< யோவான் 11 >

1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான்.
बैतनिय्याह ग्रां च इक लाजर नाऐ दा माणु बीमार था। मरियम कने मार्था उदियां बेहणा थियां।
2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.
ऐ सै ही मरियम थी जिना बादे च प्रभुऐ दे पैरा उपर इत्र नियोरी करी उदे पैरां जो अपणे बाला ने पुंजया था, उसा दा ही भाई लाजर बीमार था।
3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
उसा दिया बेंहणा यीशुऐ जो बोली भेजया, “प्रभु जी, दिख, जिसयो तू प्यार करदा है, सै बीमार है।”
4 இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
ऐ सुणीकरी यीशुऐ बोलया, “ऐ बिमारी मौत ने नी मुकणी, पर परमेश्वरे दिया महिमा तांई है, ताकि उसला मिंजो, परमेश्वरे दे पुत्रे दी महिमा हो।”
5 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
कने यीशु मार्था कने उदी बेंहण कने लाजरे ने प्यार करदा था।
6 அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
पर उनी सुणाया, की सै बीमार है, जिसा जगा सै था, ओथु दो रोज होर रुकी गिया।
7 அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
फिरी दो दिन बाद उनी चेलयां ने बोलया, “ओआ, असां फिरी यहूदिया प्रदेश दे इलाके दे बैतनिय्याह शेहरे जो चलदे न।”
8 அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
चेलयां उसयो बोलया, “गुरू जी, हुंणी तां यहूदी अगुवे तिजो पथर मारणा चांदे थे, क्या फिरी भी तू ओथु चलया है?”
9 இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
यीशुऐ जबाब दिता, “क्या दिने दे बाहरा घंटे नी होंदे न? अगर कोई दिने चले, तां उसयो ठोकर नी लगदी, क्योंकि सै इस संसारे दी लौई ने मतलब की सूरजे दी लौई ने दिखदे न।
10 ௧0 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.
पर अगर कोई राती जो चले, तां उसयो ठोकर लगणी, क्योंकि तालू उदे च लौ नी है।”
11 ௧௧ இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார்.
इदे बाद यीशुऐ उना ने बोलया, “साड़ा मित्र लाजर सोई गिया है, पर मैं उसयो जगाणा चलया है।”
12 ௧௨ அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
तालू चेलयां उसयो बोलया, “प्रभु जी, अगर सै सोई गिया है, तां उनी ठीक ठाक होई जाणा।”
13 ௧௩ இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
यीशुऐ तां उदिया मौता दे बारे च बोलया था: पर सै समझे की उनी निद्रां ने सोई जाणे दे बारे च बोलया।
14 ௧௪ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
तालू यीशुऐ उना ने साफ बोली दिता की, लाजर मरी गिया है।
15 ௧௫ நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
कने मैं तुहाड़े फायदे तांई खुश है की मैं ओथु नी था जिसने तुसां भरोसा करन। पर हुण ओआ, असां उदे बाल चलदे न।
16 ௧௬ அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
तालू थोमा जिसयो दिदुमुस बोलदे न, अपणे सोगी बाले चेले ने बोलया, “ओआ, असां भी उदे सोगी मरणे तांई चलदे न।”
17 ௧௭ இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார்.
