< யோவான் 13 >
1 ௧ பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
නිස්තාරෝත්සවස්ය කිඤ්චිත්කාලාත් පූර්ව්වං පෘථිව්යාඃ පිතුඃ සමීපගමනස්ය සමයඃ සන්නිකර්ෂෝභූද් ඉති ඥාත්වා යීශුරාප්රථමාද් යේෂු ජගත්ප්රවාසිෂ්වාත්මීයලෝකේෂ ප්රේම කරෝති ස්ම තේෂු ශේෂං යාවත් ප්රේම කෘතවාන්|
2 ௨ சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
පිතා තස්ය හස්තේ සර්ව්වං සමර්පිතවාන් ස්වයම් ඊශ්වරස්ය සමීපාද් ආගච්ඡද් ඊශ්වරස්ය සමීපං යාස්යති ච, සර්ව්වාණ්යේතානි ඥාත්වා රජන්යාං භෝජනේ සම්පූර්ණේ සති,
3 ௩ தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
යදා ශෛතාන් තං පරහස්තේෂු සමර්පයිතුං ශිමෝනඃ පුත්රස්ය ඊෂ්කාරියෝතියස්ය යිහූදා අන්තඃකරණේ කුප්රවෘත්තිං සමාර්පයත්,
4 ௪ பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு,
තදා යීශු ර්භෝජනාසනාද් උත්ථාය ගාත්රවස්ත්රං මෝචයිත්වා ගාත්රමාර්ජනවස්ත්රං ගෘහීත්වා තේන ස්වකටිම් අබධ්නාත්,
5 ௫ பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
පශ්චාද් ඒකපාත්රේ ජලම් අභිෂිච්ය ශිෂ්යාණාං පාදාන් ප්රක්ෂාල්ය තේන කටිබද්ධගාත්රමාර්ජනවාසසා මාර්ෂ්ටුං ප්රාරභත|
6 ௬ அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
තතඃ ශිමෝන්පිතරස්ය සමීපමාගතේ ස උක්තවාන් හේ ප්රභෝ භවාන් කිං මම පාදෞ ප්රක්ෂාලයිෂ්යති?
7 ௭ இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார்.
යීශුරුදිතවාන් අහං යත් කරෝමි තත් සම්ප්රති න ජානාසි කින්තු පශ්චාජ් ඥාස්යසි|
8 ௮ பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn )
තතඃ පිතරඃ කථිතවාන් භවාන් කදාපි මම පාදෞ න ප්රක්ෂාලයිෂ්යති| යීශුරකථයද් යදි ත්වාං න ප්රක්ෂාලයේ තර්හි මයි තව කෝප්යංශෝ නාස්ති| (aiōn )
9 ௯ அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
තදා ශිමෝන්පිතරඃ කථිතවාන් හේ ප්රභෝ තර්හි කේවලපාදෞ න, මම හස්තෞ ශිරශ්ච ප්රක්ෂාලයතු|
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
තතෝ යීශුරවදද් යෝ ජනෝ ධෞතස්තස්ය සර්ව්වාඞ්ගපරිෂ්කෘතත්වාත් පාදෞ විනාන්යාඞ්ගස්ය ප්රක්ෂාලනාපේක්ෂා නාස්ති| යූයං පරිෂ්කෘතා ඉති සත්යං කින්තු න සර්ව්වේ,
11 ௧௧ தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
යතෝ යෝ ජනස්තං පරකරේෂු සමර්පයිෂ්යති තං ස ඥාතවාන; අතඒව යූයං සර්ව්වේ න පරිෂ්කෘතා ඉමාං කථාං කථිතවාන්|
12 ௧௨ அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
ඉත්ථං යීශුස්තේෂාං පාදාන් ප්රක්ෂාල්ය වස්ත්රං පරිධායාසනේ සමුපවිශ්ය කථිතවාන් අහං යුෂ්මාන් ප්රති කිං කර්ම්මාකාර්ෂං ජානීථ?
