⲦⲞⲨ ⲠⲈ ⲚϪⲈⲚⲒⲈⲂⲒⲀⲒⲔ ⲚⲈⲘ ⲚⲒϨⲨⲠⲎⲢⲈⲦⲎⲤ ⲈⲀⲨϬⲈⲢⲞ ⲚⲞⲨⲢⲀⲔϨⲒ ⲈⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲈⲦⲪⲢⲰ ⲦⲈ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲦϦⲘⲞ ⲘⲘⲰⲞⲨ ⲠⲈ ⲚⲀϤⲞϨⲒ ⲆⲈ ⲈⲢⲀⲦϤ ⲚⲈⲘⲰⲞⲨ ϨⲰϤ ⲚϪⲈⲠⲈⲦⲢⲞⲤ ⲈϤⲦϦⲘⲞ ⲘⲘⲞϤ.
19 ௧௯ பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
ⲓ̅ⲑ̅ⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲞⲨⲚ ⲀϤϢⲈⲚ ⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲐⲂⲈ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲚⲈⲘ ⲈⲐⲂⲈ ⲦⲈϤⲤⲂⲰ
20 ௨0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
ⲕ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚⲀϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲀⲒⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ϦⲈⲚⲞⲨⲠⲀⲢⲢⲎⲤⲒⲀ ⲞⲨⲞϨ ⲚⲀⲒϮⲤⲂⲰ ⲠⲈ ϦⲈⲚⲚⲒⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲚⲈⲘ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲠⲒⲘⲀ ⲈϢⲀⲢⲈ ⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲐⲰⲞⲨϮ ⲈⲢⲞϤ ⲞⲨⲞϨ ⲘⲠⲒϪⲈ ϨⲖⲒ ⲚⲤⲀϪⲒ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ.
21 ௨௧ நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
ⲕ̅ⲁ̅ⲈⲐⲂⲈⲞⲨ ⲔϢⲒⲚⲒ ⲘⲘⲞⲒ ϢⲈⲚ ⲚⲎ ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲞⲨ ⲠⲈⲦⲀⲒϪⲞϤ ⲚⲰⲞⲨ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲚⲀⲒ ⲤⲈⲈⲘⲒ ⲈⲚⲎ ⲈⲦⲀⲒϪⲞⲦⲞⲨ ⲀⲚⲞⲔ
22 ௨௨ இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
ⲕ̅ⲃ̅ⲚⲀⲒ ⲈⲦⲀϤϪⲞⲦⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀⲞⲨⲀⲒ ⲚⲦⲈⲚⲒϨⲨⲠⲎⲢⲈⲦⲎⲤ ⲈⲦⲞϨⲒ ⲈⲢⲀⲦⲞⲨ ⲀϤϮ ⲚⲞⲨⲔⲞⲨⲢ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚ ⲪⲀⲒ ⲠⲈ ⲪⲢⲎϮ ⲚⲈⲢⲞⲨⲰ ⲘⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ.
23 ௨௩ இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
ⲕ̅ⲅ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲒⲤϪⲈ ⲔⲀⲔⲰⲤ ⲀⲒⲤⲀϪⲒ ⲀⲢⲒⲈⲢⲘⲈⲐⲢⲈ ⲘⲠⲒⲔⲀⲔⲰⲤ ⲒⲤϪⲈ ⲆⲈ ⲔⲀⲖⲰⲤ ⲈⲐⲂⲈⲞⲨ ⲔϨⲒⲞⲨⲒ ⲈⲢⲞⲒ.
24 ௨௪ பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான்.
ⲕ̅ⲇ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲞⲨⲞⲢⲠϤ ⲚϪⲈⲀⲚⲚⲀ ⲈϤⲤⲞⲚϨ ϨⲀ ⲔⲀⲒⲀⲪⲀ ⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ.
25 ௨௫ சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.
ⲕ̅ⲉ̅ⲚⲀϤⲞϨⲒ ⲆⲈ ⲈⲢⲀⲦϤ ⲚϪⲈⲤⲒⲘⲰⲚ ⲠⲈⲦⲢⲞⲤ ⲈϤⲦϦⲘⲞ ⲘⲘⲞϤ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲘⲎ ⲚⲐⲞⲔ ⲞⲨⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ϨⲰⲔ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲀϤϪⲰⲖ ⲈⲂⲞⲖ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲘⲘⲞⲚ.
