< யோவான் 1 >

1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
ಆದೌ ವಾದ ಆಸೀತ್ ಸ ಚ ವಾದ ಈಶ್ವರೇಣ ಸಾರ್ಧಮಾಸೀತ್ ಸ ವಾದಃ ಸ್ವಯಮೀಶ್ವರ ಏವ|
2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
ಸ ಆದಾವೀಶ್ವರೇಣ ಸಹಾಸೀತ್|
3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
ತೇನ ಸರ್ವ್ವಂ ವಸ್ತು ಸಸೃಜೇ ಸರ್ವ್ವೇಷು ಸೃಷ್ಟವಸ್ತುಷು ಕಿಮಪಿ ವಸ್ತು ತೇನಾಸೃಷ್ಟಂ ನಾಸ್ತಿ|
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
ಸ ಜೀವನಸ್ಯಾಕಾರಃ, ತಚ್ಚ ಜೀವನಂ ಮನುಷ್ಯಾಣಾಂ ಜ್ಯೋತಿಃ
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
ತಜ್ಜ್ಯೋತಿರನ್ಧಕಾರೇ ಪ್ರಚಕಾಶೇ ಕಿನ್ತ್ವನ್ಧಕಾರಸ್ತನ್ನ ಜಗ್ರಾಹ|
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
ಯೋಹನ್ ನಾಮಕ ಏಕೋ ಮನುಜ ಈಶ್ವರೇಣ ಪ್ರೇಷಯಾಞ್ಚಕ್ರೇ|
7 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
ತದ್ವಾರಾ ಯಥಾ ಸರ್ವ್ವೇ ವಿಶ್ವಸನ್ತಿ ತದರ್ಥಂ ಸ ತಜ್ಜ್ಯೋತಿಷಿ ಪ್ರಮಾಣಂ ದಾತುಂ ಸಾಕ್ಷಿಸ್ವರೂಪೋ ಭೂತ್ವಾಗಮತ್,
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
ಸ ಸ್ವಯಂ ತಜ್ಜ್ಯೋತಿ ರ್ನ ಕಿನ್ತು ತಜ್ಜ್ಯೋತಿಷಿ ಪ್ರಮಾಣಂ ದಾತುಮಾಗಮತ್|
9 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
ಜಗತ್ಯಾಗತ್ಯ ಯಃ ಸರ್ವ್ವಮನುಜೇಭ್ಯೋ ದೀಪ್ತಿಂ ದದಾತಿ ತದೇವ ಸತ್ಯಜ್ಯೋತಿಃ|
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
ಸ ಯಜ್ಜಗದಸೃಜತ್ ತನ್ಮದ್ಯ ಏವ ಸ ಆಸೀತ್ ಕಿನ್ತು ಜಗತೋ ಲೋಕಾಸ್ತಂ ನಾಜಾನನ್|
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ನಿಜಾಧಿಕಾರಂ ಸ ಆಗಚ್ಛತ್ ಕಿನ್ತು ಪ್ರಜಾಸ್ತಂ ನಾಗೃಹ್ಲನ್|
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ತಥಾಪಿ ಯೇ ಯೇ ತಮಗೃಹ್ಲನ್ ಅರ್ಥಾತ್ ತಸ್ಯ ನಾಮ್ನಿ ವ್ಯಶ್ವಸನ್ ತೇಭ್ಯ ಈಶ್ವರಸ್ಯ ಪುತ್ರಾ ಭವಿತುಮ್ ಅಧಿಕಾರಮ್ ಅದದಾತ್|
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
ತೇಷಾಂ ಜನಿಃ ಶೋಣಿತಾನ್ನ ಶಾರೀರಿಕಾಭಿಲಾಷಾನ್ನ ಮಾನವಾನಾಮಿಚ್ಛಾತೋ ನ ಕಿನ್ತ್ವೀಶ್ವರಾದಭವತ್|
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
ಸ ವಾದೋ ಮನುಷ್ಯರೂಪೇಣಾವತೀರ್ಯ್ಯ ಸತ್ಯತಾನುಗ್ರಹಾಭ್ಯಾಂ ಪರಿಪೂರ್ಣಃ ಸನ್ ಸಾರ್ಧಮ್ ಅಸ್ಮಾಭಿ ರ್ನ್ಯವಸತ್ ತತಃ ಪಿತುರದ್ವಿತೀಯಪುತ್ರಸ್ಯ ಯೋಗ್ಯೋ ಯೋ ಮಹಿಮಾ ತಂ ಮಹಿಮಾನಂ ತಸ್ಯಾಪಶ್ಯಾಮ|
