< யோவான் 12 >

1 பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார்.
ನಿಸ್ತಾರೋತ್ಸವಾತ್ ಪೂರ್ವ್ವಂ ದಿನಷಟ್ಕೇ ಸ್ಥಿತೇ ಯೀಶು ರ್ಯಂ ಪ್ರಮೀತಮ್ ಇಲಿಯಾಸರಂ ಶ್ಮಶಾನಾದ್ ಉದಸ್ಥಾಪರತ್ ತಸ್ಯ ನಿವಾಸಸ್ಥಾನಂ ಬೈಥನಿಯಾಗ್ರಾಮಮ್ ಆಗಚ್ಛತ್|
2 அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான்.
ತತ್ರ ತದರ್ಥಂ ರಜನ್ಯಾಂ ಭೋಜ್ಯೇ ಕೃತೇ ಮರ್ಥಾ ಪರ್ಯ್ಯವೇಷಯದ್ ಇಲಿಯಾಸರ್ ಚ ತಸ್ಯ ಸಙ್ಗಿಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಭೋಜನಾಸನ ಉಪಾವಿಶತ್|
3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.
ತದಾ ಮರಿಯಮ್ ಅರ್ದ್ಧಸೇಟಕಂ ಬಹುಮೂಲ್ಯಂ ಜಟಾಮಾಂಸೀಯಂ ತೈಲಮ್ ಆನೀಯ ಯೀಶೋಶ್ಚರಣಯೋ ರ್ಮರ್ದ್ದಯಿತ್ವಾ ನಿಜಕೇಶ ರ್ಮಾರ್ಷ್ಟುಮ್ ಆರಭತ; ತದಾ ತೈಲಸ್ಯ ಪರಿಮಲೇನ ಗೃಹಮ್ ಆಮೋದಿತಮ್ ಅಭವತ್|
4 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
ಯಃ ಶಿಮೋನಃ ಪುತ್ರ ರಿಷ್ಕರಿಯೋತೀಯೋ ಯಿಹೂದಾನಾಮಾ ಯೀಶುಂ ಪರಕರೇಷು ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ ಸ ಶಿಷ್ಯಸ್ತದಾ ಕಥಿತವಾನ್,
5 இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான்.
ಏತತ್ತೈಲಂ ತ್ರಿಭಿಃ ಶತೈ ರ್ಮುದ್ರಾಪದೈ ರ್ವಿಕ್ರೀತಂ ಸದ್ ದರಿದ್ರೇಭ್ಯಃ ಕುತೋ ನಾದೀಯತ?
6 அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான்.
ಸ ದರಿದ್ರಲೋಕಾರ್ಥಮ್ ಅಚಿನ್ತಯದ್ ಇತಿ ನ, ಕಿನ್ತು ಸ ಚೌರ ಏವಂ ತನ್ನಿಕಟೇ ಮುದ್ರಾಸಮ್ಪುಟಕಸ್ಥಿತ್ಯಾ ತನ್ಮಧ್ಯೇ ಯದತಿಷ್ಠತ್ ತದಪಾಹರತ್ ತಸ್ಮಾತ್ ಕಾರಣಾದ್ ಇಮಾಂ ಕಥಾಮಕಥಯತ್|
7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
ತದಾ ಯೀಶುರಕಥಯದ್ ಏನಾಂ ಮಾ ವಾರಯ ಸಾ ಮಮ ಶ್ಮಶಾನಸ್ಥಾಪನದಿನಾರ್ಥಂ ತದರಕ್ಷಯತ್|
8 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார்.
ದರಿದ್ರಾ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ಸರ್ವ್ವದಾ ತಿಷ್ಠನ್ತಿ ಕಿನ್ತ್ವಹಂ ಸರ್ವ್ವದಾ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ನ ತಿಷ್ಠಾಮಿ|
9 அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள்.