13 ௧௩ நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
යූයං මාං ගුරුං ප්රභුඤ්ච වදථ තත් සත්යමේව වදථ යතෝහං සඒව භවාමි|
14 ௧௪ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
යද්යහං ප්රභු ර්ගුරුශ්ච සන් යුෂ්මාකං පාදාන් ප්රක්ෂාලිතවාන් තර්හි යුෂ්මාකමපි පරස්පරං පාදප්රක්ෂාලනම් උචිතම්|
15 ௧௫ நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
අහං යුෂ්මාන් ප්රති යථා ව්යවාහරං යුෂ්මාන් තථා ව්යවහර්ත්තුම් ඒකං පන්ථානං දර්ශිතවාන්|
16 ௧௬ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
අහං යුෂ්මානතියථාර්ථං වදාමි, ප්රභෝ ර්දාසෝ න මහාන් ප්රේරකාච්ච ප්රේරිතෝ න මහාන්|
17 ௧௭ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
ඉමාං කථාං විදිත්වා යදි තදනුසාරතඃ කර්ම්මාණි කුරුථ තර්හි යූයං ධන්යා භවිෂ්යථ|
18 ௧௮ உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
සර්ව්වේෂු යුෂ්මාසු කථාමිමාං කථයාමි ඉති න, යේ මම මනෝනීතාස්තානහං ජානාමි, කින්තු මම භක්ෂ්යාණි යෝ භුඞ්ක්තේ මත්ප්රාණප්රාතිකූල්යතඃ| උත්ථාපයති පාදස්ය මූලං ස ඒෂ මානවඃ| යදේතද් ධර්ම්මපුස්තකස්ය වචනං තදනුසාරේණාවශ්යං ඝටිෂ්යතේ|
19 ௧௯ அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
අහං ස ජන ඉත්යත්ර යථා යුෂ්මාකං විශ්වාසෝ ජායතේ තදර්ථං ඒතාදෘශඝටනාත් පූර්ව්වම් අහමිදානීං යුෂ්මභ්යමකථයම්|
20 ௨0 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
අහං යුෂ්මානතීව යථාර්ථං වදාමි, මයා ප්රේරිතං ජනං යෝ ගෘහ්ලාති ස මාමේව ගෘහ්ලාති යශ්ච මාං ගෘහ්ලාති ස මත්ප්රේරකං ගෘහ්ලාති|
21 ௨௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
ඒතාං කථාං කථයිත්වා යීශු ර්දුඃඛී සන් ප්රමාණං දත්ත්වා කථිතවාන් අහං යුෂ්මානතියථාර්ථං වදාමි යුෂ්මාකම් ඒකෝ ජනෝ මාං පරකරේෂු සමර්පයිෂ්යති|
22 ௨௨ அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
තතඃ ස කමුද්දිශ්ය කථාමේතාං කථිතවාන් ඉත්යත්ර සන්දිග්ධාඃ ශිෂ්යාඃ පරස්පරං මුඛමාලෝකයිතුං ප්රාරභන්ත|
23 ௨௩ அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
තස්මින් සමයේ යීශු ර්යස්මින් අප්රීයත ස ශිෂ්යස්තස්ය වක්ෂඃස්ථලම් අවාලම්බත|
24 ௨௪ யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
ශිමෝන්පිතරස්තං සඞ්කේතේනාවදත්, අයං කමුද්දිශ්ය කථාමේතාම් කථයතීති පෘච්ඡ|
25 ௨௫ அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
තදා ස යීශෝ ර්වක්ෂඃස්ථලම් අවලම්බ්ය පෘෂ්ඨවාන්, හේ ප්රභෝ ස ජනඃ කඃ?
