< யாக்கோபு 5 >
1 ௧ செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
ಹೇ ಧನವನ್ತಃ, ಯೂಯಮ್ ಇದಾನೀಂ ಶೃಣುತ ಯುಷ್ಮಾಭಿರಾಗಮಿಷ್ಯತ್ಕ್ಲೇಶಹೇತೋಃ ಕ್ರನ್ದ್ಯತಾಂ ವಿಲಪ್ಯತಾಞ್ಚ|
2 ௨ உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
ಯುಷ್ಮಾಕಂ ದ್ರವಿಣಂ ಜೀರ್ಣಂ ಕೀಟಭುಕ್ತಾಃ ಸುಚೇಲಕಾಃ|
3 ௩ உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
ಕನಕಂ ರಜತಞ್ಚಾಪಿ ವಿಕೃತಿಂ ಪ್ರಗಮಿಷ್ಯತಿ, ತತ್ಕಲಙ್ಕಶ್ಚ ಯುಷ್ಮಾಕಂ ಪಾಪಂ ಪ್ರಮಾಣಯಿಷ್ಯತಿ, ಹುತಾಶವಚ್ಚ ಯುಷ್ಮಾಕಂ ಪಿಶಿತಂ ಖಾದಯಿಷ್ಯತಿ| ಇತ್ಥಮ್ ಅನ್ತಿಮಘಸ್ರೇಷು ಯುಷ್ಮಾಭಿಃ ಸಞ್ಚಿತಂ ಧನಂ|
4 ௪ இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.
ಪಶ್ಯತ ಯೈಃ ಕೃಷೀವಲೈ ರ್ಯುಷ್ಮಾಕಂ ಶಸ್ಯಾನಿ ಛಿನ್ನಾನಿ ತೇಭ್ಯೋ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಯದ್ ವೇತನಂ ಛಿನ್ನಂ ತದ್ ಉಚ್ಚೈ ರ್ಧ್ವನಿಂ ಕರೋತಿ ತೇಷಾಂ ಶಸ್ಯಚ್ಛೇದಕಾನಾಮ್ ಆರ್ತ್ತರಾವಃ ಸೇನಾಪತೇಃ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ಕರ್ಣಕುಹರಂ ಪ್ರವಿಷ್ಟಃ|
5 ௫ பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.
ಯೂಯಂ ಪೃಥಿವ್ಯಾಂ ಸುಖಭೋಗಂ ಕಾಮುಕತಾಞ್ಚಾರಿತವನ್ತಃ, ಮಹಾಭೋಜಸ್ಯ ದಿನ ಇವ ನಿಜಾನ್ತಃಕರಣಾನಿ ಪರಿತರ್ಪಿತವನ್ತಶ್ಚ|
6 ௬ நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை.
ಅಪರಞ್ಚ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಧಾರ್ಮ್ಮಿಕಸ್ಯ ದಣ್ಡಾಜ್ಞಾ ಹತ್ಯಾ ಚಾಕಾರಿ ತಥಾಪಿ ಸ ಯುಷ್ಮಾನ್ ನ ಪ್ರತಿರುದ್ಧವಾನ್|
7 ௭ இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
ಹೇ ಭ್ರಾತರಃ, ಯೂಯಂ ಪ್ರಭೋರಾಗಮನಂ ಯಾವದ್ ಧೈರ್ಯ್ಯಮಾಲಮ್ಬಧ್ವಂ| ಪಶ್ಯತ ಕೃಷಿವಲೋ ಭೂಮೇ ರ್ಬಹುಮೂಲ್ಯಂ ಫಲಂ ಪ್ರತೀಕ್ಷಮಾಣೋ ಯಾವತ್ ಪ್ರಥಮಮ್ ಅನ್ತಿಮಞ್ಚ ವೃಷ್ಟಿಜಲಂ ನ ಪ್ರಾಪ್ನೋತಿ ತಾವದ್ ಧೈರ್ಯ್ಯಮ್ ಆಲಮ್ಬತೇ|
8 ௮ நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
ಯೂಯಮಪಿ ಧೈರ್ಯ್ಯಮಾಲಮ್ಬ್ಯ ಸ್ವಾನ್ತಃಕರಣಾನಿ ಸ್ಥಿರೀಕುರುತ, ಯತಃ ಪ್ರಭೋರುಪಸ್ಥಿತಿಃ ಸಮೀಪವರ್ತ್ತಿನ್ಯಭವತ್|
9 ௯ சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
ಹೇ ಭ್ರಾತರಃ, ಯೂಯಂ ಯದ್ ದಣ್ಡ್ಯಾ ನ ಭವೇತ ತದರ್ಥಂ ಪರಸ್ಪರಂ ನ ಗ್ಲಾಯತ, ಪಶ್ಯತ ವಿಚಾರಯಿತಾ ದ್ವಾರಸಮೀಪೇ ತಿಷ್ಠತಿ|
10 ௧0 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ಹೇ ಮಮ ಭ್ರಾತರಃ, ಯೇ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಃ ಪ್ರಭೋ ರ್ನಾಮ್ನಾ ಭಾಷಿತವನ್ತಸ್ತಾನ್ ಯೂಯಂ ದುಃಖಸಹನಸ್ಯ ಧೈರ್ಯ್ಯಸ್ಯ ಚ ದೃಷ್ಟಾನ್ತಾನ್ ಜಾನೀತ|
