< யோவான் 10 >

1 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான்.
অহং যুষ্মানতিযথার্থং ৱদামি, যো জনো দ্ৱারেণ ন প্রৱিশ্য কেনাপ্যন্যেন মেষগৃহং প্রৱিশতি স এৱ স্তেনো দস্যুশ্চ|
2 வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான்.
যো দ্ৱারেণ প্রৱিশতি স এৱ মেষপালকঃ|
3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
দৌৱারিকস্তস্মৈ দ্ৱারং মোচযতি মেষগণশ্চ তস্য ৱাক্যং শৃণোতি স নিজান্ মেষান্ স্ৱস্ৱনাম্নাহূয বহিঃ কৃৎৱা নযতি|
4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது.
তথা নিজান্ মেষান্ বহিঃ কৃৎৱা স্ৱযং তেষাম্ অগ্রে গচ্ছতি, ততো মেষাস্তস্য শব্দং বুধ্যন্তে, তস্মাৎ তস্য পশ্চাদ্ ৱ্রজন্তি|
5 தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.
কিন্তু পরস্য শব্দং ন বুধ্যন্তে তস্মাৎ তস্য পশ্চাদ্ ৱ্রজিষ্যন্তি ৱরং তস্য সমীপাৎ পলাযিষ্যন্তে|
6 இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
যীশুস্তেভ্য ইমাং দৃষ্টান্তকথাম্ অকথযৎ কিন্তু তেন কথিতকথাযাস্তাৎপর্য্যং তে নাবুধ্যন্ত|
7 ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
অতো যীশুঃ পুনরকথযৎ, যুষ্মানাহং যথার্থতরং ৱ্যাহরামি, মেষগৃহস্য দ্ৱারম্ অহমেৱ|
8 எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
মযা ন প্রৱিশ্য য আগচ্ছন্ তে স্তেনা দস্যৱশ্চ কিন্তু মেষাস্তেষাং কথা নাশৃণ্ৱন্|
9 நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
অহমেৱ দ্ৱারস্ৱরূপঃ, মযা যঃ কশ্চিত প্রৱিশতি স রক্ষাং প্রাপ্স্যতি তথা বহিরন্তশ্চ গমনাগমনে কৃৎৱা চরণস্থানং প্রাপ্স্যতি|
10 ௧0 திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
১০যো জনস্তেনঃ স কেৱলং স্তৈন্যবধৱিনাশান্ কর্ত্তুমেৱ সমাযাতি কিন্ত্ৱহম্ আযু র্দাতুম্ অর্থাৎ বাহূল্যেন তদেৱ দাতুম্ আগচ্ছম্|
11 ௧௧ நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
১১অহমেৱ সত্যমেষপালকো যস্তু সত্যো মেষপালকঃ স মেষার্থং প্রাণত্যাগং করোতি;
12 ௧௨ மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
১২কিন্তু যো জনো মেষপালকো ন, অর্থাদ্ যস্য মেষা নিজা ন ভৱন্তি, য এতাদৃশো ৱৈতনিকঃ স ৱৃকম্ আগচ্ছন্তং দৃষ্ট্ৱা মেজৱ্রজং ৱিহায পলাযতে, তস্মাদ্ ৱৃকস্তং ৱ্রজং ধৃৎৱা ৱিকিরতি|
13 ௧௩ வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான்.
১৩ৱৈতনিকঃ পলাযতে যতঃ স ৱেতনার্থী মেষার্থং ন চিন্তযতি|
14 ௧௪ நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
১৪অহমেৱ সত্যো মেষপালকঃ, পিতা মাং যথা জানাতি, অহঞ্চ যথা পিতরং জানামি,
15 ௧௫ நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
১৫তথা নিজান্ মেষানপি জানামি, মেষাশ্চ মাং জানান্তি, অহঞ্চ মেষার্থং প্রাণত্যাগং করোমি|
16 ௧௬ இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும்.
