< யோவான் 17 >

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
यीशुए आपणे चेलेया खे यो सब गल्ला बोलणे ते बाद आपणिया आखी सर्गो री तरफा खे चकिया और बोलेया, “ओ पिता! से बखत आईगा रा, आपणे पुत्रो री महिमा कर, ताकि पुत्र बी तेरी महिमा करो।
2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
कऊँकि तैं तेसखे सबी प्राणिया पाँदे अक्क दित्तेया कि जो तैं तेसखे देई राखे, तिना सबी खे से अनन्त जीवन देओ (aiōnios g166)
3 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
और अनन्त जीवन ये कि सेयो ताखे महान् सच्चे परमेशरो खे और यीशु मसीह खे, जो तैं पेजी राखेया, जाणो। (aiōnios g166)
4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
जो काम तैं माखे करने खे दित्तेया था, से काम पूरा करी की मैं तरतिया पाँदे तेरी महिमा कित्ती।
5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
एबे ओ पिता! तूँ आपू साथे मेरी महिमा, तेसा महिमा साथे कर, जो दुनिया री सृष्टिया ते पईले, मेरी तां साथे थी।
6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
“मैं तेरा नाओं तिना मांणूआ गे प्रगट कित्तेया, जो तैं माखे दुनिया बीचा ते दित्ते, सेयो तेरे थे और तैं सेयो माखे दित्ते और तिने तेरे वचन मानी ले रे।
7 நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
एबे तिना खे पता लगी गा रा कि जो कुछ तैं माखे देई राखेया, से सब तेरी तरफा ते ए।
8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
कऊँकि जो उपदेश तैं माखे दित्ते, मैं सेयो तिना गे पऊँछाए और तिने सेयो माने और सच-सच जाणी ला रा कि आऊँ तेरी तरफा ते आयी रा और विश्वास करी ला रा कि तैं ई आऊँ पेजी राखेया।
9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
आऊँ तिना खे बिनती करूँआ, जो तैं माखे देई राखे, कऊँकि सेयो तेरे ए। दुनिया रे लोका खे आँऊ बिनती नि करदा।
10 ௧0 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
और जो कुछ मेरा ए से सब कुछ तेरा ए, और जो तेरा ए से मेरा ए और इना ते मेरी महिमा प्रगट ऊई री।
11 ௧௧ நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
“आऊँ एबे दुनिया रे नि रणा, पर मेरे चेले एसा दुनिया रे रणे और आऊँ तांगे आऊणे लगी रा, ओ पवित्र पिता! आपणी तेसा सामर्था ते जो तैं माखे देई राखी, तिना री रक्षा कर ताकि सेयो आसा जेड़े, एक ओ।
12 ௧௨ நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
जेबे आऊँ तिना साथे था, तेबे मैं तेरे तेस नाओं ते, जो तैं माखे देई राखेया, तिना री रक्षा कित्ती, मैं तिना री चौकसी कित्ती और विनाशो रे पाऊए खे छाडी की तिना बीचा ते कोई बी नाश नि ऊआ, ताकि पवित्र शास्त्रो री गल्ल पूरी ओ।
13 ௧௩ இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
पर एबे आऊँ तांगे आऊँआ और इना गल्ला खे दुनिया रे रंदे ऊए बोलूँआ कि सेयो मेरी खुशी आपू रे पूरी करो।
14 ௧௪ நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
मैं तेरा वचन तिना गे पऊँछाई ता रा और दुनिया रे लोके तिना ते बैर कित्तेया, कऊँकि जिंयाँ आऊँ दुनिया रा निए, तिंयाँ ई सेयो बी दुनिया रे निए।
15 ௧௫ நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
“आऊँ ये प्रार्थना नि करदा कि तूँ तिना खे दुनिया तेई चकी लो, पर ये कि तूँ तिना खे तेस दुष्टो ते बचाई कि राख।
16 ௧௬ நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
जिंयाँ आऊँ दुनिया रा निए, तिंयाँ ई सेयो बी दुनिया रे निए।
17 ௧௭ உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
सच्चो रे जरिए तिना खे पवित्र कर, तेरा वचन सच्चा ए।
18 ௧௮ நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
जिंयाँ तैं आऊँ दुनिया रे पेजेया, तिंयाँ ई मैं बी सेयो दुनिया रे पेजे।
19 ௧௯ அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
तिना रे फाईदे री खातर आऊँ आपणे आपू खे पवित्र करूँआ, ताकि सेयो बी सच्चो रे जरिए पवित्र करे जाओ।
20 ௨0 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
“आऊँ सिर्फ इना चेलेया खेई बिनती नि करदा, पर तिना खे बी, जेस इना रे वचनो रे जरिए मां पाँदे विश्वास करना।
21 ௨௧ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ताकि सेयो सब एक ओ, जिंयाँ तूँ ओ पिता मांदे ए और आऊँ तांदे ए, तिंयाँ ई सेयो बी आसा रे ओ, ताकि दुनिया रे लोक विश्वास करो कि तैं ई आऊँ पेजी राखेया।
22 ௨௨ நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
से महिमा, जो तैं माखे देई राखी, मैं तिना खे दित्ती, ताकि सेयो तिंयाँ ई एक ओ, जिंयाँ आसे एक ए।
23 ௨௩ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
आऊँ तिना रे और तूँ मांदे, ताकि सेयो सिद्ध ऊई की एक ऊई जाओ और दुनिया जाणो कि तैं ई आऊँ पेजी राखेया और जेड़ा तैं मां साथे प्यार राखेया, तेड़ा ई तिना साथे प्यार राखेया।
24 ௨௪ பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
ओ पिता! आऊँ चाऊँआ कि जो तैं माखे देई राखे, जेती आऊँ ए, तेती सेयो बी मां साथे ओ, ताकि सेयो मेरी तेसा महिमा खे देखो, जो तैं माखे देई राखी, कऊँकि तैं दुनिया री सृष्टिया ते पईले, मां साथे प्यार राखेया।
25 ௨௫ நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
ओ धार्मिक पिता! दुनिए आऊँ नि जाणेया, पर मैं तूँ जाणेया और इने चेलेया बी जाणेया कि तैं ई आऊँ पेजी राखेया।
26 ௨௬ நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
मैं तेरा नाओं तिना गे बताया और बतांदा रऊँगा कि जो प्यार ताखे मांते था, से तिना रे रओ और आऊँ तिना रे रऊँ।”

< யோவான் 17 >