< யாக்கோபு 4 >
1 ௧ உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா?
你们之间的争斗和吵闹从何而来?难道不是来自你们身体中彼此对抗的情感欲望吗?
2 ௨ நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.
你们在欲望中燃烧,但却得不到想要的。为了追逐欲望,你们会杀人,但却无法得到自己所追求的。你们吵闹争斗,但什么都得不到,因为你们并没有为之祈祷;
3 ௩ நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
你们祈祷了,但却什么也没得到。那是因为你们的动机错误,你们想要的,就是把所得的一切用于满足自己的私欲。
4 ௪ விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
淫乱的人哪!你们难道没意识到,与世俗为友就是与上帝为敌吗?与世俗为友之人,就成了上帝的敌人。
5 ௫ நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
难道你不记得经文中说:“上帝放在我们身体中的灵,非常善妒”?
6 ௬ அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
但上帝给我们的恩典更大;所以经文说:“上帝抵挡骄傲之人,赐予谦卑之人恩典。”
7 ௭ ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
所以请遵循上帝的指引,抵抗魔鬼,魔鬼就会从你们这里逃离。
8 ௮ தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.
亲近上帝,上帝就亲近你们。罪人们啊,洗净你们的手;三心两意之人啊,净化你们的思想。
9 ௯ நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.
表达你们的愁苦、悲哀和哭泣,把欢笑变为悲痛,把快乐变为忧愁。
10 ௧0 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
你们在主面前务必要谦卑,他就会让你们高升。
11 ௧௧ சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
朋友们,不要互相毁谤;一个人如果批判其他信徒,谴责他们,就等于批判和谴责律法。如果你批判律法,就不会遵守律法,因为你扮演了审判律法的角色。
12 ௧௨ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
只有一个立法者和审判者——那就是可以拯救、也可以毁灭你的上帝。那么你审判邻居,你认为自己是谁?
13 ௧௩ மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
你们会说:“今天或明天,我们要到某个城市去,在那里住一年,做生意赚钱。”
14 ௧௪ நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
其实你们并不知道明天会怎样。你们的生命像什么?它只是一团雾,出现一小会儿,然后就不见了。
15 ௧௫ ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
你们倒不如说:“如果主愿意,我们就可以这样活着,计划做什么事。”
16 ௧௬ இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.
但现在你们竟然张狂自夸;这种自夸是邪恶。
17 ௧௭ ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.
因为如果你明知道该行善,却没有这么做,就是你的罪。