< யோவான் 16 >

1 நீங்கள் இடறல் அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
යුෂ්මාකං යථා වාධා න ජායතේ තදර්ථං යුෂ්මාන් ඒතානි සර්ව්වවාක්‍යානි ව්‍යාහරං|
2 அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும்.
ලෝකා යුෂ්මාන් භජනගෘහේභ්‍යෝ දූරීකරිෂ්‍යන්ති තථා යස්මින් සමයේ යුෂ්මාන් හත්වා ඊශ්වරස්‍ය තුෂ්ටි ජනකං කර්ම්මාකුර්ම්ම ඉති මංස්‍යන්තේ ස සමය ආගච්ඡන්ති|
3 அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
තේ පිතරං මාඤ්ච න ජානන්ති, තස්මාද් යුෂ්මාන් ප්‍රතීදෘශම් ආචරිෂ්‍යන්ති|
4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்; நான் உங்களோடு இருந்ததினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
අතෝ හේතාඃ සමයේ සමුපස්ථිතේ යථා මම කථා යුෂ්මාකං මනඃසුඃ සමුපතිෂ්ඨති තදර්ථං යුෂ්මාභ්‍යම් ඒතාං කථාං කථයාමි යුෂ්මාභිඃ සාර්ද්ධම් අහං තිෂ්ඨන් ප්‍රථමං තාං යුෂ්මභ්‍යං නාකථයං|
5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
සාම්ප්‍රතං ස්වස්‍ය ප්‍රේරයිතුඃ සමීපං ගච්ඡාමි තථාපි ත්වං ක්ක ගච්ඡසි කථාමේතාං යුෂ්මාකං කෝපි මාං න පෘච්ඡති|
6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
කින්තු මයෝක්තාභිරාභිඃ කථාභි ර‍්‍යූෂ්මාකම් අන්තඃකරණානි දුඃඛේන පූර්ණාන්‍යභවන්|
7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
තථාප්‍යහං යථාර්ථං කථයාමි මම ගමනං යුෂ්මාකං හිතාර්ථමේව, යතෝ හේතෝ ර්ගමනේ න කෘතේ සහායෝ යුෂ්මාකං සමීපං නාගමිෂ්‍යති කින්තු යදි ගච්ඡාමි තර්හි යුෂ්මාකං සමීපේ තං ප්‍රේෂයිෂ්‍යාමි|
8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
තතඃ ස ආගත්‍ය පාපපුණ්‍යදණ්ඩේෂු ජගතෝ ලෝකානාං ප්‍රබෝධං ජනයිෂ්‍යති|
9 அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
තේ මයි න විශ්වසන්ති තස්මාද්ධේතෝඃ පාපප්‍රබෝධං ජනයිෂ්‍යති|
10 ௧0 நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
යුෂ්මාකම් අදෘශ්‍යඃ සන්නහං පිතුඃ සමීපං ගච්ඡාමි තස්මාද් පුණ්‍යේ ප්‍රබෝධං ජනයිෂ්‍යති|
11 ௧௧ இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
ඒතජ්ජගතෝ(අ)ධිපති ර්දණ්ඩාඥාං ප්‍රාප්නෝති තස්මාද් දණ්ඩේ ප්‍රබෝධං ජනයිෂ්‍යති|
12 ௧௨ இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
යුෂ්මභ්‍යං කථයිතුං මමානේකාඃ කථා ආසතේ, තාඃ කථා ඉදානීං යූයං සෝඪුං න ශක්නුථ;
13 ௧௩ சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.
කින්තු සත්‍යමය ආත්මා යදා සමාගමිෂ්‍යති තදා සර්ව්වං සත්‍යං යුෂ්මාන් නේෂ්‍යති, ස ස්වතඃ කිමපි න වදිෂ්‍යති කින්තු යච්ඡ්‍රෝෂ්‍යති තදේව කථයිත්වා භාවිකාර‍්‍ය්‍යං යුෂ්මාන් ඥාපයිෂ්‍යති|
14 ௧௪ அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
මම මහිමානං ප්‍රකාශයිෂ්‍යති යතෝ මදීයාං කථාං ගෘහීත්වා යුෂ්මාන් බෝධයිෂ්‍යති|
15 ௧௫ பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன்.