ತತಃ ಪರಂ ಯೀಶುಸ್ತತ್ರಾಸ್ತೀತಿ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತ್ವಾ ಬಹವೋ ಯಿಹೂದೀಯಾಸ್ತಂ ಶ್ಮಶಾನಾದುತ್ಥಾಪಿತಮ್ ಇಲಿಯಾಸರಞ್ಚ ದ್ರಷ್ಟುಂ ತತ್ ಸ್ಥಾನಮ್ ಆಗಚ್ಛನ|
10 ௧0 லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால்,
ತದಾ ಪ್ರಧಾನಯಾಜಕಾಸ್ತಮ್ ಇಲಿಯಾಸರಮಪಿ ಸಂಹರ್ತ್ತುಮ್ ಅಮನ್ತ್ರಯನ್;
11 ௧௧ பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள்.
ಯತಸ್ತೇನ ಬಹವೋ ಯಿಹೂದೀಯಾ ಗತ್ವಾ ಯೀಶೌ ವ್ಯಶ್ವಸನ್|
12 ௧௨ அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு,
ಅನನ್ತರಂ ಯೀಶು ರ್ಯಿರೂಶಾಲಮ್ ನಗರಮ್ ಆಗಚ್ಛತೀತಿ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತ್ವಾ ಪರೇಽಹನಿ ಉತ್ಸವಾಗತಾ ಬಹವೋ ಲೋಕಾಃ
13 ௧௩ குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள்.
ಖರ್ಜ್ಜೂರಪತ್ರಾದ್ಯಾನೀಯ ತಂ ಸಾಕ್ಷಾತ್ ಕರ್ತ್ತುಂ ಬಹಿರಾಗತ್ಯ ಜಯ ಜಯೇತಿ ವಾಚಂ ಪ್ರೋಚ್ಚೈ ರ್ವಕ್ತುಮ್ ಆರಭನ್ತ, ಇಸ್ರಾಯೇಲೋ ಯೋ ರಾಜಾ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ನಾಮ್ನಾಗಚ್ಛತಿ ಸ ಧನ್ಯಃ|
14 ௧௪ அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி,
ತದಾ "ಹೇ ಸಿಯೋನಃ ಕನ್ಯೇ ಮಾ ಭೈಷೀಃ ಪಶ್ಯಾಯಂ ತವ ರಾಜಾ ಗರ್ದ್ದಭಶಾವಕಮ್ ಆರುಹ್ಯಾಗಚ್ಛತಿ"
15 ௧௫ இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார்.
ಇತಿ ಶಾಸ್ತ್ರೀಯವಚನಾನುಸಾರೇಣ ಯೀಶುರೇಕಂ ಯುವಗರ್ದ್ದಭಂ ಪ್ರಾಪ್ಯ ತದುಪರ್ಯ್ಯಾರೋಹತ್|
16 ௧௬ இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
ಅಸ್ಯಾಃ ಘಟನಾಯಾಸ್ತಾತ್ಪರ್ಯ್ಯಂ ಶಿಷ್ಯಾಃ ಪ್ರಥಮಂ ನಾಬುಧ್ಯನ್ತ, ಕಿನ್ತು ಯೀಶೌ ಮಹಿಮಾನಂ ಪ್ರಾಪ್ತೇ ಸತಿ ವಾಕ್ಯಮಿದಂ ತಸ್ಮಿನ ಅಕಥ್ಯತ ಲೋಕಾಶ್ಚ ತಮ್ಪ್ರತೀತ್ಥಮ್ ಅಕುರ್ವ್ವನ್ ಇತಿ ತೇ ಸ್ಮೃತವನ್ತಃ|
17 ௧௭ அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள்.
ಸ ಇಲಿಯಾಸರಂ ಶ್ಮಶಾನಾದ್ ಆಗನ್ತುಮ್ ಆಹ್ವತವಾನ್ ಶ್ಮಶಾನಾಞ್ಚ ಉದಸ್ಥಾಪಯದ್ ಯೇ ಯೇ ಲೋಕಾಸ್ತತ್ಕರ್ಮ್ಯ ಸಾಕ್ಷಾದ್ ಅಪಶ್ಯನ್ ತೇ ಪ್ರಮಾಣಂ ದಾತುಮ್ ಆರಭನ್ತ|
18 ௧௮ அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
ಸ ಏತಾದೃಶಮ್ ಅದ್ಭುತಂ ಕರ್ಮ್ಮಕರೋತ್ ತಸ್ಯ ಜನಶ್ರುತೇ ರ್ಲೋಕಾಸ್ತಂ ಸಾಕ್ಷಾತ್ ಕರ್ತ್ತುಮ್ ಆಗಚ್ಛನ್|
19 ௧௯ அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள்.