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
ತತೋ ಯೋಹನಪಿ ಪ್ರಚಾರ್ಯ್ಯ ಸಾಕ್ಷ್ಯಮಿದಂ ದತ್ತವಾನ್ ಯೋ ಮಮ ಪಶ್ಚಾದ್ ಆಗಮಿಷ್ಯತಿ ಸ ಮತ್ತೋ ಗುರುತರಃ; ಯತೋ ಮತ್ಪೂರ್ವ್ವಂ ಸ ವಿದ್ಯಮಾನ ಆಸೀತ್; ಯದರ್ಥಮ್ ಅಹಂ ಸಾಕ್ಷ್ಯಮಿದಮ್ ಅದಾಂ ಸ ಏಷಃ|
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
ಅಪರಞ್ಚ ತಸ್ಯ ಪೂರ್ಣತಾಯಾ ವಯಂ ಸರ್ವ್ವೇ ಕ್ರಮಶಃ ಕ್ರಮಶೋನುಗ್ರಹಂ ಪ್ರಾಪ್ತಾಃ|
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
ಮೂಸಾದ್ವಾರಾ ವ್ಯವಸ್ಥಾ ದತ್ತಾ ಕಿನ್ತ್ವನುಗ್ರಹಃ ಸತ್ಯತ್ವಞ್ಚ ಯೀಶುಖ್ರೀಷ್ಟದ್ವಾರಾ ಸಮುಪಾತಿಷ್ಠತಾಂ|
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
ಕೋಪಿ ಮನುಜ ಈಶ್ವರಂ ಕದಾಪಿ ನಾಪಶ್ಯತ್ ಕಿನ್ತು ಪಿತುಃ ಕ್ರೋಡಸ್ಥೋಽದ್ವಿತೀಯಃ ಪುತ್ರಸ್ತಂ ಪ್ರಕಾಶಯತ್|
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
ತ್ವಂ ಕಃ? ಇತಿ ವಾಕ್ಯಂ ಪ್ರೇಷ್ಟುಂ ಯದಾ ಯಿಹೂದೀಯಲೋಕಾ ಯಾಜಕಾನ್ ಲೇವಿಲೋಕಾಂಶ್ಚ ಯಿರೂಶಾಲಮೋ ಯೋಹನಃ ಸಮೀಪೇ ಪ್ರೇಷಯಾಮಾಸುಃ,
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
ತದಾ ಸ ಸ್ವೀಕೃತವಾನ್ ನಾಪಹ್ನೂತವಾನ್ ನಾಹಮ್ ಅಭಿಷಿಕ್ತ ಇತ್ಯಙ್ಗೀಕೃತವಾನ್|
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
ತದಾ ತೇಽಪೃಚ್ಛನ್ ತರ್ಹಿ ಕೋ ಭವಾನ್? ಕಿಂ ಏಲಿಯಃ? ಸೋವದತ್ ನ; ತತಸ್ತೇಽಪೃಚ್ಛನ್ ತರ್ಹಿ ಭವಾನ್ ಸ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ? ಸೋವದತ್ ನಾಹಂ ಸಃ|
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
ತದಾ ತೇಽಪೃಚ್ಛನ್ ತರ್ಹಿ ಭವಾನ್ ಕಃ? ವಯಂ ಗತ್ವಾ ಪ್ರೇರಕಾನ್ ತ್ವಯಿ ಕಿಂ ವಕ್ಷ್ಯಾಮಃ? ಸ್ವಸ್ಮಿನ್ ಕಿಂ ವದಸಿ?
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
ತದಾ ಸೋವದತ್| ಪರಮೇಶಸ್ಯ ಪನ್ಥಾನಂ ಪರಿಷ್ಕುರುತ ಸರ್ವ್ವತಃ| ಇತೀದಂ ಪ್ರಾನ್ತರೇ ವಾಕ್ಯಂ ವದತಃ ಕಸ್ಯಚಿದ್ರವಃ| ಕಥಾಮಿಮಾಂ ಯಸ್ಮಿನ್ ಯಿಶಯಿಯೋ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ ಲಿಖಿತವಾನ್ ಸೋಹಮ್|
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
ಯೇ ಪ್ರೇಷಿತಾಸ್ತೇ ಫಿರೂಶಿಲೋಕಾಃ|
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
ತದಾ ತೇಽಪೃಚ್ಛನ್ ಯದಿ ನಾಭಿಷಿಕ್ತೋಸಿ ಏಲಿಯೋಸಿ ನ ಸ ಭವಿಷ್ಯದ್ವಾದ್ಯಪಿ ನಾಸಿ ಚ, ತರ್ಹಿ ಲೋಕಾನ್ ಮಜ್ಜಯಸಿ ಕುತಃ?