11 ௧௧ இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
ಪಶ್ಯತ ಧೈರ್ಯ್ಯಶೀಲಾ ಅಸ್ಮಾಭಿ ರ್ಧನ್ಯಾ ಉಚ್ಯನ್ತೇ| ಆಯೂಬೋ ಧೈರ್ಯ್ಯಂ ಯುಷ್ಮಾಭಿರಶ್ರಾವಿ ಪ್ರಭೋಃ ಪರಿಣಾಮಶ್ಚಾದರ್ಶಿ ಯತಃ ಪ್ರಭು ರ್ಬಹುಕೃಪಃ ಸಕರುಣಶ್ಚಾಸ್ತಿ|
12 ௧௨ குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
ಹೇ ಭ್ರಾತರಃ ವಿಶೇಷತ ಇದಂ ವದಾಮಿ ಸ್ವರ್ಗಸ್ಯ ವಾ ಪೃಥಿವ್ಯಾ ವಾನ್ಯವಸ್ತುನೋ ನಾಮ ಗೃಹೀತ್ವಾ ಯುಷ್ಮಾಭಿಃ ಕೋಽಪಿ ಶಪಥೋ ನ ಕ್ರಿಯತಾಂ, ಕಿನ್ತು ಯಥಾ ದಣ್ಡ್ಯಾ ನ ಭವತ ತದರ್ಥಂ ಯುಷ್ಮಾಕಂ ತಥೈವ ತನ್ನಹಿ ಚೇತಿವಾಕ್ಯಂ ಯಥೇಷ್ಟಂ ಭವತು|
13 ௧௩ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
ಯುಷ್ಮಾಕಂ ಕಶ್ಚಿದ್ ದುಃಖೀ ಭವತಿ? ಸ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕರೋತು| ಕಶ್ಚಿದ್ ವಾನನ್ದಿತೋ ಭವತಿ? ಸ ಗೀತಂ ಗಾಯತು|
14 ௧௪ உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
ಯುಷ್ಮಾಕಂ ಕಶ್ಚಿತ್ ಪೀಡಿತೋ ಽಸ್ತಿ? ಸ ಸಮಿತೇಃ ಪ್ರಾಚೀನಾನ್ ಆಹ್ವಾತು ತೇ ಚ ಪಭೋ ರ್ನಾಮ್ನಾ ತಂ ತೈಲೇನಾಭಿಷಿಚ್ಯ ತಸ್ಯ ಕೃತೇ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕುರ್ವ್ವನ್ತು|
15 ௧௫ அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
ತಸ್ಮಾದ್ ವಿಶ್ವಾಸಜಾತಪ್ರಾರ್ಥನಯಾ ಸ ರೋಗೀ ರಕ್ಷಾಂ ಯಾಸ್ಯತಿ ಪ್ರಭುಶ್ಚ ತಮ್ ಉತ್ಥಾಪಯಿಷ್ಯತಿ ಯದಿ ಚ ಕೃತಪಾಪೋ ಭವೇತ್ ತರ್ಹಿ ಸ ತಂ ಕ್ಷಮಿಷ್ಯತೇ|
16 ௧௬ நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
ಯೂಯಂ ಪರಸ್ಪರಮ್ ಅಪರಾಧಾನ್ ಅಙ್ಗೀಕುರುಧ್ವಮ್ ಆರೋಗ್ಯಪ್ರಾಪ್ತ್ಯರ್ಥಞ್ಚೈಕಜನೋ ಽನ್ಯಸ್ಯ ಕೃತೇ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕರೋತು ಧಾರ್ಮ್ಮಿಕಸ್ಯ ಸಯತ್ನಾ ಪ್ರಾರ್ಥನಾ ಬಹುಶಕ್ತಿವಿಶಿಷ್ಟಾ ಭವತಿ|
17 ௧௭ எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.
ಯ ಏಲಿಯೋ ವಯಮಿವ ಸುಖದುಃಖಭೋಗೀ ಮರ್ತ್ತ್ಯ ಆಸೀತ್ ಸ ಪ್ರಾರ್ಥನಯಾನಾವೃಷ್ಟಿಂ ಯಾಚಿತವಾನ್ ತೇನ ದೇಶೇ ಸಾರ್ದ್ಧವತ್ಸರತ್ರಯಂ ಯಾವದ್ ವೃಷ್ಟಿ ರ್ನ ಬಭೂವ|
18 ௧௮ மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.
ಪಶ್ಚಾತ್ ತೇನ ಪುನಃ ಪ್ರಾರ್ಥನಾಯಾಂ ಕೃತಾಯಾಮ್ ಆಕಾಶಸ್ತೋಯಾನ್ಯವರ್ಷೀತ್ ಪೃಥಿವೀ ಚ ಸ್ವಫಲಾನಿ ಪ್ರಾರೋಹಯತ್|
19 ௧௯ சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால்,
ಹೇ ಭ್ರಾತರಃ, ಯುಷ್ಮಾಕಂ ಕಸ್ಮಿಂಶ್ಚಿತ್ ಸತ್ಯಮತಾದ್ ಭ್ರಷ್ಟೇ ಯದಿ ಕಶ್ಚಿತ್ ತಂ ಪರಾವರ್ತ್ತಯತಿ
20 ௨0 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
ತರ್ಹಿ ಯೋ ಜನಃ ಪಾಪಿನಂ ವಿಪಥಭ್ರಮಣಾತ್ ಪರಾವರ್ತ್ತಯತಿ ಸ ತಸ್ಯಾತ್ಮಾನಂ ಮೃತ್ಯುತ ಉದ್ಧರಿಷ್ಯತಿ ಬಹುಪಾಪಾನ್ಯಾವರಿಷ್ಯತಿ ಚೇತಿ ಜಾನಾತು|