< யோவான் 10 >
1 ௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான்.
ⲁ̅ϩⲁⲙⲏⲛ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲡⲉⲧⲉⲛϥⲛⲏⲩ ⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲣⲟ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲟϩⲉ ⲛⲛⲉⲥⲟⲟⲩ ⲁⲗⲗⲁ ⲉϥⲟⲩⲱⲧⲃ ⲉⲃⲟⲗ ϩⲓ ⲕⲉⲥⲁ ⲡⲉⲧⲙⲙⲁⲩ ⲟⲩⲣⲉϥϫⲓⲟⲩⲉ ⲁⲩⲱ ⲟⲩⲥⲟⲟⲛⲉ ⲡⲉ
2 ௨ வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான்.
ⲃ̅ⲡⲉⲧⲛⲏⲩ ⲇⲉ ⲛⲧⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲣⲟ ⲛⲧⲟϥ ⲡⲉ ⲡϣⲱⲥ ⲛⲛⲉⲥⲟⲟⲩ
3 ௩ வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
ⲅ̅ⲡⲁⲓ ϣⲁⲣⲉⲡⲉⲙⲛⲟⲩⲧ ⲟⲩⲱⲛ ⲛⲁϥ ⲁⲩⲱ ϣⲁⲣⲉⲛⲉⲥⲟⲟⲩ ⲥⲱⲧⲙ ⲉⲧⲉϥ ⲥⲙⲏ ⲁⲩⲱ ϣⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉϥⲉⲥⲟⲟⲩ ⲕⲁⲧⲁ ⲡⲉⲩⲣⲁⲛ ⲛϥⲛⲧⲟⲩ ⲉⲃⲟⲗ
4 ௪ அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது.
ⲇ̅ϩⲟⲧⲁⲛ ⲉϥϣⲁⲛⲉⲓⲛⲉ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲧⲉⲛⲟⲩϥ ⲧⲏⲣⲟⲩ ⲛⲉ ϣⲁϥⲙⲟⲟϣⲉ ϩⲁ ⲧⲉⲩϩⲏ ⲁⲩⲱ ϣⲁⲣⲉⲛⲉⲥⲟⲟⲩ ⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ ϫⲉ ⲥⲉⲥⲟⲟⲩⲛ ⲛⲧⲉϥⲥⲙⲏ
5 ௫ தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.
ⲉ̅ⲛⲛⲉⲩⲟⲩⲁϩⲟⲩ ⲇⲉ ⲛⲧⲟϥ ⲛⲥⲁ ⲟⲩϣⲙⲙⲟ ⲁⲗⲗⲁ ⲥⲉⲛⲁⲡⲱⲧ ⲉⲃⲟⲗ ⲙⲙⲟϥ ϫⲉ ⲛⲥⲉⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲛⲧⲉⲥⲙⲏ ⲛⲛϣⲙⲙⲟ
6 ௬ இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
ⲋ̅ⲧⲉⲉⲓⲡⲁⲣϩⲟⲓⲙⲓⲁ ⲁϥϫⲟⲟⲥ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲥ ⲛⲏ ⲇⲉ ⲙⲡⲟⲩⲉⲓⲙⲉ ϫⲉ ⲟⲩ ⲛⲉⲧϥϫⲱ ⲙⲙⲟⲟⲩ ⲛⲁⲩ
7 ௭ ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲍ̅ⲡⲉϫⲁϥ ϭⲉ ⲟⲛ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲥ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡϣⲱⲥ ⲛⲛⲉⲥⲟⲟⲩ
8 ௮ எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
ⲏ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁⲩⲉⲓ ϩⲉⲛⲣⲉϥϫⲓⲟⲩⲉ ⲛⲉ ⲁⲩⲱ ϩⲉⲛⲥⲟⲟⲛⲉ ⲛⲉ ⲁⲗⲗⲁ ⲙⲡⲉⲛⲉⲥⲟⲟⲩ ⲥⲱⲧⲙ ⲉⲣⲟⲟⲩ
9 ௯ நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
ⲑ̅ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡⲣⲟ ⲉⲣϣⲁ ⲟⲩⲁ ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ϩⲓⲧⲟⲟⲧ ϥⲛⲁⲟⲩϫⲁⲓ ⲁⲩⲱ ϥⲛⲁⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲛϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲛϥϩⲉ ⲉⲩⲙⲁ ⲙⲙⲟⲟⲛⲉ