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
ತತೋ ಯೋಹನ್ ಪ್ರತ್ಯವೋಚತ್, ತೋಯೇಽಹಂ ಮಜ್ಜಯಾಮೀತಿ ಸತ್ಯಂ ಕಿನ್ತು ಯಂ ಯೂಯಂ ನ ಜಾನೀಥ ತಾದೃಶ ಏಕೋ ಜನೋ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯ ಉಪತಿಷ್ಠತಿ|
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
ಸ ಮತ್ಪಶ್ಚಾದ್ ಆಗತೋಪಿ ಮತ್ಪೂರ್ವ್ವಂ ವರ್ತ್ತಮಾನ ಆಸೀತ್ ತಸ್ಯ ಪಾದುಕಾಬನ್ಧನಂ ಮೋಚಯಿತುಮಪಿ ನಾಹಂ ಯೋಗ್ಯೋಸ್ಮಿ|
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
ಯರ್ದ್ದನನದ್ಯಾಃ ಪಾರಸ್ಥಬೈಥಬಾರಾಯಾಂ ಯಸ್ಮಿನ್ಸ್ಥಾನೇ ಯೋಹನಮಜ್ಜಯತ್ ತಸ್ಮಿನ ಸ್ಥಾನೇ ಸರ್ವ್ವಮೇತದ್ ಅಘಟತ|
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
ಪರೇಽಹನಿ ಯೋಹನ್ ಸ್ವನಿಕಟಮಾಗಚ್ಛನ್ತಂ ಯಿಶುಂ ವಿಲೋಕ್ಯ ಪ್ರಾವೋಚತ್ ಜಗತಃ ಪಾಪಮೋಚಕಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಮೇಷಶಾವಕಂ ಪಶ್ಯತ|
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
ಯೋ ಮಮ ಪಶ್ಚಾದಾಗಮಿಷ್ಯತಿ ಸ ಮತ್ತೋ ಗುರುತರಃ, ಯತೋ ಹೇತೋರ್ಮತ್ಪೂರ್ವ್ವಂ ಸೋಽವರ್ತ್ತತ ಯಸ್ಮಿನ್ನಹಂ ಕಥಾಮಿಮಾಂ ಕಥಿತವಾನ್ ಸ ಏವಾಯಂ|
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
ಅಪರಂ ನಾಹಮೇನಂ ಪ್ರತ್ಯಭಿಜ್ಞಾತವಾನ್ ಕಿನ್ತು ಇಸ್ರಾಯೇಲ್ಲೋಕಾ ಏನಂ ಯಥಾ ಪರಿಚಿನ್ವನ್ತಿ ತದಭಿಪ್ರಾಯೇಣಾಹಂ ಜಲೇ ಮಜ್ಜಯಿತುಮಾಗಚ್ಛಮ್|
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
ಪುನಶ್ಚ ಯೋಹನಪರಮೇಕಂ ಪ್ರಮಾಣಂ ದತ್ವಾ ಕಥಿತವಾನ್ ವಿಹಾಯಸಃ ಕಪೋತವದ್ ಅವತರನ್ತಮಾತ್ಮಾನಮ್ ಅಸ್ಯೋಪರ್ಯ್ಯವತಿಷ್ಠನ್ತಂ ಚ ದೃಷ್ಟವಾನಹಮ್|
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
ನಾಹಮೇನಂ ಪ್ರತ್ಯಭಿಜ್ಞಾತವಾನ್ ಇತಿ ಸತ್ಯಂ ಕಿನ್ತು ಯೋ ಜಲೇ ಮಜ್ಜಯಿತುಂ ಮಾಂ ಪ್ರೈರಯತ್ ಸ ಏವೇಮಾಂ ಕಥಾಮಕಥಯತ್ ಯಸ್ಯೋಪರ್ಯ್ಯಾತ್ಮಾನಮ್ ಅವತರನ್ತಮ್ ಅವತಿಷ್ಠನ್ತಞ್ಚ ದ್ರಕ್ಷಯಸಿ ಸಏವ ಪವಿತ್ರೇ ಆತ್ಮನಿ ಮಜ್ಜಯಿಷ್ಯತಿ|
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