जालू यीशुऐ जो बैतनिय्याह ग्रां च आई करी ऐ पता चला की उसयो चार दिन पेहले ही कबरा च दफनाई दितया है।
18 ௧௮ பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
बैतनिय्याह ग्रां यरूशलेम शेहर दे नेड़े लगभग कोई तिन किलो मीटर था।
19 ௧௯ யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
कने मते यहूदी लोक मार्था कने मरियम बाल उदे भाईऐ दे बारे च शान्ति देणे तांई आयो थे।
20 ௨0 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
जालू मार्था यीशुऐ दे ओंणे दी खबर सुणीकरी यीशुऐ ने मिलणा गेई, पर मरियम घरे बेई रेई।
21 ௨௧ மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
मार्था यीशुऐ जो बोलया, “प्रभु जी, अगर तू ऐथू होंदा, तां मेरा भाई कदी नी मरदा।
22 ௨௨ இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
कने हुण भी जाणदी है, की जड़ा कुछ तू परमेश्वरे ला मंगगा, परमेश्वरे तिजो देणा।”
23 ௨௩ இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
यीशुऐ उसा जो बोलया, “तेरा भाई फिरी जिंदा होई जाणा।”
24 ௨௪ அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
मार्था उसयो बोलया, मैं जाणदी है, “न्याय दे रोजे जालू हर कोई जिन्दा होई जाणा तालू उनी भी जिन्दा होई जाणा।”
25 ௨௫ இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
यीशुऐ उसा ने बोलया, “मैं सै है जड़ा मरयो लोकां जो जिन्दगी च बापस लोंदा है, जड़ा कोई मिंजो पर भरोसा करदा है सै अगर मरी भी जा तमी, उनी जी पोंणा।
26 ௨௬ உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
कने जड़ा कोई मिंजो पर भरोसा करदा है सै जिन्दा है, कने उनी अनन्तकाल दीकर नी मरणा। मार्था तू क्या इसा गल्ला पर भरोसा करदी है?” (aiōn g165)
27 ௨௭ அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
उनी उसयो बोलया, “हाँ, प्रभु जी, मैं भरोसा करी लिया है, की परमेश्वरे दा पुत्र मसीह जड़ा संसारे च ओंणे बाला था, सै तू ही है।”
28 ௨௮ இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
ऐ बोली करी सै चली गेई, कने अपणी बेंहण मरियम जो होले करी सदीकरी बोलया, “गुरू ऐथू ही है, कने तिजो सदा दा है।”
29 ௨௯ அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
सै सुणदे ही झट उठी करी उदे बाल आई।
30 ௩0 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
(यीशु हले दीकर भी ग्रांऐ ला बाहर ही था, पर उसा ही जगा च था जिथू मार्था उसला मिल्ली थी)।
31 ௩௧ அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள்.
तालू जड़े यहूदी लोक मरियम सोगी उसा दे घरे थे, कने उसा जो दिलासा देदे थे, कने दिखया की मरियम झट उठी करी बाहर चली गेई। इस तांई सै उसा दे पिच्छे-पिच्छे गे, ऐ सै समझीकरी की सै कबरा पर रोंणे तांई जा दी है।
32 ௩௨ இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
जालू मरियम ओथु पुज्जी जिथू यीशु था, तां उसयो दिखदे ही उदे पैरां च पेईकरी बोलया, “प्रभु जी, अगर तू ऐथू होंदा तां मेरा भाई नी मरदा।”
33 ௩௩ அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
जालू यीशुऐ उसा जो कने उसा सोगी आयो यहूदी लोकां जो रोंदे दिखया, तां यीशुऐ बड़ा ही दुखी होईकरी उना ला पुछया,
34 ௩௪ அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
कने बोलया, तुसां उसयो कुथु दफनाया है? उना उसयो बोलया, “प्रभु जी, चली करी दिखी ले।”
35 ௩௫ இயேசு கண்ணீர் விட்டார்.
यीशुऐ दियां हखी चे आंसू निकलना लग्गे।
36 ௩௬ அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
तालू यहूदी लोक बोलणा लग्गे, “दिखा, सै उसने कदेया प्यार रखदा था।”
37 ௩௭ அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
पर उना चे कितणे ही बोलया की, “इनी तां उस अन्ने दियां हखी ठीक कितियां न, क्या ऐ लाजरे जो मरणे ला नी बचाई सकदा था?”