10 ௧0 திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
ⲓ̅ⲡⲣⲉϥϫⲓⲟⲩⲉ ⲙⲉϥⲉⲓ ⲉⲧⲃⲉ ⲗⲁⲁⲩ ⲉⲓⲙⲏⲧⲓ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϩⲱϥⲧ ⲁⲩⲱ ⲛϥϣⲱⲱⲧ ⲁⲩⲱ ⲛϥⲧⲁⲕⲟ ⲁⲛⲟⲕ ⲛⲧⲁⲓⲉⲓ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϫⲓ ⲛⲟⲩⲱⲛⲁϩ ⲁⲩⲱ ⲛⲥⲉϫⲓ ⲟⲩϩⲟⲩⲟ
11 ௧௧ நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
ⲓ̅ⲁ̅ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡϣⲱⲥ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲡϣⲱⲥ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ϣⲁϥⲕⲁ ⲧⲉϥⲯⲩⲭⲏ ϩⲁ ⲛⲉϥⲉⲥⲟⲟⲩ
12 ௧௨ மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
ⲓ̅ⲃ̅ⲡϫⲁⲓ ⲃⲉⲕⲉ ⲇⲉ ⲉⲧⲉⲛⲟⲩϣⲱⲥ ⲁⲛ ⲡⲉ ⲡⲁⲓ ⲉⲧⲉⲛⲛⲟⲩϥ ⲁⲛ ⲛⲉ ⲛⲉⲥⲟⲟⲩ ϣⲁϥⲛⲁⲩ ⲉⲡⲟⲩⲱⲛϣ ⲉϥⲛⲏⲩ ⲁⲩⲱ ϣⲁϥⲕⲁ ⲛⲉⲥⲟⲟⲩ ⲛϥⲡⲱⲧ ⲁⲩⲱ ϣⲁⲣⲉ ⲡⲟⲩⲱⲛϣ ⲧⲟⲣⲡⲟⲩ ⲛϥϫⲟⲟⲣⲟⲩ
13 ௧௩ வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான்.
ⲓ̅ⲅ̅ⲉⲃⲟⲗ ϫⲉ ⲟⲩϫⲁⲓ ⲃⲉⲕⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲙⲡⲉϥⲣⲟⲟⲩϣ ⲁⲛ ⲡⲉ ϩⲁ ⲛⲉⲥⲟⲟⲩ
14 ௧௪ நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
ⲓ̅ⲇ̅ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡϣⲱⲥ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲁⲩⲱ ϯⲥⲟⲟⲩⲛ ⲛⲛⲟⲩⲉⲓ ⲁⲩⲱ ⲛⲟⲩⲉⲓ ⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲉⲓ
15 ௧௫ நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
ⲓ̅ⲉ̅ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲧⲉⲣⲉⲡⲓⲱⲧ ⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲉⲓ ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲥⲟⲟⲩⲛ ⲙⲡⲓⲱⲧ ⲁⲩⲱ ϯⲛⲁⲕⲱ ⲛⲧⲁⲯⲩⲭⲏ ϩⲁ ⲛⲁⲉⲥⲟⲟⲩ
16 ௧௬ இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும்.
ⲓ̅ⲋ̅ⲟⲩⲛⲧⲁⲓ ⲟⲛ ⲙⲙⲁⲩ ⲛϩⲉⲛⲕⲉⲉⲥⲟⲟⲩ ⲉⲛϩⲉⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ⲛⲉ ϩⲙ ⲡⲉⲓⲟϩⲉ ⲁⲩⲱ ⲛⲉⲧⲙⲙⲁⲩ ⲟⲛ ϩⲁⲡⲥ ⲉⲧⲣⲁⲥⲟⲟⲩϩⲟⲩ ⲁⲩⲱ ⲥⲉⲛⲁⲥⲱⲧⲙ ⲉⲧⲁⲥⲙⲏ ⲛⲥⲉϣⲱⲡⲉ ⲛⲟⲩⲟϩⲉ ⲛⲟⲩⲱⲧ ⲟⲩϣⲱⲥ ⲛⲟⲩⲱⲧ
17 ௧௭ நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார்.