පිතු ර‍්‍යද්‍යද් ආස්තේ තත් සර්ව්වං මම තස්මාද් කාරණාද් අවාදිෂං ස මදීයාං කථාං ගෘහීත්වා යුෂ්මාන් බෝධයිෂ්‍යති|
16 ௧௬ நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
කියත්කාලාත් පරං යූයං මාං ද්‍රෂ්ටුං න ලප්ස්‍යධ්වේ කින්තු කියත්කාලාත් පරං පුන ර්ද්‍රෂ්ටුං ලප්ස්‍යධ්වේ යතෝහං පිතුඃ සමීපං ගච්ඡාමි|
17 ௧௭ அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதும் அல்லாமல்:
තතඃ ශිෂ්‍යාණාං කියන්තෝ ජනාඃ පරස්පරං වදිතුම් ආරභන්ත, කියත්කාලාත් පරං මාං ද්‍රෂ්ටුං න ලප්ස්‍යධ්වේ කින්තු කියත්කාලාත් පරං පුන ර්ද්‍රෂ්ටුං ලප්ස්‍යධ්වේ යතෝහං පිතුඃ සමීපං ගච්ඡාමි, ඉති යද් වාක්‍යම් අයං වදති තත් කිං?
18 ௧௮ கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள்.
තතඃ කියත්කාලාත් පරම් ඉති තස්‍ය වාක්‍යං කිං? තස්‍ය වාක්‍යස්‍යාභිප්‍රායං වයං බෝද්ධුං න ශක්නුමස්තෛරිති
19 ௧௯ அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?
නිගදිතේ යීශුස්තේෂාං ප්‍රශ්නේච්ඡාං ඥාත්වා තේභ්‍යෝ(අ)කථයත් කියත්කාලාත් පරං මාං ද්‍රෂ්ටුං න ලප්ස්‍යධ්වේ, කින්තු කියත්කාලාත් පරං පූන ර්ද්‍රෂ්ටුං ලප්ස්‍යධ්වේ, යාමිමාං කථාමකථයං තස්‍යා අභිප්‍රායං කිං යූයං පරස්පරං මෘගයධ්වේ?
20 ௨0 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.
යුෂ්මානහම් අතියථාර්ථං වදාමි යූයං ක්‍රන්දිෂ්‍යථ විලපිෂ්‍යථ ච, කින්තු ජගතෝ ලෝකා ආනන්දිෂ්‍යන්ති; යූයං ශෝකාකුලා භවිෂ්‍යථ කින්තු ශෝකාත් පරං ආනන්දයුක්තා භවිෂ්‍යථ|
21 ௨௧ பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள்.
ප්‍රසවකාල උපස්ථිතේ නාරී යථා ප්‍රසවවේදනයා ව්‍යාකුලා භවති කින්තු පුත්‍රේ භූමිෂ්ඨේ සති මනුෂ්‍යෛකෝ ජන්මනා නරලෝකේ ප්‍රවිෂ්ට ඉත්‍යානන්දාත් තස්‍යාස්තත්සර්ව්වං දුඃඛං මනසි න තිෂ්ඨති,
22 ௨௨ அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை.
තථා යූයමපි සාම්ප්‍රතං ශෝකාකුලා භවථ කින්තු පුනරපි යුෂ්මභ්‍යං දර්ශනං දාස්‍යාමි තේන යුෂ්මාකම් අන්තඃකරණානි සානන්දානි භවිෂ්‍යන්ති, යුෂ්මාකං තම් ආනන්දඤ්ච කෝපි හර්ත්තුං න ශක්‍ෂ්‍යති|
23 ௨௩ அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
තස්මින් දිවසේ කාමපි කථාං මාං න ප්‍රක්‍ෂ්‍යථ| යුෂ්මානහම් අතියථාර්ථං වදාමි, මම නාම්නා යත් කිඤ්චිද් පිතරං යාචිෂ්‍යධ්වේ තදේව ස දාස්‍යති|
24 ௨௪ இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.