38 ௩௮ அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
यीशु मने च बड़ा ही दुखी होया कने कबरा पर आया, सै इक गुफा थी, कने गुफा दे मुऐ पर इक पथर रखया होया था।
39 ௩௯ இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
यीशुऐ बोलया, “पथरे जो हटा।” उस मरयो दी बेंहण मार्था बोलणा लग्गी, “प्रभु जी, उदे चे तां हुण मुस्क ओआ दी है, क्योंकि उसयो मरयो चार रोज होई गियो न।”
40 ௪0 இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
यीशुऐ उस जो बोलया, “क्या मैं तिजो ने बोलया नी था की अगर तू मिंजो पर भरोसा करगी तां तू परमेश्वरे दी महिमा जो दिखगी।”
41 ௪௧ அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
तालू उना सै पथर हटाया, फिरी यीशुऐ स्वर्ग पासे दिखीकरी के बोलया, “पिता परमेश्वर जी, मैं धन्याबाद करदा है की तू मेरी सुणी लेई है।”
42 ௪௨ நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
पर जड़ी भीड़ अखे बखे खड़ोतियो है, उना दिया बजा ने यीशुऐ जोरे ने बोलया, “मैं जाणदा है, की तू हमेशा मेरी सुणदा है, जिसने की सै भरोसा करन, की तू मिंजो भेजया है।”
43 ௪௩ இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
ऐ बोली करी उनी जोरे ने पुकारया, “हे लाजर बाहर निकली आ।”
44 ௪௪ அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
जड़ा मरी गिया था, सै बाहर आया, कने उदा सारा शरीर पट्टियाँ च कने मु कपड़े च लपेटया होया था कने यीशुऐ उना जो बोलया, “इसयो खोली करी जाणा दिया।”
45 ௪௫ அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
तालू जड़े यहूदी लोक मरियमा दे सोगी आयो थे, उना उदा ऐ कम्म दिखया कने उना चे मतयां उदे पर भरोसा किता।
46 ௪௬ அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
उना चे कितणयां ही फरीसियां बाल जाई करी यीशुऐ दे कम्मा दी खबर दिती।
47 ௪௭ அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
इस पर बड्डे याजकां कने फरीसियां दी महासभा दे लोंका जो गठेरी करी बोलया, “असां क्या करगे? ऐ माणु तां बड़े चमत्कार दसदा है।
48 ௪௮ நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
अगर असां इसयो हुण भी नी रोकदे न, तां सारयां उस पर भरोसा करी लेंणा की सै ही मसीहा है, कने रोमी लोकां आई करी साड़े मंदरे कने देशे पर कब्जा करी लेंणा।”
49 ௪௯ அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
तालू उना दिया सभा चे कैफा नाऐ दा इक माणु जड़ा उस साले दा महायाजक था, उनी बोलया, “तुसां कुछ भी नी जाणदे;
50 ௫0 மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
कने ना ऐ समझदे न, तुहाड़े तांई ऐ ठीक है, की साड़े लोकां तांई इक माणु मरे, नी की सारे इस्राएल देशे दे लोकां दा नाश होई जा।”
51 ௫௧ இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
ऐ गल्ल उनी अपणे आपे ला नी बोली, पर उस साले दे महायाजक दे रुपे च, उनी ऐ भविष्यवाणी किती, की यीशुऐ पुरे इस्राएल देशे तांई मरणा।
52 ௫௨ அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
कने ना सिर्फ इना तांई ही नी। पर उनी परमेश्वरे दी होर ओलादी तांई भी मरणा जड़े इस संसारे च बिखरयो न, ताकि उना जो गठेरी सके।
53 ௫௩ அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
यहूदी अगुवे उस रोजे ला ही उसयो मारने दी सलाह करणा लग्गी पे।
54 ௫௪ ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
इसा साजिशा दिया बजा ने यीशुऐ यहूदियां दे बिच सरेआम घुमणा बंद करी दिता; यीशु ओथु ला सुनसान जगा दे नेड़े बाले प्रदेश दे इफ्राईम नाऐ दे इकी शेहरे जो चली गिया, कने अपणे चेलयाँ सोगी ओथु ही रेंणा लग्गा।
55 ௫௫ யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
कने यहूदिया दे फसह दे त्योहारे दा बकत नेड़े था, कने मते लोक फसह ला पेहले यरूशलेम शेहर जो गे ताकि मंदरे च अपणे आपे जो शुद्ध करन।
56 ௫௬ அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
कने यीशुऐ जो तोपदे कने मंदरे च खड़ोई करी अपु चे बोलणा लग्गे, “तुसां क्या समझदे न? क्या सै त्योहारे च नी ओंगा?”
57 ௫௭ பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
कने बड्डे याजकां कने फरीसियां ऐ हुकम दितया था, की अगर कुस्यो पता लग्गे की यीशु कुथु है तां दसनयो, ताकि उसयो गिरफ्तार करी सकन।

< யோவான் 11 >