ⲓ̅ⲍ̅ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲡⲁⲓⲱⲧ ⲙⲉ ⲙⲙⲟⲓ ϫⲉ ϯⲛⲁⲕⲱ ⲛⲧⲁⲯⲩⲭⲏ ϫⲉⲕⲁⲥ ⲟⲛ ⲉⲓⲉϫⲓⲧⲥ
18 ௧௮ ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
ⲓ̅ⲏ̅ⲙⲛ ⲗⲁⲁⲩ ϥⲓ ⲙⲙⲟⲥ ⲛⲧⲟⲟⲧ ⲁⲗⲗⲁ ⲁⲛⲟⲕ ⲉⲧⲕⲱ ⲙⲙⲟⲥ ϩⲁⲣⲟⲓ ⲙⲙⲁⲩⲁⲁⲧ ⲟⲩⲛϯ ⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲉⲕⲁⲁⲥ ⲁⲩⲱ ⲟⲛ ⲟⲩⲛϯ ⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲉϫⲓⲧⲥ ⲧⲉⲓⲉⲛⲧⲟⲗⲏ ⲛⲧⲁⲓϫⲓⲧⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲁⲓⲱⲧ
19 ௧௯ இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲥⲭⲓⲥⲙⲁ ⲟⲛ ϣⲱⲡⲉ ϩⲛ ⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲧⲃⲉ ⲛⲉⲓϣⲁϫⲉ
20 ௨0 அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.
ⲕ̅ⲛⲉⲩⲛ ϩⲁϩ ⲇⲉ ϫⲱ ⲙⲙⲟⲥ ⲛϩⲏⲧⲟⲩ ϫⲉ ⲟⲩⲛ ⲟⲩⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲛⲙⲙⲁϥ ⲁⲩⲱ ϥⲗⲟⲃⲉ ⲉⲧⲃⲉ ⲟⲩ ⲧⲉⲧⲛⲥⲱⲧⲙ ⲉⲣⲟϥ
21 ௨௧ வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
ⲕ̅ⲁ̅ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲛⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲉⲓϣⲁϫⲉ ⲛⲁⲟⲩⲁ ⲁⲛ ⲛⲉ ⲉϥⲟ ⲛⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲙⲏ ⲟⲩⲛ ϭⲟⲙ ⲛⲟⲩⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲉⲩⲱⲛ ⲛⲃⲃⲁⲗ ⲛⲃⲃⲗⲗⲉ
22 ௨௨ பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது.
ⲕ̅ⲃ̅ⲁϥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙ ⲡⲉⲩⲟⲓϣ ⲉⲧⲙⲙⲁⲩ ⲛϭⲓ ⲡϫⲓ ⲁⲉⲓⲕ ϩⲛ ⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ⲛⲉⲧⲉⲡⲣⲱ ⲧⲉ
23 ௨௩ இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
ⲕ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲉϥⲙⲟⲟϣⲉ ⲛϭⲓ ⲓⲥ ϩⲙ ⲡⲉⲣⲡⲉ ϩⲁ ⲧⲉⲥⲧⲟⲁ ⲛⲥⲟⲗⲟⲙⲱⲛ
24 ௨௪ அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள்.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲕⲱⲧⲉ ϭⲉ ⲉⲣⲟϥ ⲛϭⲓ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲁⲩⲱ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ϣⲁ ⲧⲛⲁⲩ ⲕϥⲓ ⲙⲡⲉⲛϩⲏⲧ ⲉϣϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲉⲭⲥ ⲁϫⲓⲥ ⲛⲁⲛ ϩⲛ ⲟⲩⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ
25 ௨௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
ⲕ̅ⲉ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲥ ϫⲉ ⲁⲉⲓϫⲟⲟⲥ ⲛⲏⲧⲛ ⲁⲩⲱ ⲛⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲁⲛ ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲁⲛⲟⲕ ⲉϯⲉⲓⲣⲉ ⲙⲙⲟⲟⲩ ϩⲙ ⲡⲣⲁⲛ ⲙⲡⲁⲓⲱⲧ ⲛⲁⲓ ⲛⲉⲧⲣ ⲙⲛⲧⲣⲉ ⲉⲧⲃⲏⲏⲧ
26 ௨௬ ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
ⲕ̅ⲋ̅ⲁⲗⲗⲁ ⲛⲧⲱⲧⲛ ⲛⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲁⲛ ϫⲉ ⲛⲧⲉⲧⲛ ϩⲉⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲛ ⲛⲁⲉⲥⲟⲟⲩ
27 ௨௭ என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.