ಅವಸ್ತನ್ನಿರೀಕ್ಷ್ಯಾಯಮ್ ಈಶ್ವರಸ್ಯ ತನಯ ಇತಿ ಪ್ರಮಾಣಂ ದದಾಮಿ|
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
ಪರೇಽಹನಿ ಯೋಹನ್ ದ್ವಾಭ್ಯಾಂ ಶಿಷ್ಯಾಭ್ಯಾಂ ಸಾರ್ದ್ಧೇಂ ತಿಷ್ಠನ್
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
ಯಿಶುಂ ಗಚ್ಛನ್ತಂ ವಿಲೋಕ್ಯ ಗದಿತವಾನ್, ಈಶ್ವರಸ್ಯ ಮೇಷಶಾವಕಂ ಪಶ್ಯತಂ|
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
ಇಮಾಂ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ದ್ವೌ ಶಿಷ್ಯೌ ಯೀಶೋಃ ಪಶ್ಚಾದ್ ಈಯತುಃ|
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
ತತೋ ಯೀಶುಃ ಪರಾವೃತ್ಯ ತೌ ಪಶ್ಚಾದ್ ಆಗಚ್ಛನ್ತೌ ದೃಷ್ಟ್ವಾ ಪೃಷ್ಟವಾನ್ ಯುವಾಂ ಕಿಂ ಗವೇಶಯಥಃ? ತಾವಪೃಚ್ಛತಾಂ ಹೇ ರಬ್ಬಿ ಅರ್ಥಾತ್ ಹೇ ಗುರೋ ಭವಾನ್ ಕುತ್ರ ತಿಷ್ಠತಿ?
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
ತತಃ ಸೋವಾದಿತ್ ಏತ್ಯ ಪಶ್ಯತಂ| ತತೋ ದಿವಸಸ್ಯ ತೃತೀಯಪ್ರಹರಸ್ಯ ಗತತ್ವಾತ್ ತೌ ತದ್ದಿನಂ ತಸ್ಯ ಸಙ್ಗೇಽಸ್ಥಾತಾಂ|
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
ಯೌ ದ್ವೌ ಯೋಹನೋ ವಾಕ್ಯಂ ಶ್ರುತ್ವಾ ಯಿಶೋಃ ಪಶ್ಚಾದ್ ಆಗಮತಾಂ ತಯೋಃ ಶಿಮೋನ್ಪಿತರಸ್ಯ ಭ್ರಾತಾ ಆನ್ದ್ರಿಯಃ
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
ಸ ಇತ್ವಾ ಪ್ರಥಮಂ ನಿಜಸೋದರಂ ಶಿಮೋನಂ ಸಾಕ್ಷಾತ್ಪ್ರಾಪ್ಯ ಕಥಿತವಾನ್ ವಯಂ ಖ್ರೀಷ್ಟಮ್ ಅರ್ಥಾತ್ ಅಭಿಷಿಕ್ತಪುರುಷಂ ಸಾಕ್ಷಾತ್ಕೃತವನ್ತಃ|
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
ಪಶ್ಚಾತ್ ಸ ತಂ ಯಿಶೋಃ ಸಮೀಪಮ್ ಆನಯತ್| ತದಾ ಯೀಶುಸ್ತಂ ದೃಷ್ಟ್ವಾವದತ್ ತ್ವಂ ಯೂನಸಃ ಪುತ್ರಃ ಶಿಮೋನ್ ಕಿನ್ತು ತ್ವನ್ನಾಮಧೇಯಂ ಕೈಫಾಃ ವಾ ಪಿತರಃ ಅರ್ಥಾತ್ ಪ್ರಸ್ತರೋ ಭವಿಷ್ಯತಿ|
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
ಪರೇಽಹನಿ ಯೀಶೌ ಗಾಲೀಲಂ ಗನ್ತುಂ ನಿಶ್ಚಿತಚೇತಸಿ ಸತಿ ಫಿಲಿಪನಾಮಾನಂ ಜನಂ ಸಾಕ್ಷಾತ್ಪ್ರಾಪ್ಯಾವೋಚತ್ ಮಮ ಪಶ್ಚಾದ್ ಆಗಚ್ಛ|
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