১৬অপরঞ্চ এতদ্ গৃহীয মেষেভ্যো ভিন্না অপি মেষা মম সন্তি তে সকলা আনযিতৱ্যাঃ; তে মম শব্দং শ্রোষ্যন্তি তত একো ৱ্রজ একো রক্ষকো ভৱিষ্যতি|
17 ௧௭ நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார்.
১৭প্রাণানহং ত্যক্ত্ৱা পুনঃ প্রাণান্ গ্রহীষ্যামি, তস্মাৎ পিতা মযি স্নেহং করোতি|
18 ௧௮ ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
১৮কশ্চিজ্জনো মম প্রাণান্ হন্তুং ন শক্নোতি কিন্তু স্ৱযং তান্ সমর্পযামি তান্ সমর্পযিতুং পুনর্গ্রহীতুঞ্চ মম শক্তিরাস্তে ভারমিমং স্ৱপিতুঃ সকাশাৎ প্রাপ্তোহম্|
19 ௧௯ இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது.
১৯অস্মাদুপদেশাৎ পুনশ্চ যিহূদীযানাং মধ্যে ভিন্নৱাক্যতা জাতা|
20 ௨0 அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.
২০ততো বহৱো ৱ্যাহরন্ এষ ভূতগ্রস্ত উন্মত্তশ্চ, কুত এতস্য কথাং শৃণুথ?
21 ௨௧ வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
২১কেচিদ্ অৱদন্ এতস্য কথা ভূতগ্রস্তস্য কথাৱন্ন ভৱন্তি, ভূতঃ কিম্ অন্ধায চক্ষুষী দাতুং শক্নোতি?
22 ௨௨ பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது.
২২শীতকালে যিরূশালমি মন্দিরোৎসর্গপর্ৱ্ৱণ্যুপস্থিতে
23 ௨௩ இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
২৩যীশুঃ সুলেমানো নিঃসারেণ গমনাগমনে করোতি,
24 ௨௪ அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள்.
২৪এতস্মিন্ সমযে যিহূদীযাস্তং ৱেষ্টযিৎৱা ৱ্যাহরন্ কতি কালান্ অস্মাকং ৱিচিকিৎসাং স্থাপযিষ্যামি? যদ্যভিষিক্তো ভৱতি তর্হি তৎ স্পষ্টং ৱদ|
25 ௨௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
২৫তদা যীশুঃ প্রত্যৱদদ্ অহম্ অচকথং কিন্তু যূযং ন প্রতীথ, নিজপিতু র্নাম্না যাং যাং ক্রিযাং করোমি সা ক্রিযৈৱ মম সাক্ষিস্ৱরূপা|
26 ௨௬ ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
২৬কিন্ত্ৱহং পূর্ৱ্ৱমকথযং যূযং মম মেষা ন ভৱথ, কারণাদস্মান্ ন ৱিশ্ৱসিথ|
27 ௨௭ என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.
২৭মম মেষা মম শব্দং শৃণ্ৱন্তি তানহং জানামি তে চ মম পশ্চাদ্ গচ্ছন্তি|
28 ௨௮ நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
২৮অহং তেভ্যোঽনন্তাযু র্দদামি, তে কদাপি ন নংক্ষ্যন্তি কোপি মম করাৎ তান্ হর্ত্তুং ন শক্ষ্যতি| (aiōn g165, aiōnios g166)
29 ௨௯ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
২৯যো মম পিতা তান্ মহ্যং দত্তৱান্ স সর্ৱ্ৱস্মাৎ মহান্, কোপি মম পিতুঃ করাৎ তান্ হর্ত্তুং ন শক্ষ্যতি|
30 ௩0 நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.
৩০অহং পিতা চ দ্ৱযোরেকৎৱম্|
31 ௩௧ அப்பொழுது யூதர்கள் மீண்டும் அவர்மேல் கல்லெறியும்படி, கற்க்களை எடுத்துக்கொண்டார்கள்.