ತತಃ ಫಿರೂಶಿನಃ ಪರಸ್ಪರಂ ವಕ್ತುಮ್ ಆರಭನ್ತ ಯುಷ್ಮಾಕಂ ಸರ್ವ್ವಾಶ್ಚೇಷ್ಟಾ ವೃಥಾ ಜಾತಾಃ, ಇತಿ ಕಿಂ ಯೂಯಂ ನ ಬುಧ್ಯಧ್ವೇ? ಪಶ್ಯತ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾಸ್ತಸ್ಯ ಪಶ್ಚಾದ್ವರ್ತ್ತಿನೋಭವನ್|
20 ௨0 பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்தவர்களில் கிரேக்கர்கள் சிலர் இருந்தனர்.
ಭಜನಂ ಕರ್ತ್ತುಮ್ ಉತ್ಸವಾಗತಾನಾಂ ಲೋಕಾನಾಂ ಕತಿಪಯಾ ಜನಾ ಅನ್ಯದೇಶೀಯಾ ಆಸನ್,
21 ௨௧ அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
ತೇ ಗಾಲೀಲೀಯಬೈತ್ಸೈದಾನಿವಾಸಿನಃ ಫಿಲಿಪಸ್ಯ ಸಮೀಪಮ್ ಆಗತ್ಯ ವ್ಯಾಹರನ್ ಹೇ ಮಹೇಚ್ಛ ವಯಂ ಯೀಶುಂ ದ್ರಷ್ಟುಮ್ ಇಚ್ಛಾಮಃ|
22 ௨௨ பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
ತತಃ ಫಿಲಿಪೋ ಗತ್ವಾ ಆನ್ದ್ರಿಯಮ್ ಅವದತ್ ಪಶ್ಚಾದ್ ಆನ್ದ್ರಿಯಫಿಲಿಪೌ ಯೀಶವೇ ವಾರ್ತ್ತಾಮ್ ಅಕಥಯತಾಂ|
23 ௨௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುದಿತವಾನ್ ಮಾನವಸುತಸ್ಯ ಮಹಿಮಪ್ರಾಪ್ತಿಸಮಯ ಉಪಸ್ಥಿತಃ|
24 ௨௪ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
ಅಹಂ ಯುಷ್ಮಾನತಿಯಥಾರ್ಥಂ ವದಾಮಿ, ಧಾನ್ಯಬೀಜಂ ಮೃತ್ತಿಕಾಯಾಂ ಪತಿತ್ವಾ ಯದಿ ನ ಮೃಯತೇ ತರ್ಹ್ಯೇಕಾಕೀ ತಿಷ್ಠತಿ ಕಿನ್ತು ಯದಿ ಮೃಯತೇ ತರ್ಹಿ ಬಹುಗುಣಂ ಫಲಂ ಫಲತಿ|
25 ௨௫ தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
ಯೋ ಜನೇ ನಿಜಪ್ರಾಣಾನ್ ಪ್ರಿಯಾನ್ ಜಾನಾತಿ ಸ ತಾನ್ ಹಾರಯಿಷ್ಯತಿ ಕಿನ್ತು ಯೇ ಜನ ಇಹಲೋಕೇ ನಿಜಪ್ರಾಣಾನ್ ಅಪ್ರಿಯಾನ್ ಜಾನಾತಿ ಸೇನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ತುಂ ತಾನ್ ರಕ್ಷಿಷ್ಯತಿ| (aiōnios g166)
26 ௨௬ ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
ಕಶ್ಚಿದ್ ಯದಿ ಮಮ ಸೇವಕೋ ಭವಿತುಂ ವಾಞ್ಛತಿ ತರ್ಹಿ ಸ ಮಮ ಪಶ್ಚಾದ್ಗಾಮೀ ಭವತು, ತಸ್ಮಾದ್ ಅಹಂ ಯತ್ರ ತಿಷ್ಠಾಮಿ ಮಮ ಸೇವಕೇಪಿ ತತ್ರ ಸ್ಥಾಸ್ಯತಿ; ಯೋ ಜನೋ ಮಾಂ ಸೇವತೇ ಮಮ ಪಿತಾಪಿ ತಂ ಸಮ್ಮಂಸ್ಯತೇ|
27 ௨௭ இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன்.