ಬೈತ್ಸೈದಾನಾಮ್ನಿ ಯಸ್ಮಿನ್ ಗ್ರಾಮೇ ಪಿತರಾನ್ದ್ರಿಯಯೋರ್ವಾಸ ಆಸೀತ್ ತಸ್ಮಿನ್ ಗ್ರಾಮೇ ತಸ್ಯ ಫಿಲಿಪಸ್ಯ ವಸತಿರಾಸೀತ್|
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
ಪಶ್ಚಾತ್ ಫಿಲಿಪೋ ನಿಥನೇಲಂ ಸಾಕ್ಷಾತ್ಪ್ರಾಪ್ಯಾವದತ್ ಮೂಸಾ ವ್ಯವಸ್ಥಾ ಗ್ರನ್ಥೇ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾಂ ಗ್ರನ್ಥೇಷು ಚ ಯಸ್ಯಾಖ್ಯಾನಂ ಲಿಖಿತಮಾಸ್ತೇ ತಂ ಯೂಷಫಃ ಪುತ್ರಂ ನಾಸರತೀಯಂ ಯೀಶುಂ ಸಾಕ್ಷಾದ್ ಅಕಾರ್ಷ್ಮ ವಯಂ|
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
ತದಾ ನಿಥನೇಲ್ ಕಥಿತವಾನ್ ನಾಸರನ್ನಗರಾತ ಕಿಂ ಕಶ್ಚಿದುತ್ತಮ ಉತ್ಪನ್ತುಂ ಶಕ್ನೋತಿ? ತತಃ ಫಿಲಿಪೋ ಽವೋಚತ್ ಏತ್ಯ ಪಶ್ಯ|
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
ಅಪರಞ್ಚ ಯೀಶುಃ ಸ್ವಸ್ಯ ಸಮೀಪಂ ತಮ್ ಆಗಚ್ಛನ್ತಂ ದೃಷ್ಟ್ವಾ ವ್ಯಾಹೃತವಾನ್, ಪಶ್ಯಾಯಂ ನಿಷ್ಕಪಟಃ ಸತ್ಯ ಇಸ್ರಾಯೇಲ್ಲೋಕಃ|
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
ತತಃ ಸೋವದದ್, ಭವಾನ್ ಮಾಂ ಕಥಂ ಪ್ರತ್ಯಭಿಜಾನಾತಿ? ಯೀಶುರವಾದೀತ್ ಫಿಲಿಪಸ್ಯ ಆಹ್ವಾನಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಯದಾ ತ್ವಮುಡುಮ್ಬರಸ್ಯ ತರೋರ್ಮೂಲೇಽಸ್ಥಾಸ್ತದಾ ತ್ವಾಮದರ್ಶಮ್|
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
ನಿಥನೇಲ್ ಅಚಕಥತ್, ಹೇ ಗುರೋ ಭವಾನ್ ನಿತಾನ್ತಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಪುತ್ರೋಸಿ, ಭವಾನ್ ಇಸ್ರಾಯೇಲ್ವಂಶಸ್ಯ ರಾಜಾ|
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
ತತೋ ಯೀಶು ರ್ವ್ಯಾಹರತ್, ತ್ವಾಮುಡುಮ್ಬರಸ್ಯ ಪಾದಪಸ್ಯ ಮೂಲೇ ದೃಷ್ಟವಾನಾಹಂ ಮಮೈತಸ್ಮಾದ್ವಾಕ್ಯಾತ್ ಕಿಂ ತ್ವಂ ವ್ಯಶ್ವಸೀಃ? ಏತಸ್ಮಾದಪ್ಯಾಶ್ಚರ್ಯ್ಯಾಣಿ ಕಾರ್ಯ್ಯಾಣಿ ದ್ರಕ್ಷ್ಯಸಿ|
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ಅನ್ಯಚ್ಚಾವಾದೀದ್ ಯುಷ್ಮಾನಹಂ ಯಥಾರ್ಥಂ ವದಾಮಿ, ಇತಃ ಪರಂ ಮೋಚಿತೇ ಮೇಘದ್ವಾರೇ ತಸ್ಮಾನ್ಮನುಜಸೂನುನಾ ಈಶ್ವರಸ್ಯ ದೂತಗಣಮ್ ಅವರೋಹನ್ತಮಾರೋಹನ್ತಞ್ಚ ದ್ರಕ್ಷ್ಯಥ|

< யோவான் 1 >