ⲕ̅ⲍ̅ⲛⲁⲉⲥⲟⲟⲩ ⲁⲛⲟⲕ ϣⲁⲩⲥⲱⲧⲙ ⲉⲧⲁⲥⲙⲏ ⲁⲩⲱ ϯⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲟⲩ ⲁⲩⲱ ⲥⲉⲛⲁⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱⲉⲓ
28 ௨௮ நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn , aiōnios )
ⲕ̅ⲏ̅ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ϯⲛⲁϯ ⲛⲁⲩ ⲛⲟⲩⲱⲛϩ ϣⲁ ⲉⲛⲉϩ ⲁⲩⲱ ⲛⲛⲉⲩϩⲉ ⲉⲃⲟⲗ ⲉⲛⲉϩ ⲁⲩⲱ ⲛⲛⲉⲗⲁⲁⲩ ⲧⲟⲣⲡⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲁϭⲓϫ (aiōn , aiōnios )
29 ௨௯ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
ⲕ̅ⲑ̅ⲡⲁⲓⲱⲧ ⲉⲛⲧⲁϥⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ϥϩⲓϫⲛ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲁⲩⲱ ⲙⲛ ϣϭⲟⲙ ⲗⲗⲁⲁⲩ ⲉⲧⲟⲣⲡⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧϭⲓϫ ⲙⲡⲁⲓⲱⲧ
30 ௩0 நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.
ⲗ̅ⲁⲛⲟⲕ ⲙⲛ ⲡⲁⲉⲓⲱⲧ ⲁⲛⲟⲛ ⲟⲩⲁ
31 ௩௧ அப்பொழுது யூதர்கள் மீண்டும் அவர்மேல் கல்லெறியும்படி, கற்க்களை எடுத்துக்கொண்டார்கள்.
ⲗ̅ⲁ̅ⲁⲩϥⲓ ⲱⲛⲉ ⲟⲛ ⲛϭⲓ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲛⲟⲩϫⲉ ⲉⲣⲟϥ
32 ௩௨ இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
ⲗ̅ⲃ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲥ ϫⲉ ⲁⲓⲧⲥⲁⲃⲱⲧⲛ ⲉϩⲁϩ ⲛϩⲱⲃ ⲉⲛⲁⲛⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲁⲓⲱⲧ ⲉⲧⲃⲉ ⲁϣ ⲙⲙⲟⲟⲩ ⲛϩⲱⲃ ⲧⲉⲧⲛϩⲓ ⲱⲛⲉ ⲉⲣⲟⲓ
33 ௩௩ யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனிதனாக இருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இந்தவிதமாக தேவ அவமதிப்பு சொல்லுகிறதினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲟⲩⲱϣⲃ ⲛⲁϥ ⲛϭⲓ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⲛⲛⲉⲛⲛⲁϩⲓ ⲱⲛⲉ ⲁⲛ ⲉⲣⲟⲕ ⲉⲧⲃⲉ ϩⲱⲃ ⲉⲛⲁⲛⲟⲩϥ ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉ ϫⲓⲟⲩⲁ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲉⲛⲧⲕ ⲟⲩⲣⲱⲙⲉ ⲕⲉⲓⲣⲉ ⲙⲙⲟⲕ ⲛⲛⲟⲩⲧⲉ
34 ௩௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தேவர்களாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாக உங்களுடைய வேதத்தில் எழுதவில்லையா?