ಸಾಮ್ಪ್ರತಂ ಮಮ ಪ್ರಾಣಾ ವ್ಯಾಕುಲಾ ಭವನ್ತಿ, ತಸ್ಮಾದ್ ಹೇ ಪಿತರ ಏತಸ್ಮಾತ್ ಸಮಯಾನ್ ಮಾಂ ರಕ್ಷ, ಇತ್ಯಹಂ ಕಿಂ ಪ್ರಾರ್ಥಯಿಷ್ಯೇ? ಕಿನ್ತ್ವಹಮ್ ಏತತ್ಸಮಯಾರ್ಥಮ್ ಅವತೀರ್ಣವಾನ್|
28 ௨௮ பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது.
ಹೇ ಪಿತ: ಸ್ವನಾಮ್ನೋ ಮಹಿಮಾನಂ ಪ್ರಕಾಶಯ; ತನೈವ ಸ್ವನಾಮ್ನೋ ಮಹಿಮಾನಮ್ ಅಹಂ ಪ್ರಾಕಾಶಯಂ ಪುನರಪಿ ಪ್ರಕಾಶಯಿಷ್ಯಾಮಿ, ಏಷಾ ಗಗಣೀಯಾ ವಾಣೀ ತಸ್ಮಿನ್ ಸಮಯೇಽಜಾಯತ|
29 ௨௯ அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
ತಚ್ಶ್ರುತ್ವಾ ಸಮೀಪಸ್ಥಲೋಕಾನಾಂ ಕೇಚಿದ್ ಅವದನ್ ಮೇಘೋಽಗರ್ಜೀತ್, ಕೇಚಿದ್ ಅವದನ್ ಸ್ವರ್ಗೀಯದೂತೋಽನೇನ ಸಹ ಕಥಾಮಚಕಥತ್|
30 ௩0 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது.
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯವಾದೀತ್, ಮದರ್ಥಂ ಶಬ್ದೋಯಂ ನಾಭೂತ್ ಯುಷ್ಮದರ್ಥಮೇವಾಭೂತ್|
31 ௩௧ இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
ಅಧುನಾ ಜಗತೋಸ್ಯ ವಿಚಾರ: ಸಮ್ಪತ್ಸ್ಯತೇ, ಅಧುನಾಸ್ಯ ಜಗತ: ಪತೀ ರಾಜ್ಯಾತ್ ಚ್ಯೋಷ್ಯತಿ|
32 ௩௨ பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார்.
ಯದ್ಯಈ ಪೃಥಿವ್ಯಾ ಊರ್ದ್ವ್ವೇ ಪ್ರೋತ್ಥಾಪಿತೋಸ್ಮಿ ತರ್ಹಿ ಸರ್ವ್ವಾನ್ ಮಾನವಾನ್ ಸ್ವಸಮೀಪಮ್ ಆಕರ್ಷಿಷ್ಯಾಮಿ|
33 ௩௩ இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
ಕಥಂ ತಸ್ಯ ಮೃತಿ ರ್ಭವಿಷ್ಯತಿ, ಏತದ್ ಬೋಧಯಿತುಂ ಸ ಇಮಾಂ ಕಥಾಮ್ ಅಕಥಯತ್|
34 ௩௪ மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
ತದಾ ಲೋಕಾ ಅಕಥಯನ್ ಸೋಭಿಷಿಕ್ತಃ ಸರ್ವ್ವದಾ ತಿಷ್ಠತೀತಿ ವ್ಯವಸ್ಥಾಗ್ರನ್ಥೇ ಶ್ರುತಮ್ ಅಸ್ಮಾಭಿಃ, ತರ್ಹಿ ಮನುಷ್ಯಪುತ್ರಃ ಪ್ರೋತ್ಥಾಪಿತೋ ಭವಿಷ್ಯತೀತಿ ವಾಕ್ಯಂ ಕಥಂ ವದಸಿ? ಮನುಷ್ಯಪುತ್ರೋಯಂ ಕಃ? (aiōn g165)
35 ௩௫ அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான்.