৩১ততো যিহূদীযাঃ পুনরপি তং হন্তুং পাষাণান্ উদতোলযন্|
32 ௩௨ இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
৩২যীশুঃ কথিতৱান্ পিতুঃ সকাশাদ্ বহূন্যুত্তমকর্ম্মাণি যুষ্মাকং প্রাকাশযং তেষাং কস্য কর্ম্মণঃ কারণান্ মাং পাষাণৈরাহন্তুম্ উদ্যতাঃ স্থ?
33 ௩௩ யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனிதனாக இருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இந்தவிதமாக தேவ அவமதிப்பு சொல்லுகிறதினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
৩৩যিহূদীযাঃ প্রত্যৱদন্ প্রশস্তকর্ম্মহেতো র্ন কিন্তু ৎৱং মানুষঃ স্ৱমীশ্ৱরম্ উক্ত্ৱেশ্ৱরং নিন্দসি কারণাদস্মাৎ ৎৱাং পাষাণৈর্হন্মঃ|
34 ௩௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தேவர்களாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாக உங்களுடைய வேதத்தில் எழுதவில்லையா?
৩৪তদা যীশুঃ প্রত্যুক্তৱান্ মযা কথিতং যূযম্ ঈশ্ৱরা এতদ্ৱচনং যুষ্মাকং শাস্ত্রে লিখিতং নাস্তি কিং?
35 ௩௫ தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க,
৩৫তস্মাদ্ যেষাম্ উদ্দেশে ঈশ্ৱরস্য কথা কথিতা তে যদীশ্ৱরগণা উচ্যন্তে ধর্ম্মগ্রন্থস্যাপ্যন্যথা ভৱিতুং ন শক্যং,
36 ௩௬ பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ அவமதிப்பு சொன்னேன் என்று நீங்கள் சொல்லலாமா?
৩৬তর্হ্যাহম্ ঈশ্ৱরস্য পুত্র ইতি ৱাক্যস্য কথনাৎ যূযং পিত্রাভিষিক্তং জগতি প্রেরিতঞ্চ পুমাংসং কথম্ ঈশ্ৱরনিন্দকং ৱাদয?
37 ௩௭ என் பிதாவின் செயல்களை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.
৩৭যদ্যহং পিতুঃ কর্ম্ম ন করোমি তর্হি মাং ন প্রতীত;
38 ௩௮ அவைகளை செய்தால், நீங்கள் என்னை விசுவாசியாமல் இருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தச் செயல்களை விசுவாசியுங்கள் என்றார்.
৩৮কিন্তু যদি করোমি তর্হি মযি যুষ্মাভিঃ প্রত্যযে ন কৃতেঽপি কার্য্যে প্রত্যযঃ ক্রিযতাং, ততো মযি পিতাস্তীতি পিতর্য্যহম্ অস্মীতি চ ক্ষাৎৱা ৱিশ্ৱসিষ্যথ|
39 ௩௯ இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
৩৯তদা তে পুনরপি তং ধর্ত্তুম্ অচেষ্টন্ত কিন্তু স তেষাং করেভ্যো নিস্তীর্য্য
40 ௪0 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
৪০পুন র্যর্দ্দন্ অদ্যাস্তটে যত্র পুর্ৱ্ৱং যোহন্ অমজ্জযৎ তত্রাগত্য ন্যৱসৎ|
41 ௪௧ அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.
৪১ততো বহৱো লোকাস্তৎসমীপম্ আগত্য ৱ্যাহরন্ যোহন্ কিমপ্যাশ্চর্য্যং কর্ম্ম নাকরোৎ কিন্ত্ৱস্মিন্ মনুষ্যে যা যঃ কথা অকথযৎ তাঃ সর্ৱ্ৱাঃ সত্যাঃ;
42 ௪௨ அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
৪২তত্র চ বহৱো লোকাস্তস্মিন্ ৱ্যশ্ৱসন্|

< யோவான் 10 >