ⲗ̅ⲇ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲥ ϫⲉ ⲙⲏ ⲛϥⲥⲏϩ ⲁⲛ ϩⲙ ⲡⲉⲧⲛⲛⲟⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲁⲓϫⲟⲟⲥ ϫⲉ ⲛⲧⲉⲧⲛ ϩⲉⲛⲛⲟⲩⲧⲉ
35 ௩௫ தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க,
ⲗ̅ⲉ̅ⲉϣϫⲉ ⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉⲧⲙⲙⲁⲩ ϫⲉ ⲛⲟⲩⲧⲉ ⲛⲁⲓ ⲉⲛⲧⲁⲡϣⲁϫⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ϣⲱⲡⲉ ϣⲁⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲙⲙⲛ ϭⲟⲙ ⲛⲧⲉⲧⲉⲅⲣⲁⲫⲏ ⲃⲱⲗ ⲉⲃⲟⲗ
36 ௩௬ பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ அவமதிப்பு சொன்னேன் என்று நீங்கள் சொல்லலாமா?
ⲗ̅ⲋ̅ⲉⲓⲉ ⲡⲉⲛⲧⲁⲡⲓⲱⲧ ⲧⲃⲃⲟϥ ⲁϥⲧⲛⲛⲟⲟⲩϥ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲧⲱⲧⲛ ⲧⲉⲧⲛϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲕϫⲉ ⲟⲩⲁ ϫⲉ ⲁⲓϫⲟⲟⲥ ϫⲉ ⲁⲛⲅ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
37 ௩௭ என் பிதாவின் செயல்களை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.
ⲗ̅ⲍ̅ⲉϣϫⲉ ⲛϯⲉⲓⲣⲉ ⲁⲛ ⲛⲛⲉϩⲃⲏⲩⲉ ⲙⲡⲁⲓⲱⲧ ⲙⲡⲣⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲉⲓ
38 ௩௮ அவைகளை செய்தால், நீங்கள் என்னை விசுவாசியாமல் இருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தச் செயல்களை விசுவாசியுங்கள் என்றார்.
ⲗ̅ⲏ̅ⲉϣϫⲉ ϯⲉⲓⲣⲉ ⲇⲉ ⲙⲙⲟⲟⲩ ⲕⲁⲛ ⲉⲧⲉⲧⲛⲧⲙⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲉⲓ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲛⲉϩⲃⲏⲩⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲧⲉⲧⲛⲉⲉⲓⲙⲉ ⲁⲩⲱ ⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲡⲓⲱⲧ ϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧ ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ϯϩⲙ ⲡⲓⲱⲧ
39 ௩௯ இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
ⲗ̅ⲑ̅ⲛⲉⲩϣⲓⲛⲉ ϭⲉ ⲟⲛ ⲛⲥⲁ ϭⲟⲡϥ ⲁⲩⲱ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲉⲩϭⲓϫ
40 ௪0 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
ⲙ̅ⲁϥⲃⲱⲕ ⲟⲛ ⲉⲡⲓⲕⲣⲟ ⲙⲡⲓⲟⲣⲇⲁⲛⲏⲥ ⲡⲙⲁ ⲉⲛⲉⲣⲉⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛϩⲏⲧϥ ⲛϣⲟⲣⲡ ⲉϥⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲁⲩⲱ ⲁϥϭⲱ ⲙⲙⲁⲩ
41 ௪௧ அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.
ⲙ̅ⲁ̅ⲁⲩⲙⲏⲏϣⲉ ⲃⲱⲕ ϣⲁⲣⲟϥ ⲁⲩⲱ ⲛⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲙⲉⲛ ⲙⲡϥⲣ ⲗⲁⲁⲩ ⲙⲙⲁⲓⲛ ϣⲁϫⲉ ⲇⲉ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ϫⲟⲟⲩ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ϩⲉⲛⲙⲉ ⲛⲉ ⲁⲩⲱ ⲁϩⲁϩ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ ϩⲙ ⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ
42 ௪௨ அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ⲙ̅ⲃ̅