26 ௨௬ பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.
ⲕ̅ⲋ̅ⲠⲈϪⲈ ⲞⲨⲀⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲈⲂⲒⲀⲒⲔ ⲚⲦⲈⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲈⲞⲨⲤⲨⲄⲄⲈⲚⲎⲤ ⲠⲈ ⲚⲦⲈⲪⲎ ⲈⲦⲀ ⲠⲈⲦⲢⲞⲤ ϪⲰϪⲒ ⲘⲠⲈϤⲘⲀϢϪ ⲈⲂⲞⲖ ϪⲈ ⲘⲎ ⲀⲚⲞⲔ ⲀⲚ ⲀⲒⲚⲀⲨ ⲈⲢⲞⲔ ⲚⲈⲘⲀϤ ϦⲈⲚⲠⲒϬⲰⲘ.
27 ௨௭ அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது.
ⲕ̅ⲍ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤϪⲰⲖ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲠⲈⲦⲢⲞⲤ ⲞⲨⲞϨ ⲤⲀⲦⲞⲦϤ ⲀⲞⲨⲀⲖⲈⲔⲦⲰⲢ ⲘⲞⲨϮ.
28 ௨௮ அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.
ⲕ̅ⲏ̅ⲀⲨⲒⲚⲒ ⲞⲨⲚ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲔⲀⲒⲀⲪⲀ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲠⲢⲈⲦⲰⲢⲒⲞⲚ ⲚⲈϢⲰⲢⲠ ⲆⲈ ⲠⲈ ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲘⲠⲞⲨⲒ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲠⲢⲈⲦⲰⲢⲒⲞⲚ ϨⲒⲚⲀ ϪⲈ ⲚⲚⲞⲨⲤⲰϤ ϢⲀⲦⲞⲨⲞⲨⲰⲘ ⲘⲠⲒⲠⲀⲤⲬⲀ.
29 ௨௯ ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான்.
ⲕ̅ⲑ̅ⲀϤⲒ ⲞⲨⲚ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲰⲞⲨ ⲚϪⲈⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲞⲨ ⲚⲔⲀⲦⲎ ⲄⲞⲢⲒⲀ ⲈⲦⲈⲦⲈⲚⲒⲚⲒ ⲘⲘⲞⲤ ϦⲀ ⲠⲀⲒⲢⲰⲘⲒ.
30 ௩0 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
ⲗ̅ⲀⲨⲈⲢⲞⲨⲰ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲈⲚⲈ ⲪⲀⲒ ⲞⲨⲤⲀⲘⲠⲈⲦϨⲰⲞⲨ ⲀⲚ ⲠⲈ ⲚⲀⲚⲚⲀⲦⲎⲒϤ ⲚⲀⲔ ⲀⲚ ⲠⲈ.
31 ௩௧ அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
ⲗ̅ⲁ̅ⲠⲈϪⲈ ⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ϬⲒⲦϤ ⲚⲐⲰⲦⲈⲚ ⲘⲀϨⲀⲠ ⲈⲢⲞϤ ⲔⲀⲦⲀ ⲠⲈⲦⲈⲚⲚⲞⲘⲞⲤ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ⲚϪⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ϪⲈ ⲀⲚⲞⲚ ⲤϢⲈ ⲚⲀⲚ ⲀⲚ ⲈϦⲰⲦⲈⲂ ⲚϨⲖⲒ
32 ௩௨ தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
ⲗ̅ⲃ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲠⲒⲤⲀϪⲒ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲪⲎ ⲈⲦⲀϤϪⲞϤ ⲈϤⲈⲢⲤⲎⲘⲈⲚⲒⲚ ϪⲈ ϦⲈⲚⲀϢ ⲘⲘⲞⲨ ϤⲚⲀⲘⲞⲨ.