පූර්ව්වේ මම නාම්නා කිමපි නායාචධ්වං, යාචධ්වං තතඃ ප්‍රාප්ස්‍යථ තස්මාද් යුෂ්මාකං සම්පූර්ණානන්දෝ ජනිෂ්‍යතේ|
25 ௨௫ இவைகளை நான் உவமைகளாக உங்களோடு பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாக உங்களோடு பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
උපමාකථාභිඃ සර්ව්වාණ්‍යේතානි යුෂ්මාන් ඥාපිතවාන් කින්තු යස්මින් සමයේ උපමයා නෝක්ත්වා පිතුඃ කථාං ස්පෂ්ටං ඥාපයිෂ්‍යාමි සමය ඒතාදෘශ ආගච්ඡති|
26 ௨௬ அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
තදා මම නාම්නා ප්‍රාර්ථයිෂ්‍යධ්වේ (අ)හං යුෂ්මන්නිමිත්තං පිතරං විනේෂ්‍යේ කථාමිමාං න වදාමි;
27 ௨௭ நீங்கள் என்னை நேசித்தத்தினால், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களை நேசிக்கிறார்.
යතෝ යූයං මයි ප්‍රේම කුරුථ, තථාහම් ඊශ්වරස්‍ය සමීපාද් ආගතවාන් ඉත්‍යපි ප්‍රතීථ, තස්මාද් කාරණාත් කාරණාත් පිතා ස්වයං යුෂ්මාසු ප්‍රීයතේ|
28 ௨௮ நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
පිතුඃ සමීපාජ්ජජද් ආගතෝස්මි ජගත් පරිත්‍යජ්‍ය ච පුනරපි පිතුඃ සමීපං ගච්ඡාමි|
29 ௨௯ அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: இதோ, இப்பொழுது நீர் உவமையாகப் பேசாமல், வெளிப்படையாக பேசுகிறீர்.
තදා ශිෂ්‍යා අවදන්, හේ ප්‍රභෝ භවාන් උපමයා නෝක්ත්වාධුනා ස්පෂ්ටං වදති|
30 ௩0 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
භවාන් සර්ව්වඥඃ කේනචිත් පෘෂ්ටෝ භවිතුමපි භවතඃ ප්‍රයෝජනං නාස්තීත්‍යධුනාස්මාකං ස්ථිරඥානං ජාතං තස්මාද් භවාන් ඊශ්වරස්‍ය සමීපාද් ආගතවාන් ඉත්‍යත්‍ර වයං විශ්වසිමඃ|
31 ௩௧ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
තතෝ යීශුඃ ප්‍රත්‍යවාදීද් ඉදානීං කිං යූයං විශ්වසිථ?
32 ௩௨ இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார்.
පශ්‍යත සර්ව්වේ යූයං විකීර්ණාඃ සන්තෝ මාම් ඒකාකිනං පීරත්‍යජ්‍ය ස්වං ස්වං ස්ථානං ගමිෂ්‍යථ, ඒතාදෘශඃ සමය ආගච්ඡති වරං ප්‍රායේණෝපස්ථිතවාන්; තථාප්‍යහං නෛකාකී භවාමි යතඃ පිතා මයා සාර්ද්ධම් ආස්තේ|
33 ௩௩ என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.
යථා මයා යුෂ්මාකං ශාන්ති ර්ජායතේ තදර්ථම් ඒතාඃ කථා යුෂ්මභ්‍යම් අචකථං; අස්මින් ජගති යුෂ්මාකං ක්ලේශෝ ඝටිෂ්‍යතේ කින්ත්වක්‍ෂෝභා භවත යතෝ මයා ජගජ්ජිතං|

< யோவான் 16 >