26 ௨௬ இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
තතෝ යීශුඃ ප්රත්යවදද් ඒකඛණ්ඩං පූපං මජ්ජයිත්වා යස්මෛ දාස්යාමි සඒව සඃ; පශ්චාත් පූපඛණ්ඩමේකං මජ්ජයිත්වා ශිමෝනඃ පුත්රාය ඊෂ්කරියෝතීයාය යිහූදෛ දත්තවාන්|
27 ௨௭ அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
තස්මින් දත්තේ සති ශෛතාන් තමාශ්රයත්; තදා යීශුස්තම් අවදත් ත්වං යත් කරිෂ්යසි තත් ක්ෂිප්රං කුරු|
28 ௨௮ அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
කින්තු ස යේනාශයේන තාං කථාමකථායත් තම් උපවිෂ්ටලෝකානාං කෝපි නාබුධ්යත;
29 ௨௯ யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
කින්තු යිහූදාඃ සමීපේ මුද්රාසම්පුටකස්ථිතේඃ කේචිද් ඉත්ථම් අබුධ්යන්ත පාර්ව්වණාසාදනාර්ථං කිමපි ද්රව්යං ක්රේතුං වා දරිද්රේභ්යඃ කිඤ්චිද් විතරිතුං කථිතවාන්|
30 ௩0 அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
තදා පූපඛණ්ඩග්රහණාත් පරං ස තූර්ණං බහිරගච්ඡත්; රාත්රිශ්ච සමුපස්යිතා|
31 ௩௧ அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
යිහූදේ බහිර්ගතේ යීශුරකථයද් ඉදානීං මානවසුතස්ය මහිමා ප්රකාශතේ තේනේශ්වරස්යාපි මහිමා ප්රකාශතේ|
32 ௩௨ தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.
යදි තේනේශ්වරස්ය මහිමා ප්රකාශතේ තර්හීශ්වරෝපි ස්වේන තස්ය මහිමානං ප්රකාශයිෂ්යති තූර්ණමේව ප්රකාශයිෂ්යති|
33 ௩௩ பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
හේ වත්සා අහං යුෂ්මාභිඃ සාර්ද්ධං කිඤ්චිත්කාලමාත්රම් ආසේ, තතඃ පරං මාං මෘගයිෂ්යධ්වේ කින්ත්වහං යත්ස්ථානං යාමි තත්ස්ථානං යූයං ගන්තුං න ශක්ෂ්යථ, යාමිමාං කථාං යිහූදීයේභ්යඃ කථිතවාන් තථාධුනා යුෂ්මභ්යමපි කථයාමි|
34 ௩௪ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
යූයං පරස්පරං ප්රීයධ්වම් අහං යුෂ්මාසු යථා ප්රීයේ යූයමපි පරස්පරම් තථෛව ප්රීයධ්වං, යුෂ්මාන් ඉමාං නවීනාම් ආඥාම් ආදිශාමි|
35 ௩௫ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
තේනෛව යදි පරස්පරං ප්රීයධ්වේ තර්හි ලක්ෂණේනානේන යූයං මම ශිෂ්යා ඉති සර්ව්වේ ඥාතුං ශක්ෂ්යන්ති|
36 ௩௬ சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
ශිමෝනපිතරඃ පෘෂ්ඨවාන් හේ ප්රභෝ භවාන් කුත්ර යාස්යති? තතෝ යීශුඃ ප්රත්යවදත්, අහං යත්ස්ථානං යාමි තත්ස්ථානං සාම්ප්රතං මම පශ්චාද් ගන්තුං න ශක්නෝෂි කින්තු පශ්චාද් ගමිෂ්යසි|
37 ௩௭ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
තදා පිතරඃ ප්රත්යුදිතවාන්, හේ ප්රභෝ සාම්ප්රතං කුතෝ හේතෝස්තව පශ්චාද් ගන්තුං න ශක්නෝමි? ත්වදර්ථං ප්රාණාන් දාතුං ශක්නෝමි|
38 ௩௮ இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
තතෝ යීශුඃ ප්රත්යුක්තවාන් මන්නිමිත්තං කිං ප්රාණාන් දාතුං ශක්නෝෂි? ත්වාමහං යථාර්ථං වදාමි, කුක්කුටරවණාත් පූර්ව්වං ත්වං ත්රි ර්මාම් අපහ්නෝෂ්යසේ|