33 ௩௩ அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
ⲗ̅ⲅ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤⲒ ⲚϪⲈⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲠⲢⲈⲦⲰⲢⲒⲞⲚ ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞⲨϮ ⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲠⲈ ⲠⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ.
34 ௩௪ இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
ⲗ̅ⲇ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲈⲦϪⲰ ⲘⲪⲀⲒ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦⲔ ϢⲀⲚ ϨⲀⲚⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲠⲈⲦⲀⲨϪⲞⲤ ⲚⲀⲔ ⲈⲐⲂⲎⲦ.
35 ௩௫ பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
ⲗ̅ⲉ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲘⲎ ⲀⲚⲞⲔ ⲞⲨⲒⲞⲨⲆⲀⲒ ϨⲰ ⲠⲈⲔⲈⲐⲚⲞⲤ ⲘⲘⲒⲚ ⲘⲘⲞⲔ ⲚⲈⲘ ⲚⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲦⲀⲨⲦⲎ ⲒⲔ ⲞⲨ ⲠⲈⲦⲀⲔⲀⲒϤ.
36 ௩௬ இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார்.
ⲗ̅ⲋ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲦⲀⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲐⲀ ⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲀⲚ ⲦⲈ ⲈⲚⲈ ⲦⲀⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲞⲨⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲀⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲦⲈ ⲚⲀⲢⲈ ⲚⲀϨⲨⲠⲈⲢⲈⲦⲎ ⲤⲚⲀⲨⲚⲀϮ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲒ ⲠⲈ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨϢⲦⲈⲘⲦⲎ ⲒⲦ ⲚⲚⲒⲞⲨⲆⲀⲒ ϮⲚⲞⲨ ⲆⲈ ⲦⲀⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲐⲀ ⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲀⲚ ⲦⲈ.
37 ௩௭ அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
ⲗ̅ⲍ̅ⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲞⲨⲚ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲞⲨⲔⲞⲨⲚ ⲚⲐⲞⲔ ⲞⲨⲞⲨⲢⲞ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲠⲈⲦϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲞⲨⲞⲨⲢⲞ ⲔⲈ ⲄⲀⲢ ⲈⲦⲀⲨⲘⲀⲤⲦ ⲀⲚⲞⲔ ⲈⲠⲀⲒϨⲰⲂ ⲞⲨⲞϨ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲀⲒⲒ ⲈⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲈⲠϪⲒⲚⲦⲀⲈⲢⲘⲈⲐⲢⲈ ⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈ ϨⲀⲚⲈⲂⲞⲖ ϦⲈⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲈϢⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲈⲦⲀⲤⲘⲎ.
38 ௩௮ அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
ⲗ̅ⲏ̅ⲠⲈϪⲈ ⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲚⲀϤ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ϮⲘⲈⲐⲘⲎⲒ ⲞⲨⲞϨ ⲪⲀⲒ ⲈⲦⲀϤϪⲞϤ ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤⲒ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲚϮϪⲈⲘ ϨⲖⲒ ⲚⲈⲦⲒⲀ ⲀⲚ ϦⲈⲚⲠⲀⲒⲢⲰⲘⲒ.
39 ௩௯ பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
ⲗ̅ⲑ̅ⲦⲈⲦⲈⲚⲤⲨⲚⲎⲐⲒⲀ ⲆⲈ ⲦⲈ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲬⲀ ⲞⲨⲀⲒ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲀⲤⲬⲀ ⲦⲈⲦⲈⲚⲞⲨⲰϢ ⲞⲨⲚ ⲚⲦⲀⲬⲰ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ⲘⲠⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ.
40 ௪0 அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
ⲙ̅ⲀⲨⲰϢ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲦⲎⲢⲞⲨ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲘⲠⲈⲢⲬⲀ ⲪⲀⲒ ⲈⲂⲞⲖ ⲀⲖⲖⲀ ⲬⲀ ⲂⲀⲢⲀⲂⲂⲀⲤ ⲠⲀⲒⲂⲀⲢⲀⲂⲂⲀⲤ ⲆⲈ ⲚⲈⲞⲨⲤⲞⲚⲒ ⲠⲈ.