ತದಾ ಯೀಶುರಕಥಾಯದ್ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಅಲ್ಪದಿನಾನಿ ಜ್ಯೋತಿರಾಸ್ತೇ, ಯಥಾ ಯುಷ್ಮಾನ್ ಅನ್ಧಕಾರೋ ನಾಚ್ಛಾದಯತಿ ತದರ್ಥಂ ಯಾವತ್ಕಾಲಂ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಜ್ಯೋತಿಸ್ತಿಷ್ಠತಿ ತಾವತ್ಕಾಲಂ ಗಚ್ಛತ; ಯೋ ಜನೋಽನ್ಧಕಾರೇ ಗಚ್ಛತಿ ಸ ಕುತ್ರ ಯಾತೀತಿ ನ ಜಾನಾತಿ|
36 ௩௬ ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
ಅತಏವ ಯಾವತ್ಕಾಲಂ ಯುಷ್ಮಾಕಂ ನಿಕಟೇ ಜ್ಯೋತಿರಾಸ್ತೇ ತಾವತ್ಕಾಲಂ ಜ್ಯೋತೀರೂಪಸನ್ತಾನಾ ಭವಿತುಂ ಜ್ಯೋತಿಷಿ ವಿಶ್ವಸಿತ; ಇಮಾಂ ಕಥಾಂ ಕಥಯಿತ್ವಾ ಯೀಶುಃ ಪ್ರಸ್ಥಾಯ ತೇಭ್ಯಃ ಸ್ವಂ ಗುಪ್ತವಾನ್|
37 ௩௭ அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
ಯದ್ಯಪಿ ಯೀಶುಸ್ತೇಷಾಂ ಸಮಕ್ಷಮ್ ಏತಾವದಾಶ್ಚರ್ಯ್ಯಕರ್ಮ್ಮಾಣಿ ಕೃತವಾನ್ ತಥಾಪಿ ತೇ ತಸ್ಮಿನ್ ನ ವ್ಯಶ್ವಸನ್|
38 ௩௮ “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ಅತಏವ ಕಃ ಪ್ರತ್ಯೇತಿ ಸುಸಂವಾದಂ ಪರೇಶಾಸ್ಮತ್ ಪ್ರಚಾರಿತಂ? ಪ್ರಕಾಶತೇ ಪರೇಶಸ್ಯ ಹಸ್ತಃ ಕಸ್ಯ ಚ ಸನ್ನಿಧೌ? ಯಿಶಯಿಯಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾ ಯದೇತದ್ ವಾಕ್ಯಮುಕ್ತಂ ತತ್ ಸಫಲಮ್ ಅಭವತ್|
39 ௩௯ ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்:
ತೇ ಪ್ರತ್ಯೇತುಂ ನಾಶನ್ಕುವನ್ ತಸ್ಮಿನ್ ಯಿಶಯಿಯಭವಿಷ್ಯದ್ವಾದಿ ಪುನರವಾದೀದ್,
40 ௪0 அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
ಯದಾ, "ತೇ ನಯನೈ ರ್ನ ಪಶ್ಯನ್ತಿ ಬುದ್ಧಿಭಿಶ್ಚ ನ ಬುಧ್ಯನ್ತೇ ತೈ ರ್ಮನಃಸು ಪರಿವರ್ತ್ತಿತೇಷು ಚ ತಾನಹಂ ಯಥಾ ಸ್ವಸ್ಥಾನ್ ನ ಕರೋಮಿ ತಥಾ ಸ ತೇಷಾಂ ಲೋಚನಾನ್ಯನ್ಧಾನಿ ಕೃತ್ವಾ ತೇಷಾಮನ್ತಃಕರಣಾನಿ ಗಾಢಾನಿ ಕರಿಷ್ಯತಿ| "
41 ௪௧ ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
ಯಿಶಯಿಯೋ ಯದಾ ಯೀಶೋ ರ್ಮಹಿಮಾನಂ ವಿಲೋಕ್ಯ ತಸ್ಮಿನ್ ಕಥಾಮಕಥಯತ್ ತದಾ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಮ್ ಈದೃಶಂ ಪ್ರಕಾಶಯತ್|
42 ௪௨ ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள்.
ತಥಾಪ್ಯಧಿಪತಿನಾಂ ಬಹವಸ್ತಸ್ಮಿನ್ ಪ್ರತ್ಯಾಯನ್| ಕಿನ್ತು ಫಿರೂಶಿನಸ್ತಾನ್ ಭಜನಗೃಹಾದ್ ದೂರೀಕುರ್ವ್ವನ್ತೀತಿ ಭಯಾತ್ ತೇ ತಂ ನ ಸ್ವೀಕೃತವನ್ತಃ|
43 ௪௩ அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்.
ಯತ ಈಶ್ವರಸ್ಯ ಪ್ರಶಂಸಾತೋ ಮಾನವಾನಾಂ ಪ್ರಶಂಸಾಯಾಂ ತೇಽಪ್ರಿಯನ್ತ|
44 ௪௪ அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்.
ತದಾ ಯೀಶುರುಚ್ಚೈಃಕಾರಮ್ ಅಕಥಯದ್ ಯೋ ಜನೋ ಮಯಿ ವಿಶ್ವಸಿತಿ ಸ ಕೇವಲೇ ಮಯಿ ವಿಶ್ವಸಿತೀತಿ ನ, ಸ ಮತ್ಪ್ರೇರಕೇಽಪಿ ವಿಶ್ವಸಿತಿ|
45 ௪௫ என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.
ಯೋ ಜನೋ ಮಾಂ ಪಶ್ಯತಿ ಸ ಮತ್ಪ್ರೇರಕಮಪಿ ಪಶ್ಯತಿ|
46 ௪௬ என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்.
ಯೋ ಜನೋ ಮಾಂ ಪ್ರತ್ಯೇತಿ ಸ ಯಥಾನ್ಧಕಾರೇ ನ ತಿಷ್ಠತಿ ತದರ್ಥಮ್ ಅಹಂ ಜ್ಯೋತಿಃಸ್ವರೂಪೋ ಭೂತ್ವಾ ಜಗತ್ಯಸ್ಮಿನ್ ಅವತೀರ್ಣವಾನ್|
47 ௪௭ ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்.
ಮಮ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ಯದಿ ಕಶ್ಚಿನ್ ನ ವಿಶ್ವಸಿತಿ ತರ್ಹಿ ತಮಹಂ ದೋಷಿಣಂ ನ ಕರೋಮಿ, ಯತೋ ಹೇತೋ ರ್ಜಗತೋ ಜನಾನಾಂ ದೋಷಾನ್ ನಿಶ್ಚಿತಾನ್ ಕರ್ತ್ತುಂ ನಾಗತ್ಯ ತಾನ್ ಪರಿಚಾತುಮ್ ಆಗತೋಸ್ಮಿ|
48 ௪௮ என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
ಯಃ ಕಶ್ಚಿನ್ ಮಾಂ ನ ಶ್ರದ್ಧಾಯ ಮಮ ಕಥಂ ನ ಗೃಹ್ಲಾತಿ, ಅನ್ಯಸ್ತಂ ದೋಷಿಣಂ ಕರಿಷ್ಯತಿ ವಸ್ತುತಸ್ತು ಯಾಂ ಕಥಾಮಹಮ್ ಅಚಕಥಂ ಸಾ ಕಥಾ ಚರಮೇಽನ್ಹಿ ತಂ ದೋಷಿಣಂ ಕರಿಷ್ಯತಿ|
49 ௪௯ நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
ಯತೋ ಹೇತೋರಹಂ ಸ್ವತಃ ಕಿಮಪಿ ನ ಕಥಯಾಮಿ, ಕಿಂ ಕಿಂ ಮಯಾ ಕಥಯಿತವ್ಯಂ ಕಿಂ ಸಮುಪದೇಷ್ಟವ್ಯಞ್ಚ ಇತಿ ಮತ್ಪ್ರೇರಯಿತಾ ಪಿತಾ ಮಾಮಾಜ್ಞಾಪಯತ್|
50 ௫0 அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
ತಸ್ಯ ಸಾಜ್ಞಾ ಅನನ್ತಾಯುರಿತ್ಯಹಂ ಜಾನಾಮಿ, ಅತಏವಾಹಂ ಯತ್ ಕಥಯಾಮಿ ತತ್ ಪಿತಾ ಯಥಾಜ್ಞಾಪಯತ್ ತಥೈವ ಕಥಯಾಮ್ಯಹಮ್| (aiōnios g166)

< யோவான் 12 >